Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார்.

படுகாயம்டைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

https://adaderanatamil.lk/news/cmgb1vtva00soqplpq3rp82y3

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாணவி விளையாட்டுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்று இருந்தால்… மற்றைய மாணவிகள் அவரை பாராட்டி இருப்பது தான், நல்ல ஒரு பண்பாக இருந்திருக்கும்.

அதனை விடுத்து எரிச்சல், பொறாண்மை பட்டு… வெற்றி பெற்ற மாணவியை ஒதுக்கி வைத்தது எவ்விதத்திலும் நியாயம் அல்ல.

இந்தப் பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுத்து தற்கொலை வரை செல்ல முன்…. பாடசாலை அதிபரும், ஆசிரியர்களும், பெற்றோரும் அந்த மாணவிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்த அவசரகதியில் முன்வர வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சக மாணவிகள் விலகி இருந்தனரா? அல்லது bullying செய்தனரா என்றும் விசாரிக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் பெருமையும் திமிரும் பிடித்தவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நன்றாகப் படித்தால், விளையாட்டுக்களில் முன்னிலையில் இருந்தால் அல்லது பெரிய பதவிகளில் இருந்தால் (அமைச்சர் சந்திரசேகர், யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ) பொறாமை கொள்ளுவது காலம் காலமாக இருந்துவருகின்றது. இப்படியான ஊத்தைப் பழக்கங்களை பாடசாலையில் வளரவிடக்கூடாது.

பாதிக்கப்பட்ட மாணவி மனதைரியத்தை வளர்த்து, மீண்டும் நலமாகி ஓட்டத்தில் முதலாவதாக வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சக மாணவிகள் விலகி இருந்தனரா? அல்லது bullying செய்தனரா என்றும் விசாரிக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் பெருமையும் திமிரும் பிடித்தவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நன்றாகப் படித்தால், விளையாட்டுக்களில் முன்னிலையில் இருந்தால் அல்லது பெரிய பதவிகளில் இருந்தால் (அமைச்சர் சந்திரசேகர், யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ) பொறாமை கொள்ளுவது காலம் காலமாக இருந்துவருகின்றது. இப்படியான ஊத்தைப் பழக்கங்களை பாடசாலையில் வளரவிடக்கூடாது.

பாதிக்கப்பட்ட மாணவி மனதைரியத்தை வளர்த்து, மீண்டும் நலமாகி ஓட்டத்தில் முதலாவதாக வரவேண்டும்.

இந்த கெட்ட பழக்கம் புலம்பெயர் தேசம்களிலும் தொடர்வது எமது இனத்தின் சாபகேடு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சக மாணவிகள் விலகி இருந்தனரா? அல்லது bullying செய்தனரா என்றும் விசாரிக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் பெருமையும் திமிரும் பிடித்தவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நன்றாகப் படித்தால், விளையாட்டுக்களில் முன்னிலையில் இருந்தால் அல்லது பெரிய பதவிகளில் இருந்தால் (அமைச்சர் சந்திரசேகர், யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ) பொறாமை கொள்ளுவது காலம் காலமாக இருந்துவருகின்றது. இப்படியான ஊத்தைப் பழக்கங்களை பாடசாலையில் வளரவிடக்கூடாது.

பாதிக்கப்பட்ட மாணவி மனதைரியத்தை வளர்த்து, மீண்டும் நலமாகி ஓட்டத்தில் முதலாவதாக வரவேண்டும்.

இதன் வேர் சாதி என்று நான் நினைக்கிறேன்.

மாணவ மாணவிகள் விளையாட்டின் ஊடாக மனவுறுதி மற்றும் வெற்றி தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் பெறுவார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களை அரவணைத்து ஊக்குவிப்பவர்களாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாணவி கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாற்போல் இருக்கிறது ......... இதற்காக அவரை ஒதுக்கி வைத்த மாணவிகள் தான் வெட்கப்பட வேண்டும் . .........!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பெருமாள் said:

இந்த கெட்ட பழக்கம் புலம்பெயர் தேசம்களிலும் தொடர்வது எமது இனத்தின் சாபகேடு .

புலம்பெயர் தேசங்களில் இன்றும் மணமகன் மணகள் இன்ன இன்ன சாதி என்று குறிப்பிட்டுத்தான் வரன் தேடுகின்றார்கள். நாகரீகமடைந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளே இந்த மனநிலையில் இருக்கும் போது......அந்த மண்வாசனை சும்மா விடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி தவறான முடிவு எடுத்துள்ளார். அவருக்கு தகுந்த அறிவுரை, அத்துடன், தேவையான ஆதரவு, உதவி கொடுக்க வேண்டும். சாதி, சமூக பிரச்சனைகளை இதற்குள் இழுக்கத்தேவை இல்லையே? பழிவாங்கும் மனநிலையும் மாடியில் இருந்து குதிக்க காரணமாக அமையலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பெருமை திமிர் சாதி பார்க்கும் ஊத்தைப் பழக்கங்கள் ஒழிய வேண்டும்.

அரசும் மற்றய இடங்களில் நல்ல கல்வி கற்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

17 hours ago, ஏராளன் said:

முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

14 வயது நல்லது கெட்டதைச்சீர்தூக்கிப் பார்க்கத் தெரியாத வயது.மேலும் குறித்த மாணவி கடந்த ஒருவருட காலம்தான் குறித்த பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படிக்கிறார்.இயல்பாக பழகுவதற்கு இந்தக் காலம் போதுமானதாக இல்லீமல் இருக்கலாம்.பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்து குறித்த மாணவி முதலிடம் பெற்றது நெடுங்காலம் ஒன்றாகப் பழகிய மாணவிகளிடத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையை தோற்றுவித்திருக்கலாம்.அதனால் அவர்கள் அந்த மாணவியை புறமொதுக்கி இருக்கலாம்.காலப்போக்கில் அவர்கள் சேர்ந்து நல்ல நணபர்களாக கூடிய வாய்ப்பு இருந்தது.தனிமைப்படுத்தப்பட்டதில் அந்த மாணவி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம்.காலம் காயங்களை ஆற்றியிருக்கும்.மாணவி அவரசரப்பட்டு விட்டார்.காரணம் வயது.யார்நம்மை புறக்கணித்தார்களோ அவர்கள் முன்னால் புறக்கணிக்க முடியாத சக்தியாக வளர்ச்சியடைந்து நிற்பதே தேவையானது.தேவையானது.உளவளக்கல்வி.விளையாட்டு உளவளத்தை சீராக்கும் என்பார்கள்.ஆனால் அந்த விளையாட்டே இங்கு வினையாகி இருக்கிறது.தோல்வி என்றும்நிலையானதல்ல என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.