Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுகிய நேர இடைவெளியில் புலிகளால் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியும்: "சண்டே ரைம்ஸ்"

Featured Replies

குறுகிய நேர இடைவெளியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

விடுதலைப் புலிகள் கொழும்பில் பெரும் தாக்குதல்களை மேற்கொள்வதனை தடுப்பதற்காக பெருமளவிலான காவல்துறையினர், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, அங்கு படையினரின் செறிவு அதிகமாகும். ஆண்களும், பெண்களுமாக பெருமளவிலான படையினர் தலைநகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

படையினரின் கண்களில் படாமல் சில இடங்களில் சில மீற்றர் தூரம் கூட நகர்வது கடினமாகும். அரசு இதற்காக பெருமளவிலான நிதிகளை செலவிட்டு வருகின்றது.

மேலும் வாசிக்க : http://puthinam.com

Edited by Janarthanan

கணிப்புக்கள் நடந்தவற்றை வைத்துப் பார்க்கும்போது சண்டேரைம்ஸ் குறிப்பிடுவது சரிதான். நடக்கப் போகின்றவற்றை சண்டே ரைம்ஸ் கணிப்பிட்டு அரச தரப்பிற்குக் கூறியிருந்தால் புலனாய்வுத் துறைக்கு இலகுவாக இருந்திருக்கும்.

சண்டேரைம்ஸ் விட நல்லாய் ஒருதர் நடக்கப் போறவற்றைத்தானே வீரகேசரிக்கு வாரம் 1 முறை பூவிறிஸ்சாக விடுறவர். அதுகளை அரச தரப்பு வாசிக்கிறது இல்லை என்று ஒரு சந்தேகம் வந்துட்டுதோ? :rolleyes:

கொடுக்க வேண்டியது அந்தந்த நேரத்தில் கொடுக்கப்படும். மகிந்தர்ர கோவணம் அவிழ்து விழும்போது தூக்கிக் கட்டிவிட தயாராகுங்கோ. :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

திருமலைல மாவிலாறு அணையைப் பூட்டீட்டு சொன்னவை.. ஒரு அங்கில நிலமும் விடமாட்டம் எண்டு...

அப்புறம் தமிழ்செல்வன் அண்ண சொன்னவர் எமது கட்டுமானங்களை சிறீலங்கா விமானப்படை தொடவும் ஏலாது என்று...

அப்புறம் இளந்திரையன் சொன்னவர் எங்களட்ட இத்தகைய தாக்குதல் விமானங்கள் மட்டும் தான் இருக்கென்று நாங்கள் சொல்லவில்லை. விமானத்தாக்குதல் தொடரும் வெற்றிச் செய்திகள் வந்து குவியும் என்று...

இதோ இறுதிப் போர் தொடங்குது. ஈழம் பெற எல்லாரும் புறப்படுங்கோ எனிப் போர் தொடங்கினா 3 மாதத்துக்கும் கூட அதிகரிக்காது எண்டும் சொன்னவை..

அப்புறம் சொன்னவை எனி போர் தெற்கிலதான் என்று.. இரண்டு குண்டு வைக்கிறது போராமோ..??!

கிழக்கு தளபதி ரமேஸ் சொன்னவர் எங்களட்ட இருக்கிற ஒரு ஆயுதத்தைப் பாவிச்சாலே இராணுவ முகாங்களில் ஒரு இராணுவமும் இருக்க முடியாதென்று...

நாங்களும் புலம்பெயர்ந்த நாடுகளில இறுதிப் போர் என்று சொல்லிக் கேட்க காசைக் கொடுத்திட்டு இலவு காத்த கிளியாக இருக்கிறம்.. வெற்றிச் செய்தியையும் காணம்.. ஒரு செய்தியையும் காணம்...

கடைசியில விமானப்படைக்கு இரையாகி தமிழ்செல்வன் அண்ணா மட்டுமல்ல பலர் பலியாகிட்டினம். கிழக்கில அங்குலமில்ல முழுசுமே பறிபோகிட்டுது.

அப்புறம் வடக்கைதான் பாதுகாப்பினமென்றால் மன்னாருக்குள்ளால அதுவும் புட்டுக்கிட்டு போகுது.

ஆமிட பொடியை அள்ளி அள்ளி கொடுப்பினம் என்று பார்த்தா ஆமிக்காரன் அள்ளி அள்ளிக் கொடுக்கிறான்..!

இப்ப புதிசா இது

இதனிடையே இரு முக்கிய மாற்றங்கள் தொடர்பாக தற்போது சில கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஒன்று விடுதலைப் புலிகள் பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் ஆயுதத் தளபாடங்களை தருவித்துள்ளதாக புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்- இக்பால் அத்தாஸ்

பாருங்கோ ஆயுதம் வந்திட்டுது.. அடிய...!

எனி வெற்றிச் செய்தி தலைவர் தருவார்..! நாங்கள் சீன வெடி கொழுத்துவம்.. புகலிடத்தில... காசைக் கொடுத்திட்டு...சும்மா குந்தி இருந்து கொண்டு..!

Edited by nedukkalapoovan

மன்னாருக்குள்ளால புட்டுக்கிட்டு போனவை ஓடிவந்திற்றாங்களண்ண. இப்ப அந்தப் பழய இடத்திலதான் ஆமிக்காரன் வாடி போட்டுக் கொண்டிருக்கிறான். சீனா வெடி கொழுத்துறதும் இருக்கத்தான் செய்யும். இந்தக் கோடாரிக் காம்புகளாலெல்லே பிரச்சன.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாருக்குள்ளால புட்டுக்கிட்டு போனவை ஓடிவந்திற்றாங்களண்ண. இப்ப அந்தப் பழய இடத்திலதான் ஆமிக்காரன் வாடி போட்டுக் கொண்டிருக்கிறான். சீனா வெடி கொழுத்துறதும் இருக்கத்தான் செய்யும். இந்தக் கோடாரிக் காம்புகளாலெல்லே பிரச்சன.

யாரைச் சொல்லுறீங்க கோடரிக்காம்புகள் என்று..

குறுக்காலபோவனுக்க குடையுறது உதுகள் தான். அதில உண்மையும் இல்லாமல் இல்லத்தானே. புலிகளும் பெரிசா தோற்றம் காட்டி சனத்தை மாயைக்குள்ள வைச்சிருந்தது தப்புத்தானே..!

நான் பல தடவை கண்ணாலும் பார்த்து காதாலும் கேட்டனான்.. கிழக்கில ஒரு அங்குலமும் விட மாட்டம் எண்டதை..! இல்லை என்றீங்களா..??!

இளந்திரையன் மட்டுமல்ல.. தமிழ்செல்வன்.. எழிலன்.. பாலகுமாரன் சொன்னதுகளை கொஞ்சம் ரிவைன் பண்ணிக் கேட்டுப் பாருங்கோ..!

கோடரிக்காம்புகள் என்று திட்ட முதல் சில யதார்த்தப் புறநிலைகளை புலிகளும் மறைக்க முற்பட்டிருக்கினம் என்று உண்மை. மக்களை ஒரு மாயைக்குள்ள வைச்சிருந்ததாலதான் இப்ப சனம் விமானத்தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்த முடியாம சாகுதுகள்.

தமிழ்செல்வன்.. சொன்னவர் எனி தமிழீழக் கட்டுமானங்களை விமானப்படை தொடவும் ஏலாது என்று. இறுதில் என்னாச்சு.. அவரே விமானப்படைக்கு இரையானார்.. இதெல்லாம் ஏன்..??!

உதுகளை எதிர்தரப்பில நிக்கிறவன் சுட்டிக்காட்டி மக்களை குழப்பத்தானே செய்வான்.. நாம் அதற்கு என்ன பதில் வைச்சிருக்கிறம் கொடுக்க..???! :rolleyes::unsure:

Edited by nedukkalapoovan

நெடுக்கண்ணை, இது என்ன நீங்கள் குறுக்காலை போறீங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணை, இது என்ன நீங்கள் குறுக்காலை போறீங்கள்!

குறுக்காலபோறவைக்கு சிலதை வெளில சொல்ல முடியாம இருக்கிறது.. குத்துது குடையுதாம்.. அதுதான் வெளில சொல்லிட்டா.. விசயம் வெளிக்கும் தானே..! ஏன் கனக்க.. உங்களுக்கே உதுகளைக் கேட்க வேணும் என்றது விரும்பம் தானே..! :unsure::rolleyes:

Edited by nedukkalapoovan

இப்போது நடைபெறுகின்ற யுத்தம் தமிழரின் போராடும் பலத்தை ஒடுக்குவதற்கானது. இதற்குத் தமிழர்களே துணைபோகின்றார்கள் என்பது எமக்கான சாபக்கேடு. எதிரி பாரிய வளங்களுடன் இதனைச் செய்ய முயல்கிறான். அதற்கு எம்மவர்களும் துணைநின்றால் தமிழருக்கு நாசம்தான்.

தமிழ்ச்செல்வன் அண்ணா சொன்னார் இளந்திரையன் அண்ணா சொன்னார் என்பதெல்லாம் உண்மைதான். அதற்காக போராடும் பலத்தினை தக்கவைக்க வேண்டியது போராடுபவர்களின் கடமையும் கூட என்பதையும் சிந்திக்க வேண்டும்.

அந்தப் பலம் அழிக்கப்பட்டால் தமிழருக்காக போராடுவதற்கு இன்னுமொரு சக்தி எங்கிருந்து எப்போது உருவாகும். சிங்களப் பேரினவாதம் தமிழரின் தோள்களில் சவாரி செய்யும். போராட்டத்தின்பால் மக்களை நம்பிக்கையடையச் செய்வதற்கு இத்தகைய மாயாவாதமும் தேவைப்படும்.

நெடுக்கண்ணை, இது என்ன நீங்கள் குறுக்காலை போறீங்கள்!

இருவரும் ஒரே பேர்வழிதான் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிலேசங்கள் நீங்க மாந்தீகரித்துத் தாயத்துக் கட்டுவது நல்லது அல்லது உசார்க்குளிசைகள் போடுவது நல்லது!¬

இன்றிலிருந்து நெடுக்காலபோவான் எனது குரல்தரவல்ல அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்! இந்த நியமனம் அரசியல் அலசல்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்! குறிப்பாக ஆன்மீக மற்றும் பகுத்தறிவு பகுதிகள் தவிர்க்கப்படுகின்றது. மேலும் தேவைக்கேற்ப முன்னறிவித்தல் இன்றி இந்த நியமனம் இரத்து செய்யப்படும். குறிப்பாக எக்குத்தப்பாக கருத்துகள் தெரிவித்து செமத்தியாக வாங்கிக்கட்டும் போது! :rolleyes:

ஒருவர் புலிகள் பலமாயிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார். இன்னொருத்தர் எனக்கு புலிகளைப் பற்றி ஏல்லாம் தெரியும் அவர்கள் இப்ப பலவீனமான நிலையில் இருக்கிறார்கள் என்கிறார். இன்னொருத்தர் புலிகளின் செயற்பாடுகள் சரியாக இருக்குது என்கிறார். இன்னொருவர் புலிகள் செய்யுறது நல்லா இல்லை என்கிறார். இதுபோன்ற செயற்பாடுகள்தான் இப்போதைக்கு மிகவும் வேண்டப்பட்டவை. எனவே நீங்கள் செய்வதைத் தொடர்ந்து செய்து கொண்டு இருங்கள். எனக்கு என்ன கவலை என்றால் எந்த தளபதிகளை எந்தக் களங்களில் தலைவர் நிற்க வைக்கவேண்டும் என்று இன்னும் ஒருவரும் அறிவுரை சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் புலிகள் பலமாயிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார். இன்னொருத்தர் எனக்கு புலிகளைப் பற்றி ஏல்லாம் தெரியும் அவர்கள் இப்ப பலவீனமான நிலையில் இருக்கிறார்கள் என்கிறார். இன்னொருத்தர் புலிகளின் செயற்பாடுகள் சரியாக இருக்குது என்கிறார். இன்னொருவர் புலிகள் செய்யுறது நல்லா இல்லை என்கிறார். இதுபோன்ற செயற்பாடுகள்தான் இப்போதைக்கு மிகவும் வேண்டப்பட்டவை. எனவே நீங்கள் செய்வதைத் தொடர்ந்து செய்து கொண்டு இருங்கள். எனக்கு என்ன கவலை என்றால் எந்த தளபதிகளை எந்தக் களங்களில் தலைவர் நிற்க வைக்கவேண்டும் என்று இன்னும் ஒருவரும் அறிவுரை சொல்லவில்லை.

வெகு விரைவில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.