Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

May 9, 2025 9:08 am

இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்துள்ளனர். இதுவரை விமானிகள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இலங்கை விமானப்படையின் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மீட்புபணியின் போது இரண்டு விமானிகள் உட்பட பயணித்த 12 படையினரும் மீட்கப்பட்டனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இலங்கை விமானப் படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://oruvan.com/sri-lanka-air-force-helicopter-crashes/

  • கருத்துக்கள உறவுகள்

09 MAY, 2025 | 10:08 AM

image

இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராணுவ வீரர்களின் அணிவகுப்பொன்றின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக  ஹெலிகொப்டர் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் உட்பட  12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/214255

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனக்கொலை இராணுவத்தின் விசேட படையணியின் பயிற்சி நிறைவு பாதியில் நிறுத்தம் ‍ ‍- மாதுரு ஓயா வானூர்தி விபத்தில் ஆறு இனக்கொலையாளிகள் பலியானது காரணமாம்.

சிங்கள இனக்கொலை இராணுவத்தின் விசேட படைப்பிரிவிற்கென்று இணைத்துக்கொள்ளப்பட்ட பிரிவுகள் 55 மற்றும் 56 இற்கான படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வு பாதியில் அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இனக்கொலையாளிகளின் விசேட படைப்பிரிவு முகாமில் இன்று காலை ஏற்பட்ட உலங்கு வானூர்தி விபத்தில் ஆறு இனக்கொலையாளிகள் கொல்லப்பட்டதனால் இந்த அணிவகுப்பு நிகழ்வு சடுதியாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.

ஏழாவது ஸ்குவாட்ரன் பிரிவினரால் இயக்கப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பான பெல் 212 உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்திற்கு உள்ளானது. மாதுரு ஓயாவில் அமைந்திருக்கும் விசேட படையணியினர் அணிவகுப்பு நிகழ்விற்கான சாகச ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோதே வானிலிருந்து கீழே திடீரென்று வீழ்ந்து வானூர்தி விபத்திற்குள்ளானது.

ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது வானூர்தியில் இரு விமானமோட்டிகள், விமானப்படை வீரர்கள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் விசேட படையினர் என்று 12 பேர் பயணித்திருக்கிறார்கள்.

விபத்து நடந்தவுடன் சிதைவுகளில் இருந்து அனைவரும் உயிருடன்ம் மீடகப்பட்டபோதிலும் அறுவர் பின்னர் பொலன்னறுவை வைத்தியசாலையில் மரணித்திருக்கிறார்கள்.

Special Forces passing-out parade halted after helicopter crash - Caption Story | Daily Mirror

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-126.jpg?resize=750%2C375&ssl

ஹெலிகொப்டர் விபத்து: இலங்கை விமானப்படையின் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

சிறப்புப் படையினரின் வழக்கமான பயிற்சி பணிகளின் போது, இன்று காலை (09) மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ஹெலிகொப்டர் மோதியதில் ஆறு வீரர்கள் உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விமானப்படையின் முழு அறிக்கை பின்வருமாறு:

பாதுகாப்புப் படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்கான ஆர்ப்பாட்டத்தின் போது, எண் 7 ஸ்கொயர்னைச் சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது.

விரிவான விசாரணையை நடத்துவதற்காக விமானப்படைத் தளபதி ஒன்பது பேர் கொண்ட சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆறு வீரர்கள் உயிரிழந்தனர் – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1431412

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Gqg-Y5o-FWk-AA-le-D.jpg

இலங்கையின் Bell 212 ஹெலிகொப்டர் மாதுறு ஓயாவில் இன்று விபத்துக்குள்ளானது: ஆறு இலங்கைப் படையினர் பலி

குறித்த ஹெலிகொப்டர் 2007-2009 வரையான இலங்கை இறுதி யுத்தத்தில் ராணுவ மீட்பு மற்றும் தரையிறக்கம், தாக்குதல்களில் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முகநூலிருந்து....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.