Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21 NOV, 2024 | 07:31 PM

image

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.

தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு முன்னாள் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு வியாழக்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சியமளிக்க டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தாலும், அதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதன்படி, டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/199359

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தாலும், அதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டு சினிமா பாணியில் ஆஸ்பத்திரியில் போய் படுத்து விட்டாரோ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தமிழ்நாட்டு சினிமா பாணியில் ஆஸ்பத்திரியில் போய் படுத்து விட்டாரோ

ஏன் தமிழ்நாடு. எங்கடை மாவை இப்ப கொஞ்சநாளைக்கு முதல் அதை தான் செய்தார். அதுக்கு பிறகு தனுக்கு தான் தேசிய பட்டியல் இடம் வேணும் எண்டு நடு கதிரையில் போய் இருந்தவர். 
அதுக்கு முதல் எங்கள்  பெரும் தலைவர் சமப்ந்தனும் அதையே செய்தார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்துள்ளது.

அப்ப ஸ்ரீதர் தியேட்டரில கொஞ்ச நாளையால தமிழ்படங்கள் ஓடும் எண்டுறியள்....😁

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம்..இது அனுரவின் கண்துடைப்பு நாடக்மோ என்று எண்ணத்தோன்றுது..

1...பாராளுமன்ற  தொடக்க நாளில் கம்பீர நடை போட்ட நாமல்..

2.வேலக்காரியை கொலைசெய்த குற்றம்..மன்னாரில் 2000 ஏக்கர் காணிபிடிப்பு குற்றச்சாட்டு...ரிசாத்து..

இவ்ர் தேனீர் பார்ட்டியில் அனுரவை சந்திக்கும்போதூ ..ஒருவித்தியாசமான கண்சிமிட்டல்...கைகுலுக்கியபின் வ்டைபெறும்போது ..மீண்டும் கண்சிமிட்டல் 

(ஆதாரம்...news21..தேனீர் விருந்து  காணோளியில்.. 13.1 நிமிடத்தில்) இந்தக் கண்ணடிப்பை என்னவென்றூ வர்ணீப்பது..

3...ஊழல் பெருச்சாளி கக்கீம்

4...வன்னி காதர் மஸ்தான்

5.கஞசா மன்னன் செல்வம் அடைக்கல்னாதன்..இப்படி பலர்

இதில் ஆக அகப்பட்டது ..டக்கியும் ,பிள்ளையானும்தான் போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

ஒரு சந்தேகம்..இது அனுரவின் கண்துடைப்பு நாடக்மோ என்று எண்ணத்தோன்றுது..

1...பாராளுமன்ற  தொடக்க நாளில் கம்பீர நடை போட்ட நாமல்..

2.வேலக்காரியை கொலைசெய்த குற்றம்..மன்னாரில் 2000 ஏக்கர் காணிபிடிப்பு குற்றச்சாட்டு...ரிசாத்து..

இவ்ர் தேனீர் பார்ட்டியில் அனுரவை சந்திக்கும்போதூ ..ஒருவித்தியாசமான கண்சிமிட்டல்...கைகுலுக்கியபின் வ்டைபெறும்போது ..மீண்டும் கண்சிமிட்டல் 

(ஆதாரம்...news21..தேனீர் விருந்து  காணோளியில்.. 13.1 நிமிடத்தில்) இந்தக் கண்ணடிப்பை என்னவென்றூ வர்ணீப்பது..

3...ஊழல் பெருச்சாளி கக்கீம்

4...வன்னி காதர் மஸ்தான்

5.கஞசா மன்னன் செல்வம் அடைக்கல்னாதன்..இப்படி பலர்

இதில் ஆக அகப்பட்டது ..டக்கியும் ,பிள்ளையானும்தான் போல கிடக்கு

இருந்தாலும் டக்லஸ் பிள்ளையான்  மட்டும் சும்மாவா ....எத்தனை கொலைகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸுக்கு எதிரான பிடியாணை வாபஸ்!

டக்ளஸுக்கு எதிரான பிடியாணை வாபஸ்!

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க ஆஜராகாத காரணத்தினால் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (25) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக ஆஜரானார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவிட்டார்.

அதன்பின், முன் பிணையில் வெளிவந்த தேவானந்தாவை அடுத்த நீதிமன்ற திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

2016ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196400

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

டக்ளஸுக்கு எதிரான பிடியாணை வாபஸ்!

சொன்னால் நம்பமாட்டியள் டக்ளஸ் அண்ணன் சுழியன்  😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சொன்னால் நம்பமாட்டியள் டக்ளஸ் அண்ணன் சுழியன்  😎

டக்ளசுக்கு உள்ள கெட்டித்தனம்…. பிள்ளையானிடம் இல்லை. 😂
இப்ப நாங்கள்,  பிரதேசவாதம் கதைக்கின்றோம் என்று ஒரு குரூப் வரும்.
 எஸ்கேப்பு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தமிழ் சிறி said:

டக்ளசுக்கு உள்ள கெட்டித்தனம்…. பிள்ளையானிடம் இல்லை. 😂
இப்ப நாங்கள்,  பிரதேசவாதம் கதைக்கின்றோம் என்று ஒரு குரூப் வரும்.
 எஸ்கேப்பு. 🤣

இந்த இடத்தில் நான் ஊமைப்பாசை பேசி விட்டு போகின்றேன். நான் என்ன சொல்லியிருப்பேன் என உங்களுக்கு தெரியும் 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

2016ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

மேலே உள்ளது உண்மை எனில்….

வழக்கு டக்கிளஸ் மீது அல்ல…மனோகரன் மீதுதான்.

டக்கிளஸ் இதில் முறைப்பாட்டாளர்?

இப்போ ஒரு கூட்டம் கோஷன் டக்கிளஸ் ஆள் என வாளியோட வரும்…

எஸ்கேப்பு….🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2024 at 02:00, goshan_che said:

மேலே உள்ளது உண்மை எனில்….

வழக்கு டக்கிளஸ் மீது அல்ல…மனோகரன் மீதுதான்.

டக்கிளஸ் இதில் முறைப்பாட்டாளர்?

இப்போ ஒரு கூட்டம் கோஷன் டக்கிளஸ் ஆள் என வாளியோட வரும்…

எஸ்கேப்பு….🤣

 

முறைப்பாட்டாளரே வழக்கிற்கு செல்லாமல் இருந்தால் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகம் செய்பவர்கள் தங்கள் கொடுப்பனவுகளுக்காக காசோலை பரிமற்றம் செய்வதில் என்ன தப்பு?. 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகள் வழங்குவதில் ஏன் டக்கி வழக்கு போடவேண்டும்? நீதிமன்றம் போவதென்றால் நம்மாளுக்கு கொஞ்சம் அலர்ஜி என்பது தெரிந்ததுதானே. மற்றவங்களுக்கு  நாமளே தான் தீர்ப்பு கொடுப்போம்.

Edited by vanangaamudi

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.