Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா!

archuna.jpg

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார்.

இதன் போது அர்ச்சுனா எம்பி கருத்து தெரிவிக்கையில்..

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கபைய யாழிலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாக கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கிறோம்.

ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு எம்மிடம் போதிய நிதி இல்லாததால் போட்டியிடும் வேட்பாளர்களிடமே அதற்கான நிதியை வழங்குமாறு கேட்டிருக்கிறோம்.

அவ்வாறு அவர்கள் வழங்குமிடத்தே அந்த நிதியை நாம் மீண்டும் அவர்களிடம் கிடைக்கும் என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தும் இருக்கிறோம். எமக்காண பணம் வந்த பின்னர் அந்த நிதியை நிச்சயம் அவர்களிடமே வழங்குவோம்.

இதனடிப்படையில் வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள சபைகளுக்கு தொடர்ந்தும் நாம் கட்டுப் பணத்தை செலுத்த உள்ளோம். இவ்வாறு அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தி சகல இடங்களிலும் தேர்தலில் போட்டியிடுவோம்.

இதேவேளை யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக எனது செயலாளர் சட்டத்தரணி கௌசல்யாவை நிறுத்த உள்ளோம். எங்களிடம் ஒழித்து மறைக்கும் எண்ணங்களோ சிந்தனையோ இல்லை.

ஆகவே வடகிழக்கில் சகல சபைகளிஙும் நாம் போட்டியிடுகிற போது தமது முழுமையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும். அவ்வாறாக மக்கள் தமது ஆதரவை எமக்கு வழங்குவார்கள் எனவும் எதிர்பார்ப்க்கிறோம் என்றார்.

https://www.samakalam.com/யாழ்-மேயர்-வேட்பாளராக-கள/

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து அந்த இடத்திற்கு கௌசல்யாவை நியமிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இப்போ கௌசல்யா யாழ். மேயர் வேட்பாளர் என்றால்… அப்போ சொன்னது பொய்யா கோபால். 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

அர்ச்சுனா வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து அந்த இடத்திற்கு கௌசல்யாவை நியமிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இப்போ கௌசல்யா யாழ். மேயர் வேட்பாளர் என்றால்… அப்போ சொன்னது பொய்யா கோபால். 😂

சின்னப்பிள்ளையளுக்குத்தான் மிட்டாய காட்டி ஏமாத்தலாமெண்டா..

இது ஒரு லோயருக்கு படிச்சபொண்ணு.. 🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு எந்த வகை முட்டாசி குடுக்கிறதெண்டு மக்கள் தெளிவாயிருக்கினம் எனபதை நீங்கள் அறிஞ்ஞில்லா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கும் இப்பவே கால்ல விழுந்து கும்புடுவம்.....😎

images-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அர்ச்சுனா வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து அந்த இடத்திற்கு கௌசல்யாவை நியமிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இப்போ கௌசல்யா யாழ். மேயர் வேட்பாளர் என்றால்… அப்போ சொன்னது பொய்யா கோபால். 😂

அவர் கொடுக்கத் தேவை இல்லை.

இவரை பதவிவிட்டு இறக்கும் போது

அம்மணி பதவி ஏற்பார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.