Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவுகாத்த கிளி!

Featured Replies

ttthg4.jpg

ஆதாரம்: நேத்திரா தொலைக்காட்சியில் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் பேட்டி

  • கருத்துக்கள உறவுகள்
:lol: இரணைமடுக் குளத்தில உவற்ற அச்தியைக் கரைச்சா இரணமடு என்ன முழுக் கிளினொச்சியே நாறிப் போகுமே ?!!!!

நல்ல காலம் மாம்பழத்தோட விட்டுவிட்டார் சங்கரி தாத்தா நான் நினைத்தனான் வேறேன்னாவது கேட்பார் என்று :icon_mrgreen: ..அதோட இரணைமடு குளத்திள எல்லாம் கரைக்க ஏலாது வெறி சாறி சங்கரி தாத்தா ஏனேன்றா என்வைரமன்ட் வந்து பிறகு என்னதிற்கு ஆகிறது :icon_mrgreen: ....சாணக்கியன் அண்ணா அருமையா இருக்கிறது நீங்களா இதனை செய்தனீங்க :lol: ...ஏன் கேட்கிறேன் என்றா கீழே ஆதாரம் வந்து பேட்டியில இருந்து என்று சொல்லி இருக்கிறது அது தான்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கரியாரே!

உதே மாதிரித்தான் நானும் நினைக்கிறன்.

என்ரை தமிழீழ மண்ணிலை பொங்கல் பொங்கோணும்

நிம்மதியாய் கோயில்குளத்துக்கு போகோணும்

பள்ளிக்கூட பிள்ளையள் நிம்மதியாய் பள்ளிக்கூடம் போகோணும்

ஒவ்வொரு சனத்தின்ரை அன்றாட சீவியம் ஒழுங்காய் நடக்கோணும்

அது சரி அதென்ன இப்ப மாங்கொட்டை சூப்ப ஆசை வந்துட்டுது :lol:

ஓ இதைத்தான் சொல்லுறது கடைசி ஆசையண்டோ :icon_mrgreen:

எண்ணங்கள் தமிழருக்குள் ஒத்ததாய் இருந்தாலும் செயற்பாடுகள் வேறாகியுள்ளது. எதிரியை எதிர்கொண்டு வாழும் நிலை பெரும்பாலாருக்கு, எதிரியின் கால்பிடித்து வாழும் நிலை சிலருக்கு.

நன்றி சாணக்கியன்

சங்கரிக்கு சூப்புறதுக்கு கொட்ட சூடக்கிடைக்காது.

சாணக்கியன் அருமையான கருத்துப்படம். உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும்! நன்றி!

கிளிநொச்சியில நட்டுவச்ச மாமரம் கிபீர்போட்ட குண்டில அப்பிடியே வேரோட கருகிப்போன விசயம் அண்ணாச்சிக்கு தெரியாதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் அருமையான கருத்துப்படம். உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும்! நன்றி!

கிளிநொச்சியில நட்டுவச்ச மாமரம் கிபீர்போட்ட குண்டில அப்பிடியே வேரோட கருகிப்போன விசயம் அண்ணாச்சிக்கு தெரியாதோ?

அதெப்படி உமக்கு தெரியும்? :mellow:

அவர் 77ம் ஆண்டு கிளிநொச்சியிலை ஒரு மறைவிடத்திலையெல்லோ மாங்கொட்டை தாட்டவர் :huh:

அங்கை கிபீர் எல்லாம் போகாது :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நட்டு வைச்ச மாமரம்

பட்டு போச்சு

ரொம்ப நாளச்சு

என்ன இருந்தாலும் எனக்குத் துன்பம் விளைவிக்கும் நிகழ்ச்யொன்று, இது கிளிக்கு நிகழ்ந்த அவமதிப்பாகும்.

கிளிநொச்சியில போய் சாப்பிட வேண்டியதுதானே

  • தொடங்கியவர்

அன்று துரதிர்ஸ்டவசமாக இவரது பேட்டியை பார்க்க நேர்ந்து விட்டது. அலைவரிசையை மாற்றத்தான் நினைத்தேன்....சரி என்னதான் சொல்கிறார் இவர் என்று பார்த்தால்....ரொம்பவே மனசை நோகடித்து விட்டார். அதன் விளைவுதான் இந்த பதிவு.

புலியோ ஃபோபியா (புலி வெறுப்பு நோய்) முற்றியிருந்தது. அத்துடன் வயதான காலத்தில் வரும் அறளைபெயர்தல் நோய் வேறு தொற்றிக் கொண்டது. வரிக்கு வரி புலிகளையும் அவர்கள் சார்பானவர்கள் என்று அவர் நினைப்பவர்களையும் சாடிக் கொண்டிருந்தார். முதல் வரியில் தெரிவித்த தன் கருத்திற்கு தானே முரணாக இரண்டாவது வரியிலேயே பேசிக் கொண்டிருந்தார்.

உதாரணமாக, நேர்வேயில் எரிக் சொல்கைமை அவர் சந்தித்த போது கேட்டாராம் "உமக்கு தோல் மிகவும் தடிப்போ?" என்று ஏன் என்றால் "2000 தடவைகள் புலிகள் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை மீறியும் உமக்கு ரோசம் வரவில்லையே?" என்றாராம். பிறகு அடுத்தவரியில் கூறினார் "அவரை நாங்கள் அப்பிடி சொல்லக் கூடாது ஏன் என்றால் அவர் தன்னால் முடிந்ததை தான் செய்தார்" என்றார்.

"கிழக்கில் ராணுவ நடவடிக்கை செய்தால் இனி தமிழீழம்தான் என்று அறிக்கைவிட்டவை எல்லாம் எங்க? அங்க இப்ப தேர்தலும் நடக்கப்போகுது, மானம் ரோசம் என்று ஒன்று இருந்தா ராஜினாமா செய்திட்டு வன்னிக்கு போகவேண்டியது தானே!" என்றார் எதோ போர் முடிந்து விட்டது என்ற மனநிலையில்.

"தன்ரை சொந்த தொகுதிக்கு போக ஏலாத எம்பிமார் எல்லாம் ஒரு எம்பியா? ஏலுமென்டா போய் காட்டட்டும் பாப்பம்!" என்று சவால் விட்ட அவர் தன்னுடைய தொகுதியான கிளிநொச்சியிக்குப் போய் எத்தனை வருசம்?

"துண்டு துண்டா கழட்டிக் கொண்டுவந்து பூட்டிப்போட்டு இரண்டு குண்டுகளை தொப் தொப் என்று போட்டுட்டு விமானப்படையும் இருக்கெண்டு கதைவிட்டு துள்ளிக் குதிச்சவை எங்க? ஏலும் எண்டா இனி ஒரு தடவை வரட்டும் பாப்பம்!" என்று பாதுகாப்பமைச்சின் அறிக்கைகளை நம்பி சவால் விட்டுக் கொண்டிருந்தார்!

இறந்த பெண் புலிப்போராளி ஒருவரின் சட்டைபையில் இருந்து எடுக்கப்பட்ட பெற்றோருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் "தைப்பொங்கலுக்கு வரமுடியுமோ தெரியாது" என்று எழுதியிருந்ததாக கூறி "அந்தப் பிள்ளை பாவம்! புலிகளிட்டை இருந்து தப்ப ஏலாம எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும்" என்று அந்தப் பிள்ளைக்காக கவலைப்பட்ட இவர் காணமற்போனோரின் பெற்றோர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேள்வி கேட்க முடியாது என்ற தைரியத்தில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இந்தியாவை புகழ்ந்து, மாகாணசபையை வழிமொழிந்து தனது இறுதி ஆசையுடன் முடித்துக் கொண்டார்.

பேட்டி கண்டவரும் அரச ஊடகத்தின் தர்மத்தை மீறாத வகையில் முன்னரே ஒப்புக் கொண்ட கேள்விகளை தவிர வேறு எதையும் கேட்கவில்லை!

"மாற்றுக் கருத்துக்காரரின் கருத்துகள் மாற்றப்படக் கூடியவை" என்ற என் நிலைப்பாட்டில் ஒரு புதிய நிபந்தனையை இந்த செவ்வி ஏற்படுத்தியது. அதாவது "அவர்களால் சுயமாக சிந்திக்க முடிந்தால் மட்டும்" என்பதே அது!

யமுனா, கலைநேசன், மாப்பு பாராட்டுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தொடருங்கள் சாணக்கியன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனுசன் இண்டைக்கோ நாளைக்கோ எண்டு இருக்கு.. மகிந்த சாமியே! சங்கரி மாம்பழம் சாப்பிட அருள் பாலிக்கவும் :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.