Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒடியற்கூழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியற்கூழ்

ஒடியற்கூழ் இலங்கையின் வடபுலத்தில் மிகவும் பிரபலமான உணவு ஆகும். ஒடியற்கூழைப் பற்றி பல நாட்டார் பாடல்களும் அங்குள்ளது.

தேவையானப் பொருட்கள்

ஒடியல்மா - 1/4 கப்

வெட்டிய பயத்தங்காய் - 1/4 கப்

வெட்டிய பலாக்காய் - 1/4 கப்

வெட்டிய பலாக்கொட்டை - 1/4 கப்

வெட்டிய உள்ளி - 1 மேசைக்கரண்டி

கீரை - 1/4 கப்

வேறு வெட்டிய மரக்கறிகள் - 1/4 கப் (கரட், மரவள்ளி, கோஸ், பூசணி)

கறித்தூள் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

புளி - நெல்லிக்காயளவு

தேங்காய்ச்சொட்டு - 3 மேசைக்கரண்டி

வறுத்த பயத்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி

உப்பு

தண்ணீர்

செய்முறை

புளியை கரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 2 - 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் வெட்டிய மரக்கறிகள், கீரை, தேங்காய்ச்சொட்டு, பயத்தம்பருப்பு சேர்த்து மூடி அவிய விடவும்.

மரக்கறிகள் அவிந்ததும் உள்ளி, உப்பு, புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் ஒடியல்மாவை 1/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும்.

மா வெந்து கூழ் தடிப்பானதும் இறக்கவும்.

சுவையான ஒடியற்கூழ் தயார். சூடாக பரிமாறவும்.

குறிப்பு:

இதற்கு பயத்தங்காய், பலாக்கொட்டை, பலாக்காய் கட்டாயம் சேர்க்க வேண்டும். அப்போதுதான் கூழ் சுவையாக இருக்கும்.

வழங்கியவர்

Mrs. B. Narmatha

எனக்கு ஒடியற்கூழ் வேண்டும் யாரும் செய்து தாறீங்களோ :wub: ??நுணா அண்ணா எப்ப வீட்டை செய்யிறதா உத்தேசம் அப்ப பேபிக்கும் கொஞ்சம் அனுப்பிவிடுங்கோ!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் ஜம்மு எப்ப பார்த்தாலும் மற்றவையிட்டை கேட்டுக்கொன்டு. :wub: ஒருக்கா உங்கள் செல்லக்கையால செய்து எல்லாருக்கும் தரலாமே :wub:

அது சரி ஒடியல் கூழுக்கு பயத்தம் பருப்பு போடுறதா கேள்விப்படல.அப்படிப்போட்டா

பின்னே நான் பேபி தானே சகிவன் தாத்தா எனக்கு எப்படி சமைக்க தெரியும் :wub: சரி சரி நீங்களே எனக்கு கூழ் செய்து தாங்கோ தாத்தா :wub: !!செல்லக்கையால செய்து தரலாம் தான் நெருப்பு சுட்டு போச்சு என்றா பாவம் தானே பேபி :lol: அத்தோட பேபியின் கூழை குடிக்கிற ஆட்களின் நிலைமையை யோசித்து பார்தாலே பாவமா இருக்கு :lol: வேண்டாம் சகிவன் தாத்தா சோ நீங்களே செய்து எல்லாருக்கும் கொடுங்கோ எனக்கு கூட தரவேண்டும் சொல்லிட்டேன்!! :lol:

கண்ணால தண்ணி வந்தா தான் ஒடியற்கூழா தாத்தா இது நேக்கு இப்ப தான் தெரியும் :D ...........ஆனா நீங்க செய்யிற கூழில பேபியின் கண்ணீர் இருந்து ஒரு சொட்டு கண்ணீரும் வராத மாதிரி செய்ய வேண்டும் கூழை சரியோ!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வேறு வெட்டிய மரக்கறிகள் - 1/4 கப் (கரட், மரவள்ளி, கோஸ், பூசணி)

கரட், பூசனிக்காய் போட்டால் சாம்பாரு மாதிரி வந்திடும். பலாக்கொட்டை மற்றும் மரவள்ளிக்கிழங்கை கூட கரைய அவிய விடக்கூடாது.

கறித்தூள் - 2 மேசைக்கரண்டி

கறித்தூள் போட்டால் நல்லா இருக்காது. 10-15 நல்ல செத்தல் மிளகாயை தண்ணியிலை ஊற விட்டுட்டு அரைச்சு போட்டால் தான் கூழ் மாதிரி இருக்கும். :)

பழப்புளியும் நெல்லிக்காயளவு காணாது.

சபேஷ் மாமா வீட்டை கிச்சின் டீயூட்டி உங்களின்ட போல இருக்கு :lol: ............சும்மா சொல்ல கூடாது அந்த மாதிரி சமையல் சொல்லி தாறியள் :lol: !!இப்ப என்ன சொல்ல வாரேன் என்றா பேபிக்கு உங்களின்ட கையால சமைத்து தரலாம் அல்லோ மாமோய்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷ் மாமா வீட்டை கிச்சின் டீயூட்டி உங்களின்ட போல இருக்கு :( ............

அதை ஞாபகப்படுத்தி ஏன் கடுப்பேத்திறிங்கள்? :unsure: இப்ப அந்த பக்கம் போறதில்லை. :lol: ஆனால் தெரிந்து வைத்திருப்பது நல்லது என்பதை அனுபவமூடாக அறிந்தேன். ஒரு முறை ஆடிப்பிறப்பிற்கு ஆடிக்கூள் காய்ச்சுவதாக மனைவி சொன்னார். எனக்கு எப்படி காய்ச்சுது என தெரியுமோ என கேட்க்க நானும் ஏன் மாட்டுபடுவான் எண்டுட்டு தெரியாதெண்டு சொன்னேன். அவாவும் தனக்கு தெரிந்தவர்களிடம் செய்முறை கேட்டு அறிந்ததாக சொன்னார். நானும் சரியெண்டு பனங்கட்டி எல்லாம் வாங்கிகுடுத்திட்டு தெரியாத மாதிரி "என்னண்டு செய்யிறதாம்" எண்டு கேக்க அரிசியை மாவாக்க வேணும் என சொன்னார் நானும் இருக்கமாட்டாமல் ஆகலும் மாவாக்க கூடாது கெஞ்சம் குறுணலா இருக்க வேணும் என சொல்ல மனைவி கேட்டு அப்ப உங்களுக்கு செய்ய தெரியுமோ எண்டு. நானும் பிடி குடுக்காமல் என்னண்டு செய்ய தெரியாது ஆனால் என்ன என்ன போட வேணும் எண்டு சொன்னேன். அதுக்கு பிறகு தான் சொன்னா "எனக்கு தெரியாதெண்ட படியால் சும்மா அரிசமாவை கரைச்சு கொதிக்க வைத்து அதுற்க்குள் பனங்கட்டியை போட்டு தர இருந்ததாக". அதுக்கப்புறம் தான் யோசிச்சேன் சமையல் தெரியாமல் இருந்தால் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என. மனைவியே இப்படியென்றால்.... அதுக்கப்புறம் என்ன என்ன போட வேணும் என சொல்ல, அப்படித்தான் செய்முறை தந்தவை என அவாவே ஒத்தகொண்டு சரியான முறையில் ஆடிக்கூழ் வந்தது. இப்போது சமையல் செய்முறைகளில் பம்மாத்து விட கொஞ்சம் யோசிப்பா. நாமளும் சிலதுகள் தெரியாவிடினும் தெரிந்த மாதிரி கதைத்து நம்மளை பாதுகாத்துபோம். :(

சும்மா சொல்ல கூடாது அந்த மாதிரி சமையல் சொல்லி தாறியள் :D !!இப்ப என்ன சொல்ல வாரேன் என்றா பேபிக்கு உங்களின்ட கையால சமைத்து தரலாம் அல்லோ மாமோய்!! :lol:

ஜம்மு போபிக்கு செய்து தராமலா... கனடாக்கு வரும்போது சொல்லுங்கள் செய்து தாறேன். :lol::D

Edited by Sabesh

இப்போது சமையல் செய்முறைகளில் பம்மாத்து விட கொஞ்சம் யோசிப்பா. நாமளும் சிலதுகள் தெரியாவிடினும் தெரிந்த மாதிரி கதைத்து நம்மளை பாதுகாத்துபோம். :D

சபேஷ் மாமாவிட்ட கேட்டு ரொம்ப விசயம் படிக்க வேண்டும் போல இருக்கு பேபி :D ...ம்ம்ம் நல்லா தான் பாதுகாக்கிறீங்க உங்களை மாமா :D ஒரு நாளைக்கு வசமாக மாட்டுபட்டா தான் இருக்கு மாவின்டபாடு!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு போபிக்கு செய்து தராமலா... கனடாக்கு வரும்போது சொல்லுங்கள் செய்து தாறேன்.

கட்டாயம் சொல்லி போட்டு வாரேன் மாமாவிற்கு :D .........குடித்தா பிறகு ஒழுங்கா அவுஸ்ரெலியா போய் சேரலாம் தானே :lol: நான் சொன்னது கூழை :D !!என்றாலும் பேபிக்கு செய்து தாறேன் என்று மாமாவது சொல்லி இருகிறார் ரொம்ப தாங்ஸ் மாமா!! :)

அப்ப நான் வரட்டா!!

நன்றி

அருமையான ஒரு தகவல். நிறைய நாள் ஆசை. ஊரிலை ஓட ஓட குடிச்சது. இங்கை வந்து எல்லாம் போயிட்டுது.எதிர்வரும் சனிக்கிழமை வீட்டில் ஓடியல் கூழ்தான்.

ஓடியற்கூழ் குடிப்பதில் பிரச்சினை இல்லை ஜம்மு குடிச்சால் பின் விளைவுகள் அதிகம் தெரியும்தானே. அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கின்றதோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் எனது நண்பரின் வீட்டுக்கு சென்ற போது நண்பர் கூழ் காச்சிய விதமே அதிசயம் ஆனால் உண்மை போலாகி விட்டது.அவர் கிட்டத்தட்ட சபேசனின் முறைப்படி என்றாலும் சில முறைகள் வித்தியாசப்பட்டன.

சபேஸ் அண்ணா உங்களின் குடும்ப நகைசுவையை எங்களுடன் (இதெல்லாம் ஒரு ஆட்களென்று) சம்பாஸித்ததுக்கு மிக்க நன்றி. பிரத்தியேகமாக உங்களின் அன்பு மனைவிக்கு.

ஓடியற்கூழ் குடிப்பதில் பிரச்சினை இல்லை ஜம்மு குடிச்சால் பின் விளைவுகள் அதிகம் தெரியும்தானே. அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கின்றதோ.

இப்படி வேற பிரச்சினை இருக்கோ பரணி மாஸ்டர் :D ..........பேபிகளிற்கு பம்பர்ஸ் கட்டி விடலாம் :D பெரியாவிற்கு என்ன செய்யிறது என்றூ நேக்கு தெரியாது மாஸ்டர்!!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ம் பெரியாக்களிற்கும் இருக்கு ஜம்மு. இங்கு வயது போனவர்களை பராமரிக்கும் இடத்தில் சில நாட்கள் வேலைக்கு சென்றிருந்தேன். அங்கே கண்டிருக்கின்றேன். எனக்கே அதிசயம். தேவையென்றால் அனுப்பிவிடுகின்றேன்.

அந்தப் பெரிய ரயிலே ஒரு சிவப்புத்துணிக்கு நிற்குதாம். ஆகவே ஒரு சிவப்புத்துணி கையில் வைத்துக்கொண்டு கூழ் குடியுங்கள் வரும்போது காட்டி விடுங்கள் நின்று விடும்

ம் பெரியாக்களிற்கும் இருக்கு ஜம்மு. இங்கு வயது போனவர்களை பராமரிக்கும் இடத்தில் சில நாட்கள் வேலைக்கு சென்றிருந்தேன். அங்கே கண்டிருக்கின்றேன். எனக்கே அதிசயம். தேவையென்றால் அனுப்பிவிடுகின்றேன்.

அந்தப் பெரிய ரயிலே ஒரு சிவப்புத்துணிக்கு நிற்குதாம். ஆகவே ஒரு சிவப்புத்துணி கையில் வைத்துக்கொண்டு கூழ் குடியுங்கள் வரும்போது காட்டி விடுங்கள் நின்று விடும்

ம்ம் மாஸ்டர் நானும் நர்சிங் கோமில பெரிய ஆட்கள் போடும் பம்பர்ஸை பார்த்தனான் :lol: ...நேக்கு பெரிய ஆட்களின்ட பம்பர்ஸ் எல்லாம் வேண்டாம் பிகோஸ் நான் பேபியாக்கும்!! :lol:

அட அட என்ன ஒரு கண்டுபிடிப்பு சிவப்பு கொடியை காட்டினா டிரெயின் வேண்டும் என்றா நிற்கும் ஆனா இது நிற்காது :) மாஸ்டர் பிறகு அந்த இடமே அதை நான் சொல்ல தான் வேண்டுமா!! :o

அப்ப நான் வரட்டா!!

மத்தியான வெயிலுக்கை வடக்கை போய் 2 போத்தலை, சூடைப்பொரியலுடன் பதம் பார்த்து விட்டு, வெயில்; வாட்ட வீடு வந்து உந்த ஒடியல்கூழை பலா இலையில் உள்ளுக்கை விடேக்கை, வாவ்வ்வ்வ்.............

எப்போ, அந்தக்காலம் வரப் போகுது???????????????>>>>>>

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெகு தூரத்தில் இல்லை சகோதரரே.

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியான வெயிலுக்கை வடக்கை போய் 2 போத்தலை, சூடைப்பொரியலுடன் பதம் பார்த்து விட்டு, வெயில்; வாட்ட வீடு வந்து உந்த ஒடியல்கூழை பலா இலையில் உள்ளுக்கை விடேக்கை, வாவ்வ்வ்வ்.............

எப்போ, அந்தக்காலம் வரப் போகுது???????????????>>>>>>

நான் சில வருடங்களுக்கு முன்னர் ஊருக்கு போன போது நன்றாக அனுபவித்தேன். கள்ளும் கூழும் நல்ல காம்பிநேசன். இங்கு உள்ள ஓரு மாற்றீடு இனிப்பு குறைந்த றெட் வைன் தான். (இனிப்பு குறைஞ்ச வைன் பாக்கத்தெரியாதாக்களுக்கு ஒரு குறிப்பு: வைன் போத்தலில் அல்லது றாக்கில் 0 - 5 இலக்கம் குறித்திருக்கும். 0 - இனிப்பு குறைந்தது 5 - இனிப்பு கூடியது. இலக்கம் 1 அல்லது 2 தான் கூழுக்கு நல்லா இருக்கும். சலரோகம் இருக்கிறாக்களுக்கு 0 அல்லது 1 இலக்கம் தான் நல்லது.

இங்கு உள்ள ஓரு மாற்றீடு இனிப்பு குறைந்த றெட் வைன் தான். (இனிப்பு குறைஞ்ச வைன் பாக்கத்தெரியாதாக்களுக்கு ஒரு குறிப்பு: வைன் போத்தலில் அல்லது றாக்கில் 0 - 5 இலக்கம் குறித்திருக்கும். 0 - இனிப்பு குறைந்தது 5 - இனிப்பு கூடியது. இலக்கம் 1 அல்லது 2 தான் கூழுக்கு நல்லா இருக்கும். சலரோகம் இருக்கிறாக்களுக்கு 0 அல்லது 1 இலக்கம் தான் நல்லது.

வாவ்வ்வ்வ்.... பயனுள்ள தகவல்!! நன்றிகள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கன தண்ணியடி கோஷ்டி இஞ்சை உலாவீனம்.என்ன இருந்தாலும் தம்பி நூணாவில் உங்கடை வீட்டிலை ஒடியல் கூழுக்கு வறுத்த பயித்தம்பருப்பு போடுறவையோ? என்ரை வீட்டிலை பயித்தங்கொட்டை,பிலாக்கொட்டை தான் போடுறவை.வறுத்தபயித்தம் பருப்பு போட்டால் அதின்ரை பேர் வேறை :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.