Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற குடும்பங்களுக்கு, அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். 

வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் வெள்ளிக்கிழமை (25) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்து, அவர்களது நிலைப்பாடுகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இச்சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான சந்திப்பை அடுத்து, அவர்களது கதைகளால் தான் மிகுந்த துயருற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அவர்களது கதைகளைப் போலவே வட, கிழக்கு மாகாணங்களிலும், தெற்கிலும் தான் சந்தித்து, கேட்டறிந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் கதைகள், காணாமல்போன தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் உண்மை மற்றும் நீதிக்காகப் போராடிவருகின்ற தரப்பினரின் பெருந்துயரை வெளிக்காண்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சகல குடும்பங்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/197126

  • கருத்துக்கள உறவுகள்

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்." இலங்கையில் முக்கியமான தருணங்களில் இவர் சூறாவளி சுற்றுலா செய்வார். கொழுத்தி விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் இவர்களின் வழமை.

இவவும் இலங்கை தேர்தலில் போட்டியிடுகிறாவோ? அழுதுகொண்டு திரியிறா.

7 hours ago, ஏராளன் said:

அவர்களது கதைகளால் தான் மிகுந்த துயருற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, satan said:

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்." இலங்கையில் முக்கியமான தருணங்களில் இவர் சூறாவளி சுற்றுலா செய்வார். கொழுத்தி விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் இவர்களின் வழமை.

இவவும் இலங்கை தேர்தலில் போட்டியிடுகிறாவோ? அழுதுகொண்டு திரியிறா.

 

இவர் ஆட்சி மாற்றத்தில் பலே கில்லாடி...என்ற காரணத்தால் இவர் தொடர்ந்து சிறிலங்காவில் பணி புரிய அமேரிக்கா உத்தரவிட்டுள்ளது போல கிடக்கு .....அடுத்த ஆட்சி கவிழ்ப்பு நடந்தால் இவ்ர் தான் சிறிலங்காவின் ஜனாதிபதியோ தெரியல்ல‌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, putthan said:

இவர் ஆட்சி மாற்றத்தில் பலே கில்லாடி...என்ற காரணத்தால் இவர் தொடர்ந்து சிறிலங்காவில் பணி புரிய அமேரிக்கா உத்தரவிட்டுள்ளது போல கிடக்கு .....அடுத்த ஆட்சி கவிழ்ப்பு நடந்தால் இவ்ர் தான் சிறிலங்காவின் ஜனாதிபதியோ தெரியல்ல‌

அடுத்ததொரு ஆட்சி கவிழ்ப்பு வந்தால் திருப்பியும் சிங்கன் ரணில்தான் ஜனாதிபதி. 🤣
 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

அடுத்ததொரு ஆட்சி கவிழ்ப்பு வந்தால் திருப்பியும் சிங்கன் ரணில்தான் ஜனாதிபதி. 🤣
 

அப்படி ரணில் ஆட்சிக்கு வந்தால் ..
தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கு என சொல்வார் ...இதனால் சிறிலங்கா தேசியவாதிகளும்.....சிவப்பு கோவணக்காரரும் ஆத்திரமடையப் போயினம் ....ஏன் சும்மா அவையளின்டன் இர்த்த கொதிப்பை கூட்டுவான் 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எதற்கு பெயர் போனவர் என்பதால் அமெரிக்கா இவரை  சிறிலங்காவுக்கு அனுப்பி இருப்பதை பலர் அறிந்து இருக்கலாம். இவரது அறிக்கைக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை என்பதை காலம் வரும் போது அறியலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2024 at 22:00, putthan said:

இவர் ஆட்சி மாற்றத்தில் பலே கில்லாடி...என்ற காரணத்தால் இவர் தொடர்ந்து சிறிலங்காவில் பணி புரிய அமேரிக்கா உத்தரவிட்டுள்ளது போல கிடக்கு .....அடுத்த ஆட்சி கவிழ்ப்பு நடந்தால் இவ்ர் தான் சிறிலங்காவின் ஜனாதிபதியோ தெரியல்ல‌


இவர் இந்த வேலைகளில் கில்லாடி என்பது உண்மை தான் ஆனால்  தமிழர்களை பேய்காட்டுகின்றார் என்பதை வெளியே தெரியும் விதமாக செய்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:


இவர் இந்த வேலைகளில் கில்லாடி என்பது உண்மை தான் ஆனால்  தமிழர்களை பேய்காட்டுகின்றார் என்பதை வெளியே தெரியும் விதமாக செய்கின்றார்

தமிழர்களுக்காக அவர் சரி அவருடைய நாடு சரி ஒன்றும் செய்யப்போவதில்லை. தமிழருக்கு என்ற ஒர் கோப்பு(file) அவர்களிடம் இருக்கும் அதை இடக்கிட தூசு தட்டி கிளின் பண்ணிவிட்டு அதே இடத்தில் வைத்துவிடுவார்கள்...அவர்கள் நலன்கருதி வடபகுதி தமிழர் பகுதி என்பதை அடிக்கடி நினைவில் வைத்திருப்பார்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தூதர் கூறுவது மக்களின் அடிப்படை உரிமை, இதற்கான விசாரணையினை அமெரிக்க அரசின் உதவியினூடாக தமிழ் அரசியல்வாதிகள் கோர வேண்டும், இதன் மூலம் நீண்ட ஒரு முடிவற்ற பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கப்படும் இதன் மூலம் இலங்கயின் முன்னோக்கிய பயணத்திற்கு அமெரிக்கா தனது உதவியினை வழங்க முயற்சிக்க வேண்டும்.

எந்த வித உருப்படியான  செயலையும் செய்யாத இலங்கை தமிழரசியல்வாதிகள் இதனையாவது செய்வார்களா? இந்த நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் எதுவும் தமிழ் மற்றும் பெரும்பான்மை கட்சிகள் இதுவரை எந்த ஒரு தேர்தல்  விஞ்சாபனத்தையும் தமிழ் மக்கள் நலன் சார்ந்து அறிவிக்கவில்லை, இவர்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கிறார்கள் ? இவ்வாறான தேர்தல்களால் அரசியல்வாதிகளுக்குத்தான் நன்மை மக்களுக்கல்ல.

தற்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் சாதாரணமாக சிந்திக்கும் ஆற்றல் கூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.