Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை

June 28, 2025 2:35 pm

வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை

“சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு
‘வடக்கு, கிழக்கில் புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர்.

புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர். ஒரு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோர் அவ்வாறு இருக்கலாம்.

அதேபோல புலிகளை ஆசிர்வதித்த அரசியல்வாதிகள் உள்ளனர். புலிகளை மீள் எழுச்சி பெற வைப்பதற்கு முற்படும் டயஸ்போரா குழுவொன்றும் உள்ளது.

இப்படியான அச்சுறுத்தல் இருப்பதால், போர் மூண்ட பிறகு முகாம்கள் அமைப்பது பற்றி சிந்திக்காமல், தூர நோக்கு சிந்தனை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் இருக்க வேண்டும். அதற்காக போர் காலத்தில் இருந்ததுபோல் அல்ல. பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையில் நகர்வுகள் இடம்பெறவேண்டும்.

யாழில் உள்ள பாதுகாப்பை பலவீனப்படுத்தினால் அது யாழ். மக்களுக்குதான் சரி இல்லை. ஆவா என்ற பாதாள குழுவொன்று இருந்தது. கேரள கஞ்சாக்கள் வருகின்றன. வீதித்தடைகளை நீக்கினால் தெற்கிலுள்ள பாதாளக்குழுக்கள் வடக்குக்கு சென்று ஒளியக்கூடும். எனவே, பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம்.

சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கு இல்லை என்பதை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.” -என்றார் பொன்சேகா.

https://oruvan.com/land-acquisition-in-the-north-fonseka-warns/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அதேபோல புலிகளை ஆசிர்வதித்த அரசியல்வாதிகள் உள்ளனர். புலிகளை மீள் எழுச்சி பெற வைப்பதற்கு முற்படும் டயஸ்போரா குழுவொன்றும் உள்ளது.

உன்னைப்போல ஒரு புண்ணாக்கு புழுத்திக்கும் வாக்கு போடச்சொல்லி தமிழ் அரசியல் செய்த கூட்டம் ஒன்றும் இருக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும் தமிழர்களை அச்சுறுத்தலிலும் கட்டுப்பாட்டிலும் தமது கண்காணிப்பிலும் வைத்திருக்கவே சிங்களமும் தமிழ் அரசியல் வாதிகளும் சிந்திக்கின்றனர். தமிழரை வன்முறையை பற்றி சிந்திக்கவும் அதை நோக்கி தூண்டி இந அழிப்பை செய்யவும் நடவடிக்கையிலேயே அது தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

4 hours ago, கிருபன் said:

ஆவா என்ற பாதாள குழுவொன்று இருந்தது. கேரள கஞ்சாக்கள் வருகின்றன. வீதித்தடைகளை நீக்கினால் தெற்கிலுள்ள பாதாளக்குழுக்கள் வடக்குக்கு சென்று ஒளியக்கூடும். எனவே, பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம்.

ஆவா குழு, கஞ்சா எங்கிருந்து யாரால் எப்போது வடக்கில் தலைதூக்கியது என்பது இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. ஏன், தெற்கில் பாதாள உலகம் மற்றும் இவர் சொல்லும் பிரச்சனைகள் துப்பாக்கிச்சூடுகள் அதிலும் நீதிமன்றத்திற்குள் இல்லையா? ஏன் வடக்கில் மட்டும் இவ்வளவு கரிசனை? ஒரு இராணுவ அதிகாரி, நிர்வாகம் செய்ய முற்பட்டால் கருத்து சொல்ல வெளிக்கிட்டால் இப்படித்தான் இருக்கும். இந்த பிரச்னைகள் சமூகப்பிரச்னைகள். இவற்றை உருவாக்கி, வளர்த்து, சுயநலம், வருமானம் காண்பவர்கள். அரசியல்வாதிகள் மக்களை நல்வழியில் நடத்துவதற்கு பதிலாக இவ்வாறான சமுக சீர்கேடுகளை,இந, மத வன்முறைகளை, முரண்பாடுகளை தூண்டி வயிறு வளர்க்கின்றனர். இதை தீர்க்க வேண்டியது நீதி, சட்ட, காவற்துறை சம்பந்தமானது. சட்டம் எல்லோருக்கும் சமமாக இயற்றப்படவேண்டும், பிரச்சனைகள் நீதிமன்றம்மூலம் நிஞாயமாக தீர்க்கப்பட வேண்டும். அதை விட்டு ஆயுதம் தூக்க தூண்டக்கூடாது, அடக்குமுறை செயற்படுத்தக்கூடாது.

4 hours ago, கிருபன் said:

சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கு இல்லை என்பதை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.”

உண்மை, அந்த நாடுகள்போல் இங்கு சட்டங்கள் இல்லை, நீதி இல்லை, நாட்டு நலன் இல்லை, அரசியல் இல்லை, அரசியல்வாதிகள் இல்லை, எங்கே பிரச்சனையின் ஆரம்பம் என அடையாளம் காண முடியவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள தைரியம் இல்லை இவருக்கு. எல்லாவற்றையும் ஆயுதத்தாலும் அதிகாரத்தாலும் அடக்கிவிடலாமென நினைக்கிறார். அதனால் துரத்தப்பட்டவர்களை கண்டும் விளங்கிக்கொள்ளும் அறிவு இல்லை அல்லது தானும் மாட்டுப்பட்டு விடுவேன் என்கிற அச்சமோ தெரியவில்லை. இங்கு அது தான் பிரச்சனையே. அது தான் முக்கிய பிரச்சனை. அதை சரி செய்ய யாரும் இல்லை, சரி செய்யவும் விடமாட்டார்கள். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. அதுவே இப்போ பெரிய கள்ளர், கொலைகாரருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. இவருக்கு நாமல் போன்றவர்களுக்கு ஜனாதிபதி ஆசை அடங்கும் வரை இது தொடரும். குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலாவும்வரை இந்த நப்பாசை இருந்துகொண்டே இருக்கும். ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போதுவிண்ணப்பதாரியின் நன்னடத்தை நற்சான்றிதழ் பரிசோதிக்கப்படுகிறது. வெளிநாட்டுக்கு குடியேற விரும்புவோருக்கும் அவ்வாறான நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஆனால் ஒரு நாட்டை ஆளும் தலைவர்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ இது நடைமுறையில்லிலை. இந்த நாட்டில், பாராளுமன்றத்தில் இருப்பதெல்லாம் வடித்தெடுத்த கள்ளர், கொலை கொள்ளை, பொறுக்கி, போதைப்பொருள் கடத்திகள். நாடு எப்படி உருப்படும்? அனுர இப்படியானவர்களை தண்டித்து இப்டிப்பட்டவர்கள் அரசியலில் ஈடுபட தடைச் சட்டம் கொண்டுவரவேண்டும்.

Just now, Sasi_varnam said:

உன்னைப்போல ஒரு புண்ணாக்கு புழுத்திக்கும் வாக்கு போடச்சொல்லி தமிழ் அரசியல் செய்த கூட்டம் ஒன்றும் இருக்கு!!!

நாளைக்கு இவர் தேர்தலில் நின்றாலும், தமிழர் வாக்கை இவருக்காக சேகரிக்க ஒரு கூட்டம் முண்டியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

உன்னைப்போல ஒரு புண்ணாக்கு புழுத்திக்கும் வாக்கு போடச்சொல்லி தமிழ் அரசியல் செய்த கூட்டம் ஒன்றும் இருக்கு!!!

உண்மை, ஆனால் அந்தக்கூட்டத்துக்குத் தாம் படித்தவர்கள் என்று கூறியவாறு ஆலவட்டம் பிடிக்கிறதுக்கும் ஒரு கூட்டமிருப்பதுதான் வெட்கக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர். ஒரு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோர் அவ்வாறு இருக்கலாம்.

அதேபோல புலிகளை ஆசிர்வதித்த அரசியல்வாதிகள் உள்ளனர். புலிகளை மீள் எழுச்சி பெற வைப்பதற்கு முற்படும் டயஸ்போரா குழுவொன்றும் உள்ளது.

நாம் எப்போதும் நம் தரப்பு நியாயங்களையே சிந்திக்கிறோம், பேசுகிறோம். மற்றைய தரப்பின் உணர்வுகள், கோணங்கள் எங்களுக்குத் தேவையில்லாதவை.

போர் முடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் சிலரிடம் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இதைத்தான் முன்னால் இராணுவத் தளபதி பொன்சேகாவினதுடனான நேர்காணல் சொல்கிறது. “இன்னுமொரு எழுச்சி ஏற்படக்கூடாதுஎன்பதே அவரது எச்சரிக்கை. இதை நாம் பெரிதாக ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? பாதுகாப்பு என்பது எல்லா நாடுகளுக்கும் முக்கியமான விஷயம். இலங்கை விதிவிலக்காக இருக்க முடியாது.

நான் யேர்மனிக்கு வந்தபோது இரண்டாம் உலகப்போர் முடிந்து 28 ஆண்டுகள் கடந்திருந்தன. ஆனாலும் யேர்மனியிலேயே அமெரிக்க இராணுவத் தளங்கள் இருந்தன. அந்தப் போர் முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்க இராணுவம் விலகியது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரானது, பெரிய அளவில் இராணுவத்தை எங்கள் நிலத்துக்குள் கொண்டு வந்து விட்டது. போரில் தோற்றோம். இன்னும் காணாமல் போனவர்களைத் தேடி அலைகிறோம். இறந்தவர்களின் எண்ணிக்கையே உறுதியாக தெரியாத நிலை. புதைக்குழிகளைத் தேடி தோண்டுகிறோம், எண்ணுகிறோம்.

ஒரு கேள்வி எழுகிறதுபோருக்கு முன்னர் எங்கள் நிலத்தில் இராணுவம் இல்லையா? இருந்தது. தென் இந்தியக் குடியேற்றங்களையும், கடத்தலையும் தடுக்கவே ஏற்கனவே தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனையிரவில் இறங்கி ஏற வேண்டியிருந்தது.

நான் யேர்மனியில் வாழ்கிறேன். எனவே இங்குள்ள நிலையை நன்கு அறிகிறேன். யேர்மனியில் விடுதலைப் புலிகள்தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புஎன யேர்மனிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு அவர்கள்  ‘விடுதலைப் புலிகள்பெயரில் செயல்படவே முடியாது. இருந்தாலும் கல்வி அமைப்புகள், சமூக அமைப்புகள், சமையப் பின்ணணிகளில் செயல்படலாம். ஆனாலும்  யேர்மனிய அரசின்க ண்காணிப்பு இந்தச் செயற்பாட்டாளர்கள் மீது எப்போதும் இருக்கும். இவர்கள் யாருக்கும் இங்கே தீங்கு விளைவிக்கப்போவதில்லை என்பதால், யேர்மனிய அரசும் பேசாமல் இருக்கின்றது. இலங்கையில் இருந்து சில தலைவர்கள் வந்தால், கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யலாம். மாவீரர் தினம் நடத்தலாம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். ஆனால் அதைவிட எதுவும் செய்யக்கூடிய நிலை யேர்மனியில் இல்லை. இந்தச் சுற்று வட்டத்தின் உள்ளேயே அவர்கள் சுழன்று கொண்டிருக்க வேண்டியதுதான் இன்றைய நிலை. விடுதலைப் புலிகள்  பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்படதென்றால் அதன் கொடியும் தடை செய்யப்பட்டதுதான். இது யேர்மனியருக்கு நன்கு தெரியும். அந்தக் கொடியை பிடித்து ஆர்ப்பாடம் செய்தால் அது  நாட்டில் இருந்து வரும் தலைவருக்கு நல்லதாகவே அமையுமே தவிர, எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை.

அடுத்தவனை கேவலமாகப் பேசுவதும், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் எப்போதும் உயர்வைத் தந்துவிடாது.

கடைசியாக, ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம், இனி விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் மனப்பாங்கு மக்களிடையே இல்லை. வெற்றி என்பது ஆயுதத்தின் வழியாகவே சாத்தியமெனும் நம்பிக்கையும்  அங்கிருப்பவர்களிடம் இல்லை.

பொன்சேகா பேச்சில் அலட்டிக் கொள்ள எதுவுமேயில்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

நாம் எப்போதும் நம் தரப்பு நியாயங்களையே சிந்திக்கிறோம், பேசுகிறோம். மற்றைய தரப்பின் உணர்வுகள், கோணங்கள் எங்களுக்குத் தேவையில்லாதவை.

போர் முடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் சிலரிடம் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இதைத்தான் முன்னால் இராணுவத் தளபதி பொன்சேகாவினதுடனான நேர்காணல் சொல்கிறது. “இன்னுமொரு எழுச்சி ஏற்படக்கூடாதுஎன்பதே அவரது எச்சரிக்கை. இதை நாம் பெரிதாக ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? பாதுகாப்பு என்பது எல்லா நாடுகளுக்கும் முக்கியமான விஷயம். இலங்கை விதிவிலக்காக இருக்க முடியாது.

நான் யேர்மனிக்கு வந்தபோது இரண்டாம் உலகப்போர் முடிந்து 28 ஆண்டுகள் கடந்திருந்தன. ஆனாலும் யேர்மனியிலேயே அமெரிக்க இராணுவத் தளங்கள் இருந்தன. அந்தப் போர் முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்க இராணுவம் விலகியது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரானது, பெரிய அளவில் இராணுவத்தை எங்கள் நிலத்துக்குள் கொண்டு வந்து விட்டது. போரில் தோற்றோம். இன்னும் காணாமல் போனவர்களைத் தேடி அலைகிறோம். இறந்தவர்களின் எண்ணிக்கையே உறுதியாக தெரியாத நிலை. புதைக்குழிகளைத் தேடி தோண்டுகிறோம், எண்ணுகிறோம்.

ஒரு கேள்வி எழுகிறதுபோருக்கு முன்னர் எங்கள் நிலத்தில் இராணுவம் இல்லையா? இருந்தது. தென் இந்தியக் குடியேற்றங்களையும், கடத்தலையும் தடுக்கவே ஏற்கனவே தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனையிரவில் இறங்கி ஏற வேண்டியிருந்தது.

நான் யேர்மனியில் வாழ்கிறேன். எனவே இங்குள்ள நிலையை நன்கு அறிகிறேன். யேர்மனியில் விடுதலைப் புலிகள்தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புஎன யேர்மனிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு அவர்கள்  ‘விடுதலைப் புலிகள்பெயரில் செயல்படவே முடியாது. இருந்தாலும் கல்வி அமைப்புகள், சமூக அமைப்புகள், சமையப் பின்ணணிகளில் செயல்படலாம். ஆனாலும்  யேர்மனிய அரசின்க ண்காணிப்பு இந்தச் செயற்பாட்டாளர்கள் மீது எப்போதும் இருக்கும். இவர்கள் யாருக்கும் இங்கே தீங்கு விளைவிக்கப்போவதில்லை என்பதால், யேர்மனிய அரசும் பேசாமல் இருக்கின்றது. இலங்கையில் இருந்து சில தலைவர்கள் வந்தால், கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யலாம். மாவீரர் தினம் நடத்தலாம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். ஆனால் அதைவிட எதுவும் செய்யக்கூடிய நிலை யேர்மனியில் இல்லை. இந்தச் சுற்று வட்டத்தின் உள்ளேயே அவர்கள் சுழன்று கொண்டிருக்க வேண்டியதுதான் இன்றைய நிலை. விடுதலைப் புலிகள்  பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்படதென்றால் அதன் கொடியும் தடை செய்யப்பட்டதுதான். இது யேர்மனியருக்கு நன்கு தெரியும். அந்தக் கொடியை பிடித்து ஆர்ப்பாடம் செய்தால் அது  நாட்டில் இருந்து வரும் தலைவருக்கு நல்லதாகவே அமையுமே தவிர, எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை.

அடுத்தவனை கேவலமாகப் பேசுவதும், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் எப்போதும் உயர்வைத் தந்துவிடாது.

கடைசியாக, ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம், இனி விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் மனப்பாங்கு மக்களிடையே இல்லை. வெற்றி என்பது ஆயுதத்தின் வழியாகவே சாத்தியமெனும் நம்பிக்கையும்  அங்கிருப்பவர்களிடம் இல்லை.

பொன்சேகா பேச்சில் அலட்டிக் கொள்ள எதுவுமேயில்லை

நான் சிந்திக்காத கோணங்களை விளங்கபடுத்தி இருக்கின்றீர்கள் நன்றி அய்யா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரிக்கு மட்டுமே தெரியும் தன் எதிரியின் பலம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.