Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் வடக்கு இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா பெருமளவு உதவுகிறது: "றோ" முன்னாள் அதிகாரி பி.இராமன்

Featured Replies

இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா பெருமளவில் உதவுகிறது என்று இந்திய கொள்கை வகுப்புப் பிரிவான "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மீது சிங்கள அபிலாசைகளை திணிப்பதே மஹிந்த அரசின் இலக்கு அதற்கு இந்தியா உதவக்கூடாது: விடுதலைப் புலிகளின் அதிஉச்ச ஆத்திரம் என்கிறார் - பி.இராமன்

[ ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2008, 06:09.14 AM GMT +05:30 ]

எத்தனை இனிமையான வார்த்தைகளை மஹிந்தவும் அவரது அதிகாரிகளும் பேசினாலும், உண்மையில் தமிழ்ச் சிறுபான்மையினர் மீது சிங்களவர்களின் அபிலா சைகளை திணிப்பதே அவரது அரசின் நோக்கமாகும்.

இந்தியாவும் அதற்கு உதவுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. என்றவாறு "றோ"வின் முன்னாள் அதிகாரியும் இந்திய அமைச்சரவைச் செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருமான பி.இராமன் தெரிவித்திருக்கிறார். "விடுதலைப் புலிகளுக்கு எதிரான நட வடிக்கைகளில் உஷார் தேவை" என்ற தலைப்பில் தென்னாசிய ஆய்வுக் குழுவின் இணையத் தளத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறு காரணங்களுக்காக விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதற்கு விரும்புகின்றன. விடுதலைப் புலிகளை ஒடுக்கி சிறுபான்மைத் தமிழர்கள் மீது சிங்கள வர்களின் விருப்பங்களையும் நலன்களையும் திணிப்பதே இலங்கையின் இலக்காகும். ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது அதிகாரிகளும் எத்தனைய இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் தாம் விரும்பும் வகையான சமாதானத்தைத் தமிழர்மீது திணித்து பிரித்தாளும் தந்திரத்தை செயற்படுத்துவதே அவர்களின் கொள்கையாகும் இந்த விடயத்தில் இலங்கை கொண் டுள்ள நோக்கத்துக்கு இந்தியாவும் சார்பானது என்ற எண்ணத்தை தோற்றத்தை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்கலாகாது என்று இராமன் தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.

பி.இராமன் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கக்பட்டிருப்பதாவது: விடுதலைப் புலிகளின் அதிஉச்ச ஆத்திரம்

இரு தரப்பு இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மார்ச் மாத முதல் வாரத்தில் இந்தியாவிற்கு மேற் கொண்ட பயணம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் அதிகாரபூர்வ அறிக்கையினை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் இந்திய அர சாங்கத்தின் மீதான விடுதலைப் புலிகளின் ஆத்திரம் மிக உச்ச அளவில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. கிழக்கில் அடைந்த தோல்விகள் காரணமாகவும் சிறிலங்கா வான்படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடிக்க இயலாமை காரணமாகவும் விடுதலைப் புலிகள் சற்று வருத்தத்துடன் காணப்படுகின்றனர். "அனைத்துலக'' சமூகத்தின் ஒத்துழைப்புடன் வான் படையினரும் கடற் படையினரும் முன்னெடுக்கும் போர் நடவடிக்கைகளுக்கு சரியாக முகங் கொடுக்கக்கூடிய வலு குன்றியுள்ளது. அவர்களிடம் அர்ப்பணிப்புக் கொண்ட படையணி எனினும், தனிநாட்டுக் கோரிக்கையிலிருந்து விடுதலைப் புலிகள் இது வரையில் விலகவில்லை. அவர்கள் அந்தக் கோரிக்கையில் மிக உறுதியாகவே காணப்படுகின்றனர். அவர்களிடம் இன்னமும் குறிப்பிடத்தக்களவு பலம் காணப்படுகின்றது. நன்கு பயிற்சி பெற்ற அர்ப்பணிப்புடன் கூடிய பெருமளவிலான படையணியை இன்னமும் விடுதலைப் புலிகள் கொண்டுள்ளனர்.

கிழக்கில் கிடைத்த ஒத்துழைப்பை விட வடபகுதி மக்கள் அதிகளவான ஒத்துழைப்பை விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்தும் வழங்கிவருகின்றனர். புத்தாக்க திறமை மற்றும் அர்ப் பணிப்புடன் போராட்டத்தில் ஈடு படக்கூடிய ஆற்றலும் நோக்கமும் சற்றும் குறைவில்லாமல் காணப் படுகின்றது. தற்போது தமது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளைப் பாதுகாக்கும் போர்க்கள முன்நகர்வின் மீதே விடுதலைப் புலிகள் அதிக அக்றை காட்டி வருகின்றனர். இதுவரையில் போராட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதாகவே தோன்றுகின்றது. இந்தியா, சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை மறைமுகமாகவே செய்து வருகின்றது. குறிப்பாக புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் மற்றும் இராணுவ தந்திரோபாயங்கள் தொடர்பான ஆலோசனை வழங்கு தல் போன்றவை இந்தியாவின் பிரதான பங்களிப்புக்களாக கருதப்படு கின்றன. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போக்குவரத்துப் பாதைகளை முடக்குவதன் மூலம் சிறிலங்கா கடற் படையினருக்கு பாரியளவில் இந்தியா மறைமுக ஒத்துழைப்பை நல்கி வருகின்றது.

வடக்கு முன்னநகர்வுக்கு இந்தியா உதவுகிறது தமிழகம் உள்ளிட்ட இந்திய மக்கள் இந்த நடைமுறைகளை முற்றாக எதிர்க்கவில்லை. வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினரின் போர் முன்நகர் வுகளுக்கு இந்திய அரசாங்கம் உதவி புரிந்துள்ளது.

கிழக்கில் இராணுவத்தினர் அடைந்த வெற்றிகளுக்குப் பின்னணியில் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளதுடன், பல்வேறு சந்தர்ப்பங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக சுயாதீன ஆய்வாளர்கள் மற்றும் நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவோ அல்லது மஹிந்தவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவோ மரியாதை அளிப்பதாகத் தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வரலாற்று வெற்றியாகவே இவற்றை நோக்குகின்றனர். மனித உரிமை அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத் துக் குற்றச்சாட்டுக்களையும் முழுமை யாக இந்த இரண்டு பேரும் நிராகரிக்கின்றனர். ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ்ப் பிர தேசங்களில் மனித உரிமைகள் குறித்து கடும்போக்குடன் நடந்துகொள் வது குறித்து பல மேற்குலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. கோத்தபாய அடிக்கடி இந்தியா செல்கிறார் சிறிலங்காவின் உயர் படை அதி காரிகள் அடிக்கடி இந்தியாவிற்கு பயணம் செய்து இராணுவ ஒத்துழைப் பைப் பெற்றுக்கொள்ள முனைகின்ற னர். கோத்தபாய ராஜபக்ஷ புதுடில் லிக்கு அடிக்கடி பயணம் செய்கின்றார்.

இந்த உதவிகளின் மூலம் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான இந்திய அரசாங்கம் அதிக சிரத்தை காட்டுவதில்லை என்று வெளிக் காட்டிக்கொள்ள இந்தியா விரும்பவில்லை. எனினும் இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அழுத்தங்கள் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடாகவே விடுதலைப் புலிகள் அண்மையில் இந்தியாவிற்கு அனுப்பியுள்ள அதிகாரபூர்வ அறிக்கை கருதப்படுகிறது.

ஏனைய பயங்காரவாத அமைப்பு களைப் போலவே விடுதலைப் புலி ளும் அநேகமான சந்தர்ப்பங்களில் அதிகாரபூர்வ அறிவித்தல்களை தவிர்த்து வந்தனர். மிகவும் இன்றியமையாத சூழ் நிலைகளின்போதே அவர்கள் அதிகாரபூர்வ அறிக்கைகளை வெளியிடுவர். இந்த வகையில் இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக் கையின் மூலம் இந்த நிலைமையின் முக்கியத்தவம் நன்கு புலனாகின்றது. விடுதலைப் புலிகளின் அறிக்கை சாதாரண கோபத்தின் வெளிப்பாடல்ல

இந்தியாவின் புலனாய்வு நடவடிக்கைகளை மீளமைத்துக் கொள்வது மிக வும் உசிதமானதொன்றாகக் கருதப்படுகிறது. இந்தியர்கள் மீதோ அல்லது முக்கிய இலக்குகள் மீதோ விடுதலைப் புலிகள் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும். விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ அறிக்கையை ஒரு சாதாரண கோபத்தின் வெளிப் பாடாகக் கருதி புறக்கணித்தால் அது பெரிய முட்டாள் தனமாக அமையக் கூடும். அண்மைக்காலத்தில் தமிழ்நாட்டு கவல் துறையினர், விடுதலைப் புலிகளின் கடல் வழித் தொடர்புகளைக் கட்டுப்படுத்த பல் வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். உதாரணமாக கேரள மாநில காவல்துறையினருடன் இணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் குறிப்பிடலாம்.

விடுதலைப் புலிகள் மீதான அனுதாப அலைகள் தொடர்ந்தால் அநேகமான சந்தர்பங்களில் உள்நாட்டு மக்களின் உதவியுடனேயே விடுதலைப் புலிகள் இந்த நடவ டிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் பணத்திற்காகவோ அல்லது உணர்வின் காரணாகவோ விடுதலைப் புலிகளுக்கு கணிசமான அளவு ஆதரவு இந்தியாவில் காணப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. என்னும், விடுதலைப் புலிகள் மீது அனுதாப அலைகள் தொடர்ந்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இருவேறு நோக்கங்களுக்காக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் என்பன விடுதலைப் புலி களைக் கட்டுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன. பிரதமர் ராஜீவ் காந்தியைப் படு கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதனையும். பயங்கரவாத கட்டுப்பாட்டு நட வடிக்கையில் தாம் இன்றும் சோபை இழக்கவில்லை என்பதனை காட்டிக் கொள்வதற்காகவும் இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. மஹிந்த அரசின் நோக்கம் பயங்காரவாத அமைப்பு ஒன்றை இல்லதொழிக்க வேண்டும் என்பதுவும் சிங்களப் பெரும்பான்மையினரின் அபிலாசைகளை தமிழ்ச் சிறுபான் மையினரின் மீது பலவந்தமாக திணிக்கவேண்டும் என்பதுவுமே சிறிலங்காவின் பிரதான குறிக்கோள்களாகும். எவ்வளவு இனிமையான வார்த்தைகளை மஹிந்தவும் அவரது அதிகாரிகளும் பேசினாலும் உண்மையில் தமிழ்ச் சிறுபான்மையினர் மீது தமது சர்வாதிகாரத்தை அரங்கேற்றுவதே பிரதான இலக்காக காணப்படுகின்றது. இந்த இரண்டு நாடுகளும் ஒரே நோக்கத்திற்காகவே நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்தியா ஒருபோதும் இடமளிக்கக்கூடாது இவ்வாறு இராமன் தமது ஆய்வுக் கட்டுரையில் எழுதியுள்ளார்.

tamilwin.com

அட ராமா, ராமா கொஞ்சம் ஓவராத்தான் பயமூட்டிப் பாக்கிறீங்க. ஆப்பிழுத்த குரங்கின் நிலையை அடையாது பார்த்துக் கொள்வது நல்லது.

இலங்கையின் வடபகுதியில் இடம் பெற்று வரும் இராணுவ நடவடிக்கைளுக்கு இந்தியா பெருமளவில் உதவுவதாக இந்தியக் கொள்கை வகுப்புப் பிரிவான 'றோ'வின் முன்னாள் இயக்குனர் பி. இராமன் தெரிவித்துள்ளார்.

இணையதளம் ஒன்றுக்கு அவர் எழுதிய கட்டுரையின் விபரம் :

இருதரப்பு இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சரத் பொன்சேகா மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் அதிகாரபூர்வ அறிக்கையினை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் இந்திய அரசு மீதான விடுதலைப் புலிகளின் ஆத்திரம் மிக உச்ச அளவில் வெளிப்பட்டிருந்தது.

கிழக்கில் அடைந்த தோல்விகள் காரணமாகவும் விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடிக்க இயலாமை காரணமாகவும் விடுதலைப் புலிகள் சற்று வருத்தத்துடன் காணப்படுகின்றனர். சர்வ தேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைப் படையினருக்கு கடற்படையினரும் முன்னெடுக்கும் போர் நடவடிக்கைகளுக்கு சரியாக முகம் கொடுக்கக் கூடிய வலுக் குன்றியுள்ளது.

தனி நாட்டுக் கோரிக்கையிலிருந்து விடுதலைப் புலிகள் இதுவரையில விலகவில்லை. அவர்கள் அந்தக் கோரிகையில் மிக உறுதியாகவே காணப்படுகின்றனர். அவாகளிடம் இன்னமும் குறிப்படத்தக்களவு பலம் காணப்படுகிறது. நன்கு பயிற்சி பெற்ற அர்ப்பணிப்புடன் கூடிய பெருமளவிலான படையணியை இன்னமும் விடுதலைப் புலிகள் கொண்டுள்ளனர்.

கிழக்கில் கிடைத்த ஒத்துழைப்பை விட வட பகுதி மக்கள் அதிகளவான ஒத்துழைப்பை விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்தும் வழங்கி வருகின்றனர். புத்தாக்கத் திறமை மற்றும் அர்ப்பணிப்புடன் போரட்டத்தில் ஈடுபடக் கூடிய ஆற்றலும் நோக்கமும் சற்றும் குறைவில்லாமல் காணப்படுகின்றது.

தற்போது தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பாதுகாக்கும் போர்க்கள முன்னகர்வின் மீதே விடுதலைப்புலிகள் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். இதுவரையில் போரட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதாகவே தோன்றுகின்றது.

இந்தியா, இலங்கைக்கான இராணுவ உதவிகளை மறைமுகமாகவே செய்து வருகின்றது. குறிப்பாக புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் மற்றும் இராணுவத் தந்திரோபாயங்கள் தொடர்பான ஆலோசனை வழங்குதல் போன்றவை இந்தியவின் பிரதான பங்களிப்புகளாகக் கருதப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போக்குவரத்துப் பாதைகளை முடக்குவதன் மூலம் இலங்கைக் கடற்படையினருக்கு பாரியளவில் இந்தியா மறைமுக ஒத்துழைப்பை நல்கி வருகின்றது.

தமிழகம் உள்ளிட்ட இந்திய மக்கள் இந்த நடைமுறைகளை முற்றாக எதிர்க்கவில்லை. வடக்கில் இராணுவத்தினரின் போர் முன்னகர்வுகளுக்கு இந்திய அரசாங்கம் உதவி புரிந்துள்ளது. கிழக்கில் இராணுவத்தினர் அடைந்த வெற்றிகளுக்குப் பின்னணியில் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளதுடன், பல்வேறு சந்தர்ப்பங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக சுயாதீன ஆய்வாளர்கள் மற்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றது.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவோ அல்லது மஹிந்தவின் சகோதரனான பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமனா கோதபயவோ மரியாதை அளிப்பதாகத் தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வரலாற்று வெற்றியாகவே இவற்றை நோக்குகின்றனர்.

மனித உரிமை அமைப்புகளினால் முன்வைக்கப்ட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக இந்த இரண்டு பேரும் நிராகரிக்கின்றனர். மகிந்த அரசு தமிழ்ப் பிரதேசங்களில் மனித உரிமைகள் குறித்துக் கடும் போக்குடன் நடந்து கொள்வது குறித்து பல மேற்குலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

இலங்கையின் உயர் படை அதிகாரிகள் அடிக்கடி இந்தியாவிற்குப் பயணம் செய்து இராணுவ ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முனைகின்றனர். கோதாபயா புது டில்லிக்கு அடிக்கடி பயணம் செய்கின்றாh. இந்த உதவிகளின் மூலம் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக இந்திய அரசு அதிக சிரத்தை காட்டுவதில்லை என்று வெளிக்காட்டிக் கொள்ள இந்தியா விரும்பில்லை. எனினும், இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த அழுத்தங்கள் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடாகவே விடுதலைப் புலிகள் அண்மையில் இந்தியாவிற்கு அனுப்பியுள்ள அதிகாரபூர்வ அறிக்கை கருதப்படுகின்றது. ஏனைய பயங்கரவாத அமைப்புகளைப் போலவே விடுதலைப்புலிகளும் அநேகமான சந்தர்ப்பங்களில் அதிகார பூர்வ அறிவித்தல்களை தவிர்த்து வந்தனர்.

மிகவும் இன்றிமையாத சூழ்நிலைகளின் போதே அவர்கள் அதிகாரபூர்வ அறிவித்தல்களை வெளியிடுவர். இந்த வகையில் இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையேயான இராணுவ ஒத்துழைப்புத் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூhவ அறிக்கையின் மூலம் இந்த நிலைமையின் முக்கியத்துவம் நன்கு புலனாகிறது. இந்தியாவின் புலனாய்வு நடவடிக்கைகளை மீளமைத்துக் கொள்வது மிகவும் உசிதமானதொன்றாகக் கருதப்படுகின்றது.

இந்தியர்கள் மீதோ அல்லது முக்கிய இலக்குகள் மீதோ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும். விடுதலபை; புலிகளின் அதிகாரபூவ அறிக்கையை ஒரு சாதாரண கோபத்தின் வெளிப்பாடாகக் கருதிப் புறக்கணித்தால் அது பெரிய முட்டாள் தனமாக அமையக்கூடும்.

அண்மைக் காலத்தில் தமிழ்நாட்டுப் பொலிஸார் விடுதலைப் புலிகளின் கடல் வழித் தொடர்புகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். உதாரணமாக கேரள மாநிலப் பொலிஸாருடன் இணைந்து எடுக்கபட்ட நடவடிக்கையைக் குறிப்பிடலாம்.

அநேகமான சந்தர்ப்பங்களில் உள்நாட்டு மக்களின் உதவியுடனேயே விடுதலைப் புலிகள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் பணத்திற்காகவோ அல்லது உணர்வின் காரணமாகவோ விடுதலைப் புலிகளுக்கு கணிசமான அளவு ஆதரவு இந்தியாவில் காணப்படுகிறது என்பதனை மறுப்பதற்கில்லை. எனினும், விடுதலைப் புலிகள் மீது அனுதாப அலைகள் இந்தியாவில் தொடர்ந்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுதக் கூடும்.

இரு வேறு நோக்கங்களுக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் என்பன விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன. ராஜீவ் படுகொலை செய்த பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதனையும் பயங்கரவாத கட்டுப்பாட்டு நடவடிக்கையில் தாம் இன்னும் பிடியை இழக்கவில்ல என்பதனைக் காட்டிக் கொள்வதற்காகவும் இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது,

பயங்கரவாத அமைப்பு ஒன்றை இல்லாதொழிக்க வேண்டும் என்பதும் சிங்களப் பெரும்பான்மையினரின் அபிலாசைகளை தமிழ்ச் சிறுபான்மையினர் மீது பலவந்தமாகத் திணிக்க வேண்டும் என்பதுமே இலங்கையின் பிரதான குறிக்கோள்களாகும்.

எவ்வளவு இனிமையான வார்த்தைகளை மஹிந்தவும் அவரது அதிகாரிகளும் பேசினாலும் உண்மையில் தமிழ்ச் சிறுபான்னையினர் மீது தமது சர்வாதிகாரத்தை அரங்கேற்றுவதே இவர்களின் பிரதான இலக்காக்க காணப்படுகின்றது. இந்த இரண்டு நாடுகளும் ஒரே நோக்கத்திற்காகவே நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்தியா ஒரு போதும் இடமளிக்க கூடாது. என்று இணையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தினக் குரல்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடயங்களில் உருப்படியான விசயங்களை சொல்பவர்கள் இப்போது முன்னைநாள் அவர் முன்னைநாள் இவர் என்று ஆகிவிட்டார்கள். கடமையில் இருக்கும்போது கப்சிப் என்று காரியத்தை கொண்டு போறது பிறகு ஓய்வு பெற்றதும் பல விடயங்களை வாய்கிழிய சொல்லுவார்கள்.

இந்திய மண்ணிலை நாங்கள் போய் இறங்கி வேலை பார்த்தால் தான் இனி சரிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

<_< வணங்காமுடி,

புலிகளைத் தொடர்ந்தும் பயங்கரவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் இவர், இந்தியாவின் உதவி இலங்கைக்கு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார். இலங்கை என்னதான் பயங்கரமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டாலும் அந்த உதவி தடுக்கப்படக் கூடாது என்று கருதும் இவர், சிங்களப்படை விடும் விமானத் தாக்குதல் பூச்சாண்டிகளை அப்படியே நம்பி தனது பொன்மொழிகளை உதிர்ந்துள்ளார்.

" தமிழ்நாட்டுத் தமிழர் உற்பட எந்த இந்தியர்களுமே புலிகளுக்கு எதிரான இந்திய நடவடிக்கைகளையோ அல்லது, சிங்கள அரசுக்கான உதவிகளையோ தடுக்க வில்லை" என்று சொல்வதன் மூலம் தனது பார்ப்பண ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

அநியாயத்திற்கு புலிகளை வம்புக்கிழுத்து "இந்தியாவுக்கு ஆபத்து, சுதாரித்துக்கொள்ளுங்கள்" என்று ஏற்கனவே புலிகளை அழிக்கவென கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் இந்திய உளவுத்துறையை உசுப்பேற்றி விடுவதோடு மட்டுமல்லாமல் சிங்கள் அரசுக்கும், அதன் இனவாத சக்திகளுக்கும் தீனி போடுகிறார்.

தள்ளாத வயதிலும் பணத்திற்கு ஆசைப்பட்டு பத்திரிகைகளுக்கு கதை எழுதும் இந்த சகுனிகளின் கொட்டம் எப்போதுதான் அடங்குமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

<_< இறைவன்,

இந்தக் குரங்கு ஆப்பிழுத்தாலும் பிரச்சனையில்லை. ஏனெண்டு கேகிறியளோ ? ஆப்பில அம்பிடுவதற்கு அங்கு ஏதாவது இருக்கவும் வேண்டுமே ?!

சுத்தி சீன வெடி கொளுத்தி போடுறார்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.