Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
01 OCT, 2024 | 09:59 AM
image

புதிய ஜனாதிபதியின் போக்கு திருப்திகரமாக இருக்கிறது. அவர் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்து செயற்பட்டால், அவருடன் இணைந்து பயணிப்போம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை (30)  மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.   

மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி அநுரவிற்கு நாடாளுமன்றில் எனக்கு அருகில் உள்ள ஆசனம் தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர் பேசுவதனை நான் ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருப்பேன்.   

அவர் உற்சாகமாக பேசுவார். யாரவது குறுக்கிட்டால் அவர்களின் பின்னணி பற்றி கதைப்பார். அந்தளவுக்கு மற்றவர்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தவர்.   

அவர் ஒரு தடவை என்னிடம் கேட்டார். எங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என ஏன் கூறினீர்கள் என, அதற்கு நான் சொன்னேன். 

வடக்கு கிழக்கை பிரித்தது நீங்கள் தான் என தமிழ் மக்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என, அதற்கு அவர் பார்ப்போம் என்றார்.  

நான் சொன்ன மாதிரி தமிழ் மக்களின் வாக்குகள் குறைவாகவே கிடைத்தது. அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும் அவருக்கு வாழ்த்து கூறிய போது , நான் சொன்ன மாதிரி தமிழ் மக்கள் பெரியளவில் உங்களுக்கு வாக்கு போடவில்லை என கூறினேன்.  

அதேநேரம், தமிழ் மக்களை நீங்கள் ஒரு தேசிய இனமாக, தேசியமாக கருதி செயற்பட்டால் நாமும் உங்களுடன் இணைந்து பயணிக்க முடியும் என கூறினேன். அவர் அதற்கு எதுவும் சொல்லவில்லை.   

இதுவரையில் அவரின் செயற்பாடு திருப்திகரமாக எனக்கு தெரிகிறது. எனது பாதுகாப்புக்கு இருந்த நாலு பொலிஸாரையும் திருப்பி எடுத்து விட்டார்கள். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. மனஸ்தாபமும் இல்லை.  

பதுளையில் நான் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த 1988ஆம் ஆண்டு கால பகுதியில் ஜே.வி.பி கிளர்ச்சி உக்கிரமடைந்திருந்த கால பகுதி. அப்போது எனக்கு பொலிஸ் பாதுகாப்பு தர கேட்டார்கள். நான் வேண்டாம் என மறுத்து விட்டேன்.   

ஏனெனில் ஜே.வி.பி யினர் ஆயுதங்களுக்காக பொலிஸாருடன் சண்டை போடுவார்கள். அதனால் எனக்கு தான் தேவையில்லா பிரச்சனை அதனால் பொலிஸ் பாதுகாப்பு வேண்டாம் என கூறி தனிய இருந்தேன்.   

அதனால் தற்போது எனக்கு இருந்த பாதுகாப்பு எடுக்கப்பட்டது தொடர்பில் எனக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை என்றார்.  

https://www.virakesari.lk/article/195190

அடுத்த பார் லைசென்ஸ்சுக்கு இப்பவே அடி போடுகின்றார் அய்யா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அடுத்த பார் லைசென்ஸ்சுக்கு இப்பவே அடி போடுகின்றார் அய்யா

நிழலி எடுத்ததே போயிடும் போல இருக்கே?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

நிழலி எடுத்ததே போயிடும் போல இருக்கே?

Bar license எடுத்துக் கொடுத்தது மறைந்த சுவாமி பிறேமானந்தாவின் வடமராட்சி ஆச்சிரமத்தின் உரிமையாளரின் மகளுக்காம். அவருக்கு ஏற்கனவே அங்கே வேறு பார்களும் உண்டாம். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அரங்கை விட்டு அகலவே மாட்டார்கள் போல.

அநுரவிற்கு தமிழ் மக்கள் வாக்குப் போடமாட்டார்கள் என்று நாடி பிடித்து சரியாகச் சொன்னேன் என்கிறார்......... உங்களுக்கு மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்றும் இந்த இடத்தில் ஒரு சொல்லு சொல்லலாமே...........😜.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி அநுரவிற்கு நாடாளுமன்றில் எனக்கு அருகில் உள்ள ஆசனம் தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர் பேசுவதனை நான் ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருப்பேன்.   

எனக்கு அவரை தெரியும். நல்ல பழக்கம். ஒண்டாய் திரிஞ்சனாங்கள்.ஒரே பள்ளிக்கூடத்தில படிச்சனாங்கள். நான் இவருக்கு தேத்தண்ணி வாங்கி குடுத்தனான்.இவற்றை சொந்தங்களுக்கு நானெண்டால் நல்ல பிரியம்......😁
இன்னும் வரலாம்.....😋

பட்டுவேட்டி கள்ளரெண்டு சும்மாவே சொன்னவையள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

இவர்கள் அரங்கை விட்டு அகலவே மாட்டார்கள் போல.

அநுரவிற்கு தமிழ் மக்கள் வாக்குப் போடமாட்டார்கள் என்று நாடி பிடித்து சரியாகச் சொன்னேன் என்கிறார்......... உங்களுக்கு மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்றும் இந்த இடத்தில் ஒரு சொல்லு சொல்லலாமே...........😜.

அவர் தேர்தலில் இனி போட்டு இடமாட்டார்   உங்கள் போன்ற இளைஞர்களுக்கு வழி விடுகிறார் 🙏🙏🙏🤣😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அவர் தேர்தலில் இனி போட்டு இடமாட்டார்   உங்கள் போன்ற இளைஞர்களுக்கு வழி விடுகிறார் 🙏🙏🙏🤣😀

🤣....

உண்மையான தமிழர்கள் இதை எல்லா இடங்களிலும் பகிர்வார்கள், இளைஞனின் விபரத்துடன்......🤣.
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.