Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேனா முனையில் ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்கிறார் இந்திய மத்திய அமைச்சர் இளங்கோவன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்புப்பகுதியில் இணைக்க வேண்டிய செய்தி.

பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் - இளங்கோவன்

சென்னை: பேனா முனையை விட எதுவும் வலிமையானதல்ல. எனவே பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் உதவ வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் இலங்கையைச் சேர்ந்த 20 பத்திரிக்கையாளர்கள், இதழியல் படிப்பில் 6 மாத டிப்ளமோவை முடித்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இளங்கோவன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஈழப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும். தமிழகத்தில் சிலர் இதை அரசியலாக்க முயன்று வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினையை எளிதாக தீர்க்க முடியும். இதில் இலங்கைப் பத்திரிக்கையாளர்களின் பங்கு அதிகம் உள்ளது.

தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க உங்களது பேனாக்களைப் பயன்படுத்துங்கள். பேனா முனை கத்தி முனையை விட வலிமையானது, கூரானது. அப்படி இருக்கையில், துப்பாக்கிகளும், ஆயுதங்களும் எதற்கு.

எனவே இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். தங்களது பேனாவின் வலிமையால் இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட உதவ வேண்டும்.

சுதந்திரப் போராட்ட காலத்தின்போது பத்திரிக்கைகள்தான் முக்கியப் பங்கு வகித்தன. இந்தியாவை வல்லரசாக்கவும் அதே பத்திரிகைகள்தான் உதவ வேண்டும். மீடியாவின் சக்தி மற்ற எதையும் வலிமையானது என்றார் இளங்கோவன்.

நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழ வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, துணைவேந்தர் பி.சத்யநாராயணன், இலங்கை துணைத் தூதர் பி.எம்.அம்ஸா, இலங்கை பத்திரிக்கை கழக இயக்குநர் ரங்க கலன்சூரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-தட்ஸ் தமிழ்

இதை சிரிப்பு பக்கதிலையு சேர்க்கலாம் அழுகைப்பக்கத்திலும் சேர்க்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கேக்க ஒரு பல்கலைக்கழக அறிஞர் குழாமும் வந்திருக்கு.. ம்ம்ம்ம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 11 ஊடகவியலாளர்கள் சிறிலஙகா அரசினால் கொல்லப்பட்டதும், உதயன், சண்டேலீடர் பத்திரிகைகள் தாக்கப்பட்டதும் இளங்கோவனுக்கு தெரியாத செய்திகளா?

நல்ல யோசனைதான்.

பங்களாதேஸ் பிரச்சனைக்கு இராணுவத்தை அனுப்பமுந்தி உந்தப்பேனையை ஒருக்கா தூக்கி காட்டியிருந்திருக்கலாம்.

பாகிஸ்த்தான் காரன் கார்கில் பகுதிக்கு இராணுவத்தை அனுப்பியிருந்தபோது உந்தப்பேனையை ஒருக்கா தூக்கி காட்டியிருந்திருக்கலாம்........

அட! உந்தப்பேனை இருக்கும்போது உங்களுக்கு என்னத்திற்கு அணு ஆயுதம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனைதான்.

பங்களாதேஸ் பிரச்சனைக்கு இராணுவத்தை அனுப்பமுந்தி உந்தப்பேனையை ஒருக்கா தூக்கி காட்டியிருந்திருக்கலாம்.

பாகிஸ்த்தான் காரன் கார்கில் பகுதிக்கு இராணுவத்தை அனுப்பியிருந்தபோது உந்தப்பேனையை ஒருக்கா தூக்கி காட்டியிருந்திருக்கலாம்........

அட! உந்தப்பேனை இருக்கும்போது உங்களுக்கு என்னத்திற்கு அணு ஆயுதம்.

ஏன் கனக்க.. 1987 இல் இந்தியப் படைக்குப் பதில் இந்தியப் பத்திரிகையாளர்களை அனுப்பி இருக்கலாமே ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண..!

இந்தச் செய்தி எமக்கு ஒன்றைச் சொல்லுது.. இந்திய உளவு அமைப்பு ஈழத்த தமிழர்களின் (அது புலம்பெயர்ந்த தேசங்களில் கூட இருக்கலாம்) கல்வித்துறை மற்றும் பத்திரிகைத் துறைக்குள்ளும் அகலக் கால்பதிக்க விரும்பிச் செயற்படுகின்றது என்பதையே. அதைத்தான் காண்கின்றோமே.. தேசிய தலைவருக்கு விமானம் குண்டு போட்டு காயமில்ல பங்கர் சரிஞ்சு விழுந்து சிராய்ப்பு என்பதை..! :lol::lol:

இவையெல்லாம் ஒரு வகையில் ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண என்று அமையும் பேனா முனைத் தூக்கல்கள் தானே..! இந்தியப் பத்திரிகைகள் இதைத்தானே 1987 இல் இருந்து வரி வரியாச் செய்கின்றன..!

அண்மையில் ஒரு வலைப்பூ பார்த்தேன். அங்கு விடுதலைப்புலிகள் கற்புக் காக்கிற பிற்போக்குவாதிகள் சாதியம் காக்கிற சாதி வெறியர்கள்.. படித்தவர்கள் அடங்கின ஒரு குழு.. அதுஇதென்று எழுதி போட்டிருக்கு. அதோட இக்களத்தில் உறுப்பினர்களா இருந்து குழுமங்களுக்கு ஆலோசனை வழங்கிற ஒருவரின் கவிதையும் போட்டிருக்குது..! இங்கையே அப்படி இருக்கேக்க...???! உலகத்தில எப்படி இருக்கும். :lol::)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.