Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுஎஸ் செயற்கைகோளை சுட முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுஎஸ் செயற்கைகோளை சுட முடிவு

Friday, 15 February, 2008 04:09 PM

.

வாஷிங்டன்,பிப்.15: கட்டுப்பாட்டை இழந்து புவியை நோக்கி வந்து கொண்டிருக்கும் அமெரிக்க உளவு செயற்கை கோளை ராணுவ ஏவுகணை மூலம் சுட்டுத் தள்ளி கீழே கொண்டு வருவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

.

அடுத்த மாதம் புவியின் மீது மோதி, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் அமெரிக்க உளவு செயற்கைகோளை எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக கீழே கொண்டு வருவதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் இந்த உளவு செயற்கை கோள் புவியின் வளி மண்டலத்தில் மீண்டும் நுழையும் போது ராணுவ ஏவுகணை மூலம் சுட்டுத்தள்ளி கீழே கொண்டு வருவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் புஷ் அந்நாட்டின் ராணுவ தலைமையக மான பெண்டகனுக்கு பிறப்பித்துள்ளார்.

ஆயினும் இந்த நடவடிக்கைக்கான சரியான தேதியை பெண்டகன் இன்னும் அறிவிக்கவில்லை. அடுத்த சில தினங்களில் கப்பல் ஒன்றிலி ருந்து ஏவுகணையை செலுத்தி இந்த உளவு செயற்கை கோளை கீழே கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இந்த உளவு செயற்கைகோள் புவியின் மீது மோதுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை குறைக்க இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படவிருப்பதாக அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு உயரதிகாரி ஜேம்ஸ் ஜெப்ரிஸ் தெரிவித்துள்ளார். ஆயினும் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமையுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

புவியின் வளிமண்டலத்தில் அந்த உளவு செயற்கைகோள் மீண்டும் நுழையும்போது ஸ்டாண்டர்டு ஏவுகணை என்ற ஏவுகணையை செலுத்தி அந்த செயற்கைகோளை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப் படவிருப்பதாகவும், அதன்பிறகு அந்த செயற்கைகோள் வளிமண்டல எதிர்ப்புகளால் புவியின் மீது மோது வது தவிர்க்கப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது.

இரண்டாவதாக செயற்கைகோளில் உள்ள எரிபொருள் கலனை நேரடியாக தாக்கி பூமிக்கு திரும்பி கொண்டு வரப்படும் எரிபொருள் அளவை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

malaisudar.com

உதை நாங்கள் எண்டா பக்குவமாக குறுணல் போட்டு இறக்கி லபக் எண்டு பிடிச்சுப் போடுவம். விளக்கமில்லாமல் மோட்டு வெள்ளையள் சுடுறதுக்கு நிக்கிறாங்கள்.

ஹி... ஹி... ஹி....... குறுமணலை விட வைக்கல் தான் இன்னும் நல்லது. ஆனால் ஊரிலை இருந்து வைக்கல் எடுக்கிற ஒப்பந்தம் எனக்குத்தான் தரவேண்டும். :o:wub:

குறுக்கால போனவர் நல்லா தான் எங்கட பெடியலின் கோவணத்தை உருவுகிறார் ஆனா அதை வம்பு வசம்பு எடுத்து முகம் துடைக்கிது..........

சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ இது எல்லாம் ஒரு பிழைப்பா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் ஒராள் ஊரிலே கள்ள கோழி பிடிச்சிருக்கு? அந்த குணம் இங்கையும்........ :o:wub:

அதை சுடலாம், ஆனா சுட்டாபிறகு விழ விடக்கூடாது... வனில இறக்கினா... பொடியல் சமாதான சாமான் செய்ய உதவும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செயற்கைக்கோள் தகர்ப்பு

.

Thursday, 21 February, 2008 10:09 AM

.

வாஷிங்டன், பிப்.21: பூமி மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தலாம் என அச்சுறுத்திக் கொண்டிருந்த உளவு செயற்கைக் கோளை அமெரிக்க கடற்படை ஏவுகணையை செலுத்தி வெற்றிகரமாக தாக்கி அழித்தது. ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணை செலுத்தி இந்த செயற்கைக்கோள் விண்ணில் தகர்க்கப்பட்டது.

.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் பல்வேறு செயற்கைக் கோள்களை செலுத்தி வருகின்றன. இவற்றில் உளவு செயற்கைக் கோள்களும் அடங்கும்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அமெரிக்கா 2268 கிலோ எடை கொண்ட உளவு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது. ஆனால் சிறிது காலத்திற்கெல்லாம் இந்த செயற்கைக்கோள் செயலிழந்து போனது.

இதன் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டு இந்த செயற்கைக்கோள் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது. பயனற்று போன இந்த செயற்கைக்கோள் விண்ணிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இதனிடையே இந்த செயற்கைக் கோள் பூமியை நோக்கி வரலாம் என்று திடுக்கிடும் தகவல் வெளியிடப்பட்டது. மார்ச் மாத வாக்கில் இந்த செயற்கைக்கோள் பூமியை தாக்கி சேதத்தை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டது.

இதனையடுத்து அமெரிக்கா இந்த செயற்கைக்கோளை தற்காப்பு நடவடிக்கையாக ஏவுகணையை செலுத்தி விண்ணிலேயே தகர்க்க தீர்மானித்தது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலிலிருந்து இந்த செயற்கைக்கோளை நோக்கி ஏவுகணையை செலுத்த திட்டமிடப்பட்டது.

எனினும் மோசமான வானிலை மற்றும் அட்லாண்டிஸ் விண்கலம் தரையிறங்குவது ஆகியவை காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமெரிக்க நேரப்படி 10.30 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று காலை) இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டது.

பசுபிக் பெருங்கடல் பகுதியிலிருந்து அமெரிக்க கடற்படை கப்பல் இந்த ஏவுகணையை செலுத்தியது.

ஒலியை விட வேகமாக செல்லக் கூடிய ஏவுகணை துள்ளியமாக இந்த செயற்கைக்கோளை தாக்கி அழித்தது. முன்னதாக இந்த செயற்கைக்கோள் தாக்கப்படும்போது அதன் மிச்சங்கள் ஆஸ்திரேலியாவில் விழ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதனை முன்னிட்டு அந்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த செயற்கைக்கோளில் நச்சுப் பொருட்கள் இருக்கின்றன. ஏவுகணையால் தகர்க்கப்பட்டதில் நச்சுப்பொருட்கள் என்னவாயிற்று என்பது விரைவில் தெரிய வரும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

malaisudar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.