Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை ஆய்வு செய்யவுள்ள இந்திய சமஸ்கிருத கல்விமான்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை ஆய்வு செய்யவுள்ள இந்திய சமஸ்கிருத கல்விமான்கள்

[13 - February - 2008]

இந்துக்களின் இதிகாசமான இராமாயணத்துடன் தொடர்புபட்ட இடங்களெனக் கருதப்படும் இலங்கையிலுள்ள பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள சமஸ்கிருதத்தை கற்றுள்ள கல்விமான்கள் குழுவை இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஆலய பரிபாலனசபை விரைவில் அனுப்பிவைக்கவுள்ளது.

இராமபிரான் இராவணனைக் கொன்ற இடம் மற்றும் சீதாப்பிராட்டியாரை இராவணன் கவர்ந்துகொண்டு வைத்திருந்த குகை என்பன ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ள

  • கருத்துக்கள உறவுகள்

உவங்களுக்கு வேற வேலையில்ல. இந்த 21ம் மிலேனிய நூற்றாண்டிலயும் மனிசர மடையராக்கிறதிலேயே குறியா இருக்கிறாங்கள்.

அடா..... இந்திய சமஸ்கிருத கல்விமான்கள் பிந்தி வருகினம். இராவணன் சீதையை நிலத்தோடு பெயர்த்து வான்வழி வருகையில், வழியில் "தள்ளாடி"ய இடத்திற்கு நேற்றே அனுப்பியிருக்கலாம். 'சிரமதானம்" செய்து தள்ளாடியவர்களைப் பார்க்க.......

  • கருத்துக்கள உறவுகள்

உவங்களுக்கு வேற வேலையில்ல. இந்த 21ம் மிலேனிய நூற்றாண்டிலயும் மனிசர மடையராக்கிறதிலேயே குறியா இருக்கிறாங்கள்.

நீங்கள் எப்படி அவையள் உங்களை மடையர் ஆக்கினம் என்று நினைக்கிறீங்களோ அதேபோல் தான் அவர்களை எந்த ஆதார அடிப்படையும் இன்றி வெறும் 21ம் நூற்றாண்டைக் காட்டி எதிர்க்கிறவையும் மடையர்கள் தான்.

ஆராய்ஞ்சி பார்த்து அறிக்கை தருவினம் தானே. அதை ஆராய்ஞ்சி நிராகரிக்க ஆதாரங்களை அறிவியல் கொண்டு தேடுங்க. அதைவிட்டிட்டு.. மடைத்தனம்.. என்று சும்மா மொழியிறதாக எந்தப் பயனுமில்ல..! :wub::huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்! நீங்கள் சொல்லுறதில நியாயம் இருக்குது. 21ம் நூற்றாண்டு அறிவியல்ல வளர்ச்சியடைந்த காலமெண்டதாலதான் எதையும் அறிவியல் ரீதியாக அணுகவேணுமெண்ட நோக்குலதான் நான் அப்பிடி எழுதின நான். இராமாயணத்தில் வாற பாத்திரங்கள் சம்பவங்களை நாங்கள் ஆராஞ்சு பார்க்கத்தான் வேணும். ஆனால் இலங்கைக்கு வந்து ராவணனை அடக்கம் பண்ணின இடத்தைக் கண்டுபிடிச்சு அவனுக்குப் பத்துத்தலையிருந்தது உண்மைதான் எலும்புக் கூட்டில பத்து மண்டையோட்டைக் கண்டநாங்களெண்டு கதைவிடுவினமோ எண்டுதான் பயமாயிருக்குது. மற்றும் படி வெறும் பொட்டல் வெளியளயும் குகைகளையும் காட்டி உதுலதான் சீதை இறங்கினது, உதுலதான் சீதையச் சிறை வச்சது எண்டு கோயில் கட்டிறதைப் பற்றிக் கவலைப்படத்தேவையில்ல. எனக்கென்னவோ இவ்வளவு காலமும் இருந்துபோட்டு இப்பதான் ஆராய்ச்சிக்கு வாறதுக்கு வேற ஏதாவது அரசியல் பின்னணி இருக்குமோ எண்டு எண்ணவும் தோன்றுது. மற்றும்படி நீங்கள் சொல்லுறதில நியாயம் இருக்குது. திருகாணமலையிலயும் ராவணன் கோட்டை இருந்ததாம் அதையும் நாங்கள் கவனத்தில எடுக்கவேணும். பிறகு அனல் மின் நிலையம் மாதிரி அங்கையும் ஏதாவது அவங்களுடைய கொண்றோளுக்குள்ள வரப்பார்க்கும்.

சம்ஸ்கிருதம் கற்றுவிட்டால் கல்விமான்களா? என்ன கொடுமை இது

வந்த எல்லாரையும் பிடிச்சு இராவணன் வெட்டுக்க தூக்கிப்போடவேணும்.

இது ஈழத்தை பற்றியதுமில்லை தமிழர்கள் பற்றியதுமில்லை.... சரி இது ஒரு வரலாறா? ஒரு இலக்கியமா? விஞ்ஞானமா?.... எதுவுமே இல்லை... பிறுகு ஏன் உதை கொணந்து ஊர்ப்புதினத்தில போடுவான்?

உலகநடப்பு பக்கமா போடலாமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராமாயண கால இடங்களைப் பார்வையிட இலங்கைக்கு பீகார் குழு விஜயம்

2/15/2008 6:14:20 PM

வீரகேசரி இணையம் - இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள இராமாயண காலத்து இடங்களை பார்வையிட பீகாரை சேர்ந்த சமஸ்கிருத வல்லுனர்கள் குழு இலங்கை செல்கிறது.

இந்தியாவில் இராமர் பாலம் குறித்த சர்ச்சை உச்சத்தில் இருந்த போது, இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய 30 இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டது.இத்தகவல் இந்தியாவில் வட மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பீகாரில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கான அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாகியும் முன்னாள் பொலிஸ் அதிகாரியுமான கிஷோர் குணால் தெரிவிக்கையில்,இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய 30 இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக, அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவல், வால்மீகி இராமாயணத்துடன் ஒத்து போகிறது. சீதையை, புஷ்பக விமானத்தில் இராவணன் கடத்தி சென்றான்.

புஷ்பக விமானம், இலங்கையில் தரையிறங்கிய இடம் வெரங்கடோடா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹியங்கணையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது வெரங்கடோடா.இராவணனின் மனைவி மண்டோதரி வசித்த இடத்தின் பெயர் சிதாகோடுவா, மஹியங்கனையில் இருந்து கண்டி செல்லும் சாலையில் 10கி.மீ. தொலைவில் உள்ளது.

புஷ்பக விமானம் தரை இறங்கிய பிறகு, சிதாகோடுவாவுக்கு தான் சீதை அழைத்து செல்லப்பட்டார். கொழும்பில் இருந்து நுவரெலியா செல்லும் சாலையில்,சீதாஎலியா என்ற இடத்தில் ஒரு குகை உள்ளது. இந்த குகையில்தான் சீதை, தங்க வைக்கப்பட்டார். அங்குள்ள ஓடையில், சீதை குளித்துள்ளார். ஓடை அருகே ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சீதையின் ஆலயமாகவே இன்றளவும் அந்தக் கோயில் விளங்குகிறது.

துனுவில என்ற இடத்தில் இருந்து இராமன் செலுத்திய அம்பு இராவணனை வீழ்த்தியது. இராமன் அம்பு செலுத்திய போது, லக்கல என்ற இடத்தில் போருக்கான யுக்திகளை இராவணன் அமைத்து கொண்டிருந்தான். அப்போது அம்பு பாய்ந்து அவன் இறந்தான். லக்கல என்ற இடம் ஒரு பாறை. அந்த பாறை ஒரு கண்காணிப்பு கோபுரமாக செயற்பட்டது. இங்கிருந்து இராவணனால் இலங்கையை நன்கு பார்க்க முடியும்.இது ÷பான்ற 30 இடங்களை இலங்கை அரசு அடையாளம் கண்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு புலனாய்வு வேலயாகவும்இருனக்களாம் (றோவின் வேலயாகவும்) எதற்கும்நாம் ரெடியாக இ

ருப்போம் நன்பர்களே

வரவேற்கப்பட வேண்டிய விடையம். புஸ்பக விமானத்தின் ஓடுபாதை பராமரிப்பு நிலையம், எலிப் புழுக்கையையும் யானை மூத்திரத்தையும் வைத்து புஸ்பக விமானத்திற்கு எரிபொருள் தயாரித்த தொழிற்சாலை போன்றவற்றிற்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.