Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22 AUG, 2025 | 04:17 PM

image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

“மலையக தமிழ் மக்கள்” என்ற சொற்பதத்தை சட்ட ஆவணங்களில் உள்ளடக்க தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் மலையக தமிழ் மக்கள் என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (22)  நடைபெற்ற  அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு  பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மலையக மக்கள் பிரத்தியேக கலாச்சாரங்களை கொண்ட மக்கள்  என்று ஏற்றுக் கொண்டுள்ளோம். அது எங்களின் கொள்கையாகும். ஹட்டன் பிரகடனத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி அந்த மக்கள் மலையக தமிழ் மக்கள் என்று இன்றைய பிரேரணையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் அவ்வாறு இந்த மக்களை அழைப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அடுத்ததாக சட்ட ஆவணங்களிலும் இந்த வசனம் உள்ளடக்கப்பட வேண்டும். இதற்காக சில சட்டத்திருத்தங்களை  மேற்கொள்ளவுள்ளோம். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் இந்த வசனத்தை பயன்படுத்த தேவையான சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம்.  சில தரப்பினர் இணங்காமல் இருந்தாலும் அவர்களையும் இணங்கச் செய்து அதனை செய்வோம்.

மலையக மக்கள் இலங்கையர்களே. அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் உரிமைளை பாதுகாக்க வேண்டியது எங்களின் பொறுப்பாகும். அவர்களுக்கென காணிகள்,வீடுகள் இருக்க வேண்டும். அத்துடன் சிறந்த கல்வி மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும். அதன்படியே ஹட்டன் பிரகடனத்தை நாங்கள் முன்வைத்தோம். இவர்களே இந்த நாட்டில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/223118

  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2025 at 17:54, ஏராளன் said:

“மலையக தமிழ் மக்கள்” என்ற சொற்பதத்தை சட்ட ஆவணங்களில் உள்ளடக்க தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

பச்சை இனவாதிகளின் கைகளில் அரசு. வட-கிழக்கைப் பிரிப்பதில் முன்னின்ற இனவாதிகளில் ஒருவரான இவர் ஈழத்தமிழரையும் மலையகத் தமிழரையும் வெவ்வேறான அடையாளப்படுத்தலுள் கொண்டு வருவதன் ஊடாகத் தமிழினத்தை மேலும் பலவீனப்படுத்தும் நயவஞ்சக நோக்கமாகும். மலையகத் தமிழர் என்ற அடையாளப்படுத்தல் தேவையாயின் ஏனைய தமிழர்களையும் இலங்கைத் தமிழர் அல்லது ஈழத்தமிழர் என்று ஆவணங்களிற் குறிப்பிடவும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள முடியுமா? முன்பு இலங்கைத் தமிழர் என்ற பதம் பாவனையில் இருந்தது என்பதை இவர் அறியாதிருக்கமாட்டார்தானே.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22/8/2025 at 17:54, ஏராளன் said:

“மலையக தமிழ் மக்கள்” என்ற சொற்பதத்தை சட்ட ஆவணங்களில் உள்ளடக்க தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் மலையக தமிழ் மக்கள் என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

முதலில் மலையக மக்களின் வாழ்வாதாரங்களை சீர் செய்யுங்கள்.வீட்டு வசதிகளை செய்து கொடுங்கள். அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை கொடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது மலையகத் தமிழர்களுக்கு நன்மையாகவும் முடியலாம், தீமையாகவும் முடியலாம். இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தான் பெரும்பாலான உத்தியோக பூர்வ ஆவணங்களின் மூல ஆவணமாக இருக்கிறது. பிறப்புச் சான்றிதழின் "பெற்றோரின் இனம்" என்ற அடையாளத்தில் முன்னர் "சிலோன் தமிழ்" என்றும், பின்னர் "சிறிலங்காத் தமிழ்" என்றும் வடக்கு கிழக்குத் தமிழர்களைக் குறிக்கும் வழமை இருந்தது. அந்த வேளையில் "இந்தியத் தமிழர்" என்ற அடையாளம் மலையகத் தமிழர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது என நினைக்கிறேன். "இந்தியத் தமிழர்" என்ற அடையாளம், அந்த மக்களை வேலைவாய்ப்பு உட்பட்ட பல விடயங்களில் ஒதுக்கி வைக்கக் காரணமாக இருந்திருக்கிறது.

2020 இல் பெற்றோரின் இனம், மதம் ஆகிய தகவல்களை நீக்கி "சிறிலங்காப் பிரஜை" என்ற ஒற்றை அடையாளத்தை பிறப்புச் சான்றிதழில் கொண்டு வர முயன்ற போது விமல் வீரவன்ச உட்பட்ட பல இனவாதிகளின் எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப் பட்டது. தற்போது வழமை போல சிறிலங்காத் தமிழர், சிங்களவர், மூர், என்ற அடையாளங்களோடு "மலையகத் தமிழர்" என்ற அடையாளமும் சேர்க்கப் படுகிறதென நினைக்கிறேன்.

6 hours ago, nochchi said:

மலையகத் தமிழர் என்ற அடையாளப்படுத்தல் தேவையாயின் ஏனைய தமிழர்களையும் இலங்கைத் தமிழர் அல்லது ஈழத்தமிழர் என்று ஆவணங்களிற் குறிப்பிடவும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள முடியுமா? முன்பு இலங்கைத் தமிழர் என்ற பதம் பாவனையில் இருந்தது என்பதை இவர் அறியாதிருக்கமாட்டார்தானே.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

நொச்சி,

என் பிறப்புச் சான்றிதழில் இலங்கைத் தமிழர் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்து வடக்கு கிழக்கில் பிறந்த தமிழர்களை இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்கள் என இந்திய வம்சாவளித் தமிழர்களை குறிப்பிடும் விடயத்தில் எனக்கு மகிழ்ச்சியே. அவர்கள் சக தமிழ் மொழி பேசினாலும், தனித்த பல கலாச்சார, வழிபாடு மற்றும் பண்பாட்டு முறைகளைக் கொண்டவர்கள். ஹட்டன், நுவரேலியா, புசலாவ பகுதிகளிற்கு சென்று வாழ்ந்து பார்த்தவர்களுக்கு இது புரியும்,

அத்துடன் இவர்களை வடக்கு தமிழர்கள், முக்கியமாக யாழ்ப்பாணத் தமிழர்களில் பலர் சக தமிழர்களாக பார்ப்பது கிடையாது என்பது நேர்மையுள்ள சக யாழ்பாணிகளும் ஏற்றுக் கொள்வர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.