Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது!

adminJune 20, 2025

43-1-1.jpg?fit=800%2C533&ssl=1

வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

43-4-2.jpg?resize=800%2C533&ssl=1

இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது.

முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது.

வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது.

இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை  மேம்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு   மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்.  அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனவே, தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட,  மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம் என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/217092/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்டி..எழுப்பும்போது...தயிட்டி விகாரை மாதி பத்தை கட்டிவிட்டல் ...கம்பீரமாக எழுந்து நிற்கும்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது.

"ரஜ லுனு"க்கு தீர்வு வழங்கியாச்சோ சந்திரா....உப்புக்கே தீர்வு வழங்க காணவில்லை இதில புலம்பெயர்வை தடுக்க போகின்றாராம்...ம்ம்ம்ம்ம் ..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது.

வடக்கில் சனத்தொகை வீழ்ச்சிக்கு காரணங்களாவன: தமிழ் மக்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கலவரங்கள், பொருளியல் பொருளாதார சேதம், விவசாய நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, சொந்த நிலத்திலிருந்து விரட்டல், தேவையற்ற கைதுகள், பயமுறுத்தல்கள், போர், இநவழிப்பு, விதவைகள், அனாதைகள் அதிகரிப்பு, தமிழ் மக்கள் திட்டமிட்ட புறக்கணிப்பு, அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், தேவையற்ற கைதுகள் போன்றனவே முக்கிய காரணங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

"ரஜ லுனு"க்கு தீர்வு வழங்கியாச்சோ சந்திரா....உப்புக்கே தீர்வு வழங்க காணவில்லை இதில புலம்பெயர்வை தடுக்க போகின்றாராம்...ம்ம்ம்ம்ம் ..

என்ன நீங்க இப்படிச் சொல்லீட்டீங்க. அதுதான் 'ஆனையிறவு உப்பு' என்று மாத்தியாச்சாமே. உப்புச்சப்பில்லாத விடயங்களைச் செய்தவாறு விகாரங்களையும், தாதுகோபுரங்களையும் மறைமுகமாக விரைந்து அமைத்து ஐ.தே.க,சி.சு.க, இ.பொ.முன்னணி போன்றவற்றைமிஞ்சியோர் என்று அதிகமாகத் தமிழரது நிலங்களைப் பிடித்துள்ளோம் எனச் காட்ட வேண்டாமோ. எங்கட சனமும் ஏடேய் நல்ல அரசு பெயரையே மாத்தீட்டாங்கள் என்று புளங்காகிதமடைந்து மீண்டும் குப்பறப் படுத்துவிடுவர்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

32 minutes ago, satan said:

வடக்கில் சனத்தொகை வீழ்ச்சிக்கு காரணங்களாவன: தமிழ் மக்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கலவரங்கள், பொருளியல் பொருளாதார சேதம், விவசாய நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, சொந்த நிலத்திலிருந்து விரட்டல், தேவையற்ற கைதுகள், பயமுறுத்தல்கள், போர், இநவழிப்பு, விதவைகள், அனாதைகள் அதிகரிப்பு, தமிழ் மக்கள் திட்டமிட்ட புறக்கணிப்பு, அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், தேவையற்ற கைதுகள் போன்றனவே முக்கிய காரணங்கள்.

அத்துடன் கஞ்சா மற்றும் போதைப்பொருள்களின் பரவலாக்கம் கரணியமாக இருக்கின்ற இளசுகளுக்கு எப்பிடி நாட்டம் வரும்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

Edited by nochchi
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

"ரஜ லுனு"க்கு தீர்வு வழங்கியாச்சோ சந்திரா...

அவர் இப்போ அமைச்சர் மட்டுமல்ல பொறப்புள்ள தமிழ் விடுதலை போராளியுமாவார்

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் மட்டும் 600 தமிழர்கள் அரசபடையினால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் இருந்தால் அவர்களின் அடுத்த சந்ததியும் சேர்த்து இப்பொழுது ஆயிரத்துக்கு மேல் இருந்திருப்பார்கள். செம்மணி மாதிரி எத்தனையோ அவலங்கள். சனத்தொகை குறைந்ததுக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் அரச படைகளினால் திட்ட மிடப்பட்ட இன அழிப்பே முக்கிய காரணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.