Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கை விரைவில் மீட்போம்: மகிந்த ராஜபக்ச

Featured Replies

சிறிலங்காப் படையினர் வடக்கையும் விரைவில் கைப்பற்றுவர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காப் படையினர் வடக்கையும் விரைவில் கைப்பற்றுவர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

நாங்க இராமர் இராவணன் என்று புலம்பிக் கொண்டு இருந்தால் இது தான் நடக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு வடக்கும் விரைவில் மீட்கப்படும் -ஜனாதிபதி 3/19/2008 12:24:12 AM

வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டமையினால் தான் அங்கு ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் வடக்கிலும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக புலிகளிடமிருந்து அந்தப் பகுதியும் விரைவில் மீட்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிழக்கில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு பதிவாகும். ஏனெனில் தென்பகுதி தேர்தலில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் கூட இங்கு இடம்பெறவில்லை. கிழக்கு மாகாணத்தில் மக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவான 101 உறுப்பினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: கிழக்கு மாகாணத்தில் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான அனைத்து சந்தர்ப்பங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயக வழியின் கீழ் வாழ்வது, துப்பாக்கிகளின் அதிகாரத்தின் கீழ் வாழ்வதனைப் போல் அல்ல என்பதை அனைவரும் உணரவேண்டும்.

ஜனநாயக வழியில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் அதற்கு நீடித்த பொறுமையும் அதேநேரம் உணர்வுபூர்வமான பொறுப்பும் மிக மிக அவசியம். மக்களது பிரச்சினைகள் ஜனநாயக வழியிலேயே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை என்ற நிலை இன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து அதிகாரங்களும் இன்று கிழக்கு மக்களாகிய உங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டமையேயாகும். அதேபோல், வடக்கிலும் ஒரு ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக அந்த பிரதேசமும் கூடிய விரைவில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுவிடும்.

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்கள் இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு பதிவாகும். ஏனெனில், தென்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் வழமையாக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் அங்கு இடம்பெறவில்லை. கிழக்கை நிருவகிக்கும் உரிமை உங்களது கையில் ஒப்படைத்திருப்பதும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விடயமேயாகும். அப்படி என்றால் அந்த பிரதேச மக்களது அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது அவர்களால் தெரிவு செய்யப்பட்ட உங்களது பொறுப்பாகும்.

ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்கள் எந்தளவு சுதந்திரமாகவும் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்கின்றார்களோ அதே அளவு சுதந்திரமும் உரிமையும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அது தற்போது கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விமர்சனங்களையிட்டு அலட்டிக்கொள்ளாத அதேவேளை, மக்களது தேவைகள் குறித்து தேடுதல் உள்ளவர்களாக செயற்பட வேண்டியது ஜனநாயக வழிமுறையின் ஓர் அங்கமாகும்

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ஆனந்தசங்கரியோடு சேர்ந்தால் பிரதேச சபைத் தலைவர் பதவி கிடைக்கக் கூடிய சாத்தியம் அதிகம்.. வாருங்கோ போவம்!

முன்னரெல்லாம் காலக்கெடு, இப்போது வரைவில், என்ன அர்த்தம்.?

"இறுதி யுத்தம்" "வடக்கு கிழக்கு என்று எல்லா இடமும் ஒரே நேரத்தில் களங்கள் திறக்கப்படும்" என்ற கதைகள் இல்லாது போன மாதிரியான அர்த்தமாக இருக்குமோ? :lol:

குறுக்கண்ணே இறுதி யுத்தம், ஒரே நேரத்தில் பல களங்கள் திறத்தல் இதுக்கெல்லாம் இன்னும் காலம் கிடக்கிறது. எண்டு நாங்கள் நினைக்கிறம்.

மகிந்த வடக்கை பிடிக்கப்போறதாச் சொல்லுறார். நீங்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறயள்?

வந்திருக்கின்ற ஐரோப்பி ஒன்றியக் குழுவின் காலைப் பிடித்தாவது, தப்பித்துக் கொள்ளும் காலத்திற்குமுன்................ அந்த அர்த்தத்திலும் இருக்கலாம்.

கிழக்கின் இனப் பிறவி பிள்ளையான் போல் வடக்கின் இனப் பிறவிகள் ஆனந்தசங்கரி டக்கிளஸ் போன்றோர்

ரின் கீழ் வாழ வெகு விரவில் வடக்கு தமிழரும் தங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள் அதுக்கு பிறகு பெரியார் இந்து மத பிரச்சனையை முன் எடுப்போம் :D

மின்னல் அண்ணை நாங்கள் நினைக்கிறம் எந்த நேரம் எந்த வேலிக்காலையும் பாஞ்சு எல்லாருக்கும் பேதி குடுத்துப் போட்டு எல்லா இடமும் கொடி ஏத்திற நிலமையில இருக்கிறம் எண்டு. அதாவது கிணத்தில 4 ஆவது படியில நிக்கிறம் 5 படிக்கு மேலாலை தண்ணி நிக்குது. குனிஞ்சு நக்கிறது தான் மிச்சம் ஆனபடி சோர்வடைஞ்சு விட்டுட்டு ஓடிவிடாதேங்கோ என்றம்.

நாலாவது படீல இருந்து ஏன் குணிஞ்சு நக்குவாண்... கொஞ்சம் பொறுத்தா... 5வது படிக்கு தண்ணி வந்திடும்.. பிறகென்ன.... வாயை பிளக்க வேண்டியான்

வடக்கு முழுவதும் இராணுவக்கட்டுப்பாட்டினுள் வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கு மகிந்தவால் முடியாது. நீங்கள் ஆசைப்பட்டு நடக்கப் போகுதா? ஓடும் போது தேவைப்பட்டால் தண்ணீர் கொஞ்சம் தரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

:D இன்னொரு விஷயம் இறைவன்,

தண்ணி மட்டுமில்லை, மத்துறதுக்குச் சரமும், ஒரு 20 ரூபாக் காசும் மாத்தி வைச்சுக் கொள்ளுங்கோ. அவசரத்துக்கு ஆரும் ஓடிவந்தா சரத்தைக் குடுத்து பச்சுக்கு காசும் குடுத்து அனுப்பலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாறிரோ

நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டிரோ........

இது இறைவனுக்கும் ரகுநாதனுக்கும் தமிழ் லினெக்சுக்கும் மட்டும் தான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

குனிஞ்சு நக்கிறது தான் மிச்சம் ஆனபடி சோர்வடைஞ்சு விட்டுட்டு ஓடிவிடாதேங்கோ என்றம்.

http://bp3.blogger.com/_m19VlcExds8/RwZzFa...0-h/mahinda.jpg

Edited by nunavilan

கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாறிரோ

நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டிரோ........

இது இறைவனுக்கும் ரகுநாதனுக்கும் தமிழ் லினெக்சுக்கும் மட்டும் தான் :wub:

கனவை நோக்கிச் செயற்படுங்கள், செயற்படுத்துங்கள் நனவாகும்.

இது எனக்கும் உங்களுக்கும் மட்டுமே .

பறக்க முடியும் என்று நம்புவோம்.. அப்பதான் நடக்கமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.