Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 SEP, 2024 | 12:16 PM
image
 

கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது.   

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,    

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார்.       

அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.   

அவருக்கு குறித்த காணியை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த காணி தரகர் ஒருவரே அடையாளம் காட்டி, காணி உரிமையாளருடன் பேச்சுக்களையும் நடத்தியுள்ளார்.   

அதனை அடுத்து காணியை கொள்வனவு செய்வதற்கு 85 இலட்ச ரூபாய் பணத்தினை ரொக்கமாக தயார் செய்திருந்தார்.   

அந்த பணத்தினை கனடா வாசி தன்னுடன் வைத்திருந்தார்.   

அவர் அசந்த நேரம் பார்த்து, காணி தரகர் 85 இலட்ச ரூபாய் பணத்தினை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.   

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/193566

5000 ரூபாய்த்தாள் வந்ததும் வந்தது 85 லட்சத்தையும் சுலபமா சுருட்ட முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

காசு கையில் வைத்திருந்தால் மட்டும் போதாது.

அதனை எப்படி பாதுகாப்பது என்ற மூளையும் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போலிசில் முறைப்பாடு போட்டாயிற்று சரி. ஆட்டையை போட்டது 84 லட்சங்கள். தரகன் ஏனென்சி மூலம் பிளைட்டில் ஏறீட்டான் என்றால் எங்கை தேடி அவனை பிடிப்பது? 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நியாயம் said:

போலிசில் முறைப்பாடு போட்டாயிற்று சரி. ஆட்டையை போட்டது 84 லட்சங்கள். தரகன் ஏனென்சி மூலம் பிளைட்டில் ஏறீட்டான் என்றால் எங்கை தேடி அவனை பிடிப்பது? 

அண்ணை நீங்க ஒரு லட்சத்தை ஆட்டையை போட்டிட்டீங்களே!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

அண்ணை நீங்க ஒரு லட்சத்தை ஆட்டையை போட்டிட்டீங்களே!

பொலிசுக்கு போகும் போது எத்தனை லட்சம் குறையப் போகுதோ?

உண்டியலில் எடுத்திருந்தால் முழுவதும் போக போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

அண்ணை நீங்க ஒரு லட்சத்தை ஆட்டையை போட்டிட்டீங்களே!

எழுதியபோது 85 என கை போனதாகவே நினைவு 😁

 

14 hours ago, ஈழப்பிரியன் said:

பொலிசுக்கு போகும் போது எத்தனை லட்சம் குறையப் போகுதோ?

உண்டியலில் எடுத்திருந்தால் முழுவதும் போக போகுது.

போலிஸ் வேலையை செய்கின்றார்கள். ஆனால் துரித கதியில் வேலையை செய்ய வைக்க கைக்குள் லட்சுமிதேவியை காட்டவேண்டி உள்ளது. 

உண்டியல் சட்டவிரோதமானது அல்லவே? கனடாக்காரர் காணி வாங்குவதற்கு கையில் 85  இலட்சம் கொண்டுவந்தது ஒரு பிரச்சனையாக வராது என எண்ணுகின்றேன். 

செய்தியில் விபரிக்கப்பட்ட தரகன் முன் பின் அறியப்பட்ட ஆளோ/சொந்தக்காரனோ/நண்பனோ/ஊர்க்காரனோ யார் அறிவார்!

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2024 at 12:43, ஏராளன் said:

கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது.   

நான் அறிந்தவரையில், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊரில் உள்ள காணிகளை விற்றுப் பணம் பார்ப்பதில்தான் அதிகம் நாட்டம் காட்டுகிறார்கள். இந்தக் கனடாக்காரர் வித்தியாசமாக இருக்கிறார். அவர் காணியை வாங்கி இருந்தாலும் நாளைக்கு யாரோ ஆட்டையைப் போடத்தானே போகிறார்கள்.

என்ன விசயம் கொஞ்சம் முன்னாடியே நடந்திருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நியாயம் said:

எழுதியபோது 85 என கை போனதாகவே நினைவு 😁

அப்பிடியே உரிச்சு படைச்சு  ஊரிலை ஆட்டைய போடுற சனங்களின்ர வாசனை வருது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

எழுதியபோது 85 என கை போனதாகவே நினைவு 😁

இதைத் தான் ஆட்டையை போட்டவரும் சொல்லப்போறார்.????

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

நான் அறிந்தவரையில், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊரில் உள்ள காணிகளை விற்றுப் பணம் பார்ப்பதில்தான் அதிகம் நாட்டம் காட்டுகிறார்கள். இந்தக் கனடாக்காரர் வித்தியாசமாக இருக்கிறார். அவர் காணியை வாங்கி இருந்தாலும் நாளைக்கு யாரோ ஆட்டையைப் போடத்தானே போகிறார்கள்.

என்ன விசயம் கொஞ்சம் முன்னாடியே நடந்திருக்கு.

இல்லை கவி. இப்போ நிலமை தலை கீழ்.வெளிநாட்டுக்காறர் தான் இங்குள்ள காணிகளை வாங்குறார்கள்.ஏற்க்கனவே விற்றவர்கள் கூட அதே காணியை அதிக விலை கொடுத்த கதையும் உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.