Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்து பேசிய சர்ச்சைகளுக்குப் பதிலளித்துப் பேசியிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.

 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஹவுஸில் இந்திய ரயில்வே துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற குப்பன் என்பவர் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழா இன்று (ஜன 21) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், பசுமைத் தாயகத்தின் தலைவரான முனைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்நூலினை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

 
தமிழிசை செளந்தரராஜன்
 
தமிழிசை செளந்தரராஜன்
அப்போது தமிழிசை சௌந்தரராஜனிடம் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்துப் பேசியது சர்ச்சையானது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்திருக்கும் தமிழிசை, "மாட்டின் கோமியத்தை 'அமிர்த நீர்' என்று கூறியுள்ளனர். மாட்டின் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என்று கூறியுள்ளனர். இது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 

ஆப்பிரிக்கா, மியான்மார் போன்ற நாடுகளில் மாட்டின் கோமியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கோமியம் 80 வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாகத் தொழில்நுட்ப ரீதியாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை வழிநடத்துபவர் சும்மா கூறுவாரா...? 'என் உணவு என் உரிமை' என்று கூறும் நீங்கள் விஞ்ஞான பூர்வமாகக் கோமியம் மருந்து என்று கூறுவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்.

இவர்களுக்குக் கோமியம் குடிப்பதில் பிரச்னையில்லை, டாஸ்மாக்கில் குடிப்பதில் குறைந்துவிடுமோ எனப் பயம். ஆயுர்வேதத்தில் கோமியம் 'அமிர்த நீர்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைச் சொன்னால் குதி குதி எனக் குதிக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.
நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், "மாட்டுக்கறி சாப்பிடுவார்களாம். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு மருந்து எனச் சொல்லப்படுகிற மாட்டின் சிறுநீரான கோமியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்." என்று பேசியிருக்கிறார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

அடி ஆத்தி.............. நாங்கள் உங்களைப் பற்றி நினைத்ததை விட நீங்கள் தத்திகளாக இருக்கிறீர்களே...........இதில் நீங்கள் மருத்துவர் வேறு............

பன்றி இறைச்சியும் தான் சாப்பிடுகின்றோம். அதற்காக பன்றியின் சிறுநீரையும் குடிக்கலாம் என்பீர்களா...........

 

Edited by ரசோதரன்

அப்படியே சாணியையும் அம்மணி சாப்பிடுவா போலிருக்கு.

அம்மணியின் diet:

காலையில் இரண்டு டம்ளர் கோமியம். மதியம் ஒரு கோப்பை நிறைய சாணி.

இரவு இரண்டும் கலந்த சூப். 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அப்படியே சாணியையும் அம்மணி சாப்பிடுவா போலிருக்கு.

அம்மணியின் diet:

காலையில் இரண்டு டம்ளர் கோமியம். மதியம் ஒரு கோப்பை நிறைய சாணி.

இரவு இரண்டும் கலந்த சூப். 

 

அவவின் அழகுக்கு இதுதானா காரணம்...

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, alvayan said:

அவவின் அழகுக்கு இதுதானா காரணம்...

எனக்கு அவரின் கருத்தில் உடன்பாடில்லை.. சங்கி கூட்டத்துக்கு மூளை மங்கி இருக்கு என்பது ஊருக்கே தெரியும்.. கொரோனாவை விரட்ட மணிஆட்டி தகரத்தில தட்டி நெருப்பு வச்ச கூட்டம்.. மாட்டு மூத்திர மூளை குரூப்..

நிற்க..

கண்டிப்பாக நீங்கள் தமிழிசையின் அறிவின் அழகை சொல்லாமல் புறத்தோற்றத்தைதான் அழகு என்று எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..

தமிழிசை அழகுக்கு என்ன குறை..? ஒரு கடைக்கோடி தமிழ்கிராமத்தின் தமிழ்மகள் எந்த ஒப்பனையும் இல்லாமல் இப்படித்தான் இருப்பார்.. கருப்பு தமிழனின் நிறம்.. அதில் என்ன தாழ்வுச்சிக்கல் இருக்கிறது..? ஏன் தமிழிசை அழகுக்கு என்ன குறைவு..? உங்கள் அழகின் அளவீடு என்ன..? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு அவரின் கருத்தில் உடன்பாடில்லை.. சங்கி கூட்டத்துக்கு மூளை மங்கி இருக்கு என்பது ஊருக்கே தெரியும்.. கொரோனாவை விரட்ட மணிஆட்டி தகரத்தில தட்டி நெருப்பு வச்ச கூட்டம்.. மாட்டு மூத்திர மூளை குரூப்..

நிற்க..

கண்டிப்பாக நீங்கள் தமிழிசையின் அறிவின் அழகை சொல்லாமல் புறத்தோற்றத்தைதான் அழகு என்று எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..

தமிழிசை அழகுக்கு என்ன குறை..? ஒரு கடைக்கோடி தமிழ்கிராமத்தின் தமிழ்மகள் எந்த ஒப்பனையும் இல்லாமல் இப்படித்தான் இருப்பார்.. கருப்பு தமிழனின் நிறம்.. அதில் என்ன தாழ்வுச்சிக்கல் இருக்கிறது..? ஏன் தமிழிசை அழகுக்கு என்ன குறைவு..? உங்கள் அழகின் அளவீடு என்ன..? 

உலகில் எல்லோருமே அழகானவர்கள்தான்....ஆனால் அழகுக்கு அழகூட்டுவது ..அறிவும் பேச்சும்..இதில் எது மிஸ்ஸிங் என்பதை நீங்களே   தெரிவு செய்க

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

மனிசி இவ்வளவு படித்தும் இவ்வளவு ஊர் உலகம் சுற்றியும் இன்னும் ஒரு நல்ல steak restaurant இல் ஊனம் வடிய வடிய ஒரு medium rare Rib eye சாப்பிட்டு இருந்தால் இப்படி எல்லாம் கதைக்க மனம் வந்து இருக்காது.

இத்தனைக்கும் நான் எனது 20 வயது வரைக்கும் இறைச்சி சாப்பிட்டதே இல்லை, 

 

 

 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

இதில் நீங்கள் மருத்துவர் வேறு............

குமரி அனந்தன் எம் ஜி ஆர் காலை பிடித்து வாங்கிய சிபாரிசு சீட்டில் படித்தால் வேறு எப்படி யோசிக்க முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.