Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, putthan said:

செத்த கிளிக்கு ஏன்டா கூண்டு ...என்று சொல்லுறீயல்🤣

மகிந்தா ராஜாபக்சேக்கே பாதுகாப்பு குறைக்கப்படும் பொழுது இவருக்கு ஏன் பாதுகாப்பு என்பது தான் கேள்வி...
இவரை விட டக்கிளஸ் க்கு பாதுகாப்பு தேவை..
தாயகத்தில் டக்கிளசை மக்கள் விரட்டியடைத்தவையள்...ஆனால் இவ்ருக்கு அப்படியான் ஒன்றும் இதுவரை நடை பெற்வில்லை

டக்ளசை பொது மக்கள் விரட்டுவதையெல்லாம் பாதுகாப்புப் பிரச்சினையெனக் காட்ட முயற்சிக்கலாம் தான். ஆனால், 2009 இற்குப் பின்னர் டக்ளஸ் மீது ஒரு கொலை முயற்சியும் நடைபெறவில்லை. 2009 இற்கு முன்னர், பல முயற்சிகள் (விளங்குது😎! இதையெல்லாம் மறந்து போடோணும், இல்லாட்டிக் கஷ்டம் தான்)

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

டக்ளசை பொது மக்கள் விரட்டுவதையெல்லாம் பாதுகாப்புப் பிரச்சினையெனக் காட்ட முயற்சிக்கலாம் தான். ஆனால், 2009 இற்குப் பின்னர் டக்ளஸ் மீது ஒரு கொலை முயற்சியும் நடைபெறவில்லை. 2009 இற்கு முன்னர், பல முயற்சிகள் (விளங்குது😎! இதையெல்லாம் மறந்து போடோணும், இல்லாட்டிக் கஷ்டம் தான்)

 சரி சரி மறந்திட்டோம்🤣...நம்ம சட்டத்தரனிக்கு கொலை அச்சுறுத்தல் இருக்குமோ...நான் நினைக்கவில்லை ...இரண்டு மூன்று பேர் ...வெறியில கல் ஏறிவினம் மற்றும்படி உயிர் ஆபத்து ஏற்பட வாய்பில்லை..

கஞ்சா,கொலை போன்ற குற்றவாளிகளுக்காக வாதாடி அந்த குற்றவாளிகள் இராணுவத்துடன் தொடர்புடையவர்களாக இருப்பின் சில ஆபத்துக்கள் இருக்கலாம் ...(பொதுவாக சொல்லுகின்றேன் இங்கு சட்டத்தரணி சும்மை சொல்லவில்லை)மற்றும்படி தமிழ் தேசிய வெறியர்களினால் அவருக்கு உயிர் ஆபத்து வரும் என சொல்வது சற்று மிகைப்படுத்தல் அதுவும் தாயக மண்ணில் ...மூன்று சிறிலங்கா தேசிய பா.உக்கள்,ஒரு அமைச்சர் ஜாலியாக பாதுகாப்பு இன்றி வலம் வரும் மண்ணில் இவருக்கு மட்டும் தமிழ் தேசியவெறியர்களினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என சொல்வது ...ஏற்புடையது அல்ல 
மன்னார் மாவட்டத்தில் இரு வருடத்தில் நடந்த 7 கொலைகள் அதில் இராணுவத்தினர்,இராணுவ புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..இதை ஒர் உதாரணமாக மட்டுமே சொல்கின்றேன்)

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய அரசாங்கங்களே, இவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதென கூறி பாதுகாப்பு அளித்தார்கள். சுமந்திரன் அரசுடன் சேர்ந்து செயற்படுவதால், அதாவது அவர்களுக்கு கால் கழுவுவதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் என காரணமும் கூறினார்கள். பின்னர், அவருக்கு அப்படியேதும் அச்சுறுத்தல் இல்லை, அவர் பேரணியில் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் கலந்து கொள்கிறார்,ஆகவே அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை அது விலக்கப்படும் என்று விளக்கமளித்தார்கள். (இங்கே கவனிக்கப்படவேண்டியது: பாதுகாப்பு கொடுக்கப்பட்டதற்கும் , விலக்கப்பட்டதற்கும் கொடுக்கப்பட்ட காரணங்கள்). ஆனால், குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா? இது பற்றி அப்போது சுமந்திரனிடம் வினவியபோது, தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தான் முறையிடவில்லை, பாதுகாப்பு கோரவில்லை என்றார். சரி...... அப்போ ஏன் எனக்கு பாதுகாப்பு வேண்டாம் என மறுக்கவில்லை? அவர்கள் சொன்னது, அவர்கள் சந்தேகம், நான் அப்படி பாதுகாப்பு கோரவில்லை என மறுப்பு தெரிவிக்கவில்லை? ஏன் அந்த அப்பாவி இளைஞர்களை விடுவிக்கவில்லை? சரி, அனுரா ஆட்சியில் சுமந்திரன் மக்களாலும் அவர் சார்ந்த கட்சிகளினாலும் நிராகரிக்கப்பட்டவர். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக எங்கேயும் அனுராவிடம் முறையிடவில்லை. தன்னிச்சையாக இந்தியாவுக்கே போய் பகிரங்கமாக படம்பிடித்து பேச்சுக்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது. அவர் சொன்னது! அப்படியிருக்கும் போது, நமக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது பாதுகாப்பு தாருங்கள் என்பவர்களின் பாதுகாப்பை குறைத்தவர்கள், வெறும் சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு கொடுப்பதன் அவசியம், மர்மம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட, தான் சார்ந்த மக்களின் பாதிப்புகளுக்காக குரல் எழுப்பிய சிறிதரனுக்கு நிகழ்ந்த கெடுபிடிகளை, அதற்காக சொல்லப்படும் காரணங்களை பார்த்தால், அந்த காரணங்களை வெளியிட்டவர்களின் சேவையில் சந்தேகம் ஏற்படுகிறது. பிந்தைய தகவல்: தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும்போது சுமந்திரனையும் சி. வி. கே. சிவஞானத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென சுமந்திரன் அடம்பிடித்தாராம். அதில் சிவஞானத்தை சேர்க்கலாம் சுமந்திரனை சேர்த்துக்கொள்ள முடியாது என கூறியதால், கூட்டம் கலைந்ததாம். ஏன் வெளிநாட்டு தூதுவர்களை, அரசியல் தலைவர்களை சுமந்திரன் சந்திக்கும்போது, தனியாகத்தான், ரகசியமாக சந்தித்தார்.  அவர்கள், தன்னை தனியாக வரும்படி அழைத்தார்கள் என்று விளக்கம் வேறு கொடுத்தார். இப்போ ஏன் அடம்பிடிக்கிறார்? அரசுக்கு உளவு பார்க்கவேண்டும், பதவி பெற வேண்டும். இந்த வேண்டாத கல்லை அகற்ற முடியாது, முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகிறார்.               

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

 சரி சரி மறந்திட்டோம்🤣...நம்ம சட்டத்தரனிக்கு கொலை அச்சுறுத்தல் இருக்குமோ...நான் நினைக்கவில்லை ...இரண்டு மூன்று பேர் ...வெறியில கல் ஏறிவினம் மற்றும்படி உயிர் ஆபத்து ஏற்பட வாய்பில்லை..

கஞ்சா,கொலை போன்ற குற்றவாளிகளுக்காக வாதாடி அந்த குற்றவாளிகள் இராணுவத்துடன் தொடர்புடையவர்களாக இருப்பின் சில ஆபத்துக்கள் இருக்கலாம் ...(பொதுவாக சொல்லுகின்றேன் இங்கு சட்டத்தரணி சும்மை சொல்லவில்லை)மற்றும்படி தமிழ் தேசிய வெறியர்களினால் அவருக்கு உயிர் ஆபத்து வரும் என சொல்வது சற்று மிகைப்படுத்தல் அதுவும் தாயக மண்ணில் ...மூன்று சிறிலங்கா தேசிய பா.உக்கள்,ஒரு அமைச்சர் ஜாலியாக பாதுகாப்பு இன்றி வலம் வரும் மண்ணில் இவருக்கு மட்டும் தமிழ் தேசியவெறியர்களினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என சொல்வது ...ஏற்புடையது அல்ல 
மன்னார் மாவட்டத்தில் இரு வருடத்தில் நடந்த 7 கொலைகள் அதில் இராணுவத்தினர்,இராணுவ புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..இதை ஒர் உதாரணமாக மட்டுமே சொல்கின்றேன்)

என்ன "நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" மாதிரியே இருக்கிறீங்கள்😂?

உள்ளூரில் கைதான அந்த மன்னார் ஆமிக்காரருக்கு, வெளியூரில் இருந்து கொலை செய்யக் கூலி கிடைத்ததை மறந்து/மறைத்து விட்டீர்கள். இப்போது, இதே தகவலை வைத்துக் கொண்டு, சில ஆண்டுகள் முன்னர், சுமந்திரனை கொல்ல முயன்றார்கள் என்று கைதான முன்னாள் போராளிகளுக்கு வெளிநாடு வாழ் சுமந்திரன் எதிர்ப்பு கூழ்முட்டைகள் காசு கொடுக்க முயன்றதையும் கொன்டு வாருங்கள்!

Associative memory என்பது யாழில் பலருக்கு இல்லையென்றால், உங்களுக்கும் இல்லாமல் போய் விட்டதா😎?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

பாதுகாப்பு கொடுப்பதை நியாயப் படுத்துகிறீர்கள்.  🤣

ரொம்ப முக்கியம் இப்ப இவருக்கு .....சூர சங்காரம் செய்வதுதானே ....

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ கெடுபிடி, வாள் வெட்டுகாரர்கள், மண்கொள்ளை,  ஆள் கடத்தல், போதைவஸ்த்து பாவனை இப்படி எத்தனையோ ஆபத்துகள் எல்லா தனி மனிதர்களுக்கும் உண்டு. இவர்களின் உயிர்களுக்கு யார் பாதுகாப்பு? அனுரவின் ஆட்சியில் குற்ற செயல்கள் அதிகரித்து செல்லும் ஒரு போக்கே நாட்டில் பொதுவாக காணப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

@Kavi arunasalam,  @வாலி, @பாலபத்ர ஓணாண்டி   .......

அரியநேந்திரனுக்கு சிங்களப் படை பாதுகாப்பு கொடுத்ததற்கு துள்ளிக் குதித்த... 
சுமந்திரனுக்கு முட்டுக் கொடுக்கும் சிலரை இந்தப் பக்கம் காணவில்லை.
வரிசையாக வந்து, உங்களின் ஆளுக்கு... முட்டுக் கொடுத்து விட்டுப் போகவும். 😎

உங்களுடைய வாய்.... எப்பிடி, வடை சுடுகுது... என்று பார்க்க ஆவலாக உள்ளேன். animiertes-gefuehl-smilies-bild-0019

M._A._Sumanthiran.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.