Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி

1287387152.jpg

தமிழரசு ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடவில்லை என்பதால் வேட்பாளர் தெரிவில் நீக்கினார்கள் - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்!

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினாலும் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல்  தடுத்தார்கள் எனவும் தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை செயலாளர்  மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார். 

இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில், தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் எனக் கூறுபவர்  தமிழரசு கட்சியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பெண்களை தேடினோம் பலரும் பின்னடிக்கிறார்கள் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டார். 

அவரது கருத்தை நான் முற்றாக மறுக்கிறேன் தமிழரசு கட்சியில் ஆளுமை மிக்க  பெண்கள் இருக்கும்போது எங்கோ எல்லாம் தேடி இரு பெண்களைப் பிடித்து வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இறக்கி உள்ளனர்.

தமிழரசு கட்சியில் இருக்கும் என்னைப் போன்ற பெண்கள் ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடும் பெண்களாகவோ அல்லது தலையாட்டும் பெண்களாகவோ இருக்காத காரணத்தினால் எம்மை தேர்தலில் நிறுத்தவில்லை.

நான் முப்பது வருடங்களுக்கு மேலாக தனியார் காப்புறுத்துறையில் பல பதவி நிலைகளை வசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளையில் பத்து  வருடங்களுக்கு மேலாக பல்வேறு பதவி நிலைகளை வகித்தவள்.

தமிழரசு கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத நிலையில் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி விக்னேஸ்வரனே தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறேன்.

தமிழரசு கட்சியினுடைய தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஆளுமை உள்ள பலரை தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரேரித்த நிலையில் அது நடைபெறவில்லை அதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினேன் என வெளிப்படையாக பேசி இருந்தார்.

ஒரு தலைவரால் கட்சியில் செயல்பட முடியாத அளவுக்கு ஒரு சிலரின் செயற்பாடு அத்து மீறிய நிலையில் அந்தக் கட்சிக்குள் இருப்பது தவறு என நினைத்து என்னைப் போன்ற பலர் வெளியேறினர்.

தமிழ் தேசிய உணர்வுடன் தமிழரசு கட்சிக்குள் பயணித்தவர்கள் கட்சிக்குள் இடம்பெறும் விரும்பத்தகாத செயற்பாடுகள் காரணமாக கட்சியை இருந்து விலகுவதாக எழுத்து மூலம் கடிதங்களை அனுப்பி உள்ளனர்.

அது மட்டுமல்லாது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தமிழரசு கட்சியிலிருந்து விலகுவதற்கான தீர்மானங்களை எடுத்த வருகின்றனர்.

ஆகவே தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சியாக இனியும் செயல்பட முடியாத நிலையில் தமிழரசு கட்சியின் கொள்கைகளை மாற்றியவர்கள் நிச்சயம் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். 
 

https://newuthayan.com/article/சலாம்_போடாததால் வேட்பாளர்_தெரிவிலிருந்து_நீக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆன்டிக்குப் பிரச்சினை தனக்கு சீட்டுகொடுக்கவில்லை என்பதுதான். மிதிலை ஆன்டி கிட்டாதாயின் வெட்டென மற எண்டு அவ்வையார் ஆன்டி சொல்லியிருக்காங்க. உங்களைப் போன்ற மனமுடைந்தோருக்காக தவம் அங்கிள் கட்சி தொடங்கியிருக்காங்க அங்கயும் இப்ப சீட்டு முடிஞ்சுதாம்!😂

ஆன்டி உங்களுக்கு சலாம் போட விருப்பமில்லாட்டி தோப்புக்கரணம் போட்டிருக்கலாம்!👀

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிடாரி மற்றவர்களை விரட்டுது, அதை விட, விரட்டப்படுகிறவர்களை விமர்சித்து, அந்த பிடாரியை காப்பாற்ற பலர். ஒருவர், இருவர் என்றால் பரவாயில்லை, தலைவரில் இருந்து எல்லோரும் வெளியேறுகிறார்கள், அதற்கான எதிர்ப்பை காட்ட முடியாவிடில், சார்பாக பேசுவது முக ஸ்துதி, தம்மைத்தாமே ஏமாற்றுவது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஒரு பிடாரி மற்றவர்களை விரட்டுது, அதை விட, விரட்டப்படுகிறவர்களை விமர்சித்து, அந்த பிடாரியை காப்பாற்ற பலர். ஒருவர், இருவர் என்றால் பரவாயில்லை, தலைவரில் இருந்து எல்லோரும் வெளியேறுகிறார்கள், அதற்கான எதிர்ப்பை காட்ட முடியாவிடில், சார்பாக பேசுவது முக ஸ்துதி, தம்மைத்தாமே ஏமாற்றுவது.

 

சாத்தான்.

இவர்கள் எல்லோரும் நாடாளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டிற்காக வெளியேறுகிறார்கள். இவர்கள் ஒருவரும் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக வெளியேறவில்லை. இதைத் தாங்கள் கவனிக்கவில்லையோ? 

 

(ஐயனுக்கு போராட்டத்தின் வரலாறு தெரியாதோ?😁)

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனை எல்லாரும் திட்டுறீர்கள் சரி, அப்படி என்றால் வெளியேறிய எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து நிற்க வேண்டியது தானே? அதற்கு ஏன் வாய்ப்பில்லை? 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

 

சாத்தான்.

இவர்கள் எல்லோரும் நாடாளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டிற்காக வெளியேறுகிறார்கள். இவர்கள் ஒருவரும் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக வெளியேறவில்லை. இதைத் தாங்கள் கவனிக்கவில்லையோ? 

 

(ஐயனுக்கு போராட்டத்தின் வரலாறு தெரியாதோ?😁)

 

உங்களுக்கு கன்ரீன் சாப்பாடு வேண்டுமென்றால், மற்றவர்களையும் உங்கள் ரகம் என்று கருதாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

தமிழரசு ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடவில்லை என்பதால் வேட்பாளர் தெரிவில் நீக்கினார்கள் - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்!

உங்களின் வீட்டுப் பிரச்சனை எங்களுக்கு வேண்டாம். குப்பைகளைக் கொண்டு வந்து தெருவில் கொட்டாதீர்கள்.

நாட்டுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீங்ங்கள்?   தமிழினத்துக்கு நல்லது என்ன செய்யப் போகிறீங்கள்? அதைச் சொல்லுங்கள் முதலில்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

உங்களுக்கு கன்ரீன் சாப்பாடு வேண்டுமென்றால், மற்றவர்களையும் உங்கள் ரகம் என்று கருதாதீர்கள்.

தமிழ்த் தேசியம் காக்கவா அவர்கள் கட்சி மாறினார்கள்? தேர்தல் சீற் கிடைக்கவில்லை என்பதால்தானே? 

இது கூட உங்களுக்குப் புரியாமல்தானா இத்தனை நாளும்  அரசியல் கருத்தாடுகிறீர்கள்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

சீற் கிடைக்கவில்லை என்று வெளியேறியவர்கள் தொகை சீற்றை விட அதிகம் போல இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாலி said:

ஆன்டி உங்களுக்கு சலாம் போட விருப்பமில்லாட்டி தோப்புக்கரணம் போட்டிருக்கலாம்!👀

ஏன்?? ஏன்  தோப்புக்கரணம் போடவேண்டும். ??   அவர்   வீரத் தமிழிச்சி    விட்டால்   விழுந்து கும்பிடு.   என்றும் சொல்லுவீர்கள்.  போலும்”  அவர் சொல்வது பொய் என்பதற்காக ஆதரங்களை   முன் வையுங்கள்   

தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறுவது சரி தான்   

அவர். சீற்றுக்காக.  வெளியேறவில்லை    மக்கள் யாருக்கு சீற்று கொடுக்கப். போகிறார்கள்  என்பதை பார்பதற்க்காக. வெளியேறியுள்ளார். .....

உங்கள் விவாதப்படி  தமிழரசு  கட்சியில். சீற்றுப பெற்றவர்கள்  

சீற்றுக்காகத் தான்  தமிழரசுக்கட்சியில். இருக்கிறார்கள் என்பதாகும். 

தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறியவர்கள். நாங்கள் பெறுமதிமிக்கவர்கள்.  செல்வாக்கு உள்ளவர்கள் என்பதை எப்படி காட்ட முடியும்   ?? 

வேறு கட்சியில். இணைவது அல்லது 

புதிய கட்சி தொடங்குவது   இதில் என்ன பிழையுண்டு ?? 

சுமத்திரனால்.  சீற்றுப்பெற்றவர்கள்.  நாங்கள் பெறுமதி மிக்கவர்கள். செல்வாக்கு உள்ளவர்கள்    என்பதை  காட்டட்டும் 

பார்ப்போம்  முடியுமா???  

8 hours ago, Kapithan said:

 

சாத்தான்.

இவர்கள் எல்லோரும் நாடாளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டிற்காக வெளியேறுகிறார்கள். இவர்கள் ஒருவரும் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக வெளியேறவில்லை. இதைத் தாங்கள் கவனிக்கவில்லையோ? 

 

(ஐயனுக்கு போராட்டத்தின் வரலாறு தெரியாதோ?😁)

 

வெளியேறமால் இருப்பவர்கள்   பாராளுமன்றம் போய் சமைத்து சாப்பிடுவார்களா?? 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

இவர்கள் எல்லோரும் நாடாளுமன்றக் கன்ரீன் சாப்பாட்டிற்காக வெளியேறுகிறார்கள். இவர்கள் ஒருவரும் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக வெளியேறவில்லை. இதைத் தாங்கள் கவனிக்கவில்லையோ? 

ஆமா, கன்ரீன் சாப்பாடு சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் ருசி தெரியும், அதனால் அவர்களும் விரும்புவதில் தப்பில்லையே? இவளவு நாளும் அவர்கள் வெளியேற நினைக்கவில்லை, இப்போ நினைக்கிறார்கள். உலக்கைதேய்ந்து உளிப்பிடியாய் நிற்குது, இனிமேல் பிடிக்க ஆளில்லாமல் மறையப்போகுது. சாப்பாடு என்று கூறி சாப்பாட்டை கேவலப்படுத்தாதீர்கள், அது இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் பறந்துபோகும். மஹிந்த பட்டாளம் அதற்கு உதாரணம். உண்மையை எதிர் கொள்ள முடியாவிட்டால், அவர்களை கேவலப்படுத்துவது. அதுதான் தேர்தல் மேடையில் நடக்கிறது. நீங்கள் இங்கு களத்தில் ஆடுவதை எல்லோரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள், அது உங்களுக்கு புரிவதில்லை.        

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.