Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்க் மாநாட்டுக்கு முன்னர் தீர்வை அமுல்படுத்துக - .இந்தியா வலியுறுத்து.

Featured Replies

இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சாக் நாடுகளின் 15 வது மாநாட்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கு பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைத்து செயல்படுத்துமாறு இந்தியா இலங்கை அரசை கோரியிருப்பதாக தூதுவராலய வட்டாரம் சுட்டிக் காட்டியுள்ளது.

15 வது சாக் மாநாடு மாலைத்தீவில் இம் முறை நடைபெறவிருந்த போதும் மஹிந்தவின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் கண்டி மாநகரில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கபட்டு ஏற்பாடுகளும் செய்யபட்டு வருகின்றன.

இம் மாநாட்டிற்கு முன்னதாகவே வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு தீர்வு யோசனைகளை சர்வ கட்சி முன் வைத்துள்ளது. அதனை மாநாட்டிற்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு இந்தி அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை இந்தியா அரசுகள் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திற்கமைய 13 வது அரசியல் திருத்தச் சட்டம் இப்பிரச்சினையைத் தீர்ககக்கூடியது என்பதையும் இந்தியா முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

நன்றி வீரகேசரி

மகிந்தவின் ஆட்சிக்காலம் இந்த விடயத்தினால் மட்டுப்படுத்தப்படப் போகின்றது. அல்லது இந்தியாவின் பெரிய காதுகளில் பூச்சுற்றப்படும். இணைந்த வடகிழக்கு மாகாண சபை முறையே தமிழர் விருப்பின்மையால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. 13 வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் என்ன நடந்து விடப்போகிறது.

இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சாக் நாடுகளின் 15 வது மாநாட்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கு பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைத்து செயல்படுத்துமாறு இந்தியா இலங்கை அரசை கோரியிருப்பதாக தூதுவராலய வட்டாரம் சுட்டிக் காட்டியுள்ளது.

ஒரு கண்துடைப்பு தீர்வையாவது அளித்து விடுங்கள். ஏனென்றால் மார்கழியில் பொதுத்தேர்தல் வரப்போகிறது. எங்களுக்கு தமிழகத்தின் 40 பாராளுமன்ற தொகுதிகளும் வேண்டும். அப்போது தான் எங்கள் டெல்லி சிம்மாசனத்தை தக்க வைத்துக் கொண்டு, மீண்டும் ஒரு 5 வருடங்களுக்கு தமிழர்களின் இரத்தம் குடிக்க சிறீலங்கா அரசுக்கு இராணுவ உதவிகள் செய்ய முடியும்.

நாம் காங்கிரஸ் காரர்கள். மத சார்பற்றவர்கள். ஆனால் பௌத்த பேரினவாதத்திற்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு வழங்குவோம். அது பற்றி யாரும் கேள்வி கேட்க கூடாது!

பழம் தின்று கொட்டை போட்ட பகுத்தறிவு(:unsure:?) பெரியவர்களே டெல்லி ஆயிற்று மதவாத சிறீலங்கா அரசு ஆயிற்று என்று ஒரு மாநில ஆட்சிக்காக தங்கள் கரை வேட்டிகளையே அவிழ்த்து கொடுத்து விட்டார்கள். உங்களை போன்ற சாமானியர்கள் போடும் கூப்பாடுகள் எல்லாம் எங்களை என்ன செய்ய போகிறது?!!!

ஜெய் (பொய்) ஹிந்த்!

இப்படிக்கு

இந்திய நாசிய காங்கிரஸ்

Edited by vettri-vel

13 வது அரசியல் திருத்தச் சட்டம் வந்து ஒரு இரு முனைகொண்ட விசக்கத்தி அதை ஒழுங்கா அணுகாட்டி அவ்வளவுதான்..

எனக்கென்னமோ 13 வது அரசியல் திருத்தச் சட்ட ஆப்பை இழுக்கதான் உவங்கள் பட்டாத பாடுபடுறாங்கள் போலகிடக்கு.

சார்க் எனப்படும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் கண்டி நகரில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் விரிவான முறையில் செய்திருக்கும் அதேவேளையில், இம்மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக 13 வது திருத்தத்தின் அடிப்படையில் இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியா இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்குக் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இதனை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்காத பட்சத்தில் கண்டியில் நடைபெறும் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் எனவும் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு பெரும் சங்கடமான நிலையை கொடுத்திருக்கின்றது.

இலங்கை - இந்திய உடன்படிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தத்தின் அடிப்படையிலேயே இனநெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா ஏற்கனவே தெரிவித்து வருகின்றது. இதன்அடிப்படையிலேயே 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவை அரசாங்கத்து வழங்க வேண்டும் என இந்தியா, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அழுத்தத்தைக் கொடுத்திருக்கின்றது.

பிளவுபடாத ஒரு நாட்டுக்குள் இறுதித் தீர்வைக் காண வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.தே.க. சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு என்பன எடுத்திருப்பதன் பின்னணியிலும் இந்தியாவே செயற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியிலேயே ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவதற்கும், 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவை வழங்குவதாகவும் ஐ.தே.க. உறுதியளித்திருந்தது.

புpரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்திருக்கும் நிலையில், ஜே.வி.பி.யின் எதிர்ப்புப் போராட்டத்தைக் காரணம் காட்டி 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக்கொண்டால் - ஆகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் தலையீட்டுக்கு எதிரான போராட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ள ஜே.வி.பி., மற்றொரு எச்சரிக்கையையும் இப்போது வெளியிட்டிருக்கின்றது. அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 13 வது திருத்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காய்நகர்த்தல்களை அரசாங்கம் மேற்கொண்டால், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என ஜே.வி.பி. அறிவித்திருக்கின்றது.

மேலும் செய்திகள்: http://www.webeelam.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் "தீர்வு"தான் இருபது வருடங்களுக்கு முதலே திணிக்கப்பட்டதே.. நேரத்தை 20 வருடங்களுக்கு முன்பாக மாற்ற இந்தியா ஏன் துடிக்கிறது? மாற்றுகிறோம் என்று நேரத்தைக் கடத்த ஏன் மகிந்த & கோ நடிக்கிறது?

பி.கு. இப்படியான செய்திகள் "மட்டக்களப்பின் உள்ளூர் தேர்தல் களைகட்டுகின்றது" போன்றவை. தமிழர்களுக்குத் தேவையில்லாதவை!

ஆனந்தசங்கரி அது சொன்னார் இது எழுதினார் டக்கிளஸ் இக்கு அந்தப் பதவியாம் இந்தியா அந்தத் தீர்விற்கு அழுத்தமாம். கிழக்கில தேர்தலாம். அதை தொடர்ந்து வடக்கிலும் தேர்தலாம். எண்டு நாங்கள் எழுதிறம்.

தாயகத்து ஊடகத்தில இப்பிடியும் சொல்லீனமாம்...

"ஏற்கனவே தமிழ் மக்களின் விடுதலையை நேரடியாகவே எதிர்க்கின்ற ஒருசில நாடுகளை தவிரவும் மனித நேய மானிட விடுதலையை நேசிக்கின்ற நாடுகள் தமிழர்களை நிச்சயமாக அங்கீகரிப்பார்கள் என்பது வெளிப்படையானது....!

எனவே தமிழ் மக்கள், தங்கள் நிலை தவறி கொசோவாவின் கற்பனையில் திளைத்து எதிர் பார்ப்புகளை மட்டுமே வளர்த்து கொள்ளாமல். தமிழீழ பிரகடனம் நோக்கி மிக விரைவாக பயனிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது... அதற்காக தமது தாயக பகுதிகளில் இருந்து சிங்கள படைகளை அனுப்ப வேண்டிய அவசர அவசியம் தோண்றி உள்ளது...

அதற்கான வளிவகைகளை ஓவொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் தேட வேண்டும்... அத்தோடலின் பேறு, போர் வெற்றி என்பதாகவே காணப்படும்... எனவே அத்தகைய ஒரு போரியல் வெற்றியை பெறுவதற்காக தமிழர்கள் அனைவருமே களத்தில் அணிவக்குக்க வேண்டிய காலம் தோண்றி உள்ளது..."

ஒரே குழப்பமாக இருக்கு.

அய்யோ அய்யோ..

உங்களுக்கு குழப்பமெண்டா எங்களுக்கு சந்தோசம் தனே குருக்கர்...

நீங்கள் தெளிவடைய முன்னம் நாங்கள் தமிழ் ஈழத்தை அடைஞ்சிடோனும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.