Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூக்கறையனிசம் - வாசுதேவன்.

Featured Replies

மூக்கறையனிசம்.

முன்னுரை:

தேசம் என்றான் ஒருவன்

தேசியம் ஒரு கற்பிதம் என்றான் இன்னொருவன்

தேவையில்லை இவையெல்லாம்

மாயையென்றான் மூன்றாமவன்

முதலாமவனுரை:

என்னிடம் தேசமில்லை

தேசம் எனக்குத் தேவையில்லாதிருந்தது

இருப்பினும் தேசம் உள்ளவர்கள்

என்னுரிமைகளை மறுத்தார்கள்

என்னுரிமைகளை மீட்டெடுத்து உயிர் கொடுக்க

எனக்குமோர் தேசம் தேவையென

தங்களையறியாமலே எனக்கு அறிவுறுத்தினார்கள்

தமக்கெனத் தேசமிருந்ததால் என்னை ஒடுக்கியவர்கள்

தேசியத்தை அவர்கள் என்மீது திணித்தார்கள்

தேசம் என்பது என் இருத்தலின் தேவை

தேசம் இன்றி என்னால் தப்பி வாழமுடியாது

ஆகையினால் நான் தேசம் வேண்டிப் போராடுகிறேன்.

யாருக்கெனவும் ஒரு தேசமின்றி

உலகம் முழுவதும் மனிதம் முழுவதற்குமென

ஒரு நாள் வரும் வரையும்

தப்பி வாழ எனக்கோர் தேசம் வேண்டும்.

இரண்டாமவனுரை:

தேசியம் ஒரு கற்பிதம்

தேசியம் ஒரு பாசிசம்

தேசியமின்றியும் வாழலாம்

உலகில் தேசமின்றியும் வாழலாம்

மூன்றாமவனுரை:

இரண்டாமவனே என் குரு

அவன் சொல்வதே தேவவாக்கு

அவனிடமிருந்துதான் தேசியம் ஒரு பாசிசம்

என்பதைக் கற்றுக்கொண்டேன்

தேசியர்களையெல்லாம் நாம் களையெடுப்போம்

தேசியங்களையெல்லாம் நாம் வெற்றிகொள்வோம்

எல்லையற்றது உலகம்

எங்கெங்கும் நாம் வாழலாம்

உண்பதறக்கு உணவும்

குடிப்பதற்குத் திரவமும்

உள்ளவரை உயிர்வாழ்தல் போதும்

என்போன்றே எல்லோரும்

உயிர்வாழ்தலும் போதும்

என உரைத்தான் மூன்றாமவன்

முதலாமனின் முடிவுரை:

மூன்றாமவனே,

உன் குருவிற்கொரு தேசமுண்டு

உன் குருவிற்கொரு சுதந்திர நிலப்பரப்புண்டு

உன் குருவிடம் அர்த்தமுள்ள ஒரு

தேசிய அடையாள அட்டையுண்டு.

உன் குருவிடம் அர்த்தமுள்ள ஒரு

தேசியக் கடவுச் சீட்டுண்டு.

உன் குருவிற்கு ஒரு வீடும் முகவரியும் உண்டு

உன் குருவின் குடும்பம் பாதுகாக்கப்படுகிறது

உன் குருவின் வாக்குரிமைக்கொரு மதிப்புண்டு

உன் குருவின் தேசத்தைக் பாதுகாக்க

பலமானவோர் இராணுவமுண்டு

உன் குருவின் தேசத்தில் அணுகுண்டுமுண்டு

தேசம் தொழில் கொடுத்துத் தேசமிடும் கூலியில்

தேசத்தின் நிழலில் வாழும் உன் குரு

தேசியம் பாசிசமெனச் சொல்லல் இலவசம்தானே

மூன்றாமவனே,

தேசமிலா அகதி நீ.

உண்மைதான் அதனாலென்ன ?

தேசத்தை வென்றெடுக்கப் போராடு.

மூக்கறையனாக இருந்தால்

மூக்குடையோர் எல்லாம் முத்தியடையார்

எனப் புனைவது வஞ்சகம்

முதுகு வளைந்திருந்தால்

நிமிரந்து நடப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள்

என்பது இயலாமை

வஞ்சகம் வென்றதில்லை

வஞ்சகம் வாழ்ந்ததில்லை

மூக்கறையனிசத்தின் முகமூடிகள்

உரித்தெறியப்படும் காலமிது

மூக்கறையனிசம் முடிவுறும் காலமிது

என முடிவாகக் கூறினான் முதலாமவன்.

28.12.2007.

Edited by vasudevan

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மட்டுமல்ல வாசுதேவன் காலத்தின் பிரதிபலிப்பு. அண்மையில் இந்தியா போயிருந்த ஆனந்த சங்கரி என்கிற மூக்கறையனின்( மூக்கறையன் அல்ல முகமே இல்லாதவன்) பேச்சை இன்று படித்தபொழுது இந்த கவிதை ஞாபகத்திற்கு வந்தது

சிந்தனையத் தூண்டும் நல்ல கவிதை

மூக்கறையனிசத்தின் முகமூடிகள்

உரித்தெறியப்படும் காலமிது

மூக்கறையனிசம் முடிவுறும் காலமிது

என முடிவாகக் கூறினான் முதலாமவன்.

பல விசயங்களை கவிதையில் சொல்லி சென்றுள்ளீர்கள் வாசுதேவன் அண்ணா வாழ்த்துகள் :) ..........பட் நான் இன்னும் பேபி என்றபடியா அரைவாசி விளங்கவில்லை விளங்கின அரைவாசியின் படி கவிதை நல்லா இருந்தது அண்ணா :D ........நேக்கு ஒரு சந்தேகம் அண்ணே ஒரு கவிதை சில ஆட்கள் மட்டும் வாசித்து புரிந்து கொள்ளும் அளவிள எழுதுறது நல்லதோ இல்ல என்ன மாதிரி பேபிகளும் விளங்கி கொள்ளுற மாதிரி எழுதுறது நல்லதோ :) அண்ணா என்ட டவுட்டை ஒருக்கா கிளியர் பண்ணி விடுறியளோ :lol: ..கவிதை நல்லா இருக்கு அண்ணே!! :D

அப்ப நான் வரட்டா!!

மூக்கறையனாக இருந்தால்

மூக்குடையோர் எல்லாம் முத்தியடையார்

எனப் புனைவது வஞ்சகம்

முதுகு வளைந்திருந்தால்

நிமிரந்து நடப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள்

என்பது இயலாமை

ஆழமான வெளிப்படுத்தல். இவைகள் தெரிந்தும் இயலாமையில் நம்பிக்கை கொண்டு நடமாடும் ஜடங்கள் ஜந்துக்கள் சந்து பொந்துகளில் கொடுக்கான்களாக ஊர்ந்து திரிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.