Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

நன்றியுடன் ஏன் சிரிப்பும் வெறுப்பும் றியாக்ஷன்.

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply

நன்றியுடன் ஏன் சிரிப்பும் வெறுப்பும் றியாக்ஷன்.

சிரிப்பு றியாக்ஷன் படம் என்னவென தெரிந்து கொண்டமைக்கு வெறுப்பு றியாக்ஷன் பாடல் வரிகளுக்கு. ஆமா சாருமதி படத்தின் கதாநாயகன் கதாநாயகி யாருங்க? :P

http://ww.smashits.com/music/tamil/songs/3...songs-viii.html

வெண்ணிலா!

மேலே உள்ள இணையத்தில் போய் பார்க்கவும். முதலில் பாடல் தொடக்கமும் பின்னால் படத்தின் பெயரும் வரும். எனக்குத் தெரிந்து இந்தப் பாடல் சாருமதி என்ற படத்தில்தான். நடிகர்களை நினைவில் இல்லை.

http://ww.smashits.com/music/tamil/songs/3...songs-viii.html

வெண்ணிலா!

மேலே உள்ள இணையத்தில் போய் பார்க்கவும். முதலில் பாடல் தொடக்கமும் பின்னால் படத்தின் பெயரும் வரும். எனக்குத் தெரிந்து இந்தப் பாடல் சாருமதி என்ற படத்தில்தான். நடிகர்களை நினைவில் இல்லை.

நன்றி ஈஸ்வர் :P

feb15.jpg

பாடல்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே (ஆண்)

குரல்: ஹரிஹரன்

வரிகள்: வைரமுத்து

ஆஆஆ...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே...உன் காதல் நான்தான் என்று...

அந்த சொல்லில்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் வேறுதான்

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கங்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேருதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி ஓஆ

இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ

நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ

ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ

வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ

ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே

மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே

ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்

அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே

கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே

ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்

உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்

அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்

சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்

படம்:ரோஜா

காதல் ரோஜாவே

எங்கே

நீ எங்கே

கண்ணீர் வழியுதடி

கண்ணே

கண்ணுக்குள் நீதான்

கண்ணீரில் நீதான்

கண்மூடிப் பார்த்தால்

நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ

ஏதானதோ

சொல்

தென்றல் என்னைத் தீண்டினால்

சேலை தீண்டும் ஞாபகம்

சின்னப் பூக்கள் பார்க்கையில்

தேகம் பார்த்த ஞாபகம்

வெள்ளியோடை பேசினால்

சொன்ன வார்த்தை ஞாபகம்

மேகமிரண்டு சேர்கையில்

மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால்

வார்த்தையில்லை பெண்ணே

நீயில்லாமல் போனால்

வாழ்க்கையில்லை கண்ணே

முள்ளோடுதான் முத்தங்களா?

சொல்!

வீசுகின்ற தென்றலே

வேளையில்லை

,d;W போ..

பேசுகின்ற வெண்ணிலா

பெண்மையில்லை

ஓய்ந்து போ..

பூ வளர்த்த தோட்டமே

கூந்தலில்லை

தீர்ந்து போ..

பூமி பார்க்கும் வானமே

புள்ளியாகத் தேய்ந்து போ

பாவையில்லை

பாவை

தேவையென்ன தேவை

ஜீவன் போன பின்பே

சேவையென்ன சேவை?-

:(

  • 3 weeks later...

படம் - மைதிலி என்னைக் காதலி

பாடியவர்.- எஸ்பி பாலசுப்ரமணியம்

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை

வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி

குருதியில் நனைந்ததடி

உயிரே உயிரே

(நானும் உந்தன் உறவை......

இதயக் கதவுகளை திறக்க ஓடி வந்தேன் சிறையில் சிக்கிக்கொண்டதேனம்மா

வலையில் வீழ்ந்த உனை மீட்க ஓடிவந்தேன் வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா

காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதில் இனிமை காணுவது விதியம்மா

அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்தில் துவைத்து சிதைப்பது சதியம்மா

உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா

உள்ளத்தை பிரித்திட பாரினில் எவருண்டு சொல்லம்மா

(நானும் உந்தன் உறவை......

வீணை எரிகிறது விரல்கள் வேகிறது நாதம் மீட்டுகிறேன் வாராயோ

புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது படகு செலுத்துகிறேன் வாராயோ

எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும் தீபம் போல் மனம் அலைகிறது

என்னை இழந்த பின்னும் உன்னைக் காக்க என்று இதய அரங்கம் இங்கு அழைக்கிறது

வாழ்வதில் ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன்

சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே உண்மை என்பேன்

(நானும் உந்தன் உறவை......

http://www.raaga.com/channels/tamil/movie/...nai-kadhali.htm

:cry: :cry: :cry:

ஏன் அழுறீங்க வெண்ணிலா???

:cry: :cry:

ஏன் அழுறீங்க வெண்ணிலா???

:cry: :cry:

பாடலை செவிமடுத்தேன் அழுகை வந்திச்சு. சோ அழுதேன். அழுகின்றேன் :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி அழதேங்க... வெண்ணிலா.... ஒரு கற்பனை பாடல் தானே.... :D { கற்பனையை விட கஷ்டமான நியம்களும் உண்டு }

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தங்கை பாடலோடு ஒன்றிவிட்டீர்களா.. அழாதீங்க.. :P

பாடலை வாசிக்காமல் கேட்டுப்பாருங்கோ. அழுகை வராதா இல்லையா என்று. அக்கா இசையுடன் கேட்டதும் பாடலுடன் ஒன்றிப்போய்விட்டேன் அக்கா :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலபாடல்கள் அப்படித்தான். அது தான் சோகப்பாடல்களை தனிமையில் கேப்பார்கள் அதை கேட்டு அழுவதிலும் ஒரு சுகம் போல :wink: :P

பாடல் நன்றாக இருக்கின்றது ஆனால் சோகமாக இருக்கின்றது.

பாடல் நன்றாக இருக்கின்றது ஆனால் சோகமாக இருக்கின்றது.

பாடல் சோகம் என்பதால் தான் பாடலுடன் ஒன்றிப்போய் அழுகிறேனாக்கும். :cry: :idea:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா யாரன் பாட்டுக் கேக்கலையா... :wink:

எழுத நேரம் தான் இல்ல. :lol:

பாடல்: ஓ ப்ரியா ப்ரியா

குரல்: சித்ரா, மனோ

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ

நீயோர் ஓரம் நான் ஓரோரம்

கானல் நீரால் தாகம் தீராது

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ

காலம் சிறிது காதல் நமது

தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே

வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்

ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ

ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ

வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ

எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்

எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ

கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ

காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ

அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்

பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே

ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி

பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது

இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே

அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே

விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்

பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே

இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி

நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட

காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்

ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

நன்றி மன்னா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை ப்ரியா எனக் கேக்கிறீர்கள் மன்னா..? :wink: :lol:

நன்றி மன்னா பாடலுக்கு. :lol:

இங்கையும் இரண்டு பேரும் சேர்ந்து வந்திட்டீங்களா? நான் ஸ்கேப்!

பாட்டில் பெண்கள் பெயரே வரக்கூடாதா மாமா? பாவம் மன்னர்.

இங்கையும் இரண்டு பேரும் சேர்ந்து வந்திட்டீங்களா? நான் ஸ்கேப்!

:P :P :P

படம்:- ABCD

குரல்:- இமாம்.

நேரம்:- 1.36 நிமிடம்

அன்பு தந்து

அறிவு தந்து

அழகான பெண் தந்தா..

அதுக்கும் கேட்பான் கூலி

காரும் தந்து

சீரும் தந்து

சில லட்சம் தந்தாத்தான்

தருவான்

தங்கத்தாலி

கருப்பையை நிரப்பிடதான்

பணப்பையை கேட்கிறியே

மனிதா சொல் உனக்கென்ன

பேரூ..

வெட்கக்கேடு..

கோட்டுப்போட்ட மாப்பிள்லைக்கு

ரேட்டுக்கொஞ்ச்ம் ஜாஸ்தி என்றால்

இதுக்குப் பேரு என்ன

ஆண் விபச்சாரம்

இது அவச்சாரம்

அன்பு தந்து

அறிவுதந்து

அழகான பெண்தந்தா

அதுக்கும் கேட்பான்

கூலி.. கூலி. கூலி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஹரி & தாலா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.