Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@புலவர் உங்கள் தலைவர் கஜேந்திரகுமார் தமிழ் தேசம் கேட்டுக்கொண்டு தனது கட்சி பெயரை “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்” - “சமமஸ்தலங்கா திராவிட சங்கமய”  என்ற பெயரை இப்போதும் உத்தியோக பூர்வமாக வைத்தருக்கிறார். 

  • Replies 306
  • Views 15.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

  • பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புலவர் said:

நேற்று தமிழ்நாடு என்று கொண்டாடினார்;கள். சம நேரத்தில் கேரளஈதெலுங்கு கன்னட மக்களும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாடுர்கள். அண்ணா  கேட் ட திராவிடநாடு தமிழ்நாடு ஆந்திராஈகேரளா மற்றும் கர்நாடகா நான்கையும் உள்ளடக்கியது. காலப்போக்கில் அண்ணா திராவிட நாட்டுக்கொள்கையைக் கைவிட்டார். ஆனால்கட்சிப்பெயரில் திராவிடத்தை சுமந்துகொண்டு இன்னும் திமுக இருக்கிறது. அதிலிருந்து பிரிந்த கட்சிகளும் அதே திரவிடத்தைச் சுமந்த நிற்கின்றன. இந்த நிலை தமிழ்நாட்டைத்தை; தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.மலையாளிகளோ >தெலுங்கர்களோ கன்னடர்களோ தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று அழைத்ததுமில்லை.அழைக்கப் போவதும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்மதராசுப்பட்டினம் (மெட்ராஸ்)தென்னிந்தியாவில்மிகவும் மக்கியமான ஆட்சிமையமாக விளங்கியதால் அயல் மாநிலங்களில் இருந்தவர்கள் பலர் குடியேறினார்கள்.அவர்களின்வாரிசுகளே தெடர்ச்சியாக ஆட்சிக்கடடிழல் அமர்ந்து வருகிறார்கள். திமுகவுக்கு முதல் திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டில் புழக்கத்தில் பெரிய அளவில் இலலை. அரசியல் கட்சிகளும்; திராவிடத்தின் பெயரில் இருக்கவில்லை.இப்பொழுது லரலாறு திரும்புகிறது. சீமனுக்குப் பிறகு அரசியல்கட்சிகளைத்துவங்கிய யாரும் திராவட என்ற சொல்லைக்கவனமாகத் தவர்த்தே வருகிறார்கள.இது தமிழத்தேசியத்தின் மீள் எழுச்சியையே காட்டுகிறது. சீமானினின் கட்சிக்கு எம்எல்ஏக்களோ எம்பிக்களோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் இனிகட்சி துவங்கும் யாரும் தமிழ்த்தேசியததை புறக்கணித்து கட்சியை நடத்த முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சீமான் பிலபலம் இல்லையென்பதால் அவர் வெற்றியைப் பெற முடியாதுபோனாலும் அவரின் கொள்கைைகள் வெற்றிபெறுவது பெரிய வெற்றியே. கொள்கை வெல்வதையே ஒரு நல்ல தலைவன் விரும்புவான்.மற்றைய மாநிலத்வர்கள் திராவிடத்தைச் சுமக்க விரும்பாதபோது தமிழர்கன் மட்டும் ஏன் திராவிடத்தை அந்த எக்ஸரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிய வேண்டும்.மற்றவர்களைச் சொல்லிவிட்டு விஸயைே எக்ஸ்ரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிவதும்  கத்திப் பேசுவமதும் நியாயமா?

ச‌ரியா க‌ருத்து👍........................

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, island said:

@புலவர் உங்கள் தலைவர் கஜேந்திரகுமார் தமிழ் தேசம் கேட்டுக்கொண்டு தனது கட்சி பெயரை “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்” - “சமமஸ்தலங்கா திராவிட சங்கமய”  என்ற பெயரை இப்போதும் உத்தியோக பூர்வமாக வைத்தருக்கிறார். 

அந்தக்கட்சி உருவாகிய காலத்தில் தனிநாட்டுக் கோரிக்கை எழுந்திருக்;கவில்லை. இலங்கைத் தேசத்துக்குள் தமிழருக்கான கட்சியாகத்தான் அது உதித்தது. அதிலிருந்து பிரிந்த கட்சிகள்தான் தமிழரசுகட்சி தொடநங்கி நேற்று முளைத்த கட்சிகள்வரை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

அந்தக்கட்சி உருவாகிய காலத்தில் தனிநாட்டுக் கோரிக்கை எழுந்திருக்;கவில்லை. இலங்கைத் தேசத்துக்குள் தமிழருக்கான கட்சியாகத்தான் அது உதித்தது. அதிலிருந்து பிரிந்த கட்சிகள்தான் தமிழரசுகட்சி தொடநங்கி நேற்று முளைத்த கட்சிகள்வரை.

எனது கேள்வி இன்றும் “அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்” சமஸ்தலங்கா திராவிட சங்கமய  என்று உத்தியோகபூர்வமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?   தமிழர் தேச காங்கிரஸ்  என்று  மாற்றியிருக்கலாம் தானே! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

தமிழர்கள் திராவிட மரபணுவில் இருந்து வந்தவர்களே. அந்த வகையில் தமிழ் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றே.  2009 வரை இந்த வரலாற்று புரிதல் ஈழத்தமிழர்களுக்கும் இருந்தது .  யாழ்பாணம் நவீன சந்தை கட்டடம் கட்டப்பட்ட போது அது  எமது திராவிட கட்டட கலையின் அடிப்படையில் கட்டப்பட்டது என்று அன்றைய பத்திரிகைகளில் சிலாகிக்கப்பட்டது.  

தமிழர்கள் திராவிடர்களே என்ற புரிதல் விடுதலைப்புலிகளுக்கும் இருந்தது.  திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் என்ற நூலில்,  இலங்கை தீவில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  அதுவும் திராவிட குடியிருப்புக்கள் என்று எழுதி அடைப்புக்குறிக்குள் தமிழ் என்று அன்ரன் பாலசிங்கம் எழுதியுள்ளார். ஒருவேளை அன்ரன் பாலசிங்கமும் ஒரு வந்தேறி யோ? 

large.IMG_7908.jpeg.0958f8ef79438de99f9aa3d4fca72636.jpeg

 

தமிழ் ஒரு பழைமையான மொழி. இன்று திராவிட மொழிகள் என்று சொல்லப்படுகின்ற அத்தனை மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்தான் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அந்த மொழியில் எந்த ஒரு 
இடத்திலும் திராவிடம் என்ற சொல் இல்லை. அதுதமிழ்ச்சொல்லே அல்ல. காரடுவெல்லுக்குப் பிறகே திராவிடம்(திரிவடுகர்)என்ற சொல் தோற்றம் பெறுகிறது. வராற்று ஆய்வுகள் காலத்திற்கு காலம் மாறுபடுபவை. பல ஆய்வுகள் பிழை என்று நிருபி;கப்பட்டும் இருக்கின்றது. இன்று பல ஆய்வாளர்கள் திராவிடம் என்பது பிழையான கோட்பாடு என்பதை  ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

தமிழ் ஒரு பழைமையான மொழி. இன்று திராவிட மொழிகள் என்று சொல்லப்படுகின்ற அத்தனை மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்தான் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அந்த மொழியில் எந்த ஒரு 
இடத்திலும் திராவிடம் என்ற சொல் இல்லை. அதுதமிழ்ச்சொல்லே அல்ல. காரடுவெல்லுக்குப் பிறகே திராவிடம்(திரிவடுகர்)என்ற சொல் தோற்றம் பெறுகிறது. வராற்று ஆய்வுகள் காலத்திற்கு காலம் மாறுபடுபவை. பல ஆய்வுகள் பிழை என்று நிருபி;கப்பட்டும் இருக்கின்றது. இன்று பல ஆய்வாளர்கள் திராவிடம் என்பது பிழையான கோட்பாடு என்பதை  ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.

இந்திய மொழிகள் தொடர்பான அறிவியல் ரீதியான ஆராய்சசியை முதன் முதலாக செய்தவர் கார்டுவேல் மட்டுமே. அதற்கு முன்பு வரை வட மொழியான சமஸ்கிரகத்தில் இருந்து தமிழ் உருவாகியது எனவும் சிவபெருமானின் உடுக்கில் இருந்து ஒரு பக்கத்தில் சமஸ்கிரதமும் மறுபக்கதில் தமிழும் பிறந்ததாக அடிமுட்டாள் கருத்துக்களே நம்பப்பட்டு வந்தது.

கார்டுவேல் செய்த  மொழியியல்  ஆய்வை  இதுவரை எவரும்  அறிவியல் அடிப்படையில் தவறென்று  நிரூபிக்கவில்லை. அப்படி நிரூபித்ததாக  எந்த உத்தியோகபூர்வ தகவலும்  இல்லை. வெறும  தமது அரசியல் பிழைப்புக்காக சிலர்  கூறுபனவற்றை ஏற்கமுடியாது. 

அப்படி அறிவியல் ரீதியில் நீரூபித்ததாக நீங்கள் கூறினால் அதை நிரூபித்த அந்த ஆய்வாளர் யார்?

 1.  அவர்பெயர் என்ன?

 2.  அந்த ஆய்வுக்காக அவர்  பாவித்த critaria என்ன? 

(தயவு செய்து பாரிசாலன், மன்னர்  மன்னன் போன்ற யூருப் டுபாக்கூர்கள் முட்டாள்களின்  பெயரை கூறிவிடாதீர்கள்.) 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

 

அய்ய‌நாத‌ன் ஒரு சாக்க‌டை..................2016க‌ளில் உன்ன‌ க‌ட்சிய‌ விட்டு நீக்கின‌தில் த‌ப்பே இல்லை...................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

நேற்று தமிழ்நாடு என்று கொண்டாடினார்;கள். சம நேரத்தில் கேரளஈதெலுங்கு கன்னட மக்களும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாடுர்கள். அண்ணா  கேட் ட திராவிடநாடு தமிழ்நாடு ஆந்திராஈகேரளா மற்றும் கர்நாடகா நான்கையும் உள்ளடக்கியது. காலப்போக்கில் அண்ணா திராவிட நாட்டுக்கொள்கையைக் கைவிட்டார். ஆனால்கட்சிப்பெயரில் திராவிடத்தை சுமந்துகொண்டு இன்னும் திமுக இருக்கிறது. அதிலிருந்து பிரிந்த கட்சிகளும் அதே திரவிடத்தைச் சுமந்த நிற்கின்றன. இந்த நிலை தமிழ்நாட்டைத்தை; தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.மலையாளிகளோ >தெலுங்கர்களோ கன்னடர்களோ தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று அழைத்ததுமில்லை.அழைக்கப் போவதும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்மதராசுப்பட்டினம் (மெட்ராஸ்)தென்னிந்தியாவில்மிகவும் மக்கியமான ஆட்சிமையமாக விளங்கியதால் அயல் மாநிலங்களில் இருந்தவர்கள் பலர் குடியேறினார்கள்.அவர்களின்வாரிசுகளே தெடர்ச்சியாக ஆட்சிக்கடடிழல் அமர்ந்து வருகிறார்கள். திமுகவுக்கு முதல் திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டில் புழக்கத்தில் பெரிய அளவில் இலலை. அரசியல் கட்சிகளும்; திராவிடத்தின் பெயரில் இருக்கவில்லை.இப்பொழுது லரலாறு திரும்புகிறது. சீமனுக்குப் பிறகு அரசியல்கட்சிகளைத்துவங்கிய யாரும் திராவட என்ற சொல்லைக்கவனமாகத் தவர்த்தே வருகிறார்கள.இது தமிழத்தேசியத்தின் மீள் எழுச்சியையே காட்டுகிறது. சீமானினின் கட்சிக்கு எம்எல்ஏக்களோ எம்பிக்களோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் இனிகட்சி துவங்கும் யாரும் தமிழ்த்தேசியததை புறக்கணித்து கட்சியை நடத்த முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சீமான் பிலபலம் இல்லையென்பதால் அவர் வெற்றியைப் பெற முடியாதுபோனாலும் அவரின் கொள்கைைகள் வெற்றிபெறுவது பெரிய வெற்றியே. கொள்கை வெல்வதையே ஒரு நல்ல தலைவன் விரும்புவான்.மற்றைய மாநிலத்வர்கள் திராவிடத்தைச் சுமக்க விரும்பாதபோது தமிழர்கன் மட்டும் ஏன் திராவிடத்தை அந்த எக்ஸரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிய வேண்டும்.மற்றவர்களைச் சொல்லிவிட்டு விஸயைே எக்ஸ்ரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிவதும்  கத்திப் பேசுவமதும் நியாயமா?

மேலே ரசோ எழுதியதையே நானும் சொல்கிறேன்.

திராவிட இனம் = 5 மொழிவாரி இனங்களின் கூட்டுப் பொதுப்பெயர்.

திராவிட அரசியல் சித்தாந்தம் = தமிழ் நாட்டில் ஆரிய சித்தாந்ததுக்கு எதிராக நீதி கட்சி, பின் பெரியாரால் எழுப்பபட்டது.

நீங்கள் இனப் பகுப்பை, சித்தாந்தத் தோடு போட்டு குழப்பி கொள்கிறீர்கள்.

மெட்ராஸ் மாநிலமாக இருந்த போதே மற்றைய 3 தென் மானிலங்களாக பிரிந்த பகுதிகளில் திராவிட சித்தாந்தம் பரவவில்லை. அவர்கள் ஒன்றில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ் அல்லது ஜனதா கட்சி (பின்னாளில்)தான்.

தமிழர் பகுதியில்தான் அநேகம் பிராமண எதிர்ப்பு அரசியல் நிலை கொண்டது. இதன் ஆரம்பகால பெயர் பிராமணர் அல்லாதோர் சங்கம்.

 அப்போ 5 மொழி பேசுவோரும் ஒன்றாக இருந்தமையால், பிராமண எதிர்ப்பு அரசியல் என்ற தத்துவத்தை பிராமணர் அல்லாதோருக்கு பொதுவாக திராவிடம் என்ற சொல் உள்ளே வருகிறது.

ஆனால் இதன் இனவழி அடையாளப்பொருள் மொழி வாரி மாநில பிரிப்போடு செத்து விடுகிறது.

இப்போ திராவிடம் என்றால் அது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தான அரசியல் தத்துவம் மட்டும்தான்.

இதை திராவிட சித்தாந்தம் என சொல்லுவது கசக்கிறது என்ரால் பெரியாரிசம் என சொல்லி விட்டு நகருங்கள்.

சுருங்க சொல்லின், ஆரியத்தை இரு வகையில் எதிர்க்கலாம். தமிழ் தேசியம் அல்லது திராவிடம்.

மூன்றாவதாக இரெண்டு வழியையும் சேர்த்து, தமிழனாய் உணர்பவன் எல்லாம் தமிழன் என்ற அடிப்படையில் இன்னும் சிறப்பாகவும் எதிர்க்கலாம். 

முந்தி சைவமா, வைணமவா என நம் மன்னர்கள் அடிபட்டார்கள், அதே போல் மூவேந்தர் அடிபட்டார்கள். கடைசியில் தஞ்சையை மராட்டியனிடமும், மதுரையை நவாப்பிடம் கொடுத்ததுதான் மிச்சம்.

இதை ஒத்த ஒரு வீண் வேலைதான் இந்த

திராவிடம் vs தமிழ் தேசிய போலி விவாதமும்.

இதை தூண்டி விடுவதில் முன் நிற்பவர்கள் “ஒற்றுமை கிலோ என்ன விலை” என கேட்கும் ஈழத்தமிழர்கள் என்பது வியப்பில்லை.

கொள்கை மோதல், பிரதேச மோதல், இயக்க மோதல், இயக்க-உள் மோதல் என தமது தலையில் மண்ணை அள்ளி கொட்டி கொண்ட ஒரு இனம், இப்போ தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு நிலையை உருவாக்கி விட உழைக்கிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

திராவிடம் vs தமிழ் தேசிய போலி விவாதமும்.

இதை தூண்டி விடுவதில் முன் நிற்பவர்கள் “ஒற்றுமை கிலோ என்ன விலை” என கேட்கும் ஈழத்தமிழர்கள் என்பது வியப்பில்லை.

கொள்கை மோதல், பிரதேச மோதல், இயக்க மோதல், இயக்க-உள் மோதல் என தமது தலையில் மண்ணை அள்ளி கொட்டி கொண்ட ஒரு இனம், இப்போ தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு நிலையை உருவாக்கி விட உழைக்கிறது.

சரியாக சொன்னீர்கள். எமது ஈழத்தமிழர் ஆயுத இயக்கங்கள் பற்றி தமிழ் நாட்டு மக்கள் அறிந்ததே,  பிரபா- உமா  துப்பாக்கி மோதல் என்ற,  ஒற்றுமையீனம் மூலமாகவே. இது நடந்தது 19.05.1982.  அன்று இவர்கள் இருவரையும்  இலங்கை அரசிடம் கையளிக்காமல் பாதுகாக்கவும் ஒற்றுமைப்படுத்வுமே  தமிழ் நாட்டு அரசியல்த் தலைவர்கள் கட்சி பேதமின்றி செயற்பட்டனர்.  அது முடியாமல் போன பின்பு கூட ஈழத்தமிழருக்கு உதவ கட்சி பேதமின்றி எல்லோரும் பங்களித்தனர்

 ஆனால்,  சிங்கள பேரினவாதம் என்ற பாரிய  பொது எதிரியுடன் மோத தம்மை மேலும் பலப் படுத்தவேண்டிய  நிலையில் கூட  சுயநல அதிகார வேட்கையில்  தம்முள் மோதி  பலவீனப்பட்டு தம் தலையில் தாமே மண்ணை போட்ட பிறகு கூட திருந்தாமல் இன்றும் தாயகத்திலும் சரி புலம் பெயர் நாடுகளிலும் சரி தம்முள் முட்டி மோதிக்கொண்டே  தமக்கு உதவிய குற்றத்துக்காக  தமிழ் நாட்டிலும்  அவர்களிடையே இவ்வாறான பிரிவினைகளை வளர்க்க தூபம் போடுகிறார்கள்.   ஒரு நாட்டை ஜனநாயக முறைப்படி நிர்வகிக்க எந்த தகுதியும் இல்லாத இனம் இது. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, island said:

சரியாக சொன்னீர்கள். எமது ஈழத்தமிழர் ஆயுத இயக்கங்கள் பற்றி தமிழ் நாட்டு மக்கள் அறிந்ததே,  பிரபா- உமா  துப்பாக்கி மோதல் என்ற,  ஒற்றுமையீனம் மூலமாகவே. இது நடந்தது 19.05.1982.  அன்று இவர்கள் இருவரையும்  இலங்கை அரசிடம் கையளிக்காமல் பாதுகாக்கவும் ஒற்றுமைப்படுத்வுமே  தமிழ் நாட்டு அரசியல்த் தலைவர்கள் கட்சி பேதமின்றி செயற்பட்டனர்.  அது முடியாமல் போன பின்பு கூட ஈழத்தமிழருக்கு உதவ கட்சி பேதமின்றி எல்லோரும் பங்களித்தனர்

 ஆனால்,  சிங்கள பேரினவாதம் என்ற பாரிய  பொது எதிரியுடன் மோத தம்மை மேலும் பலப் படுத்தவேண்டிய  நிலையில் கூட  சுயநல அதிகார வேட்கையில்  தம்முள் மோதி  பலவீனப்பட்டு தம் தலையில் தாமே மண்ணை போட்ட பிறகு கூட திருந்தாமல் இன்றும் தாயகத்திலும் சரி புலம் பெயர் நாடுகளிலும் சரி தம்முள் முட்டி மோதிக்கொண்டே  தமக்கு உதவிய குற்றத்துக்காக  தமிழ் நாட்டிலும்  அவர்களிடையே இவ்வாறான பிரிவினைகளை வளர்க்க தூபம் போடுகிறார்கள்.   ஒரு நாட்டை ஜனநாயக முறைப்படி நிர்வகிக்க எந்த தகுதியும் இல்லாத இனம் இது. 

உன்னை திருத்து

உலகம் திருந்தும்.

மற்றவரை நோக்கி உன் சுட்டு விரல் நீளும் போது மற்ற நான்கு விரல்களும் உன்னை நோக்கி கூனி நிற்பதை மறக்காதே....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இப்போ திராவிடம் என்றால் அது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தான அரசியல் தத்துவம் மட்டும்தான்.

இதை திராவிட சித்தாந்தம் என சொல்லுவது கசக்கிறது என்ரால் பெரியாரிசம் என சொல்லி விட்டு நகருங்கள்.

சுருங்க சொல்லின், ஆரியத்தை இரு வகையில் எதிர்க்கலாம். தமிழ் தேசியம் அல்லது திராவிடம்.

உங்கள் பார்வையில் திராவிடமும் தமிழ்த்தேசியமும் வேறு வேறல்ல என்று  உணர முடிகிறது.தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம்தான் திராவிடத்தேசியம் என்று சொல்கிறீர்கள். காலடுவெல்லுக்கு முதல் திராவிடம் என்றே சொல்லே கிடையாது. எந்த பழந்தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற  சொல் இல்லை. தென்இந்திய மொழிகளன்தாய் தமிழ் என்று ஏற்றுக் கொள்ளும் கார்டுவல் எதற்காக திராவிட மொழிக்குடும்பம் சமஸ்கிருத சொல்லை வைத்தார். தமிழ்மொழிக் குடும்பம் என்று சொல்வதில் அவருக்கு என்ன தயக்கம். ஒரு பிள்ளைக்கு தந்தையின் பெயருக்குப் பதிலாக பக்கத்து வீட்டுக்காரனின் பெயரை வைப்பதை எப்படி டஏற்கலாம்.சரி விடயத்துக்கு வருவோம். 
தமிழ்தேசியத்தை முன்னெடுத்து தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசியல் இயக்கம்தான் இருக்கிறது. திராவிடத் தேசியத்தை கொண்ட பல கட்சிகள் இருக்கின்றன. விஜை மாற்றாக வருவதாயின் அவரும் திராவிட் தேசியத்தின் பெயரில் கட்சிப் பெயரை வைத்திருக்கலாமே.எதற்காக தமிழ்த்தேசிய முகமூடி தேவைப்படுகிறது. விஜயகாந் போல ஏன் தனித்து நின்று தன் பலத்தைக்காட்டிவிட்டு பின்பு கூட்டணிபற்றி பேசலாமே. அதுவும் விஜயகாந்தை விட உச்ச நடிகர். மதற்தடைலையிலேயே முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார். அது மிகவும்சவாலானதுதான் அதிமுக தன்தலைமைவிட்டுக் கீழிறங்காது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாயின் அதிமுகவே  4ட்டணியின் தலைமை அணியாக இருக்கும். விஜய் தன் பலததை நிரூபிக்கும் வரை  இதுதான நிலைமை. வேண்டுமானால் இன்னுமொரு மக்கள் நலக் கூட்டணியாக அல்லு சில்லு கட்சிகளை வைத்து கூட்டணி அமைக்கலாம். அது எந்த அளவுக்கு வெற்றிவாய்ப்பைத் தரும் என்பது சொல்ல முடியாது. இருந்தாலும் விஜய்யின் அரசியல் லருகையை நான் ஆதரிக்கிறேன்.ஊழல்கட்சிகளுக்கு மாற்றாகவும் திராவிட வாக்குகளைச் சிதறடிப்பதற்கும் அது உதவட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, island said:

ஆனால்,  சிங்கள பேரினவாதம் என்ற பாரிய  பொது எதிரியுடன் மோத தம்மை மேலும் பலப் படுத்தவேண்டிய  நிலையில் கூட  சுயநல அதிகார வேட்கையில்  தம்முள் மோதி  பலவீனப்பட்டு தம் தலையில் தாமே மண்ணை போட்ட பிறகு கூட திருந்தாமல் இன்றும் தாயகத்திலும் சரி புலம் பெயர் நாடுகளிலும் சரி தம்முள் முட்டி மோதிக்கொண்டே  தமக்கு உதவிய குற்றத்துக்காக  தமிழ் நாட்டிலும்  அவர்களிடையே இவ்வாறான பிரிவினைகளை வளர்க்க தூபம் போடுகிறார்கள்.   ஒரு நாட்டை ஜனநாயக முறைப்படி நிர்வகிக்க எந்த தகுதியும் இல்லாத இனம் இது. 

எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள் பல பிரச்சினை இருக்லாம் அ தற்காக அந்நியன் எம்மை ஆள நினைக்கக் கூடாது. 

ஆயிரம் உண்டுங்கு சாதி -எனில்
அந்நியன் வந்து புகல் என்ன நீதி?

8 hours ago, goshan_che said:

அப்போ 5 மொழி பேசுவோரும் ஒன்றாக இருந்தமையால், பிராமண எதிர்ப்பு அரசியல் என்ற தத்துவத்தை பிராமணர் அல்லாதோருக்கு பொதுவாக திராவிடம் என்ற சொல் உள்ளே வருகிறது.

 நாங்கள் திராவிடர்களை எதிர்ப்பது பிழை என்றால் எதற்காக பிராமணர்களை எதிர்க்க வேண்டும். அவர்களும் திராவிடர்களைப் போல நீண்ட காலமாக தமிழ்மண்ணில் வசிப்பவர்கள்தானே. பாராதியார் ஒரு பிராமணர் அவர் தமிழுக்கு செய்த கரணாநிதி செய்து விட்டார். தென்கிழக்காசிவை ஒரே குடைக்கீழ் அண்ட ராஜராஜ சோழனுக்குச் சிலை இல்லை. காமராஜர்>கக்கனுக்குச் சிலை இல்லை.ஆனால் மெரினா பீச இன்று திராவிடச் சுடுகாடாகி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and people smiling

நடிகர் விஜய் அரசியல் குறித்து எனக்கு விமர்சனம் உண்டு.

ஆனால் அவர் தன் பிரமாண்டமான மாநாட்டில் ஈழத் தமிழர் இருவருக்கு வாய்ப்பளித்தமை உண்மையில் பாராட்டுக்குரியது.

ஒருமுறை சன் டிவியில் நடந்த போட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஈழத் தமிழ் அகதி இளைஞன் ஒருவன் பங்குபற்றியிருந்தான்.

சில வாரங்கள் கடந்த பின்னர் அவ் இளைஞன் ஒரு ஈழத் தமிழ் அகதி என்பது சன் டிவி நிர்வாகத்தினருக்கு  தெரிய வந்துள்ளது.

உடனே அந்த அகதி இளைஞன் எவ்வித காரணமும் கூறாமல் நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டான்.
இந்நிலையில் ஏற்கனவே தன் படம் ஒன்றில் ஈழத் தமிழ் பெண் ஒருவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார் விஜய். 

இப்போது தன் அரசியல் மாநாட்டில் தமிழ்த்தாய் பாடவும் தமது கட்சி பாடல் ஒன்றை எழுதவும் என இரு ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

இவர் இவ்வாறு வாய்ப்பளிப்பது இனி மற்றவர்களும் ஈழத் தமிழருக்கு வாய்ப்பளிக்க வழி செய்கிறது.
விஜய் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

தோழர் பாலன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உன்னை திருத்து

உலகம் திருந்தும்.

மற்றவரை நோக்கி உன் சுட்டு விரல் நீளும் போது மற்ற நான்கு விரல்களும் உன்னை நோக்கி கூனி நிற்பதை மறக்காதே....

இந்த பழமொழி தீவிர தேசிக்காய்களுக்கு தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.  அடுத்த தலைமுறையையும் அழிக்க நினைக்கும்  மகா அயோக்கியர்கள் இவர்கள்.  (வந்து சிவப்பு புள்ளியை இட்டு இதை ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துமாறு அன்புடன் உங்களை அழைக்கிறேன்.) 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, island said:

இந்த பழமொழி தீவிர தேசிக்காய்களுக்கு தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.  அடுத்த தலைமுறையையும் அழிக்க நினைக்கும்  மகா அயோக்கியர்கள் இவர்கள்.  (வந்து சிவப்பு புள்ளியை இட்டு இதை ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துமாறு அன்புடன் உங்களை அழைக்கிறேன்.) 

சிங்களவனுக்கு காட்டி கூட்டிக் கொடுத்து உங்கள் போன்ற தீவிர சிங்கள தேசிக்காய்கள் தான் (வேசிக்காய் என்பதே பொருத்தம் என்றாலும் யாழ் களத்தின் நாகரீகம் கருதி அதனை தவிர்க்கிறேன்) இத்தனை அழிவுகளுக்கும் காரணம். இனி இங்கே சிங்கள தேசியக்காய் என்றே நீவீர் அழைக்கப்படுவீர்கள்.  (தமிழ் தேசிக்காய் என்பதை நிறுத்தும் வரை)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, island said:

இந்த பழமொழி தீவிர தேசிக்காய்களுக்கு தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.  அடுத்த தலைமுறையையும் அழிக்க நினைக்கும்  மகா அயோக்கியர்கள் இவர்கள்.  (வந்து சிவப்பு புள்ளியை இட்டு இதை ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துமாறு அன்புடன் உங்களை அழைக்கிறேன்.) 

அது உங்க‌ட‌ ப‌க‌ல் க‌ன‌வு

2009க‌ளில் ஆயுத‌த்தை மெள‌வுனிக்கிறோம் என்று சொன்ன‌ பிற‌க்கு இந்த‌ 15 வ‌ருட‌த்தில் ஆயுத‌த்தை தூக்க‌ வில்லை

 

அறிவாயுத‌ம் சிற‌ந்த‌ வ‌ழி என்று தான் ப‌ல‌ த‌மிழ் தேசிய‌ வாதிக‌ள் ப‌ய‌ணிக்கின‌ம்

 

உங்க‌ட‌ க‌ருத்துக்க‌ளை வாசிக்க‌ அருவ‌ருப்பாக‌ இருக்கு

 

யாழில் 2009க்கு முத‌ல் என்ன‌ பெய‌ரில் எழுதி நீங்க‌ள்

 

உங்க‌ளை மாதிரி போலி முக‌ம் த‌மிழ் தேசிய‌ வாதிக‌ளுக்கு கிடையாது . முடிந்தால் யாழில் தொட‌ர்ந்து ஒரு பெய‌ரில் எழுதுங்கோ😎.......................

 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2024 at 17:36, goshan_che said:

அப்போ விஜைக்கு விஜி அண்ணி என்ன முறை🤣.

 

விஜி அண்ணிக்கு தளபதி விஜய் அண்ணன் முறை திடுக்கிடும் ஆதாரம் சிக்கியது!😂(இப்படித்தானே தமிழ் ஊடகவியலாளர்களும் யூடியூப்பர்களும் செய்திகளுக்குத் தலைப்பு இடுகின்றனர்)

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

சிங்களவனுக்கு காட்டி கூட்டிக் கொடுத்து உங்கள் போன்ற தீவிர சிங்கள தேசிக்காய்கள் தான் (வேசிக்காய் என்பதே பொருத்தம் என்றாலும் யாழ் களத்தின் நாகரீகம் கருதி அதனை தவிர்க்கிறேன்) இத்தனை அழிவுகளுக்கும் காரணம். இனி இங்கே சிங்கள தேசியக்காய் என்றே நீவீர் அழைக்கப்படுவீர்கள்.  (தமிழ் தேசிக்காய் என்பதை நிறுத்தும் வரை)

நீங்கள் என்னை  சிங்கள தேசிக்காய் என்று அழைத்தால் எனக்கு கோபம் வராது.  ஏனென்றால் அது எனக்கானது அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.  ஆகவே தாராளமாக அப்படி நீங்கள் கூறி மகிழ்ந்து கொள்ளலாம். உங்களது அந்த மகிழ்சசிக்கு நான் தடையாக இருக்கப்போவதில்லை. 

ஆனால், உண்மையை கண்டவுடன், அந்த உண்மை தனது பாசாங்குத்தனத்தைச் (Hypocrisy)   சுட்டிக்காட்டுவதாக மனதார உணர்ந்து  எவனுகெல்லாம் எரிச்சல் வருகிறதோ, அவனெல்லாம் தமிழ் தேசிக்காய் ஆவான்.  தேசிய என்ற வார்ததையில் சிறப்பான நேர்மறை அம்சங்கள் பல இருப்பதால் அந்தச் சொல்லுக்கு மோசமான பிற்போக்கு தேசிக்காய்கள் தகுதியற்றவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, வாலி said:

விஜி அண்ணிக்கு தளபதி விஜய் அண்ணன் முறை திடுக்கிடும் ஆதாரம் சிக்கியது!😂(இப்படித்தானே தமிழ் ஊடகவியலாளர்களும் யூடியூப்பர்களும் செய்திகளுக்குத் தலைப்பு இடுகின்றனர்)

 

இந்த‌ பையித்திய‌ம் ம‌று ப‌டியும் வ‌ந்து விட்ட‌தா

 

சில‌ கால‌ம் க‌ழித்து சொல்லும் இப்ப‌டி பேச‌ சொன்ன‌தே விஜேய்ன்ட‌ க‌ட்சி ஆட்க‌ள் தான் என்று காணொளி வெளியிட்டாலும் வெளியிடும்

 

அதையும் யாழில் ம‌ற‌க்காம‌ இணைத்து விடுங்கோ வாலி😁..........................

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che @புலவர் @island

 

 

 

திராவிட‌ தேசிய‌ம் கிடையாது பெரிய‌ அண்ண‌ன் திருமா😁👍..............................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

  ஒரு நாட்டை ஜனநாயக முறைப்படி நிர்வகிக்க எந்த தகுதியும் இல்லாத இனம் இது. 

போராட்ட காலத்தில் தமது நிர்வாக அலகுகளை எப்படி நிர்வகித்தார்கள் என்று உலகமே அறியும். அந்த இனத்துக்கே நிர்வகிக்க தகுதி இல்லையென்றால் காலா காலமாக சிங்களவனின் கால்களை நக்கிப்பிழைக்கும் உங்கள் இனத்திற்கு......

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வீரப் பையன்26 said:

@goshan_che @புலவர் @island

 

 

 

திராவிட‌ தேசிய‌ம் கிடையாது பெரிய‌ அண்ண‌ன் திருமா😁👍..............................

மாற்றி மாற்றிப் பேசும் பக்கா அயோக்கிய அரசியல்வாதிகள் உள்ள நாடு அது ஆகவே அவர்கள் கூறுவதை ஆதாரமாக எடுத்துவராமல் அறிவியல் ஆய்வுகளை நம்புங்கள் வீரப்பையன். 

10 minutes ago, Eppothum Thamizhan said:

போராட்ட காலத்தில் தமது நிர்வாக அலகுகளை எப்படி நிர்வகித்தார்கள் என்று உலகமே அறியும். அந்த இனத்துக்கே நிர்வகிக்க தகுதி இல்லையென்றால் காலா காலமாக சிங்களவனின் கால்களை நக்கிப்பிழைக்கும் உங்கள் இனத்திற்கு......

நான் நக்கி பிழைப்பது இருக்கட்டும், நீங்கள் தமிழை ஒழுங்காக வாசிக்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

திரும்ப சென்று எழுத்துக்கூட்டியாவது அல்லது  கற்றவர்களது  உதவியுடனாவது நான் எழுதி இருப்பதை வாசிக்க முயற்சி செய்யவும்.😂

“எப்போதும் தமிழன்”, என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது தமிழை ஒழுங்காக வாசித்து அதன் பொருள் அறியும் அறிவும் திறனும் வேண்டும். 

Edited by island

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.