Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21+

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். 

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழுவின் அனுமதியின் பின்னரே குறித்த சந்திப்புக்கான நிலைப்பாடு எட்டப்படும் என தாம் இதன்போது குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

அதேநேரம், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறுவது பொருத்தமாக அமையும் என தாம் யோசனை முன்வைத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
 

https://www.hirunews.lk/tamil/392991/தமிழ்த்-தேசிய-கட்சிகளுக்கிடையே-சந்திப்பொன்றை-நடத்துவது-தொடர்பில்-அவதானம்

  • கருத்துக்கள உறவுகள்

சும் இன் மைன்ட்

சரி இதுக்கும் ஆப்படிக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

சும் இன் மைன்ட்

சரி இதுக்கும் ஆப்படிக்க வேண்டியது தான்.

ஐயோ! வேண்டவே வேண்டாம். ஒன்றிலை கண்டா ஒதுக்கி நட.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

சும் இன் மைன்ட்

சரி இதுக்கும் ஆப்படிக்க வேண்டியது தான்.

அதற்கு முன் ஶ்ரீ மாஸ்டரை கட்சியில் இருந்து நீக்கி விட தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கும்  விவகாரம்-தமிழ்த்தேசிய கட்சிகள் கலந்துரையாடல்!

புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விவகாரம்-தமிழ்த்தேசிய கட்சிகள் கலந்துரையாடல்!

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கிடையே 25 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் நாடாளும்னறக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அத்தோடு, தமிழ்த்தேசிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கான திகதியொன்றை நிர்ணயிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதற்கமையவே எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து, இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தீரமானிக்கப்பட்டது.

மேலும் குறித்த கலந்துரையாடலை எங்கு நடாத்துவது என வெகுவிரைவில் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 25 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில் குறித்த மூன்று கட்சிகளினதும் பிரதிநிதிகள் பங்கேற்கவிருப்பதுடன், தமிழர்களுக்கு ஏற்றவாறான தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்வைக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் எந்தெந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை அந்தந்தக் கட்சிகளே தீர்மானிப்பதற்கு இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1415672

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாய்களும் குலைக்குதெண்டு ராசம்மாவிண்ட வளவுக்க நிண்ட இரண்டு பேத்தைக் குட்டிகளும் உ! உ! உ! எண்டுச்சுதுகளாம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, RishiK said:

அதற்கு முன் ஶ்ரீ மாஸ்டரை கட்சியில் இருந்து நீக்கி விட தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறார். 

வாத்தியும் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை..

முதலமைச்சர் ஆசை காட்டியும் பார்த்தாச்சு ஆள் அசையுதில்லை. 

 

பேத்தை குட்டிக்கும் சனம் வாக்கு போட்டுதுகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

சும் இன் மைன்ட்

சரி இதுக்கும் ஆப்படிக்க வேண்டியது தான்.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.