Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!

kugenOctober 7, 2024
 
IMG-20241007-WA0029__1_.jpg

யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு இன்று திங்கட்கிழமை (07) தாக்கல் செய்யப்பட்டது. 

இதன்போது 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய வேட்பு மனுவே யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார். 

இதேவேளை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, 

வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பிடி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. 

இதன்போது ஊடகவியலாளர்கள் கொழும்பில் இம்முறை ஈ.பி.டி.பி போட்டியிடுவதற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா? என்ற கேள்விக்கு 

கொழும்பிலுள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழுப்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்திவந்திருந்தனர். அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது ஈ.பி.டி.பி. 

இதேநேரம் ஈ.பிடி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறிவருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்ககின்றனர். 

அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்திருநதமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.battinews.com/2024/10/blog-post_259.html

 

நான் நினைக்கவில்லை, யாழ் மக்கள் இவருக்கு இந்த முறை வாக்களிப்பர் என. தேசியப் பட்டியல் மூலம் தான் ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்பிருக்கும் இம் முறை.

எப்படிக் கிடைப்பினும், அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

எப்படிக் கிடைப்பினும், அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை. 

யார் ஆட்சிக்கு வந்தாலும் தொப்பென்று விழுகிறபடியால் ஏதாவது கிடைக்கலாம்.

இதன் முன்னோடியாக தேர்தலுக்குப் பின் அனுராவுக்கு ஆதரவு என்று முழங்கினார்.

அனுராவுக்கும் மட்டுமட்டாக வந்தால் இவர்களது ஆதரவு தேவைப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2024 at 14:59, நிழலி said:

நான் நினைக்கவில்லை, யாழ் மக்கள் இவருக்கு இந்த முறை வாக்களிப்பர் என. தேசியப் பட்டியல் மூலம் தான் ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்பிருக்கும் இம் முறை.

எப்படிக் கிடைப்பினும், அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை. 

டக்ளஸ்... வாழ் நாள் அமைச்சராக இருப்பார் என எண்ணியிருந்தேன். 
அனுர அதை கெடுத்து விட்டார் போலுள்ளது. 🤣

57 minutes ago, தமிழ் சிறி said:

டக்ளஸ்... வாழ் நாள் அமைச்சராக இருப்பார் என எண்ணியிருந்தேன். 
அனுர அதை கெடுத்து விட்டார் போலுள்ளது. 🤣

இடையில் மகிந்த ஆட்சியிலும் 3 வருடங்கள் அமைச்சர் பதவி இல்லாமல் இருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

இடையில் மகிந்த ஆட்சியிலும் 3 வருடங்கள் அமைச்சர் பதவி இல்லாமல் இருந்தார். 

அந்த மூன்று வருடமும்.... கை, அரித்துக் கொண்டே இருந்திருக்கும். 😂
தகவலுக்கு... நன்றி நிழலி. 👍

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளின் சாவுக்கு காரணமானவன்.. எப்படி கிட்லர் யூதர்களை அழித்தானோ அந்த அளவுக்கு பல தமிழ் இளைஞர்களை தேடி தேடிக்கொன்றதற்கு காரணமானவன் டக்ளஸ்.. இந்த கட்சி இன்றுவரை அரசியலில் இருக்க காரணம் தமிழ்தேசிய கட்சிகள் விட்ட மற்றும் விட்டுக்கொண்டிருக்கும் தவறுகள்.. ஈபிடிபி அரசியலில் இணைந்து கஸ்ரப்படும் தமிழ் மக்களுக்கு செய்தவற்றை எல்லாம் தமிழ் தேசியக்கட்சிகள் செய்திருக்கவேண்டியவை.. அவை அவற்றை தவறவிட்டதால்தான் இன்றுவரை அந்த கட்சி அரசியலில் ஒரு ஆசனமாவது பெற்று நிலைத்திருக்கிறது.. அரசியல் பிரச்சினைகளுடன் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளையும் ஆட்சியில் வரும் சிங்கள அரசுகளுடன் பேரம்பேசி கவனிக்கும் அளவுக்கு ஒரு தமிழ் தேசிய கட்சி வரும் வரைக்கும் ஈபிடிபியின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.. 

நான் நினைப்பது சரியோ தெரியவில்லை.. இப்போதைக்கு அதை சுமந்திரன் செய்யவிளைவது போல் தெரிகிறது.. முயல்கிறார் ஆனால் எந்த உஅதவியும் இன்னமும் மக்களுக்கு செய்ததாக தெரியவில்லை.. அப்படி செய்தால் இன்னும் பலவருடங்களுக்கு அசைக்க முடியாத சக்தியாக சுமந்திரன் வளர்வது நிச்சயம் அல்லது அதை செய்யும் ஏதாவது ஒரு தமிழ் தேசியக்கட்சி வருவது நிச்சயம்..

அதேபோல் புலமபெயர் சில தமிதேசிய அதிதீவிர முட்டாள்களைப்போல் எதிர்கால இனம்பற்றிய தமிழ் நிலம் பற்றிய சிந்தனை இல்லாமல் வெற்று உசுப்பேத்தல் மட்டும் செய்யும் அதிதீவிர தமிழ்தேசிய போலிக்கட்சிகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாறாவிட்டால் இன்னமும் தேயப்போவது நிச்சயம்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

டக்ளஸ் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளின் சாவுக்கு காரணமானவன்.. எப்படி கிட்லர் யூதர்களை அழித்தானோ அந்த அளவுக்கு பல தமிழ் இளைஞர்களை தேடி தேடிக்கொன்றதற்கு காரணமானவன் டக்ளஸ்.. இந்த கட்சி இன்றுவரை அரசியலில் இருக்க காரணம் தமிழ்தேசிய கட்சிகள் விட்ட மற்றும் விட்டுக்கொண்டிருக்கும் தவறுகள்.. ஈபிடிபி அரசியலில் இணைந்து கஸ்ரப்படும் தமிழ் மக்களுக்கு செய்தவற்றை எல்லாம் தமிழ் தேசியக்கட்சிகள் செய்திருக்கவேண்டியவை.. அவை அவற்றை தவறவிட்டதால்தான் இன்றுவரை அந்த கட்சி அரசியலில் ஒரு ஆசனமாவது பெற்று நிலைத்திருக்கிறது.. அரசியல் பிரச்சினைகளுடன் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளையும் ஆட்சியில் வரும் சிங்கள அரசுகளுடன் பேரம்பேசி கவனிக்கும் அளவுக்கு ஒரு தமிழ் தேசிய கட்சி வரும் வரைக்கும் ஈபிடிபியின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.. 

நான் நினைப்பது சரியோ தெரியவில்லை.. இப்போதைக்கு அதை சுமந்திரன் செய்யவிளைவது போல் தெரிகிறது.. முயல்கிறார் ஆனால் எந்த உஅதவியும் இன்னமும் மக்களுக்கு செய்ததாக தெரியவில்லை.. அப்படி செய்தால் இன்னும் பலவருடங்களுக்கு அசைக்க முடியாத சக்தியாக சுமந்திரன் வளர்வது நிச்சயம் அல்லது அதை செய்யும் ஏதாவது ஒரு தமிழ் தேசியக்கட்சி வருவது நிச்சயம்..

அதேபோல் புலமபெயர் சில தமிதேசிய அதிதீவிர முட்டாள்களைப்போல் எதிர்கால இனம்பற்றிய தமிழ் நிலம் பற்றிய சிந்தனை இல்லாமல் வெற்று உசுப்பேத்தல் மட்டும் செய்யும் அதிதீவிர தமிழ்தேசிய போலிக்கட்சிகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாறாவிட்டால் இன்னமும் தேயப்போவது நிச்சயம்..

எதிர்கால இனம்பற்றிய தமிழ் நிலம் பற்றிய சிந்தனை இல்லாமல் வெற்று உசுப்பேத்தல் மட்டும் செய்யும் அதிதீவிர தமிழ்தேசிய புலம்பெயர்ஸ் முட்டாள் கூட்டத்திற்கு அங்கே தமிழரின் நிலமும் மக்கட் தொகையும் இல்லாவிட்டால் தமிழ்த் தேசியம் அழிந்துவிடும் என்பது புரிவதில்லை. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

டக்ளஸ் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளின் சாவுக்கு காரணமானவன்.. எப்படி கிட்லர் யூதர்களை அழித்தானோ அந்த அளவுக்கு பல தமிழ் இளைஞர்களை தேடி தேடிக்கொன்றதற்கு காரணமானவன் டக்ளஸ்.. இந்த கட்சி இன்றுவரை அரசியலில் இருக்க காரணம் தமிழ்தேசிய கட்சிகள் விட்ட மற்றும் விட்டுக்கொண்டிருக்கும் தவறுகள்.. ஈபிடிபி அரசியலில் இணைந்து கஸ்ரப்படும் தமிழ் மக்களுக்கு செய்தவற்றை எல்லாம் தமிழ் தேசியக்கட்சிகள் செய்திருக்கவேண்டியவை.. அவை அவற்றை தவறவிட்டதால்தான் இன்றுவரை அந்த கட்சி அரசியலில் ஒரு ஆசனமாவது பெற்று நிலைத்திருக்கிறது.. அரசியல் பிரச்சினைகளுடன் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளையும் ஆட்சியில் வரும் சிங்கள அரசுகளுடன் பேரம்பேசி கவனிக்கும் அளவுக்கு ஒரு தமிழ் தேசிய கட்சி வரும் வரைக்கும் ஈபிடிபியின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.. 

நான் நினைப்பது சரியோ தெரியவில்லை.. இப்போதைக்கு அதை சுமந்திரன் செய்யவிளைவது போல் தெரிகிறது.. முயல்கிறார் ஆனால் எந்த உஅதவியும் இன்னமும் மக்களுக்கு செய்ததாக தெரியவில்லை.. அப்படி செய்தால் இன்னும் பலவருடங்களுக்கு அசைக்க முடியாத சக்தியாக சுமந்திரன் வளர்வது நிச்சயம் அல்லது அதை செய்யும் ஏதாவது ஒரு தமிழ் தேசியக்கட்சி வருவது நிச்சயம்..

அதேபோல் புலமபெயர் சில தமிதேசிய அதிதீவிர முட்டாள்களைப்போல் எதிர்கால இனம்பற்றிய தமிழ் நிலம் பற்றிய சிந்தனை இல்லாமல் வெற்று உசுப்பேத்தல் மட்டும் செய்யும் அதிதீவிர தமிழ்தேசிய போலிக்கட்சிகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாறாவிட்டால் இன்னமும் தேயப்போவது நிச்சயம்..

எங்கள் தமிழ் அரசியல்வாதிகளை நம்புவதை விட சிங்கள அரசியல்வாதிகளை நம்புவது மேலான விடயம் என்பதனை  கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல் உறுத்தி சொல்லியிருக்கின்றது போல் தெரிகின்றது . அதிலும் அந்த இரண்டு தேர்தலிலும் தமிழ்மக்கள் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அமோகமாக வாக்களித்திருந்தனர். கோத்தபாய போட்டியிட்டபோதும் தமிழ்மக்கள் சஜித்திற்கு வாக்களித்திருந்தனர். இதனாலேயே  கோத்தபாய சிங்களமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என மார்தட்டி இனவாதத்தை பிரமாண்டமாக காட்டினார். அதே போல் சிங்களவாக்குகளால் பெரும்பான்மையாக வந்த அனுர இன்றுவரை எதுவுமே பேசவில்லை.வாய் திறக்கவில்லை. இன்றுவரை யாரையும் எதிர்த்து பேசவில்லை. தன் உடை நடைகளையும் மாற்றவில்லை.

எதற்கும் மூன்றுமாதம் பொறுத்திருப்போம்....அதன் பின்....

எனது பார்வையில் அனுர பொது ஆட்சி செய்து இலங்கையின் நிலமையை சீராக்க ஆரம்பித்தாலும்.......கிந்திய கருநாகம் சும்மா விடப்போவதில்லை.

 உதாரணங்களாக அண்மைய பங்களாதேஷ் ஆட்சி கவிழ்ப்பும் குழப்பங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

அதேபோல் புலமபெயர் சில தமிதேசிய அதிதீவிர முட்டாள்களைப்போல் எதிர்கால இனம்பற்றிய தமிழ் நிலம் பற்றிய சிந்தனை இல்லாமல் வெற்று உசுப்பேத்தல் மட்டும் செய்யும் அதிதீவிர தமிழ்தேசிய போலிக்கட்சிகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாறாவிட்டால் இன்னமும் தேயப்போவது நிச்சயம்..

இப்பவே கதை முடிஞ்சுது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.