Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை விளையாடலாமா - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நங்கூரம் என்று ஒரு புது சஞ்சிகைக்கு எனது கவிதை கேட்டிருந்தார்கள். கனடா தமிழர் வாழ்வு குறித்த எனது எழுத்துக்களை ஆரம்பிபதற்க்கு ஒரு சந்தர்ப்பமாக் அந்த அழைப்பை எடுத்துக்கொண்டேன். கனடாவுக்கு மூன்று தடவைகள் சென்று ஒரு வருடங்களுக்கும் மேலாக ஒன்ராறியோவிலும் கியூபெக்கிலும் பயணம் செய்து கொஞ்சம் தங்கியிருந்து கற்றிருக்கிறேன். இரண்டாவது தடவை நான் சென்றிருந்தபோது "காங்" குழுக்களின் வன்முறைகள் உச்சதில் இருந்த காலம். குழு வன்முறை பற்றிய ஆய்வுகளிலும் விவாதங்களிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது. முன்ன்றாவதுதடவை தேர்தல்காலம். கனேடிய அமைப்பை அறிந்துகொள்ளும் ஆவலில் ஜோன்காணிசுக்கும் மற்றும் பிளிண்டா ஸ்ரொனாச்சுக்கும் தேர்தல் வேலைகள் செய்தேன். இதற்க்குமேல் சொன்னால் என்னைத் தெரியாதவர்களுக்கு நம்புவது கடினமாக இருக்கும்.

நங்கூரம் வெளிவரமுன்னம் முழுக்கவிதையையும் யாழில் இடுவது சரியில்லை. அந்தக் கவிதை யின் சில பகுதிகள்

அதிலாந்து சமுத்திரத்தின்மேல் பறந்தபோது

அவளது வாசனையை உணர்ந்தேன்.

நாங்கள் பிரிந்தபோது

வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்

ரொறன்ரோவை நீங்கின.

ஒன்ராறியோ ஏரியின்மீது

தெற்க்குநோக்கிப் பறந்த

வாத்துக்களுள்

கண்ணீரை மறைத்தபடி

நாம் விடைபெற்றோம்.

அந்த வசந்தத்தில்

சினை பிடித்த சமன் மீன்கள் நீந்திய

ஒன்ரோறியோ ஏரிக் கரையின்

எந்தச் செடிகளைவிடவும்

பூத்துப்போயும் வாசனையோடும்

என் படகில் இருந்தாள் ......(தொடரும்).

இன்னும் ஒரிரு வாரங்களின்பிறகு நங்கூரம் வெளிவந்த கையோடு உங்கள் கருத்துக்களுக்காக இக்கவிதையை முழுமையாக யாழ் இணையத்தில் இடுவேன்.

அதுவரை இக்கவிதையை நீங்கள் எப்படி முடித்து வைப்பீர்கள் என்று கேட்கலாமா? முயன்று பாருங்கள். கவிதையாக மட்டுமென்றில்லை உரைநடையாகக்க்கூட முயலலாம்.

வெண்ணிலாவினதும் இனியவளளினனதும் கவிதைகளுக்குப் பின்னூட்டம் இட்டபோது காதல் கவிதைகளில் அவனையும் அவளையும் மட்டுமன்றி காதலின் புவியியலையும் இயறைகையையும் காலதின் அரசியலையும் கொஞ்சம் தொட்டுக்கொள்ளுங்கள் என்று எழுதினேன். இக்கவிதையில் அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

Edited by poet

நங்கூரம் என்று ஒரு புது சஞ்சிகைக்கு எனது கவிதை கேட்டிருந்தார்கள். கனடா தமிழர் வாழ்வு குறித்த எனது எழுத்துக்களை ஆரம்பிபதற்க்கு ஒரு சந்தர்ப்பமாக் அந்த அழைப்பை எடுத்துக்கொண்டேன். கனடாவுக்கு மூன்று தடவைகள் சென்று ஒரு வருடங்களுக்கும் மேலாக ஒன்ராறியோவிலும் கியூபெக்கிலும் பயணம் செய்து கொஞ்சம் தங்கியிருந்து கற்றிருக்கிறேன். இரண்டாவது தடவை நான் சென்றிருந்தபோது "காங்" குழுக்களின் வன்முறைகள் உச்சதில் இருந்த காலம். குழு வன்முறை பற்றிய ஆய்வுகளிலும் விவாதங்களிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது. முன்ன்றாவதுதடவை தேர்தல்காலம். கனேடிய அமைப்பை அறிந்துகொள்ளும் ஆவலில் ஜோன்காணிசுக்கும் மற்றும் பிளிண்டா ஸ்ரொனாச்சுக்கும் தேர்தல் வேலைகள் செய்தேன். இதற்க்குமேல் சொன்னால் என்னைத் தெரியாதவர்களுக்கு நம்புவது கடினமாக இருக்கும்.

நங்கூரம் வெளிவரமுன்னம் முழுக்கவிதையையும் யாழில் இடுவது சரியில்லை. அந்தக் கவிதை யின் சில பகுதிகள்

அதிலாந்து சமுத்திரத்தின்மேல் பறந்தபோது

அவளது வாசனையை உணர்ந்தேன்.

நாங்கள் பிரிந்தபோது

வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்

ரொறன்ரோவை நீங்கின.

ஒன்ராறியோ ஏரியின்மீது

தெற்க்குநோக்கிப் பறந்த

வாத்துக்களுள்

கண்ணீரை மறைத்தபடி

நாம் விடைபெற்றோம்.

அந்த வசந்தத்தில்

சினை பிடித்த சமன் மீன்கள் நீந்திய

ஒன்ரோறியோ ஏரிக் கரையின்

எந்தச் செடிகளைவிடவும்

பூத்துப்போயும் வாசனையோடும்

என் படகில் இருந்தாள் ......(தொடரும்).

இன்னும் ஒரிரு வாரங்களின்பிறகு நங்கூரம் வெளிவந்த கையோடு உங்கள் கருத்துக்களுக்காக இக்கவிதையை முழுமையாக யாழ் இணையத்தில் இடுவேன்.

அதுவரை இக்கவிதையை நீங்கள் எப்படி முடித்து வைப்பீர்கள் என்று கேட்கலாமா? முயன்று பாருங்கள். கவிதையாக மட்டுமென்றில்லை உரைநடையாகக்க்கூட முயலலாம்.

வெண்ணிலாவினதும் இனியவளளினனதும் கவிதைகளுக்குப் பின்னூட்டம் இட்டபோது காதல் கவிதைகளில் அவனையும் அவளையும் மட்டுமன்றி காதலின் புவியியலையும் இயறைகையையும் காலதின் அரசியலையும் கொஞ்சம் தொட்டுக்கொள்ளுங்கள் என்று எழுதினேன். இக்கவிதையில் அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

பொயெற் ...! கவிதை விளையாடலாமா ? என்றவாறு இருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்... என்ன ?

விளையாடலாமா?

-எல்லாள மஹாராஜா-

கனடா தெரியாதவங்க எப்படி விளையாடுவது... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொயெற் ...! கவிதை விளையாடலாமா ? என்றவாறு இருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்... என்ன ?

விளையாடலாமா?

-எல்லாள மஹாராஜா-

ஆரம்பியுங்கள். இதுநான் ஏற்கனவே எழுதி முடித்துவிட்ட கவிதை. நீங்கள் எப்படி முடித்துவைக்கிறீர்கள் என்பதைப் பார்க்கலாம். இறுதியில் முழுக்கவிதையையும் வெளியிட்டு உரையாடலா. பயன் உங்கள் இளமை மனசை நானும் எனது கவிதை நுட்பத்தை நீங்களும் பண்டமாற்று செய்துகொள்ளலாம். இது சும்மா ஒரு கவிதை work shop பரிசோதனைதான். போட்டியில்லை. நீங்கள் எழுதுங்கள் ஜனவரியில் நான் எனது கவிதையை முழுமையாக வெளியிடுகிறேன்..

பாலன் கனடா தெரிந்தால் கனடாவில் முடிக்கலாம் :lol: கனடா தெரியாவிட்டால் என்ன. அதிலாந்து சமுதிரத்தைத் தாண்டி புலம் பெர்ந்த நாட்டில் இருந்தோ அல்லது இலங்கையில் இருந்தோ கனடாவுக்கு விடுமுறைக்கோ பணி நிமித்தமோ சென்று திரும்புகிறவனது கவிதைதானே. மிகுதியை அவன் வாழும் நாட்டிலோ அல்லது இலங்கையிலோ முடித்துவிடலாமல்லவா.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
:lol: கவிதை விழையாடலாமா --விளையாட்டு :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol: கவிதை விழையாடலாமா --விளையாட்டு :lol:

மன்னிக்க வேண்டுகிறேன் நுணாவிலான். என் மனவேகதில் எழுததிவிடுகிறேன். திரும்ப வாசிக்கும்போது மனசில் உள்ளதையே வாசித்தும் விடுகிறேன். எனக்குப் பிழை திருத்தவோ புறூவ் வாசிக்கவோ திறமையில்லை. 2006 ஆரம்பத்தில் எனது காவியம் ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் http://noolaham.net/library/books/03/278/278.pdf முன்றாம் பதிப்பு வெளிவந்தது. துரதிஸ்டவசமாக என்னிடம் பிழை திருத்தித் தருமாறு அனுப்பினார்கள். என் கண்களுக்குப் பிழைகள் தட்டுப்படவில்லை. நிறைய பிழைகளோடு அந்த புத்தகம் வெளிவந்தது நான் அதிர்ந்துபோய் இருந்தேன். அதன்பின் நடந்த ஒரு சம்பவம் சுவாரசியமானது. சென்னைச் சங்கமம் 2006 என்னை சந்தித்த பொறியியல் கலநிதிப் பட்ட மாணவி கீர்திகா அந்த புத்தகம் தன்னை வெகுவாகப் பாதித்ததுபற்றிச் சொன்னார். ஈழத்து மண்னையும் எங்கள் முகத்தையும் வாசிக்க முனிருந்த கீர்திகாவும் கீர்திகாவின் உலகமும் வேறு வாசித்தபின் எல்லாமே புதிது. நானும் புதிய பெண்ணாகிவிடேன் என்று சொன்னார். தயக்கத்துடன் எழுத்துப் பிழைகள் பற்றிக் கேட்டேன். எழுத்துப் பிழையா என்று ஆச்சரியமாகக் கேட்டவர் நான் ஈழத்தில் அப்படித்தான் எழுதுவீர்களாக்கும் என்று நினைத்துவிடேன் என்றார். எனக்கோ தூக்கிவாரிப் போட்டது.

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களையும் யாழில் தொடராகப் போட விருப்பம். என்னிடம் பிடிஎப் பிரதி மட்டும்தான் உள்ளது. யாழ் இணையதில் யாருக்காவது பிடிஎப் பிரதியை யூனிகோட்டாக மாற்றும் வித்தை தெரியுமா? தெரிந்தால் உதவுங்கள்.

http://noolaham.net/library/books/03/278/278.pdf

.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விழையாட்டில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே இதனை விட்டுவிடுவோம். நல்வாழ்த்துக்களோடு.

  • கருத்துக்கள உறவுகள்

என் படகில் இருந்தாள்..........

மலரும் அல்லி மலராய் அவள் முகம்!

பனிமலையின் மேலாய் எழுந்து வரும் நிலா!

மலரம்புகள் ஏராளமாய் எம்மையும் ஏரி மீன்களையும்...

கூடு திரும்பும் குருவிகளின் குதூகல கீதங்கள்!

இயல்பாய் என் விரல்கள் நீந்தி...

இவள் விரல்களுடன் .....

பல வருடங்களாய் பேசவேண்டியதெல்லாம்...

சில நொடிகளில் விரலசைவுகளில்...

மலர் முகம் மார்பிலே பெருமூச்சாய் வருட...

வலக்கரம் மெல்லிடையில் ஆதரவாய் தவள...

விழிகள் திறந்திருந்தும் குருடாய்...

இதழ்கள் மூடியிருந்தும் மௌனமே வார்த்தைகளாய்...

செவிக்கு இமையுமில்லை எதையும் கேட்கவுமில்லை!

கால்களுக்கு கால்களே விலங்குகளாய்...

காலத்தையும் கடந்து நடக்கின்றோம்!

ஒன்ராரியோ நீண்டு சென்று கொண்டிருக்கின்றது!

அதன் மேல் அழகாய் வெண்ணிலா!

ஒய்யாரமாய் விழுகிறது ஓர் அருவி!

மிதக்கும் படகையும் நனைக்கிறது சில துளிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் படகில் இருந்தாள்..........

விழிகள் திறந்திருந்தும் குருடாய்...

இதழ்கள் மூடியிருந்தும் மௌனமே வார்த்தைகளாய்...

செவிக்கு இமையுமில்லை எதையும் கேட்கவுமில்லை!

கால்களுக்கு கால்களே விலங்குகளாய்...

காலத்தையும் கடந்து நடக்கின்றோம்!

ஒன்ராரியோ நீண்டு சென்று கொண்டிருக்கின்றது!

அதன் மேல் அழகாய் வெண்ணிலா!

ஒய்யாரமாய் விழுகிறது ஓர் அருவி!

மிதக்கும் படகையும் நனைக்கிறது சில துளிகள்.

தோழமைக்குரிய சுவே இரண்டு அழகிய வரிகளே எழுத்தைக் கவிதையாக்குகிறது. நீங்கள் கவிதையை முடித்திருக்கிற நான்குவரிகள் மிக அழகும் அர்த செறிவும் உள்ளவை. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி 'போயட்". :(:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.