Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 MAR, 2025 | 02:19 PM

image

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக புதன்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட சிலரும் வருகை தந்திருந்தனர்.

IMG-20250313-WA0053.jpg

IMG-20250313-WA0070.jpg

https://www.virakesari.lk/article/209080

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, சுமந்திரன் சுக்கு நூறாக உடைத்ததால்...

அனுர கட்சிக்கும், அர்ச்சுனா கட்சிக்கும் மக்கள் வாக்களிக்க சாத்தியக் கூறுகள் அதிகம்.

சுமந்திரன் தானும் கெட்டு... கட்சியையும் கெடுத்ததுதான் கண்ட பலன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை

பூர்வீக குடிகளின் உரிமைகளை இல்லாமல் பண்ணுவதில் முன்னுக்கு நிற்க்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ..

மலையக மக்களின் குடியுரிமையை எதிராக வாக்களித்த சிலரை பாராட்ட வேண்டிய சுழ்நிலைக்க்கு உங்களுடைய அரசியல் நிலைப்பாடு உள்ளது ..

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

பூர்வீக குடிகளின் உரிமைகளை இல்லாமல் பண்ணுவதில் முன்னுக்கு நிற்க்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ..

மலையக மக்களின் குடியுரிமையை எதிராக வாக்களித்த சிலரை பாராட்ட வேண்டிய சுழ்நிலைக்க்கு உங்களுடைய அரசியல் நிலைப்பாடு உள்ளது ..

எதற்காக வந்தாரோ அதை கனக் கச்சிதமாக முடித்து வைப்பார்..

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, alvayan said:

எதற்காக வந்தாரோ அதை கனக் கச்சிதமாக முடித்து வைப்பார்..

இன்றைய நிலையில் கடினம். ....அர்ச்சுனா. முன்னுக்கு வரலாம் ஆட்சியும். அமைக்கலாம்.

சந்திரசேகர். பொது தேர்தலில் வென்றது போல் வெல்ல மாட்டார்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, alvayan said:

எதற்காக வந்தாரோ அதை கனக் கச்சிதமாக முடித்து வைப்பார்..

நம்மவர்கள் றோட்டு போட்டு கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, alvayan said:

எதற்காக வந்தாரோ அதை கனக் கச்சிதமாக முடித்து வைப்பார்..

உண்மை ,இதில் அவருக்கு இரண்டு வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது ...மொழி,மதம் இரண்டையும் மெல்ல மெல்ல அந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையாக இல்லாமல் பண்ண வேண்டும் ..அதற்காக பிராந்திய மக்களையே பயன்படுத்த வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் இதை செய்ய வேண்டும்...இனவாதம் பேசக்கூடாது மத வாதம் பேசகூடாது ....இந்த இரண்டையும் பேசி நாட்டை குட்டிசுவராக்கியது யார் என்பது தெரிந்த விடயம் ..பிராந்திய மக்கள் உரிமைக் குரல் கொடுத்தா இனவாதம் ,சட்ட விரோத விகாரைக்கு எதிராக குரல் கொடுத்தா மத வாதம்..

வெள்ளைக்காரன் வீதியும்,ரயிலும் போட்டது பூர்வீக குடிகளை அடிமைபடுத்த என வகுப்பெடுத்த இந்த ஜெ.வி.பினர் இப்பொழுது அதே கொள்கையை,அபிவிருத்தி,ஒற்றுமை என‌ இன்னுமொரு தேசிய இனத்தினை இல்லாமல் பண்ண செய்கின்றனர் ..

இவருக்கு இன அடையாளம்,மத அடையாளம் இரண்டும் தேவையற்றது காரணம் அவர் வாழ்ந்த பிரதேச மொழியும் மதமும் பெரும்பான்மை இனத்தை சார்ந்தது அதில இரண்டர கலந்து விட்டார் ...பெயர் தமிழாக இருக்கும் ....புலம்பெயர் நாட்டில் எமது அடுத்த சந்ததியை போல...

12 minutes ago, ஈழப்பிரியன் said:

நம்மவர்கள் றோட்டு போட்டு கொடுக்கிறார்கள்.

800 வருடங்களாக எம்மவர்களில் சிலர் ரோட்டு போட்டு கொடுக்கின்றனர் ஆனாலும் இனம் தொடர்ந்து போராடி கொண்டு தான் நிற்கின்றது

32 minutes ago, Kandiah57 said:

இன்றைய நிலையில் கடினம். ....அர்ச்சுனா. முன்னுக்கு வரலாம் ஆட்சியும். அமைக்கலாம்.

சந்திரசேகர். பொது தேர்தலில் வென்றது போல் வெல்ல மாட்டார்கள் ..

வெல்லக்கூடாது பார்ப்போம் காலம் பதில் சொல்லட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

913795259.jpg

யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ள தேசிய மக்கள் சக்தி!

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வருகைதந்திருந்தனர்.

https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_கட்டுப்பணம்_செலுத்தியுள்ள__தேசிய_மக்கள்_சக்தி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.