Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானிய தகவல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

_41115137_newerblair203.jpg_41115261_blair_cherie203.jpg

கடிக்குறீங்க தமிழினி.

தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி தொழிற்கட்சி 653 ஆசனங்களை வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 646 தொகுதிகளில் இதுவரை 619 முடிவுகள் வெளியாகி விட்டன. இதனுடன் தொழிற்கட்சி தொடர்ச்சியாக 3வது முறை நாட்டை ஆள்வது குறிப்பிடத்தக்கது.

தொழிற்கட்சி இந்த தேர்தலில் வென்ற போதிலும் ஈராக் விவகாரம் காரணமாக அதன் ஆதரவு குறைந்திருக்கின்றது. கடந்த முறை 167 பெரும்பான்மை ஆசனங்களை வைத்திருந்த தொழிற்கட்சிக்கு இம்முறை 60 பெரும்பான்மை ஆசனங்களே கிடைக்கும்

  • Replies 232
  • Views 25.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே தொழிட்கட்சி போனால் அடுத்த எலக்ஸனில ரீபிசி ராமராஜனண்ட கட்சி தான் வெல்லும் பாருங்க.. (ஜோவ்வ் நான் சொன்னதை தப்பா நினைச்சுபோடாதேங்கப்பா நான் சொன்னது.. நாட்டு எலக்ஸன் இல்லப்பா.. காமெடி எலக்ஸனில வெல்லும் எண்டு சொல்லவந்தன்) :D :|

  • தொடங்கியவர்

பிரிட்டன் பொதுத்தேர்தல்: டோனி பிளேர் வெற்றி

_41114647_cb.jpg

லண்டன், மே 7: பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக லேபர் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

மீண்டும் பிரதமர் பதவியில் அமர்கிறார் டோனி பிளேர்.

இதற்கு முன்பு கன்சர்வேடிவ் கட்சியின் மார்கரெட் தாட்சர் மட்டுமே மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 645. ஆட்சி அமைக்க 324 இடங்கள் தேவை. ஆனால் அதற்கு அதிகமான இடங்களை லேபர் கட்சி வென்றுள்ளது.

வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இராக் போரில் பிரிட்டன் பங்கேற்றதால் டோனி பிளேருக்கு நாட்டில் பலத்த எதிர்ப்பு காணப்பட்டது. இது அவரது வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என்று கூட ஒரு கருத்து நிலவியது. ஆனால் அஞ்சியபடி அவரது செல்வாக்கு குறையவில்லை. ஆனால் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் லேபர் கட்சிக்கு கிடைத்த பெரும்பான்மை பலம் குறைந்துபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடவை லேபர் கட்சியானது அதிக மெஜாரிட்டியுன் ஆட்சியில் அமரமுடியாது என்பதால், டோனி பிளேர் முழு பதவி காலமும் ஆட்சியில் நீடிப்பாரா என்பது சந்தேகமே.

Dinamani

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை இரண்டு தமிழ் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.

ஒருவர் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்டு 186 வாக்குகளையும் மற்றவர் GREENWICH & WOOLWICH பகுதியில் போட்டியிட்டு 61 வாக்குகளையும் பெற்றுள்ளர்.

இதில் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்ட ரதி அழகரட்ணம் என்பவர் தனக்கு தமிழ் ஊடகங்கள் சந்தர்ப்பம் தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா.. அவங்களின்.. ஒரு பேர்ட்டியை ரீவில பாத்தன். தமிழ் மக்களிற்கு.. ஒன்றும் விளங்கிறதில்லை என்று ஒருக்கா சொன்னவா..?? அவா தானே..?? தமிழை தத்தி தத்தி கதைக்கிற :D:lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

அவதான் என்று நினைக்கின்றேன். துணிந்து ஒரு தமிழ் பெண் தேர்தலில் போட்டியிடுள்ளார். அவரிடம் குறை கண்டு கொள்ளாமல் அவருக்கு ஆதரவாக செயற்படுவதால் ஏதாவது நன்மைகள் ஏற்படுமா....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறை.. சொல்லவில்லை.. உண்மையைச்சொன்னம். தமிழ் பெண்மணி நிக்கிறாவே.. என்ன சொல்லுறா என்று கேட்டம் அப்ப தான்.. சொன்னா.. வெற்றி பெற்றிருக்கிறாவா என்ன.?? எப்படியோ.. நல்லாய் நடந்தால் சரி தான். :mrgreen: :mrgreen: :mrgreen:

face_LAB.gifface_CON.gifface_LD.gif

LAB 355 CON 197 LD 62

324 seats needed to win

இதைவிட இன்னொரு விசயம்...லண்டன் மாநகரில... சில இடங்களில.... தமிழில் மட்டும் பிரச்சாரம் நடந்துதே... ஒலி பெருக்கி மூலம்...(வெள்ளையள் வாழும் இடங்களில் கூட அப்படி ஒன்று நடந்தது தெரியவில்லை...) அதுவும் இறுதிக்கட்டப் பிரச்சாரம்..உங்கள் வாக்குகளை தொழிற்கட்சிக்குப் போடுங்கள்...புகுந்த வீட்டுக்கு இரண்டகம் செய்தாதீர்கள்...இப்படி...எங்கட ஆக்களின்ர இந்தக் குசும்புதான் அருவருப்பை அளிக்கிற விசயம்...கேட்கிற சனம் எல்லாம் முகஞ்சுழிச்சுட்டுப் போச்சுதுகள் (மொழி புரியாமலோ இல்ல பல்லின சமூகம் வாழும் இடத்தில் இவர்கள் செய்யும் இப்படியான சின்னத்தனமான செயல் கண்டோ தெரியல்ல..!) கடைசியில கென்சவேட்டிவ்வுக்குத்தான் லண்டன் மாநாகரம் மதிப்பளிச்சது....!

இதுகள் அவசியமா கொடிகட்டிப் பறக்கும் நம்ம மரியாதைகளுக்கு மத்தியில...அதுக்க சில பேர் தமிழனிர சூத்தையை நோண்டி நோண்டி சர்வதேச தமிழ் சஞ்சிகைகள் விட்டு மகிழீனம்...கள்ளக்காட்டும் அவையே சஞ்சிகையில எழுதுறதும் அவையே போல...அவ்வளவு அச்சொட்டா தாங்க செய்கிறத எழுதுகினம்....கடவுளே இதுகள் எப்ப திருந்திறதா இருக்குதுகளோ...??! :roll: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப மதன் அண்ணா வென்றிட்டார்... வாழ்த்துக்கள் மதன் அண்ணா. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏறத்தாள தொழிற் கட்சியை ஜதேக கட்சிக்கும் கன்சவேட்டிவ் கட்சியை சுதந்திரகட்சிக்கும் ஒப்பிடலாம்.

இது ஒரு சுவாரசியமான ஒப்பீடு. பொரு்ளாதார மற்றும் சமூக விடயங்களில் சுதந்திரக் கட்சி இடதுசாரிப் போக்குக் கொண்டது. ஐதேக வலதுசாரிப் போக்குக் கொண்டது, பிரித்தானியத் தொழிற் கட்சி பாரம்பரியமாக இடது சாரிப் போக்குக் கொண்டிருந்தது. இப்போதைய "நவீன தொழிற்கட்சி" நடுவழிப் பட்டதாக இருந்தாலும், கன்சர்வேடிவ் கட்சியுடன் ஒப்பிடும் போது இடது பக்கம்தான் உள்ளது. அதன்படி பார்த்தால் ஐதேகவையும் கன்சர்வேடிவ் கட்சியையும் தான் ஒரே பக்கத்தில் வைக்க வேண்டும்.

புலத்தில் தமிழர் பொதுவாக இடதுசாரிக் கட்சிகளையே ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் இடதுசாரிக் கட்சிகள் தான் குடிவரவு, அகதிகள் போன்ற விடயங்களில் எங்களுக்குச் சார்பான போக்கைக் கொண்டிருக்கின்றன. உதாரணம் பிரித்தானியாவில் தொழிற்கட்சி, கனடாவில் லிபரல், அல்லது என்.டி.பீ. ஆனால், தமிழர்கள் பொருளாதார, மற்றும் குடிவரவு தவிர்ந்த மற்றைய சமூக விடயங்களில் மிகவும் பாரம்பரிய, வலதுசாரிக் கருத்துகளைக் கொண்டவர்கள் என நினைக்கிறேன். மேற்கத்தைய இடது சாரிக் கட்சிகளின் மற்றைய கொள்கைகளை விழுங்குவதில் தமிழர்களுக்குக் சங்கடமாக இருக்கும் (உதாரணங்கள்்: ஒரினச் சேர்க்கை, பெண் உரிமைகள், கருக் கலைப்பு, கடவுள்).

குடிவரவு, சிறுபான்மையினர் விடயங்களைத் தவிர மற்ற விடயங்கள் முன்னடிக்கு வரும்போது புலத் தமிழர்கள் இடதுசாரிக் கட்சிகள் பக்கமிருந்து வலது சாரிக் கட்சிகளின் பக்கத்துக்குத் தாவும் நிலைமையைக் காணக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • தொடங்கியவர்

அடப்பாவி கவிதன் நான் தேர்தலில் நின்ற மாதிரி சொல்றீங்க. ஏதோ நான் எனது கருத்தை சொன்னன்.

  • தொடங்கியவர்

இந்த தடவை இரண்டு தமிழ் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.

ஒருவர் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்டு 186 வாக்குகளையும் மற்றவர் GREENWICH & WOOLWICH பகுதியில் போட்டியிட்டு 61 வாக்குகளையும் பெற்றுள்ளர்.

இதில் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்ட ரதி அழகரட்ணம் என்பவர் தனக்கு தமிழ் ஊடகங்கள் சந்தர்ப்பம் தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நீங்கள் சொல்லி தான் இப்படி ஒருவர் போட்டியிட்டதே தெரியும். தமிழ் ஊடகங்கள் வாய்ப்பு கொடுத்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் வாங்கு கேட்டு சென்ற மாதிரி தெரியவில்லையே? அது தவர தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார் என்றவுடன் அதை மட்டும் வைத்து அவருக்கு வாக்களிக்க முடியாதே? தற்போதைய நிலையில் ஒரு பெரிய கட்சியுடன் (தொழிற்கட்சி, கன்சவேர்டிவ், லிபரல்) இணைந்து செயற்படுவதே நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மதன் நீங்கள் இப்போது ஏதாவது கட்சியில் சேர்ந்தவுடன் உங்களுக்கு முன்னுரிமை தரமாட்டார்கள். அடுத்து தமிழர்கள் ஓட்டு போட்டுத்தான் மற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது முட்டாள்தனம். ஏனெனில் ஒவ்வெரு தொகுதியிலும் ஆகக் குறைந்தது 15000 வோட்டுக்களை பெற வேண்டும். எனவே தமிழர்களால் மட்டும் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்ய முடியாது. ஆனால் தமிழ் மக்களுடைய வோட்டு பலத்தை ஒற்றுமையை இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தமிழர் போட்டியிட்டு வெளிக் காட்டலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவி கவிதன் நான் தேர்தலில் நின்ற மாதிரி சொல்றீங்க. ஏதோ நான் எனது கருத்தை சொன்னன்.

ம்ம் அப்படி இல்லை அண்டு அக்காட்டை கேட்டன் எங்கை மதன் அண்ணாவை காணலை அவ்வளவா என்று அப்ப தான் சொன்னா, தம்பி அவர் இப்ப தேர்தலில் பிசி கண்டுக்காதைங்கோ என்று. அது தான் இங்கை பார்த்தன் ஒரு வாழ்த்து சொல்வமே என்று உடனை வாழ்த்திட்டன். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மதன் சத்தத்தை காணவில்லை.......?

அதைவிட இன்னொன்றையும் கவனீத்தீர்களா?? தேர்தல் முடிவுகள் வெளிவந்த மே 6 பிளேயரின் பிறந்ததினம். அவருக்கு பிறந்தநாள் பரிசாக மீண்டும் வெற்றி பெற்றிருக்கின்றார்.

:roll: :D :roll: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிளேயருக்கு அழுத்தம் கூடுகிறது. தொழிற் கட்சியில் உள்ள பலருக்கு அவரை தொடர்ந்தும் பிரதமராக அடுத்த 3 வருடங்களுக்கு வைத்திருக்க விருப்பமில்லை.

  • தொடங்கியவர்

தற்போதைய சூழலில் பிளேயர் தனது மூன்றாவது பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருக்கபோவதாக அறிவித்துள்ளார். ஆனால் தொழிற்கட்சியில் பின்வரிசை எம்பிக்களால் அதிகரித்து வரும் அழுத்தம் காரணாமாக அவரால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் பதவி விலகவேண்டி வரலாம். இந்த தேர்தலில் தொழிற்கட்சியின் ஆதரவு 161 மெஜாரிட்டி ஆசனங்களில் இருந்து 67ஆக குறைந்தற்கு பிளேயரும் ஒரு முக்கிய காரணம். பல இடங்களிலும் பிரித்தானிய மக்கள் குறிப்பாக வெள்ளை இனத்தவர் ஒரு பொய்யருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டதை காணகூடியதாக இருந்தது. ஈராக் யுத்தத்தில் பிளேயர் பொய் கூறியதால் தான் தொழிற்கட்சியின் ஆதரவு குறைந்தது என்று தொழிற்கட்சி ஆதரவு பத்திரிகையாக டெய்லி மிரர் தவிர மற்ற பத்திரிகைகள் அனைத்தும் கருத்து கூறி உள்ளன. அடுத்தவருடம் உள்ளூராட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பிளேயர் பதவி விலகி அடுத்த நிலையில் உள்ள Gordon Brownக்கு அதிகாரத்தை அளிப்பது கட்சியை பலப்படுத்த உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இவர் தனது நாற்காலியை வெகுவிரைவில் விட்டுக் கொடுக்க வேண்டும்.......

  • தொடங்கியவர்

இல்லை மதன் நீங்கள் இப்போது ஏதாவது கட்சியில் சேர்ந்தவுடன் உங்களுக்கு முன்னுரிமை தரமாட்டார்கள். அடுத்து தமிழர்கள் ஓட்டு போட்டுத்தான் மற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது முட்டாள்தனம். ஏனெனில் ஒவ்வெரு தொகுதியிலும் ஆகக் குறைந்தது 15000 வோட்டுக்களை பெற வேண்டும். எனவே தமிழர்களால் மட்டும் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்ய முடியாது. ஆனால் தமிழ் மக்களுடைய வோட்டு பலத்தை ஒற்றுமையை இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தமிழர் போட்டியிட்டு வெளிக் காட்டலாம்.

எந்த ஒரு கட்சியிலும் சேர்ந்தவுடன் முன்னுரிமை தர மாட்டார்கள் தான். ஆனால் அதற்காக தனியே சுயேச்சையாக நின்றால் கொஞ்ச ஓட்டுக்களே கிடைப்பதுடன் அதனால் எதனையும் சாதிக்க முடியாது. அதனால் தமிழர்கள் அந்தந்த பகுதி தேசிய கட்சிகளுடன் சேர்ந்து இயங்குவதே நல்லது என்று நினைக்கின்றேன். அவற்றுடன் இணைந்து தமிழர்கள் பணியாற்றி எதிர்காலத்தில் வேட்பாளராக கூட வரலாம் அப்படி வராமல் போனால் கூட தொகுதி எம்பிக்களுடன் இணக்கமாக வேலை செய்து நம்து தேவைகளை பிரைச்சனைகளை புரியவைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தெரியுமா LEWISHAM பகுதியில் சின்னத்தம்பி என்பவர் 41 வருடங்களாக தொழிற் கட்சியுடன் இருந்து பல வேலைத்திட்டங்களை கட்சிக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெற்றிகரமாக செய்து முடித்தவர். ஆனால் அவருக்கு தொழிற்கட்சி முன்னுரிமை வழங்கவில்லை . பின்னர் அவர் கட்சி மறிய போது அந்த கட்சி LEWISHAM பகுதி நியமன MAYOR ஆக பதவியில் இருத்தியது. 41 வருட சேவையில் தொழிற்கட்சி அவருக்கு கொடுத்தது என்ன...?

  • தொடங்கியவர்

சின்னத்தம்பி குறித்து அறிந்திருக்கின்றேன், அவர் எந்த கட்சிக்கு மாறினார் கிறீன் பார்டிக்கா? தொழிற்கட்சி அவருக்கு என்ன செய்திருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித் தான் நினைக்கிறேன்.....

மற்ற கட்சியினர் கொடுத்த பதவியை இவர்கள் கொடுத்திருக்கலாம் தானே.....?

  • தொடங்கியவர்

அவர் குறித்து கொஞ்சம் கேள்விபட்டிருக்கின்றேன் எது உண்மை எது பொய் தெரியாது. கிரீன் பார்ட்டி மூலம் லூசியம் பகுதி மேயரானார் என்று அறிந்தேன். அவர் அத்தனை வருடங்கள் சேவை செய்திருந்தால் நிச்சயம் பதவி கொடுத்திருக்கதான் வேண்டும். அந்த சமயத்தில் அவருக்கு மேல் இன்னும் சில பெரிய தலைகள் லூசியம் பகுதியில் இருந்தார்களோ தெரியவில்லை, அப்படி இருந்திருந்தால் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்திருக்காது. இன்னொரு கட்சியில் அந்த அளவிற்கு பிரபல்யமானவர்கள் இல்லாத நிலையில் யாராவது ஒரு பிரபல்யமானவர்கள் போய் சேர்ந்தால் உடன் பதவி கொடுப்பார்கள். இது அனைத்து இடத்திலும் நடப்பது தான்.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியில் யாழ் மாவட்டத்தில் பெரிதாக யாரும் இல்லாத நிலையில் சேந்து கொஞ்ச காலத்திலேயே மகேஸ்வரன் எம்பியாகி அமைச்சராகவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலும் இங்கத்தய அரசியலும் ஒன்றா...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.