Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

23 SEP, 2024 | 01:28 PM
image
 

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

30.jpg

https://www.virakesari.lk/article/194602

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உடனடி மாற்றங்கள். 

 1. 36% முதல் 24% வரை வரி செலுத்துங்கள்.

 2. உணவுப் பொருட்கள், சுகாதாரத் துறை சேவைகள் மற்றும் கல்விப் புத்தகங்களுக்கு VAT விலக்கு அளிக்கப்படும்.
 
3. ஒரு அமைச்சர்/எம்.பி.க்கு ஒரு வாகனம்.
 
4. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அல்லது வாகனங்கள் வீடுகள், பாதுகாப்பு போன்றவை இல்லை.
 
5. அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைத்தல்.
 
6. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பம்/பொரியல்களுக்கு இடமளிக்கப்படாது.

 7. அனைத்து சுற்றுப்பயணங்களும் ஒதுக்கப்பட்ட இலக்குகளில் உள்ளன.
 
8. 25 அமைச்சகங்கள் மட்டுமே.
 
9. மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளைக் குறைக்கவும்.
 
10. குறைந்த வட்டி விகிதங்கள் 
 
11. புதிய சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குவதற்கான மேம்பாட்டு வங்கி.

 12. மோசடி வழக்குகளை விசாரிக்க 3 பெஞ்ச் சிறப்பு நீதிமன்றம். 
 
13. ஜனாதிபதியின் பட்ஜெட் 50% குறைக்கப்பட்டது.
 
14. அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக எரிபொருள் பாவனை வாகனங்கள் இல்லை.
 
15. பூஜ்ஜிய அரசியல் செல்வாக்கு இல்லாமல் காவல்துறை, சட்டத் துறை மற்றும் நீதிமன்றங்களைச் சுதந்திரமானதாக மாற்றுவதன் மூலம் ஒரு சட்ட ஸ்தாபனம்.

 16. எம்.பி.க்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு மாறுவதைத் தடுக்க புதிய சட்டங்கள்.

 17. புதிய முதலீடுகள் (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஏற்கனவே முதலீடு செய்யத் தயாராக உள்ளனர்).
 
18. குடிமக்கள் மீது அரசியல்வாதிகளுக்கு கூடுதல் நன்மைகள் இல்லை.
 
19. அரசாங்கத் துறைகளின் தலைவர்கள், தூதர்கள் போன்றவற்றின் தகுதியின் அடிப்படையில் அனைத்து நியமனங்களும். 
 
20. எங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் (தேயிலை, ரப்பர், தேங்காய், இலவங்கப்பட்டை, மீன்பிடி, கற்கள் போன்றவை) மற்றும் சேவைகள் (வேலை வாய்ப்புகள்), புதிய சந்தைகள் மூலம் டாலர் வரவை மேம்படுத்தும் பணிகளை தூதுவர்கள் நியமிக்கப்படுவார்கள். 
 
21. சுற்றுலாவை மேம்படுத்துதல். 

 22. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீட்டமைத்தல்.
 
23. 25 அமைச்சுகளின் கீழ் வரும் அனைத்து துறைகளுக்கும் அணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
24. மகசூலை அதிகரிக்க மீன்பிடித் தொழிலுக்கான புதிய தொழில்நுட்பம் (மீனவர்கள் மீன்பிடி பகுதிகளுக்கான திசைகளைப் பெற)
 
25. R&D வழங்கும் வெவ்வேறு மண் இடங்களின்படி & சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்.
 
26. குறைந்தபட்ச செலவில் குளிர் அறைகள், உரங்கள் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற பாதுகாப்பு முறைகள்.
 
27. சுற்றுச்சூழல் அடிப்படையிலான சுற்றுலாவுக்கு வசதி.
 
28. தகவல் தொழில்நுட்ப சந்தையை கைப்பற்ற திட்டங்கள்.
 
29. பொருளாதாரத்தை எளிதாக்க கல்விக் கொள்கைகளில் மாற்றங்கள்.
 
30. போதுமான நிதியுதவி மூலம் குடிமக்களுக்கு அடிப்படையான உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி.

என்பனவாகும்.

அநுர குமார திஸாநாயக்க.
இலங்கை ஜனாதிபதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செயலாளராக  சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்.

https://thinakkural.lk/article/309813

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவரின் முக்கிய பதவிகள் மற்றும் நட்புகளில் தமிழர்கள் இல்லை???

தனிச்சிங்களம்,,???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதிக்கு புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் செயலாளராக  சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்.

https://thinakkural.lk/article/309813

இவர் அநுரவின் roommate ஆக பல்கலையில் இருந்தவர் என்கின்றனர். இதையே தான் கோதபாயாவும் செய்தவர்............... நியமனங்கள் நண்பர்கள் என்ற வகையில் மட்டும் இருந்தால், எதிர்பார்க்கப்படும் எந்த மாற்றமும் வரப் போவதில்லை............

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

ஏன் இவரின் முக்கிய பதவிகள் மற்றும் நட்புகளில் தமிழர்கள் இல்லை???

தனிச்சிங்களம்,,???

இவர்களின் நட்பு வட்டத்தில் தமிழர்கள் இல்லை என்றே நினைக்கின்றேன், விசுகு ஐயா. ஒரு போதும் ஒரு இணக்கமான சாதாரண பழக்கம் கூட இவர்களுக்கு சக தமிழர்களுடன் இருந்ததில்லை. இவர்களின் கட்சியில் சில தமிழர்கள் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இருக்கின்றார்கள்.

முக்கிய நியமனங்கள் பலவும் இவர்களின் நண்பர்களுக்கு மட்டுமே என்றால், அது தனிச் சிங்களமாகவே இருக்கப்போகின்றது.

கோதபாய இங்கு அமெரிக்காவில் இருந்து சில நண்பர்களை அவரின் காலத்தில் இதே போன்று பதவிகளில் நியமித்திருந்தார், உதாரணம்: உபுல் - விமான சேவைகள் ஆணையாளர்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரசோதரன் said:

இவர்களின் நட்பு வட்டத்தில் தமிழர்கள் இல்லை என்றே நினைக்கின்றேன், விசுகு ஐயா. ஒரு போதும் ஒரு இணக்கமான சாதாரண பழக்கம் கூட இவர்களுக்கு சக தமிழர்களுடன் இருந்ததில்லை. இவர்களின் கட்சியில் சில தமிழர்கள் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இருக்கின்றார்கள்.

முக்கிய நியமனங்கள் பலவும் இவர்களின் நண்பர்களுக்கு மட்டுமே என்றால், அது தனிச் சிங்களமாகவே இருக்கப்போகின்றது.

கோதபாய இங்கு அமெரிக்காவில் இருந்து சில நண்பர்களை அவரின் காலத்தில் இதே போன்று பதவிகளில் நியமித்திருந்தார், உதாரணம்: உபுல் - விமான சேவைகள் ஆணையாளர்.

முழு இனவாத அரசு 

நல்லது நடக்கட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

6. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பம்/பொரியல்களுக்கு இடமளிக்கப்படாது.

பொரியல்களுக்கு இடமளிக்கப் படாது என்றால் என்ன அர்த்தம்.
ஏதாவது எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளதா...?
அல்லது எண்ணையை மிச்சம் பிடிக்க... கத்தரிக்காய், மீன் போன்றவை பொரிக்க முடியாதா? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

பொரியல்களுக்கு இடமளிக்கப் படாது என்றால் என்ன அர்த்தம்.
ஏதாவது எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளதா...?

குஞ்சுகள் என்று அர்த்தப்படுத்தி பிள்ளைகள் என கருதலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இவர் அநுரவின் roommate ஆக பல்கலையில் இருந்தவர் என்கின்றனர். இதையே தான் கோதபாயாவும் செய்தவர்............... நியமனங்கள் நண்பர்கள் என்ற வகையில் மட்டும் இருந்தால், எதிர்பார்க்கப்படும் எந்த மாற்றமும் வரப் போவதில்லை............

நாங்கள் தனி ஆவரத்தனம் வாசிக்கிற ஆக்கள் ஆச்சே.அப்படி இருக்க எப்படி எதிர் பாக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

ஏன் இவரின் முக்கிய பதவிகள் மற்றும் நட்புகளில் தமிழர்கள் இல்லை???

தனிச்சிங்களம்,,???

 

32 minutes ago, விசுகு said:

முழு இனவாத அரசு 

நல்லது நடக்கட்டும்...

அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்போலும். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். பொறுத்திருந்து இந்தக் கட்சியின் ஆட்டத்தையும் காண்போம்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

2004ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர்நாள் உரையிலிருந்து......

இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது. இந்த இனவாதக் கட்சியை முக்கிய தோழமைப் பங்காளியாக அரவணைத்து, ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார் சந்திரிகா அம்மையார். தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து மாறுபட்ட போக்கும் முரண்பட்ட கொள்கையுமுடைய அரசியல் இயக்கங்களின் ஒவ்வாத கூட்டாக இந்த அரசாங்கம் அமையப்பெற்றது.

பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக, தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்களப்பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதே சமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில், ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது.

எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. இப் பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள்சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது.

தென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து, அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி, சமாதான முயற்சியை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளைதான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை முரண்பாடும் தலைதூக்கின.

அரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜே.வி.பி, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது. நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜே.வி.பியினரின் தீவிரவாதக் கடும்போக்கு, சந்திரிகா அம்மையாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது.

சமாதான வழிமுறையைப் பேணி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் ஒருபுறமும், பேச்சுக்கள் ஆரம்பமாகி முன்னேற்றம் ஏற்படும்போதுதான் உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த பெருந்தொகைக் கடனுதவி கிடைக்குமென்ற நிர்ப்பந்தம் மறுபுறமும், பாதாளம் நோக்கிச் சரிந்து செல்லும் இலங்கையின் பொருளாதாரம் இன்னொரு புறமுமாக, சந்திரிகாவின் அரசு பலமுனைகளில் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது.

ஒரு புலனக்குழுமத்தில் படித்ததைத் திரியோடு தொடர்புடையது என்பதால் பகிர்ந்துள்ளேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உடனடி மாற்றங்கள்.......

......................

அநுர குமார திஸாநாயக்க.
இலங்கை ஜனாதிபதி.

இந்த நிரல் இன்னமும் அநுரவைப் போய்ச் சேரவில்லை.......... இதில் இருக்கும் விபரங்கள் அவருக்கு தெரிய வந்தவுடன், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கி விடுவார்..............🤣.

'சந்திரனிலிருந்து அரிசி, முட்டை, சீனி, உள்ளி, இஞ்சி கொண்டு வருவோம்......' என்ற ஒரு வரியையும் இந்த நிரலில் 31 வதாக சேர்க்கலாம்..........😜.  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nochchi said:

 

அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்போலும். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். பொறுத்திருந்து இந்தக் கட்சியின் ஆட்டத்தையும் காண்போம்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

2004ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர்நாள் உரையிலிருந்து......

இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது. இந்த இனவாதக் கட்சியை முக்கிய தோழமைப் பங்காளியாக அரவணைத்து, ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார் சந்திரிகா அம்மையார். தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து மாறுபட்ட போக்கும் முரண்பட்ட கொள்கையுமுடைய அரசியல் இயக்கங்களின் ஒவ்வாத கூட்டாக இந்த அரசாங்கம் அமையப்பெற்றது.

பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக, தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்களப்பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதே சமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில், ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது.

எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. இப் பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள்சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது.

தென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து, அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி, சமாதான முயற்சியை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளைதான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை முரண்பாடும் தலைதூக்கின.

அரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜே.வி.பி, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது. நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜே.வி.பியினரின் தீவிரவாதக் கடும்போக்கு, சந்திரிகா அம்மையாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது.

சமாதான வழிமுறையைப் பேணி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் ஒருபுறமும், பேச்சுக்கள் ஆரம்பமாகி முன்னேற்றம் ஏற்படும்போதுதான் உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த பெருந்தொகைக் கடனுதவி கிடைக்குமென்ற நிர்ப்பந்தம் மறுபுறமும், பாதாளம் நோக்கிச் சரிந்து செல்லும் இலங்கையின் பொருளாதாரம் இன்னொரு புறமுமாக, சந்திரிகாவின் அரசு பலமுனைகளில் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது.

ஒரு புலனக்குழுமத்தில் படித்ததைத் திரியோடு தொடர்புடையது என்பதால் பகிர்ந்துள்ளேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

அப்பிடியே 2005 (2006?) உரையையும் புலனத்தில் இருந்து எடுத்துப் போட்டு விடுங்கோ! "..மகிந்த யதார்த்தவாதியாகத் தெரிகிறார்.." என்ற வரிகளை மீட்டுப் பார்க்க வசதியாக இருக்கும்😂!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

அப்பிடியே 2005 (2006?) உரையையும் புலனத்தில் இருந்து எடுத்துப் போட்டு விடுங்கோ! "..மகிந்த யதார்த்தவாதியாகத் தெரிகிறார்.." என்ற வரிகளை மீட்டுப் பார்க்க வசதியாக இருக்கும்😂!

மிக்க நன்றி, நிச்சயமாக எங்காவது கண்டால் இணைத்துவிடுகிறேன்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

இந்த நிரல் இன்னமும் அநுரவைப் போய்ச் சேரவில்லை.......... இதில் இருக்கும் விபரங்கள் அவருக்கு தெரிய வந்தவுடன், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கி விடுவார்..............🤣.

'சந்திரனிலிருந்து அரிசி, முட்டை, சீனி, உள்ளி, இஞ்சி கொண்டு வருவோம்......' என்ற ஒரு வரியையும் இந்த நிரலில் 31 வதாக சேர்க்கலாம்..........😜.  

இறுதியில் அவரது பெயர் இருப்பதை அவதானிக்கவில்லையோ,. 

ரசோதரனுக்கு எல்லாவற்றிற்கும் அவசரம்,..😁

1 hour ago, தமிழ் சிறி said:

பொரியல்களுக்கு இடமளிக்கப் படாது என்றால் என்ன அர்த்தம்.
ஏதாவது எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளதா...?
அல்லது எண்ணையை மிச்சம் பிடிக்க... கத்தரிக்காய், மீன் போன்றவை பொரிக்க முடியாதா? 😂

பொரியலில் எனக்கு விருப்பம் ஆனால் அவியலில் அல்ல,🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இறுதியில் அவரது பெயர் இருப்பதை அவதானிக்கவில்லையோ,. 

ரசோதரனுக்கு எல்லாவற்றிற்கும் அவசரம்,..😁

🤣........

அவர் பெயர் தானே இப்ப எல்லா இடமும் இருக்குது, கபிதன்......

நேற்று இது வாட்ஸ்அப்பில் ஆங்கிலத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.  ஆங்கிலத்தில் அநுரவின் பெயரை கீழே போட மறந்துவிட்டார்கள்.......

தமிழ் மொழிமாற்றம் வேறு தப்பும் தவறுமாக இருக்கின்றது..........

------------------------------------

Immediate Changes in a future NPP government . 
 
1. Paye Taxes from 36% to 24%.
2. VAT will be exempt for Food items, Health sector services & educational books.
3. One vehicle per minister/MP.
4. No pensions or vehicles houses, security etc for ex presidents & Ex parliamentarians.
5. Cut down on unnecessary government expenditure.
6. No familly/Frieds will be accommodated on overseas tours.
7. All tours are on assigned targets.
8. Only 25 ministries.
9. Cut down prices on electricity & fuel.
10. Low interest rates 
11. Development bank for the start of new small & medium scale industries.
12. A 3 bench special court to hear fraud cases. 
13. Presidents budget cut down by 50%.
14. No High fuel consumption vehicles for government officials & parliamentarians.
15. One law establishment by Making Police, Legal department & Courts independent with zero  political  influences.
16. New laws to prevent MP's from switching the party they were elected to.
17. New Invesments (local & overseas Srilankans already ready to invest).
18. No additional benefits for politicians over citizens.
19. All Appointments on merits starting from the heads of government departments, ambassadors etc. 
20. Ambassadors will be assigned with tasks  to improve the Dollar inflow through new markets for our values added products (Tea, Rubber, Coconut, Cinnamon, Fishery, Gems etc) & services (job opportunities), 21. Promoting tourism. 
22. Restoring the oil refinery.
23. Vision for all fields that will come under 25 ministries with teams assigned.
24. New technology for the fisheries industry to enhance the yeild (Fishermen to receive directions for fishing areas)
25. Farmers to cultivation as per the different soil localities provided by R&D & as per the market needs.
26. Preservative methods, such as cold rooms, fertiliser & other utilities at a mnimum cost.
27. Facilitate for Eco based tourism.
28. Plans to capture IT market.
29. Changes in the education policies to facilitate the economy.
30. Secure Food, Heath & and education as fundamentals for the citizens through adequate funds.
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

Immediate Changes in a future NPP government . 

 
1. Paye Taxes from 36% to 24%.
2. VAT will be exempt for Food items, Health sector services & educational books.
3. One vehicle per minister/MP.
4. No pensions or vehicles houses, security etc for ex presidents & Ex parliamentarians.
5. Cut down on unnecessary government expenditure.
6. No familly/Frieds will be accommodated on overseas tours.
7. All tours are on assigned targets.
8. Only 25 ministries.
9. Cut down prices on electricity & fuel.
10. Low interest rates 
11. Development bank for the start of new small & medium scale industries.
12. A 3 bench special court to hear fraud cases. 
13. Presidents budget cut down by 50%.
14. No High fuel consumption vehicles for government officials & parliamentarians.
15. One law establishment by Making Police, Legal department & Courts independent with zero  political  influences.
16. New laws to prevent MP's from switching the party they were elected to.
17. New Invesments (local & overseas Srilankans already ready to invest).
18. No additional benefits for politicians over citizens.
19. All Appointments on merits starting from the heads of government departments, ambassadors etc. 
20. Ambassadors will be assigned with tasks  to improve the Dollar inflow through new markets for our values added products (Tea, Rubber, Coconut, Cinnamon, Fishery, Gems etc) & services (job opportunities), 21. Promoting tourism. 
22. Restoring the oil refinery.
23. Vision for all fields that will come under 25 ministries with teams assigned.
24. New technology for the fisheries industry to enhance the yeild (Fishermen to receive directions for fishing areas)
25. Farmers to cultivation as per the different soil localities provided by R&D & as per the market needs.
26. Preservative methods, such as cold rooms, fertiliser & other utilities at a mnimum cost.
27. Facilitate for Eco based tourism.
28. Plans to capture IT market.
29. Changes in the education policies to facilitate the economy.
30. Secure Food, Heath & and education as fundamentals for the citizens through adequate funds.

இது நாங்கள் வகுப்பில் எடுத்த நோட்ஸுகளைப் போலவே இருக்குது......🤣.

நம்மட கூட்டாளிகள் தான் யாரோ அவசரப்பட்டு, தன்னுடைய ஆசையை இப்படி ஒரு லிஸ்ட்டாக வெளியிட்டிருக்கின்றார் போல..... 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்த நிரல் இன்னமும் அநுரவைப் போய்ச் சேரவில்லை.......... இதில் இருக்கும் விபரங்கள் அவருக்கு தெரிய வந்தவுடன், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கி விடுவார்..............🤣.

'சந்திரனிலிருந்து அரிசி, முட்டை, சீனி, உள்ளி, இஞ்சி கொண்டு வருவோம்......' என்ற ஒரு வரியையும் இந்த நிரலில் 31 வதாக சேர்க்கலாம்..........😜.  

ஏன் ராசா ஏன்??

நேற்று உங்கள் பள்ளித் தோழன் என்று எம் வயிற்றில் பால் வார்த்து விட்டு இன்று பால் ஊத்தல் தகுமோ???🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரசோதரன் said:

🤣........

அவர் பெயர் தானே இப்ப எல்லா இடமும் இருக்குது, கபிதன்......

நேற்று இது வாட்ஸ்அப்பில் ஆங்கிலத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.  ஆங்கிலத்தில் அநுரவின் பெயரை கீழே போட மறந்துவிட்டார்கள்.......

தமிழ் மொழிமாற்றம் வேறு தப்பும் தவறுமாக இருக்கின்றது..........

------------------------------------

Immediate Changes in a future NPP government . 
 
 
6. No familly/Frieds will be accommodated on overseas tours.

தகவல் மூலங்களை சரிபார்க்காமல் வெட்டி ஒட்டியவர் அப்படியே கூகிள் ட்ரான்ஸ்லேற்றரில் போட அது "பொரியலுக்குத் தடை" என்று மொழிமாற்றம் செய்திருக்கிறது😂!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரசோதரன் said:

6. No familly/Frieds will be accommodated on overseas tours.

Friend's ஆகி frieds! frieds பொரியல் ஆகி!! பொரியல் குஞ்சாகி!!! குஞ்சு பிள்ளைகளாகி..... ஒரு n போடாத்தால் எப்பிடியெல்லாம் ஹிஹிஹி....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

Friend's ஆகி frieds! frieds பொரியல் ஆகி!! பொரியல் குஞ்சாகி!!! குஞ்சு பிள்ளைகளாகி..... ஒரு n போடாத்தால் எப்பிடியெல்லாம் ஹிஹிஹி....

கூகிளை நம்பி அவசரமாகச் செய்தியாக்குவதில் வந்தவினை. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

🤣........

அவர் பெயர் தானே இப்ப எல்லா இடமும் இருக்குது, கபிதன்......

நேற்று இது வாட்ஸ்அப்பில் ஆங்கிலத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.  ஆங்கிலத்தில் அநுரவின் பெயரை கீழே போட மறந்துவிட்டார்கள்.......

தமிழ் மொழிமாற்றம் வேறு தப்பும் தவறுமாக இருக்கின்றது..........

------------------------------------

Immediate Changes in a future NPP government . 
 
1. Paye Taxes from 36% to 24%.
2. VAT will be exempt for Food items, Health sector services & educational books.
3. One vehicle per minister/MP.
4. No pensions or vehicles houses, security etc for ex presidents & Ex parliamentarians.
5. Cut down on unnecessary government expenditure.
6. No familly/Frieds will be accommodated on overseas tours.
7. All tours are on assigned targets.
8. Only 25 ministries.
9. Cut down prices on electricity & fuel.
10. Low interest rates 
11. Development bank for the start of new small & medium scale industries.
12. A 3 bench special court to hear fraud cases. 
13. Presidents budget cut down by 50%.
14. No High fuel consumption vehicles for government officials & parliamentarians.
15. One law establishment by Making Police, Legal department & Courts independent with zero  political  influences.
16. New laws to prevent MP's from switching the party they were elected to.
17. New Invesments (local & overseas Srilankans already ready to invest).
18. No additional benefits for politicians over citizens.
19. All Appointments on merits starting from the heads of government departments, ambassadors etc. 
20. Ambassadors will be assigned with tasks  to improve the Dollar inflow through new markets for our values added products (Tea, Rubber, Coconut, Cinnamon, Fishery, Gems etc) & services (job opportunities), 21. Promoting tourism. 
22. Restoring the oil refinery.
23. Vision for all fields that will come under 25 ministries with teams assigned.
24. New technology for the fisheries industry to enhance the yeild (Fishermen to receive directions for fishing areas)
25. Farmers to cultivation as per the different soil localities provided by R&D & as per the market needs.
26. Preservative methods, such as cold rooms, fertiliser & other utilities at a mnimum cost.
27. Facilitate for Eco based tourism.
28. Plans to capture IT market.
29. Changes in the education policies to facilitate the economy.
30. Secure Food, Heath & and education as fundamentals for the citizens through adequate funds.

எனக்கு அனுப்பியவர் ஒரு JVP ஆதரவாளர். அதனால் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

ஏன் ராசா ஏன்??

நேற்று உங்கள் பள்ளித் தோழன் என்று எம் வயிற்றில் பால் வார்த்து விட்டு இன்று பால் ஊத்தல் தகுமோ???🤣

🤣.........

அது வேற, இது வேற, விசுகு ஐயா...........

முந்தி இந்திய இராணுவத்துடன் இருந்த தலையாட்டிகள் உண்மையான இயக்கக்காரர்களை பார்த்து தலையாட்டுவதில்லை. ஆனால் ஊரில் தெரிந்தவர்கள் யாராவது மாட்டுப்பட்டால்  அவர்களைப் பார்த்து தலையை ஆட்டி விடுவார்கள்..............

கொழும்பில் போய் இறங்க, இந்த வருஷக்காரான், இந்த வகுப்புக்காரன் எல்லாரையும் தூக்கிக் கொண்டு போக ஒரு கூட்டம் தயாராக இருக்குதே தெரியல்ல.........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

🤣.........

அது வேற, இது வேற, விசுகு ஐயா...........

முந்தி இந்திய இராணுவத்துடன் இருந்த தலையாட்டிகள் உண்மையான இயக்கக்காரர்களை பார்த்து தலையாட்டுவதில்லை. ஆனால் ஊரில் தெரிந்தவர்கள் யாராவது மாட்டுப்பட்டால்  அவர்களைப் பார்த்து தலையை ஆட்டி விடுவார்கள்..............

கொழும்பில் போய் இறங்க, இந்த வருஷக்காரான், இந்த வகுப்புக்காரன் எல்லாரையும் தூக்கிக் கொண்டு போக ஒரு கூட்டம் தயாராக இருக்குதே தெரியல்ல.........🤣.

ஏதோ இங்கு கனபேர் உங்களை முன்னரங்குக்கு அனுப்பி பார்க்க தயாராகிறார்கள் என்பதை மட்டுமே இப்போது என்னால் உங்களுக்கு சொல்ல முடியும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

ஏதோ இங்கு கனபேர் உங்களை முன்னரங்குக்கு அனுப்பி பார்க்க தயாராகிறார்கள் என்பதை மட்டுமே இப்போது என்னால் உங்களுக்கு சொல்ல முடியும் 🤣

பல்கலைத் தோழனுக்கே தமிழனென்பதற்காக என்ன வரவேற்பென அறிந்தால், எமது நிலை எப்படியென்று அறியலாமென்ற யோசனைபோல் உள்ளது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.