Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புத் தீவின் இரும்புத் தலைவன்! காஸ்ட்ரோ

Featured Replies

கரும்புத் தீவின் இரும்புத் தலைவன்!

உலக வரைபடத்தில், 'அகில உலக அண்ணாத்த' அமெரிக்காவின் காலடியில், துரும்பாகத் தத்தளித்துக்கொண்டு இருக்கும் தீவு கியூபா. அதன் இரும்புத் தலைவர் பிடல்காஸ்ட்ரோதான், கடந்த 40 வருடங்களாக அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி! இராக், ஆப்கானிஸ்தான்களில் வெள்ளை மாளிகை ரிமோட் மூலமே வன்முறையைத் தூண்டும் அமெரிக்காவால், கைக்கெட்டும் தொலைவில் உள்ள கியூபாவில் சுண்டு விரலைக்கூடச் சுழற்ற முடியவில்லை. காரணம், காஸ்ட்ரோ!

47 வருடங்களாக கியூபாவின் ஜனாதிபதியாக இருக்கும் காஸ்ட்ரோவுக்கு எதிராக, ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகள் போராடித் தோற்றிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இதுவரை 638 முறை காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு ஆள் அம்புகளை ஏவி, அலுத்துப்போய் ஓய்ந்துவிட்டது.

உடல்நிலை ஒத்துழைக்காததால், அரசு நிர்வாகத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாகக் கடந்த வாரம் அறிவித்துள்ளார் காஸ்ட்ரோ. அமெரிக்க அரசு வெடி வெடித்துக் கொண்டாடாத குறைதான்!

உலகமே கொண்டாடும் புரட்சி நாயகன் சே குவேரா, தன் தலைவனாகக் கொண்டாடிய காஸ்ட்ரோ, ஒரு 'நல்ல சர்வாதிகாரி'. பொதுவாக உலகப் புரட்சியாளர்களை வார்த்தெடுக்கும் வறுமைச் சூழல் காஸ்ட்ரோவுக்கு வாய்க்கவில்லை. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவருக்கு, வாழ்க்கையின் சோகங்களைப் பற்றிய எந்த அறிமுகமும் இளம்வயதில் இல்லை. பாடிஸ்டாவின் சர்வ நாச அதிகாரப் பிடியில் கியூபா சிக்கித் தவித்துக்கொண்டு இருந்த சமயத்தில், கல்லூரி மாணவர் இயக்கங்களில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார் காஸ்ட்ரோ. தன் நண்பர்கள் வறுமையில் வாடித் தவிப்பதைக் கண்கூடாகக் கண்டார். அதன் பிறகுதான் காஸ்ட்ரோவின் கால்கள் மெள்ள மெள்ள புரட்சிப் பாதைக்குத் திரும்பின.

காஸ்ட்ரோவை பாடிஸ்டா ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினாலும், பின்னர் அவரது வேகத்தைக் கண்டு பயந்து, அவரைத் தீர்த்துக்கட்ட முனைந்தார். உத்வேகமில்லாத ஆயிரக்கணக்கான 'ஊழியர்'களைக்கொண்ட பாடிஸ்டாவின் ராணுவத்தை, வெறும் 135 வீரியமான வீரர்களைக்கொண்டு எதிர்த்துப் போராடினார் காஸ்ட்ரோ. இடையில் ஒரு முறை கைதான காஸ்ட்ரோவுக்கு 15 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றக் கூண்டில், பாடிஸ்டாவுக்கு எதிராகக் கர்ஜித்தார் காஸ்ட்ரோ! அந்த உரை, நாட்டு மக்களின் உணர்ச்சிகளை உசுப்பேற்ற, காஸ்ட்ரோவுக்காக ஆதரவுக் குரல்கள் ஆர்ப்பரித்தன. சிறைத் தண்டனையை ரத்து செய்து, காஸ்ட்ரோவை நாடு கடத்தினார் பாடிஸ்டா.

மெக்ஸிகோ சென்ற காஸ்ட்ரோவுடன் இணைந்துகொண்டார் சே குவேரா. காஸ்ட்ரோவின் கம்யூனிஸ காந்தமும், சே குவேராவின் கெரில்லா போர்த் திறமையும் ஒருவரையருவர் ஈர்த்து, இணைத்தன. 1956ல் 'ஜூலை 26 இயக்கம்' என்ற பெயரில் 82 வீரர்களைத் திரட்டி, மீண்டும் பாடிஸ்டா ராணுவத்தைத் தாக்கி, ரத்த மயமாகச் சிதைத்தார் காஸ்ட்ரோ. மெதுமெதுவாக கியூபாவுக்குள் ஊடுருவி, தன்னைப் போல் புரட்சிகர எண்ணமுள்ள இளைஞர்களை இணைத்துக்கொண்டார். 1959ல் பாடிஸ்டாவிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ, அன்று முதல் இன்று வரை கியூபாவின் கிங்!

கியூபாவின் வளங்களை வசப்படுத்துவதற்காக பாடிஸ்டாவை ஊட்டமுடன் ஊக்கப்படுத்திய அமெரிக்காவைக் கண்டால், ஆரம்பத்திலிருந்தே காஸ்ட்ரோவுக்கு எரிச்சல்தான். 'கரைச்சல் பண்ணுவானோ' என்ற சந்தேகத்துடனேயே தன் நே(மோ)சக் கரத்தை அமெரிக்கா நீட்ட, எதிர்பார்த்தது போலவே எடக்கு பண்ண ஆரம்பித்தார் காஸ்ட்ரோ. அள்ள அள்ளக் குறையாத கியூபாவின் சர்க்கரையை, சல்லிசு விலையில் இனி அமெரிக்கா அள்ளிச் செல்ல முடியாது என்று அறிவித்தார். பதிலுக்கு கியூபாவில் இருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அந்தச் சமயம் வலுவான வல்லரசாக இருந்த சோவியத் யூனியன், காஸ்ட்ரோவுக்குக் கை கொடுத்தது. கம்யூனிசமும் அமெரிக்க எதிர்ப்பும் இருவரையும் இணைத்தன.

தனது எல்லையில் ரஷ்ய நிழல் படரவும், அரண்டு போன அமெரிக்கா, கியூபாவிடம் கொடுத்திருந்த 70 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதியை ரத்து செய்தது. கியூபாவின் பொருளாதாரத்தைப் போட்டுத் தாக்குவது அமெரிக்காவின் திட்டம். ஆனால், அசரவில்லை காஸ்ட்ரோ! கியூபாவிலிருந்த அமெரிக்காவின் 850 மில்லியன் டாலர் சொத்துக்களை அரசுடைமையாக்கி, அதிர்ச்சி அணுகுண்டை வீசினார். 'போட்டுத்தள்ள வேண்டியது பொருளாதாரத்தை அல்ல; காஸ்ட்ரோவைத்தான்!' என்று அமெரிக்கா தீர்மானித்தது அப்போதுதான்!

'ஹவான்னா சுருட்டு'ப் பிரியர் காஸ்ட்ரோ. அவர் பிடிக்கும் சுருட்டில் வெடிகுண்டு செட் செய்து பார்த்தார்கள். பலிக்கவில்லை. அவரைக் கொல்ல 1,400 பேருக்கு ஆயுதம் கொடுத்து அனுப்பிப் பார்த்தார்கள். நடக்கவில்லை. அவர் அணியும் 'ஸ்கூபா டைவிங் சூட்'டில் கொடிய நோய்க் கிருமிகளைத் தெளித்துப் பார்த்தார்கள். உணவுகளிலும், மாத்திரைகளிலும் விஷத்தைக் கலக்க முயன்றார்கள். காஸ்ட்ரோவின் தாடியில் உள்ள ஒற்றை முடியைக்கூடப் பொசுக்க முடியவில்லை அமெரிக்காவால்! காஸ்ட்ரோவின் முன்னாள் காதலியான மரிட்டா லோரென்ஸ், மீண்டும் காஸ்ட்ரோவைச் சந்தித்து, “நம் சந்தோஷத்தை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டாடலாம்'' என்றாள். அது விஷ ஐஸ்க்ரீம்! “ஏன் அவ்வளவு கஷ்டப்படுகிறாய்? நீ என்னைத் தாராளமாகச் சுட்டே கொன்றுவிடலாம்!” என்று சிரித்துக்கொண்டே அவளிடம் தன் துப்பாக்கியை நீட்டினார் காஸ்ட்ரோ. அவ்வளவுதான்... விதிர்விதிர்த்து, வெடவெடத்து காஸ்ட்ரோவின் காலடியில் சரண்டரானார் மரிட்டா. அமெரிக்காவின் இப்படியான கொலை முயற்சிகளை அடிப்படையாக வைத்து உருவான, 'காஸ்ட்ரோவைக் கொல்ல 638 வழிகள்' என்ற குறும்படம் படுபிரபலம்.

ஜனநாயகத்தை நசுக்குகிறார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூபாவில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் எல்லாம் பக்கா! காஸ்ட்ரோ பெயரில் கியூபாவில் வீதியோ, சிலையோ... ஏன், ஒரு கட்அவுட்கூடக் கிடையாது.

உடல் நிலை மோசமானதால் காஸ்ட்ரோ முழு ஓய்வு எடுப்பார் என்ற செய்தி வெளியானதும், 'அந்த நல்ல கடவுளுக்கு நன்றி! விரைவில் அவரை உலகத்திலிருந்து நீக்கிவிடுவார்!' என்று நாகூசாமல் சொன்னார், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.

'புஷ் நம்பும் அதே கடவுள்தான் என்னை 638 முறையும் காப்பாற்றியிருக்கிறார் என்பதை புஷ் மறந்துவிட வேண்டாம்!' என்று பதில் சொல்லியிருக்கிறார் பிடல் காஸ்ட்ரோ!

தற்போது கியூபாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் காஸ்ட்ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, ஆரம்ப காலம் முதல் அண்ணனுக்குத் தோள் கொடுத்த தோழன்.

''82 வீரர்களோடு எனது முதல் புரட்சியை ஆரம்பித்தேன். இப்போதென்றால் எனக்கு 10 அல்லது 15 வீரர்கள் போதும்! நீங்கள் எத்தனை சின்னவர்கள் என்பதல்ல விஷயம். உங்கள் அபார நம்பிக்கையும், நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியைத்தீர்மானிக்கும்!''

இதுதான் உலகத்துக்கு காஸ்ட்ரோவின் செய்தி!

நன்றி விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை வீரன் சேகுவேரா

http://puththisali.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை வீரன் சேகுவேரா

இவர் கொள்கையை கொண்டு உருவாகிய ஜே வி பி இன்று சிறிலங்காவில் என்ன செய்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கொள்கையை கொண்டு உருவாகிய ஜே வி பி இன்று சிறிலங்காவில் என்ன செய்கின்றது?

சேகுவேராவின் கொள்கையை ரோகண விஜயவீர,உபதிஸ்ஸ கம நாயக்க போன்றோர் கொண்டிருந்தார்களே தவிர அவர்களை காட்டி கொடுத்த சோமவன்ச போன்றோர் கொண்டிருக்கவில்லை.சுயநலவாதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சேகுவேராவின் கொள்கையை ரோகண விஜயவீர,உபதிஸ்ஸ கம நாயக்க போன்றோர் கொண்டிருந்தார்களே தவிர அவர்களை காட்டி கொடுத்த சோமவன்ச போன்றோர் கொண்டிருக்கவில்லை.சுயநலவாதி
  • கருத்துக்கள உறவுகள்

"...இச் சோமவன்ச வேறு யாருமில்லை. இன்றைய ஜே.வி.பியின் தலைவர்; சவடால் மன்னன், மார்க்சியத்தை தெருப்புழுதிக்குள் வீசி நாசமாக்கிய மன வக்கிரக்காரன். மார்க்சை இரண்டாம் தடவை கொன்றவன். ...."

வரலாற்றில் சில அபூர்வமான தருணங்கள் வாய்ப்பதுண்டு. அத்தருணங்களில் வரலாற்றின் பாய்ச்சலைத் தடுக்கும் சக்திகளே அதனை தூண்டும் கருவிகளாக மாறிவிடும். ஒரு விடுதலை அமைப்பினை அழிப்பதாகக் கருதி எதிரியே அவ்வமைப்பு மீதமாக நிறைவேறப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்வதற்கு தகுந்த வாய்ப்பினை வழங்கிவிடக்கூடும்.

எனவே விடுதலைப்புலிகள் தமது இலக்கினை அடைய எடுக்கும் முயற்சிகளை தாமே தடுத்து நிறுத்தி வருகின்றோம் என மார்பு தட்டும் ஜே.வி.பியே விடுதலைக்கான மிகுதி நிகழ்ச்சி நிரலையும்; ப10ரணப்படுத்த எமக்கு உதவக்கூடும். மார்ச் மாதம் இரண்டாம் திகதி கொழும்பு விகாரமா தேவி வெளியரங்கில் ஜே.வி.பியின் முன்னணி அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய அமைப் பால் (PNM-PATRIOTIC NATIONAL MOVEMENT) பெருமெடுப்பில் எதிர்ப்பியக்கமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2005: மீள் குடியேற்றவாத எதிர்ப்பியக்க ஆண்டு என்கிற இவ்வியக்கம் வெளிநாட்டவர் மீதான கடுமையும் காழ்ப்புணர்ச்சியும் மிக்க பரப்புரையை தீவிரமாக செய்யத்தொடங்கியுள்ளது.

போர்த்துக்கேயர் வருகையின் 500வது ஆண்டு நிறைவின் ஆண்டாக 2005ஐப் பிரகடனம் செய்தது. குடியேற்றவாதம்ää ஏகாதிபத்தியம் என்பவற்றிற்கெதிரான எதிர்ப்பினைத் தேசியவாதமும் முற்போக்கும் கலந்த கலவையாக்கி அதனடிப்படையில் தமிழர் மீதான காழ்ப்பைää வெறுப்பினை விதைக்கும் நிகழ்ச்சியை மறைத்து ஜே.வி.பியினர் போடும் ஆட்டம் எல்லா எல்லைகளையும் தாண்டி விட்டது. இது கண்டு அம்மையாரே அதிர்ந்து போயிருப்பதாகத் தெரிகின்றது. இன்று சிறிலங்காவிலே ஜக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் எல்லா ஆயுதங்களையும் ஜே.வி.பியிடம் பறிகொடுத்து அம்மணமாக நிற்கின்றன. தொடக்கத்தில் வி.ஜே.பி இந்தியாவில் வெறித்தனமாக செயற்பட்டது போலää தலிபான்களின் அடிப்படை வாதப்போக்கின் நிழல்போல ஜே.வி.பி செயற்படுவது இப்போது பலராலும் மிகக்கவலையோடு அவதானிக்கப்பட்டு வரப்படுகின்றது. எனவே கடந்த இரண்டாம் திகதியன்று இந்நிகழ்ச்சியில் விமல் வீரவன்ச உதிர்த்த வரலாற்று வாசகங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

'1505 ஆம் ஆண்டு கடற்கொந்தழிப்புக் காரணமாக போர்த்துக்கேயரான லொறன்சோத அல்மேய்தா இலங்கை வந்தடைந்தார். இன்று கடல்கோள் காரணமாக உதவி வழங்கும் போர்வையில் எம் நாட்டினை அடிமைப்படுத்த பலர் வந்துள்ளனர்." 'இன்று சூல்கெய்ம் கண்டி சென்று மகாநாயக்கர்களை வணங்குகின்றார். சிங்களப் பிரதேசங்களுக்கு வருகை தருகின்றார். இவை யாவும் அன்பின் விளைவல்ல. இவையாவும் நஞ்சு. இதுபோலத்தான் அன்று யோன் டொய்லி என்கிற ஆங்கிலேயர் கண்டி சென்று மகாநாயக்கர்களைச் சந்தித்தார்... சிறி விக்கிரமராயசிங்கனோடு பழகி அவனை மதுவருந்தப் பழக்கினார்ää பின் கழுத்தறுத்தார். கண்டியை அன்று காட்டிக்கொடுத்த டொய்லியின் வேலையைத்தான் இன்று அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்து வருகின்றன." 'பௌத்த இராச்சியத்தை அழித்துவிட்டு தமிழ்க்; கிறிஸ்தவ தமிழீழத்தை உருவாக்கவே சர்வதேசமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அதற்கான நிகழ்ச்சி நிரலை இங்கு செயற்படுத்தி வருகின்றன."

விமல் கூறிய இன்னொரு விடயத்தினை கவனத்தில் நாம் கொள்ளவேண்டும். 'விரைவில் மீட்கப்படாத பகுதிகளும் மீட்கப்பட்டுவிடும். சுனாமியின் பின் 5ää6 நாட்கள் புலிகள் காணாமல் போயிருந்தார்கள். இந்த அரசாங்கம்தான் அவர்களுக்கு மூச்சு வழங்கியது." (தினக்குரல் 04-03-2005)

பிறக்கும்போதே அழிவதற்கான சாபத்தோடு பிறந்தவர்கள் என கதைகளிற்றான் வாசித்துள்ளோம். கருவிலேயே தன்னையே கருவறுப்பதற்கான கருக்களைக் கொண்டு பிறந்த ஒரு விசித்திர முற்போக்கு(?) அமைப்பொன்றினை இப்போது தான் காண்கிறோம். 1505 ஆம்; ஆண்டிற்கு முன் செல்வோம்; அழிக்கப்பட்;ட 250 விகாரைகள் உட்பட அனைத்திற்கும் நட்டஈடு போர்த்துக்கேயரிடம் கோருவோம் என்கிற இக்கருத்துக்கள் உண்மையிலேயே மிக ஆழமான அருத்தங்களை கொண்டவை. உண்மையிலே எமது விடுதலையின் ஆதார நிலைப்பாடுகளும்;ää தார்மீக வலுக்களும் இவ்வாதங்களிலுள்ளன. 1505 முன்னுள்ள நிலைக்கு சென்றால் தமிழ் ராச்சியமும் தமிழ்மக்களின் பண்பாட்டுää பொருண்மிய மரபுகளுமல்லவா முதலில் மீட்கப்படவேண்டும். போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட 500 ஆலயங்களுக்கும் சேர்த்து அல்லவா நட்டஈடு கோரப்படவேண்டும். கிக்கடுவை சிறி சுமங்கல தேரரின் நாட்டுப்பற்று பற்றி வீரவன்ச பேசும்போது சங்கிலி மன்னன் பற்றியும் அல்லவா அவர் பேசவேண்டும்? ஏன் இவை நிகழவில்லை? சிறிலங்காவின்;; முழுமையான நாசத்திற்குக்காரணமாகப் போகும் இக்காரணம் பற்றி இத்தீவில் கவலைப்படுவர் யார்?

எமது முழுக்கவனமும் நிகழ்காலத்தில் ஜே.வி.பி இழைத்து வரும் மாபெரும் தவறு பற்றியதாகவே உள்ளது. ஜே.வி.பி ஏலவே இழைத்த தொடர் தவற்றின் மூன்றாவதும் இறுதியுமாக போகும் இத்தவறு இவ்வுலகின் மனிதநேயமிக்கோரால்ää விடுதலையுணர்வு கொண்டோரால்ää முற்போக்காளரால் ஒருபோதும் மன்னிக்கப்பட முடியாததான பெரும் அவலம் நிரம்பிய நினைவுகளாகப் போகின்றன. ஏனெனில் மிகச்சரியானää மிக நீதியான சமூகக் காரணங்களோடு ஒரு மாற்றம் நடப்பதற்கான அகப்ää புறச்சூழல் தோற்றம் பெற்ற காலகட்டத்திலே ஜே.வி.பி தோற்றம் பெற்றது. சுதந்திரம் பெற்ற மறுகணமே ஏழைச் சிங்கள மக்களை ஏய்த்;து அவர்கள் வளமான வாழ்வைப்பறித்த சிங்கள ஆளும் மேட்டுக் குடிக்கெதிராக முழு இளைஞர் தொகையில் 76 விழுக்காடு கிராமங்களில் வாழ்ந்த ஏழை விவசாயää பாட்டாளிகளின் மைந்தர்கள் கிளர்ந்ததை எவரும் எவ்வாறு பிழையென சொல்ல முடியும்? எனவே தனது முதலாவது கிளர்ச்சியை நடத்த முன்னரே சிறைப்பிடிக்கப்பட்ட றோகன விஜேயவீரா குற்றவியல் நீதி ஆணைக் குழுவின் முன் பேசினார். (மொன்காடா கோட்டை தாக்குதலின் பொழுது சிறையாகியிருந்த பிடல் நீதிமன்றில் வரலாறு என்னை விடுவிக்கும் எனப் பேசியதன் சாயலில்) இங்கே நடப்பது என்னவென்றால் ஒரு சமூக வருக்கத்தின் பிரதிநிதி இன்னொரு வருக்க பிரதிநிதி நோக்கி உரையாடுவதுதான். ஒடுக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளான வருக்கத்தின் பிரதிநிதி ஒடுக்கும் சுரண்டும் வருக்கப்பிரதிநிதி நோக்கி விளிப்பதுதான். 'நானொரு மார்க்சியவாதி@ நானொரு நவீன போல் சுவிச்; நானொரு பாட்டாளி வருக்கப் புரட்சியாளன்." எத்தகைய உயரிய வார்த்தைகள்? இவற்றினை உச்சரிக்க தன்னும் இவருக்குத் தகுதியிருந்ததா. இவையாவுமே உண்மையாகவிருந்தால் இத்தீவில் இருநாடுகள் அருகருகே அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்? றோகண உயிருடன் வாழ்ந்திருப்பார்ää ஒரு புரட்சியாளனாக அவர் உலகால் போற்றப்பட்டிருப்பார்?

ஆனால் நடந்ததென்ன? 1971 ஏப்பிரலில் நடைபெற்றிருக்க வேண்டிய புரட்சி கிளர்ச்சியாகியது. அரசையே கைப்பற்றத்திட்ட மிட்ட ஆயுதப்புரட்சி 53 இராணுவத்தினரை 37 பொலிசுக்காரரை கொன்று 35 காவல் நிலைகளைச் சிலமணிநேரம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததோடு முடிவிற்கு வந்தது. இங்கேயொரு குறிப்பினை வாசகர்களுக்கு சொல்லவேண்டும். ஜே.வி.பியினர் நிறைவேற்றாத புரட்சி தோற்றதற்கு என்ன காரணமென்பதை ஆராய்வதோ அவர்களது இராணுவச் செயற்பாட்டினை விமர்சிப்பதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் எத்தனை மோசமான இராணுவத் திட்டமிடலடிப்படையில் செயற்பட்டுத்தோற்ற இவர்கள் இன்று எல்லாவற்றிற்கும் பிறர்மீது குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் மீதே பெரும் பழிசுமத்துவது எவ்வகையிலும் ஏற்கமுடியாதது. புரட்சியை நடத்த வேண்டிய புரட்சித்தலைவர் புரட்சிக்கு முன்னரே கைதாகி விடுகின்றார். புரட்சிக்கான இறுதி ஆயத்தங்களைச் செய்ய 1971 மார்ச்சில் மாவட்டங்களுக்குப் பயணித்த ரோகண அம்பாறையில் வைத்துக் கைதாகி யாழ்ப்பாணச் சிறைக்குள் தள்ளப்படுகின்றார்.

இந்நிலையில் வித்தியோதயப் பல்கலைக்கழக விகாரையில் கூடிய ஏனைய தலைவர்கள் ஏப்ரல் 5ல்;; சகல காவல்நிலையங்களையும் தாக்க முடிவெடுத்தனர். அரசைக் கைப்பற்றும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. தகவல் பரிமாற கருவிகளற்ற நிலையில் தொடர்புகளை ஏற்படுத்துவதிலேற்பட்ட தவறு காரணமாக இரவு தாக்கப்பட வேண்டிய வெல்லவாய காவல்நிலையம் அதிகாலை 5.20க்கு தாக்கப்பட்டது. மொனறாகலை ஜே.வி.பியினருக்கு தாக்குதலைத் தொடங்குமாறு உத்தரவு தந்தி வழியே வழங்கப்பட்டது. புகழ்பெற்ற இத்தந்தி 'ஜே.வி.பி அப்புகாமி இறந்துவிட்டார். இறுதிச் சடங்கு 5" என்றமைந்தது. இதனை தவறுதலாக விளங்கி அதிகாலையிலேயே தாக்குதல் ஒரு பொலிசு நிலையம் மீது நிகழ்த்தப்பட்டது. எனவே பொலிஸ் தலைமைப்பீடம் விழிப்படைந்தது. இங்கு நகை என்னவென்றால் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கான முன்னறிவிப்பு கிடைத்த நிலையிலும் பொலிசுக்காரர்களால் தங்களை முற்றாகப்பாதுகாக்க முடியாமல் போனதுதான். இவ்வாறாக ஒரு தந்தியால் புரட்சி கிளர்ச்சியான கதையிது.

மிகுதிக்கதையையும் மீண்டும் இங்கே நினைவுபடுத்திவிடுகின்றோம். கொழும்;பு அரசினையும் கைப்பற்றத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. பிரதான இராணுவ முகாமான பனாகொடையைத் தாக்க 800 மாணவர்கள் 25பேர் கொண்ட குழுக்களாகப்பிரிக்கப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டிருந்தனர். பனாகொடை முகாம் பற்றிய வரைபடமும் கையில் இருந்தது. ஆனால் தாக்குதல் நிகழ்த்தப்படவேயில்லை. ஏனெனில் தாக்குதல்காரர்கள் பனாகொடைப் பக்கம் செல்லவேயில்லை. அது போலத்தான் கட்டுநாயக்கா தளம் மீதான தாக்குதலும் நடக்கவேயில்லை. அதுபோலவே கொழும்பை கைப்பற்றவும் பெருந்திட்டமொன்று வகுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சென்று விஜேவீரவை மீட்கும் திட்டமும் தோல்வி கண்டது. நாட்டின் பிரதம மந்திரியான சிறிமாவைக் கடத்துவது அல்லது கொல்வதென்றும் திட்டமிருந்தது. இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் சோமவன்ச அமரசிங்க. நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளரான இவர் 5ம்திகதி இரவே கைதானார். ஊடரங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் தாக்குதலுக்குப் பொறுப்பானோர் நகரமுடியவில்லை. இச் சோமவன்ச வேறு யாருமில்லை. இன்றைய ஜே.வி.பியின் தலைவர்; சவடால் மன்னன்; மார்க்சியத்தை தெருப்புழுதிக்குள் வீசி நாசமாக்கிய மன வக்கிரக்காரன். மார்க்சை இரண்டாம் தடவை கொன்றவன்.

எனவே ஜே.வி.பியினரின் முதற்புரட்சி இவ்வாறு இடை நடுவில் முடிந்தது. இதற்கு ஜே.வி.பியினரின் திறனற்ற இராணுவ மூலோபாயங்கள் உத்திகள் மட்டுமா காரணம்? விடுதலைää புரட்சி போன்ற உயரிய கருத்தமைவுகளை இவர்கள் புரிந்து கொண்டவிதம் அவர்கள் இவற்றினை அபத்தமாக கையாண்டமை எல்லாமே அவர்கள் செய்யக்கிளம்பிய புரட்சிக்கே எதிரானவை. மாற்றத்தினைக் கொண்டு வர தடையான மாறாத நிலைப்பாடுகள்ää இயங்கியல் என்னும் சமூக அசைவியக்கத்தினை பின்தள்ளும் காரணிகள்.

எனவே மார்க்சைää ஏங்கல்சை லெனினைää கரைத்துக்குடித்து சேயைää பிடலை மோசமாக மனதில் உருவகப்படுத்திய றோகணவிக்கு மிக மோசமாகச் சுறண்டப்பட்ட ஏழைப்பாட்டாளியானää மலையக மக்கள் இந்தியாவின் விரிவாக்கக் கைக்கூலிகளாகத் தெரிந்தனர். மலையக மக்களை முன்னனிப்படையாகக் கருதிய சண்முகதாசன் ஒரு இனவாதி. ஒடுக்குமுறைக்குட்பட்ட தமிழ்மக்கள் கிள்ளுக்கீரைகள். இவை யாவற்றினையும் விட 1970களில் தமிழ் இளைஞர் மனதிலே கனன்று கொண்டிருந்த விடுதலைத்தீயை அடையாளம் காண முடியாத அகக்குருடர்கள் இவர்கள்.

இவர்கள் எவ்வாறு புரட்சி செய்வது? ஒருபொழுதும் முடியாது என்பதற்கு நெறி கெட்டு அலங்கோலமாகிய 2வது(?) புரட்சியே இன்னொரு சான்று-

சுட்டது விடுதலைப்புலிகள் மாசி-பங்குனி மாத ஏடு

http://www.yarl.com/forum/lofiversion/index.php/t4617.html

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு காஸ்ரோவை விட கியூப மக்களின் உறுதிதான் கவர்ந்திருக்கிறது.

அருகில் மாயத்தனம் நிறைந்த மேற்குலக சொகுசு உல்லாசா வாழ்க்கையோடு அமெரிக்க மியாமிக் கடற்கரை வா வா என்று அழைக்கின்ற போதும்.. அதெல்லாம் அவசியமில்லை.. எங்கள் தலைவனின் கொள்கைக்கு இணங்கி வாழ்வோம் என்று பல தசாப்தங்களாக நாட்டுப் பற்றோடு வாழும் கியூப மக்களின் உறுதியை நினைத்தாலே உண்மையில் பெருமையா இருக்கிறது.

காஸ்ரோ இன்றும் பேசப்படுகிறார் என்றால் அதற்குக் காரணம்.. அவரை நேசிக்கும் அந்த நாட்டு மக்களின் தியாகம் நிறைந்த வாழ்க்கையே தான்..!

சுயநலத்தை அவர்கள் முன்னிறுத்தி வாழ முனைந்திருந்தால்.. இன்று கியூபா அமெரிக்கா ஆட்டுவிக்கும் ஒரு அரசுத் தலைமையின் கீழ் மக்டொனால்சுக்கும் கே எவ் சிக்கும்... வீணி வடிக்கும் மக்கள் கூட்டத்தைக் கொண்ட தேசமா இருந்திருக்கும்..! :rolleyes:

  • தொடங்கியவர்

விடுதலை வீரன் சேகுவேரா

http://puththisali.blogspot.com/

தமிழீழ விடுதலை வீரன் பிரபாகரன்

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர் -கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார்.

வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் திருமேனியார் குடும்பமாகும். இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.

பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்pலுள்ள 'சிதம்பரா கல்லூரியில்" 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது.

தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன.

அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன் அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. சிங்கள இனவெறியரால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடு, அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.

இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் ~கரிகாலன்~ என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது.

தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் 'தரப்படுத்தல் கொள்கை' ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை.

பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார். ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் ~இரகசிய இயக்கத்தில்~ இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிரு க்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கி- யிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். "உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். உன்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார்.

ஆரம்பகால புரட்சித் தோழர்கள்

பிரபாகரன் அவர்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவாகளாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கதை;தை ஆரம்பிக்கும்போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது, யதார்த்தமானது.

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் பிறந்தது

1970ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட கடுமையான அடக்குமுறையும், சகலதுறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட விதமும், தமிழ் இளைஞர்;கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியிருந்தது. சிங்கள இன வெறி ஆட்சிக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டுமென்று இளைஞர்கள் துடித்தனர். தமிழர்களின் கட்சிகளோ அல்லது மற்ற சிங்கள இடதுசாரி இயக்கங்களோ இந்த இளைஞர்களின் மனக்கொதிப்பை புரிந்து கொள்ளவில்லை. கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் தமிழர்களுக்காகப் போராடச் சரியான தலைவர்களோ, இயக்கங்களோ இல்லை என்று இளைஞர்கள் கருதினார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான அறப்போராட்டங்களைத் தமிழ்த் தலைவர்கள் நடத்தியிருந்த போதிலும் கூட, இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அவர்கள் ஒதுக்கியே வைக்கப் பட்டிருந்தனர். பாராளுமன்றத்தில் அவர்கள் எழுப்பிய குரலுக்குச் செவிசாய்ப்பார் யாரும் இல்லை. கானகத்தில் காரிருளில் எழுப்பப்பட்ட குரலாக அவை ஒலித்தன. சிங்கள இன வெறிக்கு இரையாகிப்போன இடதுசாதிக் கட்சிகளும் கூட்டுச்சேர்ந்து தமிழருக்கு எதிராகச் செயற்பட்டன. தமிழர்களின் போராட்டங்களை அவர்களும் அலட்சியம் செய்தனர். எனவே தமிழ் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகளை நம்பக் கொஞ்சமும் தயாராக இருக்க வில்லை.

இதன் விளைவாகத் தமிழ்ப் பகுதியில் அரசியல் சூனியநிலை ஒன்று உருவாயிற்று. சிங்கள பேரினவாதிகளின் தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து, தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்நடத்திச் செல்லப் 'புரட்சிகரமான அரசியல் அமைப்பு' ஒன்று இன்றியமையாதது என்பதைத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினார்கள்.

இதனால் 'தமிழ் மாணவர் பேரவை' என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிங்கள அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது. தமிழ் மாணவர் மத்தியில் மாபெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலமே சிங்கள இனவெறியர்களின் கொடுமைகளில் இருந்து தமிழர்கள் விடுதலை பெறமுடியும் என்பதை மெல்ல மெல்லத் தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினர்.

தமிழ் மாணவர்கள் பேரவை பலம் பொருந்திய இயக்கமாக வளர்ந்தது. இதில் தீவிரவாதக் குழுவின் முக்கியமானவராக பிரபாகரன் அவர்கள் இயங்கினார். அக்குழுவில் வயதில் குறைந்தவராகப் பிரபாகரன் அவர்கள் இருந்தபடியால் "தம்பி" என்ற செல்லப் பெயர் கொண்டு மற்றவர்களால் அழைக்ப்பட்டார். (இன்றும் இப்பெயர் கொண்டு பிரபாகரன் அவர்களை அழைப்பவர்கள் இருக்கிறார்கள்) தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்தத் தீவிரவாதக் குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டடோர் இருந்தனர்.

இக்கால கட்டத்தில் அரசாங்கத்திற்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவி;க்கும் வகையில் அரச பேருந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவை போறுப்பேற்றுக் கொண்டு பிரபாகரன் அவர்கள் உட்பட நான்குபேர் சென்றார்கள். ஆனால் மற்றவர்கள் மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி ஓடி விட்டார்கள். 16 வயதுச் சிறுவனாக இருந்த பிரபாகரன் அவர்கள் மட்டும் மனத்துணிவுடன் சென்று அரச பேருந்தைக் கொளுத்தி விட்டுத் திரும்பி வந்தார். பிரபாகரனின் இந்தத் துணிவும், ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தன. அவரைவிட வயது மூத்தவர்கள் எல்லோரும் அவரின் துணிவையும் பொறுப்பெடுத்த காரியத்தையும் பாராட்டினார்கள். தமிழ் தீவிரவாதத்தின், தமிழ் தீவிரவாத இயக்கத்தின் முன்னோடியாகத் தோன்றிய பிரபாகரன் அவர்கள் மீது அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.

அதே நேரத்தில் தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்த சிங்கள அரசாங்கம் அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரைக் காவற்துறையினர் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். சித்திரவதை தாங்கமுடியாமல் அவர்களில் ஒருசிலர் தமது சக கூட்டாளிகளைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். சிங்கள காவற்துறையின் கொடுங்கோலர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து சித்திரவதை செய்தனர். (இக் காலத்தில் கொழுப்பிலிருந்த 4ம் மாடி என்ற கட்டிடம் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதற்கு பெயர் பெற்ற இடமாகும்.) அதனால் பிரபாகரன் அவர்கள் தமிழகத்திற்குச் சென்றார்.

பிரபாகரன் அவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருக்க விரும்பாமல் 1972 ன் ஆரம்பப் பகுதியில் தமிழீழம் திரும்பினார். ஆங்காங்கு சிதறுண்டு இருந்த இளைஞர்களிடையே காணப்பட்ட தீவிரவாதச் செயற்பாடு, ஒரு புரட்சிகர இயக்கத்தை, புரட்சிகர அரசியற் கோட்பாடுகளைக் கொண்ட ஒரு புரட்சிகர தலைமையை நாடி நின்றது. இப்புரட்சிகரச் சூழ்நிலையில்தான் "புதிய தமிழ்ப் புலிகள்" என்ற இயக்கம் 1972இன் நடுப்பகுதிகளில் தலைவர் பிரபாகரன் அவர்களால் அவரின் 17வது வயதில் தொடக்கப்பட்டது. இவ் இயக்கம் மிகவும் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டதாக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது.

புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்

"புதிய தமிழ்ப் புலிகள்" இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்;தில் இருந்தே உறுதியும், துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில், தலைவர் பிரபாகரன் அவர்கள், தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு, அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார்.

(1) புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975 ஆடி 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்ப்பாண மேயருமான அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த புதிய தமிழ்ப்புலிகள் மேயரின் கார்ச் சாரதியை மடக்கி, அவரது காரிலேயே ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.

இவ்வெற்றிகரமான முதலாவது இராணுவ நடவடிக்கையைத் தானே வகுத்து அதற்குத் தலைமை தாங்கிச்சென்று செய்து முடித்த பெருமை தலைவர் பிரபாகரன் அவர்களையே சாரும். தமிழீழ மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க முயலும் தமிழ்த் துரோகிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்ததுடன் சுதந்திர தாகம் கொண்ட தமிழ் இளைஞரைப் பொறுத்தவரை இந்நடவடிக்கை தமிழீழ விடுதலையை நோக்கிய நீண்ட, கடினமான பயணத்தில் தலைவர் பிரபாகரனின் ஆளுமையிலும் தலைமைத்துவத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் அமைந்தது.

(2) "புதிய தமிழ்ப் புலிகள்"

இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும் அதனைக் கட்டியெழுப்புவதற்கும் நிதி பெருமளவில் தேவைப்பட்டது. இதற்கு அரசாங்கப் பணத்தைப் பறித்தெடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.

சிறீலங்கா அரசு எல்லா மக்களினதும் வரிப்பணத்திலிருந்தே தமது நிதியினைப் பெற்றுக் கொள்கிறதாயினும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்ப் பிரதேசங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டே வந்தன. எனவே அரசாங்கப் பணத்தை பறித்தெடுத்துத் தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெற்றுக்கொள்வது நியாயமானது என உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் 1976 பங்குனி 5ம் நாள் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பட்டப் பகலில் தன் தோழர்களுடன் புகுந்து துப்பாக்கி முiயில் ரொக்கமாக 5 இலட்சம் ரூபாவையும் நகையாக 2 இலட்சம் ரூபாவையும் எடுத்துக் கொண்டு சென்றார்.

அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டது, அதையடுத்து புத்தூர் வங்கிச் சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து வடக்கில் ஒரு விசேட உளவுப் படையின் பிரிவு அமைக்கப்பட்டது. 'புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை' அழித்தொழிப்பதையே முக்கிய நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்த பொலிஸ் தலைமையகம் இப்பிரிவை உருவாக்கியது. இப்பிரிவு தகவல் கொடுப்போர், துரோகிகள் ஆகியோரைக் கொண்டதாக தமிழீழப் பகுதிகளில் செயற்படத் தொடங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகள்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோ- ட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார். இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் "கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்" என்று கூறினார்.

தலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார்.

சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை, துரோகிகளாக அழித்தல்.

தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல்.

இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து, அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.

1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் 'தமிழின அழிப்பு" ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார்.

1978 சித்திரை 7ம் நாள், கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1978 சித்திரை 25ம் நாள், முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர்.

1978 வைகாசி 19ம் நாள் 'தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்" சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது.

1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் Nஐ.ஆர். nஐயவர்த்தனா அரசு "புதிய அரசியலமைப்பை" உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது.

1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர்.

1979 ஆடி 20ம் நாள் Nஐ.ஆர்.nஐயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தை" அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும்.

இதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கிpல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (Nஐ.ஆரின் மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் Nஐ.ஆர். nஐயவர்த்தன.

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில், தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார். இதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு, இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94,000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது.

இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.

ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்

1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.

1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் Nஐ.ஆர். nஐயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர்.

1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.

1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.

1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் 'பாதுகாப்பு மாநாடு' ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.

1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.

1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை, நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு Nஐ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது. 1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.

இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர், தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து, விடுதலை பெற்ற தமிழீழத்தில், தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.

தமிழீழப் போர் 1(ஆவணி 1984 - ஆடி 1987)

ஆடி 1983இல் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தனர். விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் பன்மடங்காகப் பெருகின. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளைப் புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி, பாரிய கெரில்லா இராணுவப் பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவாக்கம் செய்தார்.

தமிழீழப் போர் ஒன்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் இந்த ஆடி 1983 இன அழிப்புடன்தான் ஆரம்பமாகின்றது. இந்தக் காலகட்டத்தில் புயலின் மையமாக நின்று, ஈடுகொடுத்து, எல்லா எதிர்ப்பியக்கத்திற்கும் தமிழீழ மக்களின் வீரவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்.

இந்தியத் தலையீடு

இதுவரை காலமும் இலங்கைத் தீவை அதிரவைத்த சம்பவங்களையும் அதன் வரலாற்றுப் போக்கினையும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அரசியல், இராணுவ நகர்வுகளையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்த இந்திய அரசு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் ஆடிக்கலவரத்தை ஏதுவாகக் கொண்டு இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிட முடிவு செய்தது.

1983 ஆவணியில், இலங்கைத் தீவை தனது பூகோள-கேந்திர ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர இந்திய அரசு முடிவு செய்தது. தமிழ்ப் போராளிகளுக்கு ஆயதமும்பயிற்சியும் அளித்து ஆயத எதிர்ப்பயிக்கத்தைத் தீவிரமாக்கி, சிங்கள அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, தனது பூகோள நலன்களை சாதித்துக் கொள்ள இந்தியாவின் உளவுப்பிரிவான ~றோ~ மூலம் திட்டமிட்டு செயற்பட்டது. அதேநேரத்தில் பல தமிழ் இயக்கங்களுக்குக் கூடிய அளவு ஆயுதங்களும் பயிற்சியும் பண உதவியும் அளித்துவிட்டால் இராணுவ சம பலத்தை மாற்றியமைத்து 'தமிழீழ விடுதலை'யில் உறுதியாக நிற்கும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் அல்லது ஒழித்து விடலாம் எனவுந் திட்டமிட்டு இந்திய அரசு செயற்பட்டது. ஆனால் இவை யாவற்றையும் நன்கு அவதானித்து அதற்கு ஏற்ப திட்டமிட்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு செய்துவந்த சிறு உதவிகளைப் பெற்றுக்கொண்ட அதே நேரத்தில் தன் ஆளுமையால் எவருக்கும் தெரியாமல் குறிப்பாக இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைக்கும் தெரியாமல் விடுதலைப் போருக்குத் தேவையான பல ஆயத தளபாடங்களையும் வேறு பொருட்களையும் தமிழீழத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

மாசி 24, 1983இல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தொடர்ச்சியாகவும் தீர்க்கமாகவும் விடுதலைப் புலிகளின் கெரில்லா அணியினர் பல அதிரடித் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றனர். இதனால் கொதிப்படைந்த இராணுவம் அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவித்தது. தலைவர் பிரபாகரனின் தலைமையில் விடுதலைப் புலிகள் புரிந்து வந்த போராட்ட சாதனைகளைக் கண்டு தமிழீழ மக்கள் பூரிப்படைந்தனர்.

ஆனால் இந்திய அரசோ கலக்கம் அடைந்திருந்த நிலையில் ஐப்பசி 31, 1984 இல் இந்திரா காந்தி தன் மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அரசியல் அனுபவம் குறைந்த விமான ஓட்டியான இந்திரா காந்தியின் மூத்த மகன் ~ராஐPவ் காந்தி~ இந்தியப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் இலங்கைத் தீவின் இனப் பிரச்சினை பற்றியும் தமிழீழ விடுதலைப் போர் பற்றியும் குறிப்பாக தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் தவறான எண்ணங்கள் கொண்டு செயற்படத் தொடங்கினார். தமிழீழ மக்களின் உயிர்வாழும் உரிமை இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசால் பறிக்கப் பட்டுள்ளது என்ற உண்மையைப் புரிய மறுத்த ராஐPவ் காந்தி பதவியேற்ற காலம் முதல் தமிழீழ விடுதலைக்கு எதிராக, சிறீலங்கா அரசுக்குச் சார்பாகச் செயற்படத் தொடங்கினார். இதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வழிநடத்தி வந்த தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் குறிப்பாக ராஐPவ் காந்திக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது முப்பத்தொராவது வயதில் தமிழீழம், புங்குடுதீவைச் சேர்ந்த மதிவதனி என்ற பெண்ணை 1984ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திம்புப் பேச்சுவார்த்தை

ராஐPவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில் கெரில்லா நடவடிக்கைகளில் 1985 ஆனி 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஆடிமாத முற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின. சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக் கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சு வார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது. ஆனால் இந்தியா பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறியிருக்கிறார். "எமக்கு இந்தியாவின் உதவியும் நல்லெண்ணமும் அவசியம். அதே வேளையில் இந்தியா தனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம் விருப்பவில்லை. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழு உரிமையும் எமது மக்களுக்கு உண்டு"என்று.

ஆனால் இந்திய அரசும் அதன் பிரதமரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அப்போதைய தமிழக முதல்வருக்கு அழுத்தங்களைக் கொடுத்து, 1986ம் ஆண்டு ஐப்பசியில் தமிழக காவற்துறை மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த தகவல் தொடர்புச் சாதனங்களைப் பறித்தார்கள். தலைவர் பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை நடத்துவது போன்று நடத்தினார்கள்.

சாகும்வரையிலான உண்ணாவிரதம்

இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

ஆயுதப் போராட்ட இயக்கத்தின் தளபதி, சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான தலைவர் பிரபாகரன், அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர், ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ம் நாள் தொடங்கினார். அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்துகொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப் பட்டது. இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள்.

பத்திரிகையாளர்-

உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமே, ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள்.

தலைவர் பிரபாகரன்-

உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவேதான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்" என்றார்.

பெங்களுர் மாநாடு

இதற்குப் பின் பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் சனாதிபதி Nஐ.ஆர் nஐயவர்த்தனா வந்தபோது அவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற ரீதியில் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கலாம்~~ என்று Nஐ.ஆர். nஐயவர்த்தனா சொன்னதாக தலைவர் பிரபாகரனிடம் இந்திய அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தலைவர் பிரபாகரனோ "வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இருப்பதனை ஒன்றாக இணைக்கவேண்டும் என்பதனை நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது, இரண்டை நாலாக கூறுபோடும் யோசனையை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?" என்று கூறி நிராகரித்து விட்டார்.

அத்துடன் இந்த பெங்களுர் பேச்சுவார்த்தையில் தான், தலைவர் பிரபாகரனுக்கு முதல் அமைச்சர் பதவி தருவதாக Nஐ.ஆர். nஐயவர்த்தனா இந்திய அரசுக்கூடாக தெரிவித்தார். இதற்கு தலைவர் பிரபாகரன் "இது ஒரு மாயவலை, தமிழ் இனத்தை அழிப்பதற்கு வேறு வகையாகப் பின்னப்பட்ட சதிவலை. அதிகாரங்கள் எதுவுமற்ற, நினைத்தால் சனாதிபதியால் கலைக்கக் கூடிய மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யமுடியாத பொம்மைப் பதவிதான் முதல் மந்திரிப் பதவி" என்று கூறி அதனைத் தூக்கி எறிந்துவி;ட்டார்.

தமிழீழம் திரும்புதல்

தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேசவரும்போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும்வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ம் ஆண்டு தை 3ம் நாள் தமிழீழம் திரும்பினார்.

தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில், இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் "இரட்சகர்" என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது.

1987 வைகாசி 1ம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில், "நாம் போராடி, இரத்தம் சிந்தி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசுதான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம். இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்" என்றார்.

தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு

1987ம் ஆண்டு ஆடி 24ம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து 'இந்தியாவின் பிரதமர் ராஐPவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக' கூறித் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து செல்ல முயன்றார்கள், அவசரப்படுத்தினார்கள்.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கு தலைவர் பிரபாகரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் 'இன்று தமிழ் மக்கள் தங்கள் இலட்சியத்தை வென்று எடுக்கும் ஒரு தலைமையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறுதி யிட்டுக் கூறுகின்றேன். நீங்கள் எனக்கு அளித்துவரும் பொறுப்புக்களை நான் நேர்மை- யாகவும் உண்மையாகவும் உறுதியுடனும் செய்வேன் என நம்புகின்றேன். தற்காலத்தில் காணப்படும் இடைக்கால தீர்வுகள் எமது பிரச்சினையின் தீர்வாக அமையாது. எனவே தமிழ் மக்களின் நிரந்தரமான, நிம்மதியான, சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நிரந்தர தீர்வுக்காகவே நான் பாடுபடுகின்றேன். இத் தீர்வு தமிழீழம் என்றே நான் நம்புகிறேன். இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தியின் விசேட அழைப்பின் பேரிலேயே நான் தமிழீழத்தைவிட்டு உத்தியோக பூர்வமாக இந்தியா செல்கின்றேன்' என்று கூறிவிட்டு இந்திய அரசு அனுப்பி இருந்த இராணுவ கெலிகொப்டரில் டில்லிக்கு புறப்பட்டார். போகும் வழியில் தமிழகத்தின் முதலமைச்சர் எம்.ஐp. ஆரை சந்தித்துப் பேசினார். அப்போதும் எதற்காக இந்த அவசர அழைப்பு என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. டில்லி சென்ற தலைவர் பிரபாகரனையும் அவரது ஆலோசகர்களையும் 'அசோகா ஹொட்டலில்' தங்க வைத்தனர்.

இந்தியாவின் சிறீலங்காவுக்கான தூதுவர் தீட்சித், இந்திய வெளிநாட்டுத்துறைச் செயலாளர் மேனன் உட்படப் பல அதிகாரிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து இந்தியாவும் சிறீலங்காவும் செய்து கொள்ளவிருக்கும் ~ஒப்பந்தம்~ பற்றி முதன்முதலாகத் தெரிவித்தார்கள். இதைக் கேட்டதும் தலைவர் பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார். ஒப்பந்தத்தின் பிரதிகளை அவரிடம் கொடுத்துவிட்டு உடனே திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினை ஏற்கமுடியாது என்று தலைவர் பிரபாகரன் மறுத்தார். தலைவர் பிரபாகரனை சம்மதிக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தலைவர் பிரபாகரன் உறுதியாக ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார். இந்தியப் பிரதமர் சந்திக்க விரும்புவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள், பிரதமரும் தலைவர் பிரபாகரனும் சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை. இடையில் நான்கு நாட்கள் பறந்தோடின. தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்ததும் தமிழகத்தில் இருந்த இந்தியாவின் அடிவருடிகளான மற்றைய தமிழ் குழுக்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். சொல்லி வைத்தபடியே ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தி அறிவித்தார். யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆடி 29ம் நாள் கொழும்பு செல்லப் போவதாகவும் அறிக்கை விட்டார்.

இதற்குப் பின்னர் தலைவர் பிரபாகரனை இந்தியப் பிரதமர் சந்தித்தார். அப்போது தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்திலுள்ள பலகுறைகளைச் சுட்டிக் காட்டினார். ஆனால் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகப் பொய்யான செய்திகள் இந்திய அதிகாரிகளால் தொடர்பு சாதனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. உடனே தலைவர் பிரபாகரன் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த அசோகா ஹொட்டலைச் சுற்றி 'கறுப்புப் பூனைகள்' என்ற இந்திய கொமாண்டோப் படைப்பிரிவினர் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.

இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம்

1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றி, தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப் போரை வழிநடத்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் ஒப்புதல் இன்றி அவரை டில்லியில் ஹொட்டலில் பூட்டி வைத்துவிட்டு, பிராந்திய வல்லரசு என்ற இறுமாப்புடன் இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தி சிறீலங்காப் பிரதமர் Nஐ.ஆர். nஐயவர்த்தனாவுடன் இந்தியாவின் பூகோள நலனுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இந்திய இராணுவம் தமிழீழப் பகுதிகளுக்கு 'அiதிப்படை' என்ற பெயரில் அனுப்பப்பட்டது.

ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியா திரும்பிய இந்தியப்பிரதமர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துச் சில உறுதிமொழிகளை அளித்தார். இந்த உறுதி மொழிகளைப் பெற்றுக் கொண்ட தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பினார்.

சுதுமலைப் பிரகடனம்

இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் 'எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்' என்றார்.

இதன் பின்னர் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.

ஆனால் இந்தியப் பிரதமர் ராஐPவ்காந்தி, தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாது இழுத்தடித்து வந்ததோடு, தமிழ்த் துரோகக் குழுக்களை தமிழீழப்பகுதிகளில் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய அவர்களை ஏவிவிட்டார்.

திலீபனின் தியாகச்சாவு

இந்நிலையில் விடுதலைப் போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் இந்தியாவின் 'இரட்சகர்" என்ற போலி வேடத்தை மக்களுக்கு புரிய வைக்கவும் தலைவர் பிரபாகரனின் அனுமதியுடன் தியாகி திலீபன், இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்தில் இருந்த 5 விடயங்களை நிறைவேற்றும்படி கூறி நீராகாரம் இன்றி சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை 1987 ஐப்பசி 15ம் நாள் ஆரம்பித்தார். இந்தியாவின் துரோகப் போக்கினால் ஐப்பசி 26ல் லெப்டினன்ட் கேணல் திலீபன் வீரச்சாவடைந்தார்.

லெப்டினன் கேணல் திலீபனின் வீரமரணம் குறித்து தலைவர் பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில், 'வடக்கு கிழக்கு அடங்கலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் முன்னெடுக்கும் இந்தச் சாத்வீகப் போராட்டத்தில் அணிதிரள வேண்டும். மக்களின் ஒரு முகப்பட்ட எழுச்சி மூலமே நாம் எமது உரிமைகளை வெள்றெடுக்கலாம். திலீபனின் ஈடுஇணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இதுதான்' என்றார்.

12 போராளிகள் வீரமரணம்

திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் இருவர் உட்பட 17 போராளிகள் சிறீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டுப் பலாலி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். 'போர் நிறுத்த நேரத்தில், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் போராளிகளும் கைது செய்யப்பட்டது இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணானது' என தலைவர் பிரபாகரன் இந்திய அரசுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்துப் போராளிகளை உடன் விடுவிக்குமாறு இந்திய, சிறீலங்கா அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இந்திய அரசின் துரோகத்தனத்தால் 17 போராளிகளும் சயினைட் உட்கொண்டனர். அவர்களில் 12 போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டனர். இதுபற்றி மக்களுக்கு தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில் 'எமது போராளிகளை விடுவிக்க வேண்டுமென இந்திய அரசு சிறீலங்கா சனாதிபதி nஐயவர்த்தனாவிடம் உறுதியாகச் சொல்லி இருந்தால் இந்த அநியாயமான சாவுகள் நிகழ்ந்தே இருக்காது. இந்த வகையில் எமது போராளிகளுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பளிக்கும் பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது. எமக்குப் பாதுகாப்பளிக்கும் அதிகாரமும் பொறுப்பபும் தார்மீகக் கடமைப்பாடும் இந்தியாவுக்கு இல்லை என்றால் இந்தியப் படைகள் இங்கிருப்பதன் அர்த்தம் என்ன? சனாதிபதி nஐயவர்த்தனாவுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் சமூக விரோத இயக்ககங்களுக்கும் பாதுகாப்பளித்து விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதுதான் இந்திய சமாதானப் படைகளின் நோக்கமா? எமது தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்குப் பதில் அவர்களைச் சிங்கள இராணுவத்திடம் ஒப்படைக்கத் துணைபோனது இந்திய சமாதானப் படையினர் எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றம். இந்த சூழ்நிலையில்தான் நாம் இனி யுத்த நிறுத்தத்தைப் பேணுவதில்லை என முடிவெடுத்தோம்' என்றார்.

இந்திய - தமிழீழப் போர்

1987ஐப்பசி 10ம் நாள் இந்திய - தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம். ஐp. இராமச்சந்திரனுக்கு 1987 ஐப்பசி 11ம் நாள் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு. பந்த், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் nஐனரல் சுந்தர்ஐp ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா சனாதிபதி nஐயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையென்றும் nஐயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராககடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது. 1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகைக் (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம். போர் மூண்டது. இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை, விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காக போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிட போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.'

யுத்தம் தீவிரமாக நடைபெற்றது. யாழ் குடாநாட்டை கைப்பற்ற இந்தியப்படை ஒரு மாதகாலம் போரிட்டது. இப்போரைத் தலைவர் பிரபாகரன் தலைமையேற்று விடுதலைப் புலிகளை வழிநடத்தினார். தொடர்ச்சியான கெரில்லாப் போர்முறைதான் இனிமேல் இந்தியப் படையை எதிர்கொள்ளத் தகுந்த போர்முறை எனத் தீர்மானித்து, தலைவர் பிரபாகரன் தனது போராளிகளுடன் தமிழீழக் காடுகளுக்குச் சென்றார்.

கெரில்லா போர் தொடர்ந்தது. இந்தியப் படையினர் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளை எதிர் கொள்ளத் திராணியற்ற இந்தியப் படை பொதுமக்கள் மீது தனது வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பொது மக்கள் பலரைக் கொன்று குவித்தது. பெண்கள் பலரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தது.

இந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் 12.10.1987 இலும் 14.10.1987 இலும் 13.01.1988 இலும் இந்தியப்பிரதமர் இராஐPவ்காந்திக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமக்கு அளித்த உறுதி மொழிகளின்படி இடைக்கால அரசைத் தமிழ்ப்பகுதிகளில் நிறுவினால் தாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துக் கடிதம் அனுப்பினார். ஆனால் ராஐPவ் காந்தி தலைவர் பிரபாகரனைக் கொன்று, தமிழீழ விடுதலை அரசியல் இலட்சியத்தை அறவே ஒழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் தன்னுடைய ஆயுதப் படைகளை இலட்சக்கணக்கில் தமிழீழத்தில் இறக்கிவிட்டார். போர் தொடர்ந்தது.

தமிழீழத் தேசியத் தலைவர்

'தமிழீழ விடுதலை' என்று சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கிப் போராடப் புறப்பட்ட தமிழ்க்குழுக்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்து. 'தமிழீழவிடுதலை' என்ற இலட்சியத்தைக் கைவிட்டு இந்திய, சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகளாக மாறிச் செயற்படத் தொடங்கினர்.

ஆனால் தலைவர் பிரபாகரனோ சாதி, சமய, பிரதேச வேறுபாடு இன்றி, தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்தார். உலகம் பார்த்து வியந்து நிற்க சின்னஞ் சிறிய தமிழீழ தேசம் வீராவேசத்துடன் போரிட்டது. இலங்கைத் தீவில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் போரை தலைமை தாங்கி நடத்தும் ஒப்பாரும் மிக்காரும் அற்ற முதல் தலைவன் பிரபாகரன் தான் என்று சிறீலங்கா நாட்டு சிங்கள மக்களும் புகழந்தனர். இப்போர் உக்கிரமாக நடைபெற்ற காலப் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் என்ற நிலை 'தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்' என தமிழ் மக்கள் தமிழீழத்திலும் உலகெங்கிலும் அழைக்கத் தொடங்கினர்.

அன்னை பூபதி தியாகச் சாவு

இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தாய்க்குலம் எழுச்சி கொண்டு போராடப் புறப்பட்ட போது தென் தமிழீழத்தில் உள்ள மட்டக்களப்பில் அன்னை பூபதி தன் வயிற்றினில் போர் தொடுத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்து என்று இந்திய அரசுக்குக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் காந்தியம் பற்றி புகழ்ந்துரைக்கும் இந்திய தேசத்துப் பிரதமர் அன்னை பூபதியின் உண்ணாவிரதத்தை எள்ளிநகையாடினார். அன்னை பூபதி 19.04.1988 இல் 'தியாகச் சாவு' அடைந்தார்.

அன்னை பூபதியின் தியாகச் சாவு பற்றி அறிக்கை ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்தார். 'எமது புனித விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுக் காவியமாகிவிட்ட எமது தியாகிகளில் அன்னை பூபதி ஓர் உன்னத இடத்தைப் பெறுகிறார். ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் தலைவியாக வாழ்ந்து வந்த சாதாரண வாழ்க்கையைத் துறந்து, சாதாரண பற்று உறவுகளைத் துறந்து, தனது இனத்தின் விடுதலைக்காக அவர் தனது உயிரை அர்ப்பணித்தார். இந்திய இராணுவ அடக்குமுறைக்கு எதிராக அவர் தொடுத்த அறப்போர் காந்திய தேசத்தை தலைகுனிய வைத்தது. தனி மனிதப் பிறவியாக அவர் சாகவில்லை. தமிழீழத்தாய்க் குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னத வடிவம் அடைகிறது' என்றார்.

சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை

1988இல் புதிய சனாதிபதியாக பதவியேற்ற பிரேமதாச 1989இல் இருந்தே விடுதலைப்புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு மாறி மாறி அழைப்புக்களை விடுத்தார். தமிழீழ மண்ணில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளும் விரும்பியதால் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிரேமதாசாவின் அழைப்பை ஏற்க முடிவு செய்தார். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் விவேகமான இராசதந்திர காய்நகர்த்தலால் இந்திய - சிறீலங்கா உறவுகளில் பகைமை மூண்டது. இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு பிரேமதாசா பகிரங்கமாக அறிவித்தார்.

சிறீலங்காவின் அழைப்பின் பேரில் அமைதிகாக்கப் போரிடுவதாகக் கூறி வந்த இந்திய அரசுக்கு நிலைமை சங்கடமாகியது. அவமானப்பட்டு போரில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் படுதோல்வியடைந்து முகத்தில் கரிப+சியபடி இந்திய இராணுவம் பங்குனி 1990இல் தமிழீழத்தில் இருந்து வெளியேறிச் சென்றது.

இந்திய பிராந்திய வல்லரசு விடுத்த மிகப் பெரும் இராணுவ சவாலை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உறுதியான இராணுவ நடவடிக்கைகளாலும், ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அரசாலும் அதன் இராணுத்தாலும் உருவாக்கப் பட்ட 'தமிழ் தேசிய இராணுவம்' என்ற கூலிப்படை சிதறுண்டு ஓடியது. பெரும்பான்மையோர் ஆயதங்களுடன் சரணடைந்தனர். மாகாணசபை கவிழ்ந்தது. இந்திய அரசின் இறுதித்திட்டமும் தவிடுபொடியாகியது.

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தனது மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார். சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இறுதியில் சிங்கள இனவாதத்தின் ஏமாற்று வேலைகளால், விவேகமான அரசியல் நகர்வுகளினாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெற்றி கொண்டது. இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்கள் துரித கதியில் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்தன. இல்டசிய உறுதியும் போர் அனுபவமும் வீரமும் மிகுந்த விடுதலைப்புலிப் படைவீரர்களின் மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு பேச்சுவார்த்தை உருப்படியான தீர்வுகள் பற்றி ஆராயப்படாது முறிந்து போனது.

தமிழீழப் போர் 2

சிங்களக் காவல்துறையினரின், ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு அரசுக்கு சுட்டிக்காட்டி வந்தனர். ஆனால் சிறீலங்கா அரசோ அதுபற்றிய அக்கறையின்றி இருந்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தைகளில் முறுகல் நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்த போது ஆனி 10, இராணுவத்தினரின் அத்துமீறில்கள் பற்றிப் பலமுறை சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகளில் 1990 இல் தென்தமிழீழத்தில் உள்ள கல்முனை என்ற இடத்தில் இஸ்லாமியத் தமிழர் ஒருவருக்கு எதிராக சிங்களக் காவற்துறையினர் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் சிங்களக் காவல்துறையினருக்கும் இடையில் எழுந்த சச்சரவு இறுதியில் யுத்தமாக மூண்டது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உடனடியாகவே இவ்யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் சிறீலங்காவின் சிங்கள இனவாத அரசும் அதன் படைகளும் தமிழின அழிப்பும் தமிழ்மண் பறிப்புமே தமது இறுதி முடிவு என்ற ரீதியில் செயற்பட்ட போது தமிழீழ மக்களையும் தமிழீழ மண்ணையும் பாதுகாப்பதற்குச் சிறீலங்கா அரசு ஏவிவிட்ட யுத்தத்தை எதிர்கொள்வதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.

1991 புரட்டாதி 1ம் நாள் தமிழீழப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அப்போதைய அரசியல், இராணுவ நிலைமைகள் பற்றி விளக்கும்போது 'தமிழீழப் போர் 2 தொடங்கும் போது இருந்த பல சிங்கள இராணுவ முகாம்கள் தற்போது இல்லை. கொக்காவில், மாங்குளம் போன்ற இடங்களில் இருந்த இராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதால் வன்னி;ப் பிரதேசத்தின் பெரும்பகுதி எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. யாழ் கோட்டை முகாம் அழிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்தின் நகரப்பகுதியும் விடுவிக்கப்பட்டது. ஆனையிறவுப் போரில் மரபு ரீதியான இராணுவ அணியாக எதிரிகளுடன் நேரடியாக மோதி அழிக்கும் நிலையின் முதற்படியை எடுத்து வைத்Nதூம். பெரிய எண்ணிக்கையிலான இராணுவத்தை நீண்ட நாட்களாக தடுத்து வைத்துப் போரிட்டோம். ஆனையிறவுப் போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அஞ்சினால் யுத்தம் நடத்த முடியாது. இழப்புக்களை வளர்ச்சியின் ஊன்று கோலாகக் கருதவேண்டும். 10-07-91 இல் ஆனையிறவுப் போர் ஆரம்பித்து 23-08-91 வரையிலான 43 நாள் போரில் 564 போராளிகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்ததைவிட பெரியளவில் படையினர் இறக்கப்பட்டு நீண்ட நாட்கள் இடம் பெற்ற யுத்தத்தைப் பார்த்தால் எமது தரப்பிலான இழப்பு பெரிதெனச் சொல்ல முடியாது. துன்பங்களை அனுபவிக்கும் மக்களிடம் அடுத்து என்ன என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யும். எனினும் பெரிய அளவில் அவர்கள் அணிதிரள வேண்டும். போராட்டத்தில் ஏற்படும் இழப்புக்களை உடனுக்குடன் ஈடுசெய்ய வேண்டும். மக்கள் முழுமையாக எம்மோடிணைந்து எமது கஷ்டதுன்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நிபந்தனையற்ற வகையில் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு எப்போதும் தயாரக இருக்கிறோம். ஆனால் பேச்சுவாhத்தைக்குரிய சூழ்நிலையை சிறீலங்கா அரசுதான் உருவாக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசுக்கு எதிராகத்தான் போராடுகிறார்கள். இந்திய அரசு விடுதலைப் புலிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.

மலையகத் தமிழ்மக்களின் தொடரும் துன்பங்களுக்கு மலையகத் தலைமைகளின் தொடரும் துரோகமே காரணம் என்பதை மலையகத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஆயுதத்தாலும் எத்தகைய குண்டு வீச்சாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட முடியாது' என்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு காஸ்ரோவை விட கியூப மக்களின் உறுதிதான் கவர்ந்திருக்கிறது.

அருகில் மாயத்தனம் நிறைந்த மேற்குலக சொகுசு உல்லாசா வாழ்க்கையோடு அமெரிக்க மியாமிக் கடற்கரை வா வா என்று அழைக்கின்ற போதும்.. அதெல்லாம் அவசியமில்லை.. எங்கள் தலைவனின் கொள்கைக்கு இணங்கி வாழ்வோம் என்று பல தசாப்தங்களாக நாட்டுப் பற்றோடு வாழும் கியூப மக்களின் உறுதியை நினைத்தாலே உண்மையில் பெருமையா இருக்கிறது.

காஸ்ரோ இன்றும் பேசப்படுகிறார் என்றால் அதற்குக் காரணம்.. அவரை நேசிக்கும் அந்த நாட்டு மக்களின் தியாகம் நிறைந்த வாழ்க்கையே தான்..!

சுயநலத்தை அவர்கள் முன்னிறுத்தி வாழ முனைந்திருந்தால்.. இன்று கியூபா அமெரிக்கா ஆட்டுவிக்கும் ஒரு அரசுத் தலைமையின் கீழ் மக்டொனால்சுக்கும் கே எவ் சிக்கும்... வீணி வடிக்கும் மக்கள் கூட்டத்தைக் கொண்ட தேசமா இருந்திருக்கும்..! :D

பத்திரிகைச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் இல்லாத நாட்டை வைத்து எப்படி உங்களால் இக்கருத்தை முன் வைக்க முடியும்.எத்தனை ஆயிரக்கணக்கான கியூபா மக்கள் அமெரிக்காவுக்கு தப்பியோடினர் அது உங்களுக்குத்தெரியுமா?பிடல்காஸ்ரோவின் மறைவுக்குப் பின் பல வண்டவாளங்கள் வெளியே வரும் அப்போது பாருங்கள். :o

பிடல்காஸ்ரோ மற்றும் சேகுவாராவின் அரசியல் கொள்கைகள் இன்றையகாலகட்டத்திற்கு சரிவருமென நான் நினைக்கவில்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகைச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் இல்லாத நாட்டை வைத்து எப்படி உங்களால் இக்கருத்தை முன் வைக்க முடியும்.எத்தனை ஆயிரக்கணக்கான கியூபா மக்கள் அமெரிக்காவுக்கு தப்பியோடினர் அது உங்களுக்குத்தெரியுமா?பிடல்காஸ்ரோவின் மறைவுக்குப் பின் பல வண்டவாளங்கள் வெளியே வரும் அப்போது பாருங்கள். :D

பிடல்காஸ்ரோ மற்றும் சேகுவாராவின் அரசியல் கொள்கைகள் இன்றையகாலகட்டத்திற்கு சரிவருமென நான் நினைக்கவில்லை. :lol:

ஏகாதபத்தியவாதிகள் பொருளாதாரத்தடைகள்... இறுக்கமான இராணுவ அழுத்தங்கள்.. அரசியல் நரி வேலைகள் என்று பலவற்றைச் செய்து கொண்டிருப்பதை கண்ணால் கண்டுமா இப்படி ஒரு விமர்சனம்..??!

வன்னியில் இருந்து மக்கள் வறுமைக்கு அஞ்சி கொழும்புக்குப் போவதால்... அவர்கள் கொழும்பு அரசை அங்கீகரித்ததாகுமா..???!

கியூப மக்கள் மீது பொருளாதாரத்தடைகளை போட்டுள்ள ஜனநாயக ஏகாதபக்தியவாதிகள் அதை நீக்கி இராணுவ மற்றும் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்துவதையும் நிறுத்துவார்கள் என்றால்.. நிச்சயம் கியூபா அமெரிக்காவை விட சிறப்பாக மிளிரும்.. பொருளாதாரத்திலும் சரி... அரசியலிலும் சரி..!

அமெரிக்க இராணுவ அதிகார ஜனநாயக மாயை உங்களை எவ்வளவுக்கு அடிமைப்படுத்தி இருக்கிறது என்பதை இக்கருத்தில் இருந்து என்னால் உணர முடிகிறது.

கம்னிசியமோ.. ஜனநாயகமோ.. எதிர்காலத்துக்கு உதவாது. உலகம் எல்லைகளற்ற அல்லது எல்லைகள் திறந்த பரந்த ஒரு தனி நாடு என்ற நிலை உருவாக வேண்டும்.. அங்கு பல்லின மக்களும் சம உரிமைகளோடு தாமே தமது உரிமைகளை தீர்மானித்தபடி.. தம்மை நிர்வகித்தபடி வாழ வேண்டும்..! உலகுக்கு என்று ஒரு பொதுவான பொருளாதார மையம், கொள்கை மட்டுமே இருக்க வேண்டும். ஒரு பொதுவான இராணுவ அமைப்பு மட்டுமே இருக்க வேண்டும். :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏகாதபத்தியவாதிகள் பொருளாதாரத்தடைகள்... இறுக்கமான இராணுவ அழுத்தங்கள்.. அரசியல் நரி வேலைகள் என்று பலவற்றைச் செய்து கொண்டிருப்பதை கண்ணால் கண்டுமா இப்படி ஒரு விமர்சனம்..??!

வன்னியில் இருந்து மக்கள் வறுமைக்கு அஞ்சி கொழும்புக்குப் போவதால்... அவர்கள் கொழும்பு அரசை அங்கீகரித்ததாகுமா..???!

கியூப மக்கள் மீது பொருளாதாரத்தடைகளை போட்டுள்ள ஜனநாயக ஏகாதபக்தியவாதிகள் அதை நீக்கி இராணுவ மற்றும் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்துவதையும் நிறுத்துவார்கள் என்றால்.. நிச்சயம் கியூபா அமெரிக்காவை விட சிறப்பாக மிளிரும்.. பொருளாதாரத்திலும் சரி... அரசியலிலும் சரி..!

அமெரிக்க இராணுவ அதிகார ஜனநாயக மாயை உங்களை எவ்வளவுக்கு அடிமைப்படுத்தி இருக்கிறது என்பதை இக்கருத்தில் இருந்து என்னால் உணர முடிகிறது.

கம்னிசியமோ.. ஜனநாயகமோ.. எதிர்காலத்துக்கு உதவாது. உலகம் எல்லைகளற்ற அல்லது எல்லைகள் திறந்த பரந்த ஒரு தனி நாடு என்ற நிலை உருவாக வேண்டும்.. அங்கு பல்லின மக்களும் சம உரிமைகளோடு தாமே தமது உரிமைகளை தீர்மானித்தபடி.. தம்மை நிர்வகித்தபடி வாழ வேண்டும்..! உலகுக்கு என்று ஒரு பொதுவான பொருளாதார மையம், கொள்கை மட்டுமே இருக்க வேண்டும். ஒரு பொதுவான இராணுவ அமைப்பு மட்டுமே இருக்க வேண்டும். :)

சரி அமெரிக்கனின் கொள்கையும் சரியில்லை அவன் செய்யுறதும் சரியில்லை ஆனால் அவன்ரை தொழில்நுட்பம்,கூப்பன்மா,ஓசி விசுக்கோத்து இப்புடி எல்லா கோதாரியளும் வேணும் ஆனால் அவன் சரியில்லை :)

குமாரசாமி... கியுபாவின் மீதும், பிடல் காஸ்ரோவின் மீதும் முன்வைக்கிற குற்றச்சாட்டை,

தமிழீழம் மீதும் முன்வைக்க முடியும் இன்னொருவரால். சிங்களப் பேரினவாத அரசு

வன்னி தொடர்பாகவும், வன்னி வாழ் மக்கள் தொடர்பாகவும் முன்வைக்கிற கருத்துப்

போன்றதே உங்களின் கருத்தும். :) அமெரிக்க அரசும், அமெரிக்க நலன் சார்ந்த ஊடக

இயந்திரங்களும் உருவாக்கும் செய்திகளவை என்பது உலகமே அறிந்தது தான்.

கியூபாவின் பலம் என்பது, பிடல் காஸ்ரோ என்கிற தலைவன் மட்டுமல்ல என்பதே உண்மை.

கியூபாவின் பலம் கியூப மக்கள். அந்த மக்களின் உணர்வையும், உழைப்பையும் கட்டியெழுப்பியதில்

சே குவேராவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

கமுயூனிசம், ஜனநாயகம் .... நல்ல புரிதல் :)

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி... கியுபாவின் மீதும், பிடல் காஸ்ரோவின் மீதும் முன்வைக்கிற குற்றச்சாட்டை,

தமிழீழம் மீதும் முன்வைக்க முடியும் இன்னொருவரால். சிங்களப் பேரினவாத அரசு

வன்னி தொடர்பாகவும், வன்னி வாழ் மக்கள் தொடர்பாகவும் முன்வைக்கிற கருத்துப்

போன்றதே உங்களின் கருத்தும். :D அமெரிக்க அரசும், அமெரிக்க நலன் சார்ந்த ஊடக

இயந்திரங்களும் உருவாக்கும் செய்திகளவை என்பது உலகமே அறிந்தது தான்.

கியூபாவின் பலம் என்பது, பிடல் காஸ்ரோ என்கிற தலைவன் மட்டுமல்ல என்பதே உண்மை.

கியூபாவின் பலம் கியூப மக்கள். அந்த மக்களின் உணர்வையும், உழைப்பையும் கட்டியெழுப்பியதில்

சே குவேராவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

கமுயூனிசம், ஜனநாயகம் .... நல்ல புரிதல் :D

நான் அமெரிக்காவையும் அவர்கள் செய்வதையும் சரியென்று சொல்ல வரவில்லை.சமதர்ம கொள்கைகள் இன்றுவரை எங்குமே பலனளிக்கவில்லை என்பதுதான் என் கருத்து.மாவோ சேதுங் மற்றும் லெனின்,ஸ்ராலின் போன்றோர் மக்கள் பலத்துடன் அமைத்த கம்யூனிச கொள்கைகள் இன்று எது வரைக்கும் சென்றுள்ளன?

கிழக்கு ஜேர்மனியில் அதன் வடு இன்னும் நீங்கவில்லை.அது உங்களுக்கு நன்றாகத்தெரியுமென நினைக்கின்றேன்.இரு பக்க அரசியல் வாழ்க்கையையும் பொருளாதார வாழ்க்கையையும் கண்டு களித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

இன்று ரஷ்யா சீனா போன்ற நாடுகள் தங்கள் கொள்கைகளை ஒருபுறம் வைத்து விட்டு பொருளாதாரத்திற்காக முதலாளித்துவநாடுகளிடம் ஒரு சுயநலத்துக்காக கைகோத்து நிற்கின்றன!

எதற்கும் நீங்கள் ஒரு முறை "வாழ்க பிடல்காஸ்ரோ" என்ற வசனத்தை இனிவரும் விழாக்களிலோ அல்லது உங்கள் வாகனத்திலோ பொறித்துச்செல்லுங்கள் பல விடயங்களுக்கு இன்றியமையாததாய் இருக்கும் :D

சமதர்ம கொள்கைகள் மக்களுக்கு மக்களுக்கு நல்லவை.ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு எடுபட மாட்டாது.எதெற்கெடுத்தாலும் வன்னியை இழுக்காதீர்கள். :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.