Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 கண்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை: சிவன் வந்து விட்டதாக கூட்டம் அலைமோதுகிறது

Featured Replies

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அங்காரா பிளாக்கில் வசித்து வருபவர் சுக்லால் மகோதா. இவரது மனைவிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை முகத்தைப் பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியில் ஆடிப்போய் விட்டனர்.

அந்த பெண் குழந்தை 3 கண்கள் மற்றும் 2 மூக்குகளு டன் பிறந்திருந்தது. முகத்தின் மத்தியில் 2 மூக்கு இருக்கிறது. அந்த 2 மூக்குகளுக்கு மேல் மத்தியில் 3-வது கண் உள்ளது.

3 கண்களுடன் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தை சிவனின் மறு அவதாரம் என்று திடீரென ஒரு வதந்தி கிளம்பியது. இந்த தகவல் ராஞ்சி முழுக்க பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 3 கண் குழந்தையை பார்க்க மருத்துவ மனைக்கு தினமும் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர்.

ராஞ்சி நகரின் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் இருந்தும் மக்கள் படையெடுத்தப்படி உள்ளனர். சிலர் மருத்துவ மனை வெளியே தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபட் டனர். இது அதிசய பெண் குழந்தையின் பெற்றோரை கதி கலங்க செய்துள்ளது.

அதிசய குழந்தையின் 2 கண்களும் மற்றவர்களுக்கு உள்ளது போல சாதாரணமாக உள்ளது. மத்தியில் உள்ள 3-வது கண் இன்னமும் திறக்கவில்லை.

இதுபற்றி குழந்தையின் தந்தை சுக்லால் மகோதா கூறுகையில், "என் மகளை சிவ அவதாரம் என்று மக்கள் சொல்கிறார்கள். கடவுள் இப்படி ஒரு குழந்தையை கொடுத்து என்னை சோதித்து விட்டார். என்றாலும் இந்த குழந்தையை நான் வளர்ப்பேன்'' என்றார்

paraparappu.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுக்லால் மகோதா மனைவிக்கு இரண்டு கருமுட்டைகள் ஒரே நேரத்தில் வெளியேறி இரண்டும் கருக்கட்டி ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கலாம். இது மனித உடலில் கார்மோன்கள் பிரச்சனையால் ஏற்படும் பிரச்சனை தான். இதைப்போய் சிவன் கடவுள் என்றெல்லாம் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபடும் தமிழ் மக்களின் முட்டாள்த்தனமான மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா?

சுக்லால் மகோதா மனைவிக்கு இரண்டு கருமுட்டைகள் ஒரே நேரத்தில் வெளியேறி இரண்டும் கருக்கட்டி ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்கலாம். இது மனித உடலில் கார்மோன்கள் பிரச்சனையால் ஏற்படும் பிரச்சனை தான். இதைப்போய் சிவன் கடவுள் என்றெல்லாம் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபடும் தமிழ் மக்களின் முட்டாள்த்தனமான மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா?

சகோதரரே ஜார்க்கண்ட் மாநிலம் தமிழ் நாடு இல்லை.

நல்லா இந்திய வரைபடத்தை எடுத்து பாரும்

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியம் எங்கேயோ சறுக்கிவிட்டது. :mellow::huh:

  • கருத்துக்கள உறவுகள்

சிவபெருமானுக்கு மூண்டு கண் எண்டது உண்மைதான். அத நானும் கேள்விப்பட்டிருக்கிறன். நேரடியாக் கன படங்களில பார்த்துமிருக்கிறன். ஆனா மூக்கு ரெண்டெண்டதை இப்பதான் கேள்விப்படுறன். ஆம்பிளையும் பெம்பிளையும் கலந்த அர்த்தநாரீஸ்வர கோலத்திலயும் மூக்கு ஒண்டாத்தான் இருக்குது. சில வேளை இப்ப மிலெனியத்தில ஏதாவது புதுத்திருவிளையாடல் நடத்திறதுக்காக அப்பிடிப் பி;ந்திருக்கிறாரோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய புரான கதையெல்லாம் சொல்லி பெண் பிள்ளையை சாமியாக்கிடாதிங்க.

நல்ல வைத்தியரிட்ட காட்டுகோ

  • கருத்துக்கள உறவுகள்

இது முளைய வளர்ச்சியின் போது ஏற்படும் சில மாற்றங்களால் நிகழ்வது. இதனை சத்திர சிகிச்சை மூலம் தான் சீர்செய்யலாம்..!

மக்களுக்கு இதை விளங்கப்படுத்த வேண்டியது.. அந்த நாட்டு அரசின் கடமை. அரசே மூடநம்பிக்கைகள் வளர இடமளிச்சிட்டு இருக்கிறது.. வேடிக்கையாக இருக்கிறது.

மேற்குநாடுகளில் எல்லாரும் அறிவியல் படிச்சவையல்ல. இருந்தும் அரசு மக்களுக்கு ஒவ்வொரு விடயத்தையும் எளிமைப்படுத்திச் சொல்லி விடுவதால் மக்கள் விடயங்களை அறிவியல் பூர்வமாகத் தெரிந்து கொள்கின்றனர்.

மூடநம்பிக்கைகள் பரவ ஒரு சமூகம் காரணமல்ல. பேசா மடந்தைகளாக உள்ள அரசுகளும் அதன் நிர்வாகமும் தான் காரணம்..!

கறுப்பி சும்மா புராணத்தின் மேல பழி போடாதேங்க. புராணம் தெளிவா அது கற்பனை இலக்கியம் என்பதைச் சொல்லிட்டுத்தான் விடயத்தை அலசி இருக்குது..!

மக்கள் இந்தச் சம்பவத்தை இட்டு தவறான வழியில் சிந்திக்கக் காரணம் புராணமல்ல.. மக்களுக்கு சம்பவம் குறித்த சரியான விளக்கத்தை அளிக்காத அரசின் தன்மையே ஆகும்..! :mellow:

எங்கே யாழ்கள மெம்பர்ஸ் எல்லாரும் கற்பூரம் கொண்டு வந்து இந்த பக்கத்தில கொழுத்தி கும்பிடுங்கோ இல்லாட்டி தெய்வ குற்றம் ஆக போது :mellow: ...அக்சுவலா மத்தியில இருக்கிற மூன்றாவது கண் இன்னும் திறக்கவில்லையாம் திறந்தா அதற்கு பிறகு தான் என்ன நடக்கும் என்று எனக்கும் தெரியும் :D எல்லாம் சரி சிவபெருமானின்ட இடப வாகனம் எங்கே ஓ இனி தான் வருமோ அப்ப சரி!! :huh: ..

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"அசினை பார்த்திருக்கிறோம் பாவனாவை பார்த்திருக்கிறோம் சிவபெருமானை பார்த்திருக்கிறோமா..." :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.