Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.

March 10, 2025

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை,  தமிழீழ விடுதலைப்புலிகள்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு 10 மார்ச் அன்று உத்தியோக பூர்வமாக வெளியாகின்றது.

கடந்த  2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாட்டில்,  தேசியத் தலைவரின் வழிநின்று  களமாடிய போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்த ஒன்றுகூடலில், தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி வெளியிடப்பெற்ற தமிழீழ மாவீரர்  பணிமனையின் அறிவிப்பு, 10.03.2025 அன்று உத்தியோகபூர்வமாக வெளிவருகின்றது.

தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தும் அறிவிப்பானது காணொளிப் பதிவாகவும் அதேவேளை அறிக்கை வடிவிலும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இத்தகவலை மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப் பிரிவு அனைவருக்கும் அறியத்தருகின்றது.

சி. அறிவுமணி

இணைப்பாளர்

ஊடகப்பிரிவு,

மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%

காணொளிப் பதிவாகவு தரவிறக்கம் செய்து கொள்ள

https://app.filemail.com/d/yzyjbebhklsubhr 10.03.2025- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு (காணொளி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தமிழீழத் தேசியத் தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு –

உலகெங்கும்  பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே!

எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந் தலைவருமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்,

இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதிதளராது, முப்பத்தாறு ஆண்டுகளாக எதிரிப்படைகளோடு அடிபணியாது போராடி நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச்சமரில் வீரகாவியமானார்.

சிறிலங்கா அரசுக்கும் அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய  உலகநாடுகளின்  கூட்டுப்படை வலிமையையும்  ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சி திட்டங்களையும்  எதிர்கொண்டு , அனைFB_IMG_1495484662913-300x300.pnganna--284x300.jpgத்து தடைகளையும்,  தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக தேசியத் தலைவர் திகழ்ந்தார் .

தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தி, முள்ளிவாய்க்கால்  இறுதிப்போர் வரையும் உறுதி குலையாது படைநடத்தி,தான் வரித்துக்கொண்ட  உயரிய இலட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமாரஏற்று, உயிர்களை விதையாக்கிய   மாவீரர்களின்   தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி,  எதிரிப்படையோடு இறுதிக்கணம் வரை துணிவோடு களமாடி எமது தேசியத்தலைவர்  அவர்கள் வீரச்சாவடைந்த நாள் 2009 ஆண்டு மே மாதம் 18  என்று தமிழீழ மாவீரர் பணிமனை முடிவு  செய்து அறியத்தருகிறது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவினை  உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும்  இப்பெரும் துயர்மிகு அறிவிப்பை,  அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும்,அவரை ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு தமிழீழ மாவீரர் பணிமனையூடாக    உறுதிப்படுத்தி வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காலம் காலமாக அடிமை வாழ்வுக்குள் சிக்குண்டு சிதைந்து கொண்டிருந்த ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த ஒரு சூரிய தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து, தமிழினத்தின் அதிஉச்ச வீர அடையாளமாக அவர் திகழ்ந்தார்.

 வரலாற்றிலிருந்து எவராலும் அழிக்கப்பட முடியாதவாறு, எதிரியாலும் போற்றப்படும் போரியல் அறத்துடனும் உயர்ந்த இராணுவ ஒழுக்கத்துடனும் தமிழர் வரலாற்றில்  அவர்  நிலைபெற்றுவிட்டார் என்பதால், செம்மொழியாம் எம்  தாய்த் தமிழ்மொழி வாழும் காலமெல்லாம் எம்தேசத் தலைவரும் நிலைபெற்று நித்திய வாழ்வு வாழ்வார் .

எமது அன்பிற்குரிய தாயத்தமிழ் உறவுகளே!

தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்திலிருந்து  கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குடைத்து, கொண்ட கொள்கையில் உறுதி தளராது, மாவீரர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

தமிழினத்தின் விடிவிற்காக  தனது உயிரை அர்ப்பணித்த  எம் தேசியத் தலைவருக்கு உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு அவரை நெஞ்சங்களில் நிலைநிறுத்தி,  தமிழீழப் போராட்ட வரலாற்றின்  மிகப்பெரும் அடையாளமாக அவரை  இறையாக்கி எமது இதயக் கோயிலில் வைத்து பூசிக்கப்படக்கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் மிகப்பெரும் கடமையும் பொறுப்புமாகும் .

ஆகவே வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான  எமது தேசத்தலைவருக்கு, தலைவரின் தலைமையில் போராடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர் மற்றும் தாயக – தமிழக மக்கள் என  அனைவரும் ஒன்றிணைந்து அவரது  இறுதி வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும்     நடாத்தும் அதேவேளை அனைவரும் ஒன்றிணையக்கூடிய ஐரோப்பிய நாட்டொன்றிலும் வரும் 2025 ஆம் ஆண்டு் நடுப்பகுதியில் உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக முன்னெடுப்போம் என உறுதி அளிக்கிறோம் .

எங்கள் பெருந் தலைவர் அவர்களால் கட்டமைத்து, வளர்த்தெடுக்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று  எமது இறுதி இலட்சியத்தை அடைவோமென எம் தேசியத் தலைவர் மீதும் மாவீரர்கள் மீதும் உறுதியெடுத்துக் கொள்கிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”

இ. பிரசாத்

இணைப்பாளர்

மாவீரர் பணிமனை,

தமிழீழ விடுதலைப்புலிகள்,

தமிழீழம்.

10.03.2025.

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%

https://www.uyirpu.com/?p=19537

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


தமிழீழத் தேசியத் தலைவரின் வீரச்சாவு அறிவிப்பு… (காணொளிப்பதிவு)

தமிழீழத் தேசியத் தலைவரின் வீரச்சாவு அறிவிப்பு… (காணொளிப்பதிவு)

மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்புமேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முகவர்களான "வரலாற்று மைய" கும்பல்களின் அடுத்த சித்து விளையாட்டு.

அரசியல் துறை என்று வந்தார்கள், பின்னர் துவாரகா இருக்கிறார் என்றார்கள் இப்போது தேசிய தலைவருக்கு வீரவணக்கம் என்று அடுத்த கூத்துக்கு தயாராகிறார்கள். இவர்களை மாவீரர்களும் தமிழினமும் ஒருபோதும் மன்னிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திற்கு 16 வருடங்களுக்கு முதல் தெரிந்த உண்மை இப்போது தான் இவர்களுக்கு தெரித்திருக்கிறது. அதாவது Reality ல் இருந்து பல வருடங்கள் பின்னோக்கி உள்ளவர்கள் பலர் இப்போதும் புலம் பெயர் நாடுகளில் உள்ளார்கள். இந்த பிற்போக்குவாதிகள் மக்களை வழிநடத்த போவதாக வேறு கப்சா. 😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவரின் வீரச்சா அறிவிப்பு; பின்னணியில் இந்திய புலனாய்வுத்துறை என்கிறார் பொன் சுதன் சீற்றம்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவை அறிவித்தவர்கள் இறுதி போரில் மக்களை சுட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களே என பொன் சுதன் தெரிவித்துள்ளார்.

யாழ் வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் நேற்றையதினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்து விட்டதாக கூறி அவருக்கான வீரச்சாவு அறிவித்தலை புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்த இவர்களை தற்போது யார் தூண்டி விட்டது? இவர்களுக்கு தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் இல்லை.

இவர்கள் கொண்ட கொள்கையை மறந்து இறுதி போரில் தாங்கள் தப்பிப்பதற்காக மக்களை சுட்டுவிட்டு சென்றவர்கள்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக ஒன்று சேரும் போதெல்லாம் போலி அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறார்கள்.

இலக்கில் இருந்து அவர்களை அகற்றுகிறார்கள் இவர்கள் அனைவரும் இந்திய புலனாய்வுத்துறையான” றோ” அமைப்பின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குபவர்கள்.

இரண்டு அணிகளாக பிரிந்து போலி அறிவிப்புகளை செய்து மக்களை நம்பவைத்து பணம் சேர்க்கும் தந்திரத்தில் இதுபோன்ற புலம்பெயர் அமைப்புக்கள் சிலர் செயற்பட்டு வருகிறார்கள்.

ஒரு அணியினர் துவாரகா இருக்கிறார் என்றும் இன்னொரு அணியினர் தலைவர் பிரபாகரன் இல்லை என்றும் பிரச்சாரம் செய்து பணம் சேர்க்கிறார்கள். இந்த இரண்டு அணியினரும் ஒரே நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்படுகிறவர்கள்.

முன்னாள் போராளிகள் என வெளி நாடுகளில் இருந்து இதுபோன்ற அறிக்கைகளை விடுபவர்கள் உண்மையான போராளிகள் இல்லை, உயிருக்கு பயந்து காக்க வேண்டிய மக்களை சுட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள்.

இவர்கள் தற்போது புலிகளின் பணத்தை சுருட்டியவர்களுடன் இணைந்து இவ்வாறான போலி அறிவிப்புக்களை விடுகின்றனர்.

இது தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் இலங்கை தமிழர்களும் அவதானமாக இருப்பதுடன் இவர்களை எமது தேசிய ரீதியான பயணத்தில் இருந்து அகற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/315922

  • கருத்துக்கள உறவுகள்+

ஏன்டா கடற்புலிகள் வான்புலிகள் என்று அமைப்புகள் இல்லையோ! 🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த போராளிகளுக்கு..! -மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

March 17, 2025

அன்பார்ந்த போராளிகளுக்கு..! -மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

அன்பார்ந்த போராளிகளே.!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பல வரலாற்றுச் சாதனைகளை படைத்த காலத்தில் தேசியத் தலைவரின் நேரடி வழிநடத்தலில் களமாடியவர்கள் நீங்கள். தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய புறநானூற்று வரலாறு படைத்த எம் ஒப்பற்ற பெருந்தலைவரின் உள்ளுணர்வாக, தேசியத் தலைவரின் வரலாற்றுப்படிமங்கள் பலவற்றை தாங்கிவரும் ஆக்கங்களை தொகுத்து நூலாக்கி,வரலாற்று ஆவணப்படுத்தல் ஒன்றினை செய்துவிட முயற்சிக்கின்றோம்.

தேசியத் தலைவரின் தன்னுணர்வுகளை, தூரநோக்கான சிந்தனையை, பட்டறிவின் பண்பினை, பல விடயங்கள் பற்றி அவாவி நிற்கும் அவரது ஆவல்களை, ஒரு பெரும் போரை நடாத்தி அதேசமயம் தமிழ் மக்களின் பல்துறை சார் வளர்ச்சிக்காக தமிழ்த்தேசத்தின் கட்டுக்கோப்பான எதிர்கால விருத்திக்கான அவரது எண்ணப்பாங்குகளை, தமிழ் மக்கள் அனைவருமே மிக்க விருப்புடன் அறியமுற்படும் அறிய விரும்பும் தேசியத் தலைவரின் ஆளுமை, அவரது தனித்த எண்ணங்கள் பற்றிய பூரண வடிவத்தையும்,  வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகளாக  தங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது எம் இளைய தலைமுறையினருக்கு ஒரு அதிசய நூலாக அமையப்பெறவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.  ஆக்கங்கள் உண்மையானதும், ஆதாரபூர்வமானதாகவும் அமைவது மிகவும் அவசியமானது. இணைய ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ ஏற்கனவே வெளியான ஆக்கங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வடிவமைப்பு,தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக கருத்தில் மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களை நூலாக்க குழுவினர் மேற்கொள்வார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறோம்.

தங்கள் ஆக்கங்கள் கணனிப்படுத்தப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுவதோடு, 200 சொற்களுக்கு மேற்படாதவாறு இருப்பதனை வரவேற்கிறோம்.

ஆக்கங்கள் 05 மே 2025க்கு முன்னர் அனுப்பிவைப்பது காலச்சிறந்தது.

அன்பானவர்களே! தங்களின்  ஆக்கங்களுடன் தங்களைப் பற்றியதான சிறிய அறிமுக குறிப்பு ஒன்றினை  எழுதி அனுப்புமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தங்களால் அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்களில் தெரிவு செய்யப்பட்டவை, எதிர்வரும்  08 மாதம் அளவில் நடக்கவிருக்கும் எமது தேசியத் தலைவரின் “வீரவணக்க நிகழ்வில்” வெளியிடப்படவுள்ள நூல் மூலம்  உலகத் தமிழ் மக்களின் கைகளில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து உள்ளோம்.

தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான ஒரு படைப்பாக்கம் வெளிவர அனைவரும் இணைந்து பயணிப்போம்.

மின்னஞ்சல் :- methaguvarikal@gmail.com

புலனம் :-  +61 494 387 427

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

நிலவன்

தொகுப்பாளர்

நூலாக்க குழு

மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%

https://www.uyirpu.com/?p=19552

அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே…! – மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

March 17, 2025

அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே...! - மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே!

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இறுதிமூச்சுவரை களமாடி, தாய்மண்ணிலே விதையாகிய மாவீரர்கள் வரிசையில் எங்கள் ஒப்பற்ற தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களும் வீரவரலாறாகினார்.

தேசியத்தலைவர் படைத்துச்சென்ற வீரமிகு போராட்ட வரலாற்றை பெரும் ஆவணப் பொக்கிசமாக உருவாக்கி அதனை எம் எதிர்காலச் சந்ததிக்கும் உலகமெல்லாம் பரந்துவாழும் தமிழர் தலைமுறைக்கும் கையளிக்கும் உன்னத நோக்கோடு..

“கவிதைத்தொகுப்பு” ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே இந்த மண்ணை, மரபை, மக்களை நேசித்த அந்த மகத்தான மாபெரும் வீரத்  தலைவனுக்கு…

உங்கள் கவிதைகளால்  உயரிய காவியம் படைக்க தங்களிடமிருந்து…உணர்வுபூர்வமான கவிதைகளை வேண்டி நிற்கின்றோம். “இது உங்கள் தலைவனுக்கு நீங்கள் அர்ச்சிக்கும் கவிதைப் பூக்கள் ஆகட்டும்”  அந்தக் கவிதைகள் எங்கள் தலைவன் மகிமைதனைக் கூறட்டும்.

சமர்ப்பிக்கும் கவிதை உங்களுடைய சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும் இணைய ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ ஏற்கனவே வெளியான ஆக்கங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் ஆக்கங்கள் கணனிமயப்படுத்தப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுவதோடு,  குறைந்தபட்ச கவிதை வரிகள் : நான்கு வரிகள் அதிகபட்ச கவிதை வரிகள் : நாற்பது வரிகள்  மேற்படாதவாறு இருப்பதனை வரவேற்கின்றோம்.

தங்கள் ஆக்கங்கள் 05 மே 2025க்கு முன்னர் அனுப்பிவைப்பது காலச்சிறந்தது.

வடிவமைப்பு,தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக கருத்தில் மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களை நூலாக்க குழுவினர் மேற் கொள்வார்கள் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிக்கிறோம்.

தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான ஒரு படைப்பாக்கம் வெளிவர அனைவரும் இணைந்து பயணிப்போம்.

மின்னஞ்சல் :- methagukavitai@gmail.com

புலனம் :-  +61 494 387 427

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி

நிலவன்.

தொகுப்பாளர்,

நூலாக்கக் குழு,

மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%

https://www.uyirpu.com/?p=19560

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அன்பார்ந்த போராளிகளுக்கு..! -மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

March 17, 2025

அன்பார்ந்த போராளிகளுக்கு..! -மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

அன்பார்ந்த போராளிகளே.!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பல வரலாற்றுச் சாதனைகளை படைத்த காலத்தில் தேசியத் தலைவரின் நேரடி வழிநடத்தலில் களமாடியவர்கள் நீங்கள். தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய புறநானூற்று வரலாறு படைத்த எம் ஒப்பற்ற பெருந்தலைவரின் உள்ளுணர்வாக, தேசியத் தலைவரின் வரலாற்றுப்படிமங்கள் பலவற்றை தாங்கிவரும் ஆக்கங்களை தொகுத்து நூலாக்கி,வரலாற்று ஆவணப்படுத்தல் ஒன்றினை செய்துவிட முயற்சிக்கின்றோம்.

தேசியத் தலைவரின் தன்னுணர்வுகளை, தூரநோக்கான சிந்தனையை, பட்டறிவின் பண்பினை, பல விடயங்கள் பற்றி அவாவி நிற்கும் அவரது ஆவல்களை, ஒரு பெரும் போரை நடாத்தி அதேசமயம் தமிழ் மக்களின் பல்துறை சார் வளர்ச்சிக்காக தமிழ்த்தேசத்தின் கட்டுக்கோப்பான எதிர்கால விருத்திக்கான அவரது எண்ணப்பாங்குகளை, தமிழ் மக்கள் அனைவருமே மிக்க விருப்புடன் அறியமுற்படும் அறிய விரும்பும் தேசியத் தலைவரின் ஆளுமை, அவரது தனித்த எண்ணங்கள் பற்றிய பூரண வடிவத்தையும்,  வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகளாக  தங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது எம் இளைய தலைமுறையினருக்கு ஒரு அதிசய நூலாக அமையப்பெறவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.  ஆக்கங்கள் உண்மையானதும், ஆதாரபூர்வமானதாகவும் அமைவது மிகவும் அவசியமானது. இணைய ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ ஏற்கனவே வெளியான ஆக்கங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வடிவமைப்பு,தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக கருத்தில் மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களை நூலாக்க குழுவினர் மேற்கொள்வார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறோம்.

தங்கள் ஆக்கங்கள் கணனிப்படுத்தப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுவதோடு, 200 சொற்களுக்கு மேற்படாதவாறு இருப்பதனை வரவேற்கிறோம்.

ஆக்கங்கள் 05 மே 2025க்கு முன்னர் அனுப்பிவைப்பது காலச்சிறந்தது.

அன்பானவர்களே! தங்களின்  ஆக்கங்களுடன் தங்களைப் பற்றியதான சிறிய அறிமுக குறிப்பு ஒன்றினை  எழுதி அனுப்புமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தங்களால் அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்களில் தெரிவு செய்யப்பட்டவை, எதிர்வரும்  08 மாதம் அளவில் நடக்கவிருக்கும் எமது தேசியத் தலைவரின் “வீரவணக்க நிகழ்வில்” வெளியிடப்படவுள்ள நூல் மூலம்  உலகத் தமிழ் மக்களின் கைகளில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து உள்ளோம்.

தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான ஒரு படைப்பாக்கம் வெளிவர அனைவரும் இணைந்து பயணிப்போம்.

மின்னஞ்சல் :- methaguvarikal@gmail.com

புலனம் :-  +61 494 387 427

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

நிலவன்

தொகுப்பாளர்

நூலாக்க குழு

மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%

https://www.uyirpu.com/?p=19552

அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே…! – மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

March 17, 2025

அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே...! - மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே!

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இறுதிமூச்சுவரை களமாடி, தாய்மண்ணிலே விதையாகிய மாவீரர்கள் வரிசையில் எங்கள் ஒப்பற்ற தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களும் வீரவரலாறாகினார்.

தேசியத்தலைவர் படைத்துச்சென்ற வீரமிகு போராட்ட வரலாற்றை பெரும் ஆவணப் பொக்கிசமாக உருவாக்கி அதனை எம் எதிர்காலச் சந்ததிக்கும் உலகமெல்லாம் பரந்துவாழும் தமிழர் தலைமுறைக்கும் கையளிக்கும் உன்னத நோக்கோடு..

“கவிதைத்தொகுப்பு” ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே இந்த மண்ணை, மரபை, மக்களை நேசித்த அந்த மகத்தான மாபெரும் வீரத்  தலைவனுக்கு…

உங்கள் கவிதைகளால்  உயரிய காவியம் படைக்க தங்களிடமிருந்து…உணர்வுபூர்வமான கவிதைகளை வேண்டி நிற்கின்றோம். “இது உங்கள் தலைவனுக்கு நீங்கள் அர்ச்சிக்கும் கவிதைப் பூக்கள் ஆகட்டும்”  அந்தக் கவிதைகள் எங்கள் தலைவன் மகிமைதனைக் கூறட்டும்.

சமர்ப்பிக்கும் கவிதை உங்களுடைய சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும் இணைய ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ ஏற்கனவே வெளியான ஆக்கங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் ஆக்கங்கள் கணனிமயப்படுத்தப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுவதோடு,  குறைந்தபட்ச கவிதை வரிகள் : நான்கு வரிகள் அதிகபட்ச கவிதை வரிகள் : நாற்பது வரிகள்  மேற்படாதவாறு இருப்பதனை வரவேற்கின்றோம்.

தங்கள் ஆக்கங்கள் 05 மே 2025க்கு முன்னர் அனுப்பிவைப்பது காலச்சிறந்தது.

வடிவமைப்பு,தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக கருத்தில் மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களை நூலாக்க குழுவினர் மேற் கொள்வார்கள் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிக்கிறோம்.

தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான ஒரு படைப்பாக்கம் வெளிவர அனைவரும் இணைந்து பயணிப்போம்.

மின்னஞ்சல் :- methagukavitai@gmail.com

புலனம் :-  +61 494 387 427

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி

நிலவன்.

தொகுப்பாளர்,

நூலாக்கக் குழு,

மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%

https://www.uyirpu.com/?p=19560

இவர்கள் நம்ப கூடியவர்களா ஜி?

எழுதி அனுப்பலாம் ஆனால் கள்ள கோஸ்டிக்கு உதவுவதாக அமைந்து விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் முதலில் சேர்த்த காசில் கொஞ்சமாவது முன்னாள் போராளிகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். பல ஆண் / பெண் போராளிகள் கச்சான் விற்கிறார்களாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, goshan_che said:

இவர்கள் நம்ப கூடியவர்களா ஜி?

எழுதி அனுப்பலாம் ஆனால் கள்ள கோஸ்டிக்கு உதவுவதாக அமைந்து விடக்கூடாது.

ஊரறிந்த செய்தியையே 16 ஆண்டுகள் கழித்துத்தான் (தானுமொரு தரவழியாம் என்று) இதிலுள்ளவர்கள் வெளியிடுறாங்கள் என்றால் எப்பேர்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போலித்துவாரகா விடயத்தில் நடந்ததுதான் இதற்கும் நடக்கும்.றோ இருக்கிறார் என்றும் இல்லை என்றும் தனது முகவர்களை வைத்து நாடகத்தை அரங்கேற்றுகிறது. புலிகள் மீதான தடை அண்மையில் நீடிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இவர்கள் முதலில் சேர்த்த காசில் கொஞ்சமாவது முன்னாள் போராளிகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். பல ஆண் / பெண் போராளிகள் கச்சான் விற்கிறார்களாம்.

1 hour ago, நன்னிச் சோழன் said:

ஊரறிந்த செய்தியையே 16 ஆண்டுகள் கழித்துத்தான் (தானுமொரு தரவழியாம் என்று) இதிலுள்ளவர்கள் வெளியிடுறாங்கள் என்றால் எப்பேர்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

16 minutes ago, புலவர் said:

போலித்துவாரகா விடயத்தில் நடந்ததுதான் இதற்கும் நடக்கும்.றோ இருக்கிறார் என்றும் இல்லை என்றும் தனது முகவர்களை வைத்து நாடகத்தை அரங்கேற்றுகிறது. புலிகள் மீதான தடை அண்மையில் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழுக்கு வருவது எமது கருத்தை சொல்லமட்டும் அல்ல, ஏனையோர் சொல்வதை கேட்டு அதை மீளாய்வுசெய்யவும்தான்.

உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று

தலைவரின் வீரச்சாவு பற்றிய அறிக்கையை மீளப்பெறுவதாக

இன்னொரு அறிக்கையை

வெளியிட்டுள்ளனர்.

இந்த சுய நல பேய்களின்

துரோகிகளின்

விசர் கூத்தை தடுக்க

வழியில்லாமல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்+
27 minutes ago, வைரவன் said:

இன்று

தலைவரின் வீரச்சாவு பற்றிய அறிக்கையை மீளப்பெறுவதாக

இன்னொரு அறிக்கையை

வெளியிட்டுள்ளனர்.

இந்த சுய நல பேய்களின்

துரோகிகளின்

விசர் கூத்தை தடுக்க

வழியில்லாமல் உள்ளது.

பொழுது போக்கிற்கு பஞ்சமில்லை 🤣🤣

நான் மேலை எழுதினது சரிதான்...

50 minutes ago, goshan_che said:

யாழுக்கு வருவது எமது கருத்தை சொல்லமட்டும் அல்ல, ஏனையோர் சொல்வதை கேட்டு அதை மீளாய்வுசெய்யவும்தான்.

உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

😃

வைரவன் இணைத்துள்ளதை வாசியுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2025 at 18:27, கிருபன் said:

கடந்த  2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாட்டில்,  தேசியத் தலைவரின் வழிநின்று  களமாடிய போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்த ஒன்றுகூடலில், தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி வெளியிடப்பெற்ற தமிழீழ மாவீரர்  பணிமனையின் அறிவிப்பு, 10.03.2025 அன்று உத்தியோகபூர்வமாக வெளிவருகின்றது.

சுவிஸ்லாந்து ஏன் இந்த விடயத்தில் அதிக அக்கறைகாட்டுகிறது?இந்தியாவுடன் சேர்ந்து வேறு பல புலனாய்வு சக்திகளும் செயல்படுகின்றது போல தெரிகிறது ...தமிழன் நலன் கருதியல்ல தங்கள் நலன் கருதி இதில தலையிடுகின்றனர்..சுவிஸ்லாந்து தூதுவர் சிறிலங்காவில் அறிக்கை எல்லாம் விடுகின்றார்...

இந்தியாவிலிருந்து செயல்ப்ட்டால் சிங்களவர்களை பகைத்து கொள்ள வேண்டி வரும் என்ற காரணத்தினால் மேற்குலகுடன் சேர்ந்து செயல் பட தொடங்கிவிட்டார்கள் போல...

உலக சமாதான முகமூடிக நாடுகள்,(நோர்வே)

உலக நடுநிலை முகமூடி (சுவிஸ்லாந்து)

அமெரிக்கா சில விடயங்களை நேரடியாக கையால்வதில்லை.தங்களது முகவர்களினூடாக தான் செய்வார்கள் .

உலக சமாதான முகமூடிக நாடுகள்,(நோர்வே)

உலக நடுநிலை முகமூடி (சுவிஸ்லாந்து)

புலம்பெயர்ந்த விடுதலை போராளிகளை அடையாளம் காண்பதற்கும் இது உதவலாம் ..

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, வைரவன் said:

இன்று

தலைவரின் வீரச்சாவு பற்றிய அறிக்கையை மீளப்பெறுவதாக

இன்னொரு அறிக்கையை

வெளியிட்டுள்ளனர்.

இந்த சுய நல பேய்களின்

துரோகிகளின்

விசர் கூத்தை தடுக்க

வழியில்லாமல் உள்ளது.

ஒரு வழி உண்டு அரசியல் விழிப்புணர்வு மக்களிடையே உருவாக வேண்டும் ... இவர்களுக்கு பொது மக்கள் பணம் கொடுப்பதை தடுக்க வேணும்,இவ்ர்களுக்கு வேறு சக்திகள் பணம் கொடுக்கின்றனவோ தெரியவில்லை ...

ஒர் தலை சிறந்த போராளியை கொச்சைப்படுத்த இவர்கள் செய்யும் செயல் இது ,அத்துடன் சில‌ சக்திகளின் நீண்ட நாள் தேவையும் அதுதான்,,,இது ஒர் தொடர்கதை...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

யாழுக்கு வருவது எமது கருத்தை சொல்லமட்டும் அல்ல, ஏனையோர் சொல்வதை கேட்டு அதை மீளாய்வுசெய்யவும்தான்.

உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

அப்படியா. ??? இன்று முகநூலில். தலைவர் பேசுகிறார் பார்க்கவில்லையா???

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் எந்தச் செய்தியையும் நம்புவதற்கோ அல்லது பணம் கொடுப்பதற்கோ யாரும் தயாரில்லை. ஆகவே கடையை மூடுவது நல்லது.விரும்பியவர்கள் தனிப்பட்ட ரீதியில் அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து உதவிதேவைப்படுபவர்களுக்கு உதவலாம்.ஆனால் இப்படியான போலிகள் தமிழ்த்தேசியத்தின் பெயரால் போடும் நாடகங்களை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். தங்கள் பெயரும் நுhலில் இடம்பெற வேண்டும் என்று கவிதைகளை அப்பாவித்தனமாக எழுதி வைத்திருக்கிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, புலவர் said:

தங்கள் பெயரும் நுhலில் இடம்பெற வேண்டும் என்று கவிதைகளை அப்பாவித்தனமாக எழுதி வைத்திருக்கிறார்களோ?

புலிகளின் படிமங்களுக்கு மேல் தங்கள் பெயரை எழுதும் ஈனர்கள், இங்கு செய்யாமல் இருப்பார்கள் என்று எவ்வாறு எண்ணத் துணிந்தீர்கள், ஐயனே... புலிகளால் எடுக்கப்பட்ட படிமத்தின் மேலேயே இந்த ஈனத்தனம் செய்யும் இவர்கள் பேருக்காகவும் புகழுக்காகவும் எதையும் செய்யத் துணிவார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

பொழுது போக்கிற்கு பஞ்சமில்லை 🤣🤣

நான் மேலை எழுதினது சரிதான்...

😃

வைரவன் இணைத்துள்ளதை வாசியுங்கள்...

உண்மைதான். கலப்படமில்லாத கள்வர்கள் 🤣

1 hour ago, Kandiah57 said:

அப்படியா. ??? இன்று முகநூலில். தலைவர் பேசுகிறார் பார்க்கவில்லையா???

தலைவர் இல்லை என்பதை நான் எப்போதோ ஏற்று கொண்டு விட்டேன். அவரை முறைப்படி நினைவுகூர கூட நம்மால் இயலவில்லை என்பதே வரலாற்று சோகம்.

#மொத்தமாகவும் சில்லறையாகவும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.