Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசு இராணுவ நடவடிக்கையை நிறுத்தினால் புலிகள் பேச்சுக்கு தயார்!

Featured Replies

இலங்கை அரசு இராணுவ நடவடிக்கையை முற்றாக கைவிட்டால் புலிகள் சமாதான பேச்சுக்கு முன்வருவார்கள் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசன் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் பிரிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவித்துள்ளார்.

மாமனிதர் கே சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசனை 13 தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து நீண்ட அரசியல் உரையாடல் ஒன்றை செய்துள்ளனர். அந்த சந்திப்பில் மேற்படி கருத்தை தெரிவித்தாக பிரிஐயின் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://www.navhindtimes.com/articles.php?Story_ID=031764

Edited by Kaandam

  • கருத்துக்கள உறவுகள்

புலி பசித்தாலும் புல்லை தின்னாது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு இராணுவ நடவடிக்கையை முற்றாக கைவிட்டால் புலிகள் சமாதான பேச்சுக்கு முன்வருவார்கள் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசன் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் பிரிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவித்துள்ளார்.

http://www.navhindtimes.com/articles.php?Story_ID=031764

சர்வதேச அரங்கில் ஏற்படுகிற மாறுதல்களை அரசியல்ரீதியாக கையாண்டு முன்செல்கிற முதிற்ச்சி நடேசனிடம் தெரிகிறது. ”தென்னிலங்கையில் பாரிய தாக்குதல்களை நடத்தக்கூடிய வல்லமை” உருவாகி இருக்கிற தருணத்தில் நடேசன் வெளிப்படுத்தும் இந்த அரசியல் முதிற்ச்சி அவசியமானதும் பாரட்டப் படவேண்டியதும்தான். புல்தான் ரஜதந்திர அரசியல். பசிதாலும் புலி புல்லைத் தின்னாது என்பதை சரியாகவே தெரிந்து வைதிருக்கிறீர்கள். இதனால் சோரம்போகாமல் போராட்டதில் பாதிக் கிணறு தாண்டிவிட்டோம். ஆனால் புல் இல்லாவிட்டால் புலிக்குப் பசித்தாலும் தின்ன எதுவும் இருக்காது என்பதையும தெரிந்துகொண்டால் மிகுதிப் பாதியையும் தாண்டிவிடலாம். ஒத்துக்கொள்வீர்களா தமிழ்ச் சிறீ

  • தொடங்கியவர்

'சாமாதான' பேச்சுகள் குறித்து யாழ் களத்தில் முன் நிகழ்ந்த கருத்து பரிமாற்றங்கள் போல் இம்முறை அநேகர் ஆர்வம் காட்டவில்லை. இது ஒரு நல்ல சகுனம் அல்ல.

தமிழ் மக்கள் சமாதான வழிமுறை மூலமே 'மீதி கிணற்றைத் தாண்டலாம்' என்பது எம்முன் உள்ள சாத்தியமான அரசியல் வழிமுறை. யுத்தத்தை நிறுத்தி அரசை சமாதான பேச்சுக்கு அழைக்கும் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசன் 'தலை இருக்க வால் ஆடுவதாக' த.வி.பு. வரலாற்று தெரிந்த எவரும் சொல்லமாட்டார்கள். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் அரசியல் துறை அவ்வாறு அறிவித்திருக்க மாட்டாது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

மேற்குலகில் புதிதாய் உருவாகிவரும் இலங்கை அரசு மீதான 'அதிர்ப்தி'யை இலாகவமாக கையாளக்கூடிய அரசியல் முதிர்ச்சி இல்லாதவரை எம்மால் 'முழுக்கிணற்றையும்' தாண்டமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

'சாமாதான' பேச்சுகள் குறித்து யாழ் களத்தில் முன் நிகழ்ந்த கருத்து பரிமாற்றங்கள் போல் இம்முறை அநேகர் ஆர்வம் காட்டவில்லை. இது ஒரு நல்ல சகுனம் அல்ல.

தமிழ் மக்கள் சமாதான வழிமுறை மூலமே 'மீதி கிணற்றைத் தாண்டலாம்' என்பது எம்முன் உள்ள சாத்தியமான அரசியல் வழிமுறை. யுத்தத்தை நிறுத்தி அரசை சமாதான பேச்சுக்கு அழைக்கும் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசன் 'தலை இருக்க வால் ஆடுவதாக' த.வி.பு. வரலாற்று தெரிந்த எவரும் சொல்லமாட்டார்கள். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் அரசியல் துறை அவ்வாறு அறிவித்திருக்க மாட்டாது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

மேற்குலகில் புதிதாய் உருவாகிவரும் இலங்கை அரசு மீதான 'அதிர்ப்தி'யை இலாகவமாக கையாளக்கூடிய அரசியல் முதிர்ச்சி இல்லாதவரை எம்மால் 'முழுக்கிணற்றையும்' தாண்டமுடியாது.

சமாதானம் மூலம் தான் பிரச்சனை அணுக வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் கொடியேற்றப் புறப்பட்டுவிட்ட சிறீலங்கா அரசு இதற்கு எந்த வகையில் தயாராக இருக்கும். அதுவும் புலிகள் கிழக்கை இழந்து பார்வைக்கு பலவீனப்பட்டுப் போயுள்ளனர் என்று சொல்லத்தக்க நிலையில்..??! <_<:D

  • தொடங்கியவர்

சர்வதேச சமாதான ஒருங்கிணைப்பு குழுவின் 2008 மார்ச் 22 - 23 இரு தினங்கள் நடக்கவுள்ள கருத்தரங்கு பற்றியும் கருத்துகளை பரிமாறுவது இங்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் இணைத்துள்ளேன்.

GPSG.JPG

http://globalpeacesupport.com/index.html

Edited by Kaandam

சமாதானம் வேணுமெண்டு தலைவர் வந்து ஒற்றைக்காலில நிண்டாலும்... மகிந்த மாமா.. கேக்கிற நிலைமையில இல்லை.

எல்லா உலகநாடுகளும் கடைசீல வருவாங்கள் வந்து வாய்க்கு அரிசிபோடத்தான்...

இதுதான் முடிவைய்யா... வெண்டால் வழ்வு... இல்லாட்டால் சாவு..

புலிகள் பேச்சுவார்த்தைக்கும் சமாதானத்திற்கும் எதிரானவர்களல்லர். நியாயத்திற்காக சண்டை பிடிக்க வேண்டியவர்களும் அவர்கள்தான், அமைதிக்காக பேச வேண்டியவர்களும் அவர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
:huh: இது, நாங்கள் இன்னும் நோர்வேயின் மத்தியச்த்தத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்பது போல இருக்கு. சர்வதேசத்தின் முன் சிறிலங்காவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது என்பதை மீண்டும் நினைவுபடுத்த இதைச் செய்திருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.