Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

தீர்க்கப்படாத இனப்பிரச்சினை

 

இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்..! | President Ranil Suddenly Met Maavi

 

தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தில் சிறந்த அனுபவம் உள்ளதால் ரணில் விக்ரமசிங்க இதனை செய்துமுடிப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்..! | President Ranil Suddenly Met Maavi

தேர்தலின் பின்னர் பாரிய கடமைகள் இருப்பதாகவும் சமஸ்டி அடிப்படையில் தீர்வு கண்டு, அந்த நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும் என்று கோரியதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

https://tamilwin.com/article/president-ranil-suddenly-met-maavi-1725729737?itm_source=parsely-detail

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆமா ஆமா இதில முதல் வெல்லப்பண்ணுங்க.

அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக வரணும்.

அதுக்கும் உங்கள் ஒத்துழைப்பு தேவை.

அதுக்கிடையில உங்களை ஒன்றா இருக்க விட்டாத் தானே.

இரண்டும் எனது கைக்கு வந்தால் அப்புறம் வழமைபோல பின்பக்கத்தைக் காட்டுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் : இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை நம்பிக்கை !

By kugen
 
1725759825-Ranil_Mavai%20.jpg


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இரண்டு "இயலும் ஸ்ரீலங்கா" வெற்றிப் பேரணிகளில் கலந்து கொண்ட பின்னர் காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தனது இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா அன்புடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, ஜனாதிபதியுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள்,தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீண்ட காலமாக தீர்க்கப்படாத வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பாரிய பொறுப்பு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

 

https://www.battinews.com/2024/09/blog-post_819.html

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

 

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் : இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை நம்பிக்கை !

நாளைக்கு... சஜித்  பிரேமதாச வந்து, மாவையை அவரின் வீட்டில் வைத்து சந்தித்தால்....
"ஜனாதிபதித் தேர்தலில் சஜித்  பிரேமதாச  வெற்றி பெற்று தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் : இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை நம்பிக்கை !
என்று மரத்துக்கு மரம் கொப்பு தாவும் கொள்கையுடையவர்தான் மாவை. 😂

மாவை சேனாதிராஜா,  வாழ்க்கையில்... ஒரு நாள் கூட, வேலைக்குப் போய் சம்பாதிக்காதவர் என்று, எத்தனை பேருக்கு தெரியும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை சுமந்திரன்... சஜித்துக்கு ஆதரவு கொடுக்க, 
இங்கை மாவை... ரணிலுக்கு ஆதரவு கொடுக்க, 
அங்காலை ஸ்ரீதரன் அரியநேத்திரனுக்கு ஆதரவு கொடுக்க ஒரே தமாசு தான்... போங்க.

தமிழரசு  கட்சியை.. இப்ப யார் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
பேசாமல் கட்சியை கலைத்து விட்டு, வேலைக்குப் போய்  சம்பாதியுங்கள்.  
பாவம்... செல்வநாயகம் ஆரம்பித்த கட்சியை, நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு இருக்கும் பொறுப்பு

வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணிலுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் தலைவர் மாவைசேனாதி ராஜா இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை மீள அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இரண்டு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்ட ஜனாதிபதி, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்கு வந்து அவரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/309073

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தமிழரசு  கட்சியை.. இப்ப யார் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

முந்தி பெரிய வீடாக 🏡 இருந்தது. இப்ப பலருக்கு “சின்ன வீடாக” ஆகிவிட்டது😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முந்தி பெரிய வீடாக 🏡 இருந்தது. இப்ப பலருக்கு “சின்ன வீடாக” ஆகிவிட்டது😂🤣

அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அங்கை சுமந்திரன்... சஜித்துக்கு ஆதரவு கொடுக்க, 
இங்கை மாவை... ரணிலுக்கு ஆதரவு கொடுக்க, 
அங்காலை ஸ்ரீதரன் அரியநேத்திரனுக்கு ஆதரவு கொடுக்க ஒரே தமாசு தான்... போங்க.

தமிழரசு  கட்சியை.. இப்ப யார் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
பேசாமல் கட்சியை கலைத்து விட்டு, வேலைக்குப் போய்  சம்பாதியுங்கள்.  
பாவம்... செல்வநாயகம் ஆரம்பித்த கட்சியை, நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 

சசிகலா ரணிலுக்கு ஆதரவு கொடுக்க .இளைஞரணி மாவையின் மகன் சஜித்துக்கு ஆதரவு குடுக்க சரவணபவன் அனுராவுக்கு ஆதரவு குடுக்க இப்படிப்பட்டியல் நீள்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மாமனும் மருமகளும் ரணிலுக்கும் மாமியும் மருமகனும் சஜித்துக்கு எந்தக்கட்சி சொல்லுங்க பாப்பம்?

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, புலவர் said:

சசிகலா ரணிலுக்கு ஆதரவு கொடுக்க .இளைஞரணி மாவையின் மகன் சஜித்துக்கு ஆதரவு குடுக்க சரவணபவன் அனுராவுக்கு ஆதரவு குடுக்க இப்படிப்பட்டியல் நீள்கிறது.

எல்லாம் டிஜிட்டல் ரெக்னிக் கண்டியளோ...🤣

ஒரு பக்கம் சறுக்கினால் மற்றப் பக்கம் கை குடுக்கும் எல்லோ...😎

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

சசிகலா ரணிலுக்கு ஆதரவு கொடுக்க .இளைஞரணி மாவையின் மகன் சஜித்துக்கு ஆதரவு குடுக்க சரவணபவன் அனுராவுக்கு ஆதரவு குடுக்க இப்படிப்பட்டியல் நீள்கிறது.

 

6 hours ago, குமாரசாமி said:

எல்லாம் டிஜிட்டல் ரெக்னிக் கண்டியளோ...🤣

ஒரு பக்கம் சறுக்கினால் மற்றப் பக்கம் கை குடுக்கும் எல்லோ...😎

 

14 hours ago, கிருபன் said:

முந்தி பெரிய வீடாக 🏡 இருந்தது. இப்ப பலருக்கு “சின்ன வீடாக” ஆகிவிட்டது😂🤣

 

“தென்னை மரத்துல ஒரு குத்து…பனை மரத்துல ஒரு குத்து”  😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு என்ற ஒரு கட்சி இருக்க இப்ப ? அட கடவுளே. மாவைத்தான் தலைவர் என்பது அவருக்கே தெரியாது ...இன்னும் எவ்வளவு காசு வாங்கி இன்னுமொரு பெரிய வீடு கட்டுவம் என்று அலையுது .... சுத்து .... சொல்லவா வேண்டும் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது மகனை பாராளுமன்ற உறுப்பினராக்காமல் ஓயமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை இப்போது தமிழரசுக்கட்சித் தலைவராக இருக்கிறார். அதனால்தான் அவர் எம்பியாக இல்லாத பொதும் ரணில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். மாவைக்கு இதுதான் கடைசி பதவி மட:டுமல்ல பெட்டி வாங்குவதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை விட்டால் வேறு சந்தர்பஙகள் வெகு அரிது. அடுத்த தேர்தல்வரை அவர் உடல்நிலை ஒத்துழைக்காது. அடுத்த தேர்தலில் மகனையும் சம்பந்தியைுயும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்குவார். அதற்கிடையில் மாகாண சபை தெர்தல் வந்தால் முதலமச்சர் வேட்பாளராக களம் இறங்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

மாவை இப்போது தமிழரசுக்கட்சித் தலைவராக இருக்கிறார். அதனால்தான் அவர் எம்பியாக இல்லாத பொதும் ரணில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். மாவைக்கு இதுதான் கடைசி பதவி மட:டுமல்ல பெட்டி வாங்குவதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை விட்டால் வேறு சந்தர்பஙகள் வெகு அரிது. அடுத்த தேர்தல்வரை அவர் உடல்நிலை ஒத்துழைக்காது. அடுத்த தேர்தலில் மகனையும் சம்பந்தியைுயும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்குவார். அதற்கிடையில் மாகாண சபை தெர்தல் வந்தால் முதலமச்சர் வேட்பாளராக களம் இறங்குவார்.

இது தான் தமிழர்கள் பிரச்சனையா ?? 🤣 எனக்கு ஒன்றும் புரியவில்லை 

23 hours ago, குமாரசாமி said:

எல்லாம் டிஜிட்டல் ரெக்னிக் கண்டியளோ...🤣

ஒரு பக்கம் சறுக்கினால் மற்றப் பக்கம் கை குடுக்கும் எல்லோ...😎

இது   தமிழர்கள் பிரச்சனைக்கு  தீர்வு காண்பதில்.  சரி வராது”   இரண்டு பக்கமும் சறுக்க தான் செய்யும் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.