Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை!

சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்துள்ளன. 

எனவே, நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தை முன்னிறுத்திய கொள்கைகளும் முன்னரைக் காட்டிலும் மாறுபட்டவையாக இருக்கவேண்டும். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணையானது 'முழுமையான கட்டமைப்பு மாற்றத்தைக் கோருவதாக அமைந்திருப்பதுடன், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் இனிமேல் பொருந்தாது என்பதையும் காண்பித்திருக்கிறது. 

இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு பிரதான காரணமாகும். 

13 ஆவது திருத்தத்தை ஏற்பதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அங்கீகரித்திருப்பதனால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசு வரக்கூடும். 

ஆகையினாலேயே 13 ஆம் திருத்தத்தை ஏற்க மறுப்பதுடன், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் செல்வதன் ஊடாகவே தீர்வை அடைந்துகொள்ளமுடியும் என்ற விடயத்தைப் பெரும்பான்மை தலைமைகள் மக்களிடம் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால முன்மொழிவுகளை பூரணப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. 

இருப்பினும் இந்த முன்மொழிவுகள் பொதுவில் 'ஏக்கிய இராச்சிய' முன்மொழிவு என அடையாளப்படுத்தப்படுவதுடன், அது ஒற்றையாட்சி அரசைக் குறிக்கிறது. 

இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் ஒருமித்த இலங்கைக்குள் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி கட்டமைப்பு தொடர்பான எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம். 

இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் உதவிக்கரம் தீட்டியதன் ஊடாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது. 

எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்ட முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கும், அதற்குப் பதிலாகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

 

https://www.hirunews.lk/tamil/390819/தமிழ்-மக்களுக்கு-அவசியமான-ஆதரவினை-இந்தியா-வழங்கவேண்டுமெனக்-கோரிக்கை

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உயர் மட்ட குழு அவசரம் அவசரமாக இந்த கடிதத்தைப் பற்றி   தற்போது விவாதித்து கொண்டிருப்பதாகவும் அதனால் அநுராவுடனான சந்திப்பை இன்று மாலை வரை இந்திய பிரதமர் பின்போட்டிருப்பதாகவும்  பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய நேரத்தில் இந்த கடிதத்தை எழுதியதற்காக கஜேந்திரகுமார் அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் நன்றி தெரிவித்து அவசர செய்தி அனுப்பப்படுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி பி. ரி.ஐ செய்தி ஸதாபனம் தெரிவித்துள்ளது. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இந்தியாவை புறம் தள்ளுவோம் என கூறி கொண்டிருந்த முண்ணனியினர் இப்போ ஆக்கபூர்வ பங்களிப்பை கோருவது நல்ல நிலை மாற்றம்.

வரவேற்கிறேன்.

தமிழ் தேசிய கட்சிகளிடம் பொது நிலைப்பாட்டு எட்டப்பட இப்படியான நெகிழ்வு போக்கு அவசியமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இந்திய உயர் மட்ட குழு அவசரம் அவசரமாக இந்த கடிதத்தைப் பற்றி   தற்போது விவாதித்து கொண்டிருப்பதாகவும் அதனால் அநுராவுடனான சந்திப்பை இன்று மாலை வரை இந்திய பிரதமர் பின்போட்டிருப்பதாகவும்  பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய நேரத்தில் இந்த கடிதத்தை எழுதியதற்காக கஜேந்திரகுமார் அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் நன்றி தெரிவித்து அவசர செய்தி அனுப்பப்படுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி பி. ரி.ஐ செய்தி ஸதாபனம் தெரிவித்துள்ளது. 

அப்ப கஜே-கயே குழுத்தலைவர் இவ்வளவு நாளும் பம்மாத்து அரசியல் செய்திருக்கிறார். அநுர அரசுக்கு 2/3 பெரும்பான்மை உள்ளது என்றபடியால் முன்னைய அரசாங்கங்களிடம் செய்துவந்த அண்டர் கிறவுண்ட் டீல் இனிச் செய்யமுடியாது என்று அண்ணருக்கு விளங்கிவிட்டது. அதுபோக இப்ப பாராளுமன்றில் சுமந்திரன் இல்லாதபடியால் சுமந்திரனுக்கு எதிரான விடுதலை போராட்டத்தை முன்கொண்டு செல்லமுடியாத இக்கட்டான நிலையிலும் உள்ளார். 

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இந்திய உயர் மட்ட குழு அவசரம் அவசரமாக இந்த கடிதத்தைப் பற்றி   தற்போது விவாதித்து கொண்டிருப்பதாகவும் அதனால் அநுராவுடனான சந்திப்பை இன்று மாலை வரை இந்திய பிரதமர் பின்போட்டிருப்பதாகவும்  பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய நேரத்தில் இந்த கடிதத்தை எழுதியதற்காக கஜேந்திரகுமார் அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் நன்றி தெரிவித்து அவசர செய்தி அனுப்பப்படுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி பி. ரி.ஐ செய்தி ஸதாபனம் தெரிவித்துள்ளது. 

CanadaPost தற்போது postal strike ல் ஈடுபட்டிருப்பதால் கடிதம் இதுவரை போய்ச் சேரவில்லையாம். 

🤣

11 minutes ago, வாலி said:

அப்ப கஜே-கயே குழுத்தலைவர் இவ்வளவு நாளும் பம்மாத்து அரசியல் செய்திருக்கிறார். அநுர அரசுக்கு 2/3 பெரும்பான்மை உள்ளது என்றபடியால் முன்னைய அரசாங்கங்களிடம் செய்துவந்த அண்டர் கிறவுண்ட் டீல் இனிச் செய்யமுடியாது என்று அண்ணருக்கு விளங்கிவிட்டது. அதுபோக இப்ப பாராளுமன்றில் சுமந்திரன் இல்லாதபடியால் சுமந்திரனுக்கு எதிரான விடுதலை போராட்டத்தை முன்கொண்டு செல்லமுடியாத இக்கட்டான நிலையிலும் உள்ளார். 

இது கடிதம் அல்ல. 

நானும் ரவுடிதான் போன்று,  ஐயா தொரைமாரே,....நாங்களும் ஒரு அரசியல் கட்சிதான் எங்களையும் கண்கொண்டு பாருமையா என்ற கெஞ்சல்,...... அம்புட்டுதே. 

எல்லாம்  ஜப்னா வாக்காளர் வைத்த ஆப்பினால் வந்த பயம். 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

CanadaPost தற்போது postal strike ல் ஈடுபட்டிருப்பதால் கடிதம் இதுவரை போய்ச் சேரவில்லையாம். 


இவர்கள் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியது போன்று கனடா பிரதமருக்கும் அனுப்பினவர்களோ

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:


இவர்கள் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியது போன்று கனடா பிரதமருக்கும் அனுப்பினவர்களோ

சில்ல முடியாது. எங்கள் டமில் தேசிய வியாதியஸ்தர்கள் கருணாநிதியைக் கொப்பியடிப்பதில் வல்லவர்கள். 

😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.