Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறக்குமதி அரிசியில் வண்டுகள் - மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையில் பாவனைக்கு பொருத்தமற்ற 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது.

நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும்.

அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது.

அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை. 

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4 ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி தற்போது இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் நேற்று (13) பிற்பகல் வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது.

அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=197299

  • கருத்துக்கள உறவுகள்

இது வேறை பிரச்சினை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

 

நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும்.

 

இதுவே நடைமுறை. ஆனால், நாங்கள் நாலு மணிநேரத்தில் சுங்கத்திலிருந்து விடுவித்து விடுவோம் என்று அமைச்சர் முன்னர் சொல்லியிருந்தார். நடைமுறையில் நாலு மணிநேரம் என்பது இப்படியும் ஆகிவிடும் என்று இப்பொழுது அவர்களுக்கு புரிந்திருக்கும்...................

அரிசி எந்த நாட்டிலிருந்து வந்தாலும், 'ஆறு கப்பல் வந்தாலும் நீறு கப்பல். அரிசிக் கப்பல் வந்தாலும் தவிட்டுக் கப்பல்....................' என்றே ஆகிவிடுகின்றது...............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இதுவே நடைமுறை. ஆனால், நாங்கள் நாலு மணிநேரத்தில் சுங்கத்திலிருந்து விடுவித்து விடுவோம் என்று அமைச்சர் முன்னர் சொல்லியிருந்தார். நடைமுறையில் நாலு மணிநேரம் என்பது இப்படியும் ஆகிவிடும் என்று இப்பொழுது அவர்களுக்கு புரிந்திருக்கும்...................

அரிசி எந்த நாட்டிலிருந்து வந்தாலும், 'ஆறு கப்பல் வந்தாலும் நீறு கப்பல். அரிசிக் கப்பல் வந்தாலும் தவிட்டுக் கப்பல்....................' என்றே ஆகிவிடுகின்றது...............

இதுதான் அந்த நாட்டு ஊழல்....எந்தக் கொம்பன் வந்தாலும் இதனை ஒழிக்க முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இதுதான் அந்த நாட்டு ஊழல்....எந்தக் கொம்பன் வந்தாலும் இதனை ஒழிக்க முடியாது..

இதை தான் ரணில் அனுபவ ரீதியாக சொன்னவர் ...எல் போர்ட் அரசு எண்டு...
அதுசரி.. இதையெல்லாம் தோழர் அனுரா சுங்க திணைக்களத்துக்கு போய் பார்வையிட ஏலாது ..

இது என்ன சினிமாவா மூன்று மணித்தியாலத்தில் தோழர்கள் நினைத்த சோசலிஸ்ட் ரட்டையை உருவாக்குவதற்கு ..30 வருடங்களுக்கு மேல் செல்லும் அதுவரை தாக்கு பிடிக்க வேணும்...புயல்,காற்று ,ஊழல்,இனவாதம்,பூலோக அரசியல் ....இப்படி பல பூதங்கள் இவரை சுற்றி வலம் வரும்...

பாகிஸ்தானில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய பிளான் போடுதோ ஒரு குறூப்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இதுதான் அந்த நாட்டு ஊழல்....எந்தக் கொம்பன் வந்தாலும் இதனை ஒழிக்க முடியாது..

ஊழல் என்பதை விட, அனுபவமின்மையே இது காட்டுகின்றது என்று சொல்லவே வந்தேன், அல்வாயன்.

முன்னைய ஆட்சியில் சீனி இறக்குமதியில் ஒரு ஊழல் நடந்ததே......... அது போல இந்த அரசில் நடவாது. பசில் போல எதிலும் பத்து வீதம் கமிஷனும் இங்கே கேட்கமாட்டார்கள், ஆனால் பொருள் வந்து இறங்குவதற்குள் மக்களின் சீவன்கள் போய்விடும்.....................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஊழல் என்பதை விட, அனுபவமின்மையே இது காட்டுகின்றது என்று சொல்லவே வந்தேன், அல்வாயன்.

முன்னைய ஆட்சியில் சீனி இறக்குமதியில் ஒரு ஊழல் நடந்ததே......... அது போல இந்த அரசில் நடவாது. பசில் போல எதிலும் பத்து வீதம் கமிஷனும் இங்கே கேட்கமாட்டார்கள், ஆனால் பொருள் வந்து இறங்குவதற்குள் மக்களின் சீவன்கள் போய்விடும்.....................

என்னுடைய கருத்து என்னவென்றால் ..முதலாளி நல்லது செய்ய வெளிக்கிட்டாலும்..இடைதரகர்கள் இதனச் செய்து கொள்ளையடிக்கவே செய்வர்...இப்ப அரிசியில் ...மிகுதி தொடரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி தெரியாமல் கேக்கிறன்.....😎
சிலோன் வரலாற்றிலை எப்ப கூப்பன்மாவிலையும்,கூப்பன் அரிசியிலையும் வண்டு,புழுக்கள் இல்லாமல் இருந்தது? 🤣

பாணிலை கூட வண்டு இருந்தால் அப்பிடியே நுள்ளி அங்காலை எறிஞ்சு போட்டு ஒண்டு தெரியாதமாதிரி சம்பலோட ஒரே அமுக்காய் அமுக்கிற ஆக்கள் எல்லோ நாங்கள்.... :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன், இந்தப்பிரச்சனை இந்த அரசாங்கத்தில் மாத்திரமா நடக்கிறது? உள்ளூரிலேயே அரிசி களஞ்சியங்களில் கூட இப்படி பாவனைக்குதவாத அரிசிகள் அழிக்கப்பட்டனவே. உள்ளூரில் சந்தைகளில் கூட புழுக்கத்தரிக்காய்கள் வருகின்றனவே, வாங்காமலா போகிறோம்? முதலில் 
மற்றைய நாடுகளை சோற்றுக்காக எதிர்பார்த்திருப்பதை மாற்றவேண்டும், நீண்டகால  பொறிமுறைகளை வகுக்கவேண்டும், மாரி காலத்திற்கு முன் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை சேமித்து விநியோகிக்கும் உத்திகளை கையாள வேண்டும். தனியார் பதுக்கல், வியாபாரிகள் வெற்றிகரமாக இவற்றை செய்கின்றனவே. உள்ளூர் உற்பத்தியை பெருக்க வேண்டும், எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும் இந்தப்பிரச்சனை தொடரவே செய்யும். விவசாய காணிகளில் இராணுவ முகாமும் விகாரைகளும் கட்டினா அது அபிவிருத்தியை மக்களின் தொழில் புரியும் விருப்பை பாதிக்கும்.   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.