Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தீர்வு சாத்தியமற்றது: இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக அறிவிப்பு

Featured Replies

இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் நேற்று கூட்டாக இந்திய தலைநகர் புதுடில்லியில் கலந்து ஆலோசித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

எப்படி இலங்கை அரசை பலப்படுத்தலாம் என்பதைத்தவிர வேற என்னத்தை கதைக்கப்போயினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. பேச்சு வார்த்தை மூலம் ஒன்றுபட்ட இலங்கை என்ற வரம்புக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு காண் பதற்கான இலக்கை அடைய சர்வதேச முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவேண்டும்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் காண்பதற்கு நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் பெரிதும் உதவும் பங்களிக்கும் என்று இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாகக் கருத்து வெளியிட்டுள்ளன.

நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பரவல் திட்டமே உகந்தது என்ற நிலைப் பாட்டை இந்தியா அடிக்கடி வலியுறுத்தி வருகிறது.

இப்போது ஐரோப்பிய ஒன்றியமும் அதனை ஆதரித்துக் கருத்து வெளி யிட்டிருக்கிறது.

இந்திய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எட்டாவது உச்சிமாநாடு புதுடில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன் மோகன் சிங் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவரும் போர்த்துக்கல் நாட்டின் பிரதமருமான ஜோசேக் கிரெட்டிஸ் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டு முடிவு குறித்து இரண்டு தரப் புகளும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

பல்வேறு நாடுகளின் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கூட்டறிக்கையில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. பேச்சு வார்த்தை மூலம் ஒன்றுபட்ட இலங்கை என்ற வரம்புக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு காண் பதற்கான இலக்கை அடைய சர்வதேச முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவேண்டும்.

நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தைக் கொண்டுவருவது இப்பிரச்சினைக்கு தீர்வு காண முக்கிய பங்காற்றமுடியும்.

இலங்கையில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு உட்பட சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

மனித உரிமைகளையும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் மதித்து செயற்படவேண்டும். பாதிக்கப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடை இன்றி செல்வது உறுதி செய்யப்படவேண்டும் என்று அந்த அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பாகிஸ்தான், நேபாளம், ஆபிரிக்கா, மேற்கு ஆசியா ஆகியவற்றில் தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

உலகநாடுகளின் அமைதி, பாதுகாப்பு, நல்லாட்சி, காலநிலை மாற்றங்கள் போன்ற வற்றில் ஜனநாயக நாடுகள் அதிக அக்கறை எடுத்து வருகின்றன என்று மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு இராணுவத்தீர்வு சாத்தியமாகப் போவதில்லை என்றும் அதற்கு பேச்சுவார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வைத் காண்பதற்கு எல்லா நாடுகளும் ஊக்கமளிக்க வேண்டும் என்றும் இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து வாசிக்க

இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்று சொல்லிக்கொண்டே இலங்கை இராணுவத்தை நல்லா பலப்படுத்துங்கோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி தமிழர் பிரதேசங்களில் தினமும் நடக்கும் குண்டு சத்தங்கள் கேடகாது. ஆனால் சிங்களத்தில் ஒரு குண்டு சத்தம் கேட்டாலே போதும். உடனே அறிக்கை இருபகுதிக்கும் வேண்டுகோள் என்று

கூடிக்கதைச்சா பிறகு அறிக்கை விடவேனும்தான், அதுக்கு தேவையில்லாததைக்கதக்கக் கூடாது.. சும்மா பம்மாத்து அறிக்கையு விடக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தீர்வு சாத்தியமில்லை

இராணுவ தளபாடவளங்கள் சாத்தியம்

***

பண்பற்ற கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

இராணுவ தீர்வு சாத்தியப்படதெனத் தெரிந்து கொண்டும் ஆயுதங்களை அள்ளிக் கொடுப்பதும் இராணுவப் பயிற்சி அளிப்பதும் எதற்காக?

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

4ட்டான ஆயுதவிற்பனைக்கு தயாராகின்றன போல் தெரிகின்றது.

அவ்வப்போது தாம் பண்பற்றவர் என்பதை தாமாகவே வந்து சொல்பது வரபேற்புக்குரியது.

உண்மைக்கும் தர்மத்திற்கும் தாம் எதிர்மாறி நிற்பதை எப்பப்போதாவது தமது வாயாலேயே சொல்கின்றார்களே...........

இவர்கள் புத்திசாலிகளா முட்டாள்களா புரியுதில்லையே?????

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு எம்மைப் பற்றிக் கதைப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது ? சிங்களவன் செய்யும் எல்லா அட்டூழியங்களையும் ஆதரித்துக் கொண்டும், அவனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளை வழங்கிக் கொண்டும், எம்மைத் தடை செய்து கொண்டும் சமாதானம் பற்றிக் கதைக்க வந்திட்டீனமாம்!

உவைக்குச் சிங்களவன் செத்தால்தான் இலங்கையில் பிரச்சனை இருப்பது தெரியுது ! தமிழன் சாகும்போது மட்டும் உந்த அறிவுரையெல்லாம் எங்கே போட்டுது ? ஐரோப்பிய ஒன்றியம் என்பது அமரிக்காவின் சொல்லுக்கு வாலாட்டும் ஒரு நாய், இந்தியா என்பது ஒரு தோல்வியுற்ற ஜனனாயகத்தை கொண்ட கீழ்த்தரமான அரசு !-இவர்கள் எமக்கு அறிவுரை கூற வருகிறார்கள். :(:)

கள விதிகளுக்கமைய தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாய்களுக்கு எம்மைப் பற்றிக் கதைப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது ? சிங்களவன் செய்யும் எல்லா அட்டூழியங்களையும் ஆதரித்துக் கொண்டும், அவனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளை வழங்கிக் கொண்டும், எம்மைத் தடை செய்து கொண்டும் சமாதானம் பற்றிக் கதைக்க வந்திட்டீனமாம்!

உவைக்குச் சிங்களவன் செத்தால்தான் இலங்கையில் பிரச்சனை இருப்பது தெரியுது ! தமிழன் சாகும்போது மட்டும் உந்த அறிவுரையெல்லாம் எங்கே போட்டுது ? ஐரோப்பிய ஒன்றியம் என்பது அமரிக்காவின் சொல்லுக்கு வாலாட்டும் ஒரு நாய், இந்தியா என்பது ஒரு தோல்வியுற்ற ஜனனாயகத்தை கொண்ட கீழ்த்தரமான அரசு !-இவர்கள் எமக்கு அறிவுரை கூற வருகிறார்கள். :(:)

சரியாக சொன்னீர்கள்............. தங்கட வீடே அடுத்தவனை நம்பித்தான் கிடக்குது இதுக்குள்க சும்மா அங்கங்கே ஏலாதவனைப்படித்து தமது வீரத்தை காட்டி ஏதோ உலக சண்டியர்போல் நாடகம் காட்டுறாங்கள்.

அங்க கஸ்மீரில நான்பிறக்கிறதுக்கு முந்தி இருந்தே அவங்கள் அடிக்கிறாங்கள்.................

இராணுவதீர்வு சரிவராதெண்டால் போய் பேசலாம்தானே

  • கருத்துக்கள உறவுகள்

:) கஷ்மீரில் சுதந்திரம் கேட்ட மக்களை ஈவு இரக்கமில்லாமல் தனது ராணுவத்தை அனுப்பிக் கொன்று குவித்து வருகிறது. இத்தனைக்கும் கஷ்மீர் என்பது ஒரு தனிக் குடியரசு. பகிஷ்தானின் பயம் காரணமாக கஷ்மீர் மன்னர் நேருவுடன் செய்த பாதுகாபு ஒப்பந்தத்தை வைத்து அந்தச் சிறிய நாட்டை இந்தியா கைப்பற்றிகொள்ள பாகிஷ்தான் சண்டை பிடித்து ஆசாத் கஷ்மீரை மீட்டது.

மதத்தாலும் கலாச்சாரத்தாலும் வேறுபட்ட மக்கள் இனமான சீக்கியர்களின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க அவர்களின் புனிதக் கோயிலான பொற்கோயிலுக்குள் ஒரு தமிழ் தளபதியின் தலைமையில் தனது ராணுவத்தை அனுப்பி பெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றியது.

இன்னொரு மக்களினமான அசாமியர்களையும், மணிப்பூர் நாகலாந்து மக்களையும் தனது கொடூரக் கரங்கள் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்திற்கு தனது ராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி சுமார் 7000 தமிழ் மக்களை கொன்று குவித்தது.

இவ்வாறுதான் சின்னச் சின்ன அரசுகளை தன்வசப்படுத்தி அகன்ற இந்தியாவை அது உருவாக்கியது.

அப்போதெல்லாம் ராணுவத்தீர்வு எப்படிச் சாத்தியமாயிற்று?

சிங்களவர்க்காக இன்று வக்காலத்து வாங்கும் இந்தியா தனது சொந்த மக்களை நடத்தி வரும் விதம் ஒன்றும் பரம ரகசியமல்ல !!!

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அறிக்கைகட்கு மட்டும் குறைவில்லை.பின் பக்கதாலே ஆயுத பரிமாற்றம்,விமானிகளை அனுப்பி புலிகள்,மக்களின் மீது குண்டு போடுதல்,பண உதவி செய்தல் என இன்னோரென்ன உதவிகளை கொலைகார அரசுக்கு வழங்கிக்கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்று தமிழர்களை மாங்காய் மடையர்களாக்க நினக்கிறது இந்தியாவும்,ஐரோப்பிய ஒன்றியமும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.