Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் முதலமைச்சர் யார்? பதவி குறித்த முறுகல் ?

Featured Replies

நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கு முதலமைச்சர் அபேட்சகர் ஒருவரை பெயரிடாமலிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரியவரகிறது.

இதன்படி, மாகாணசபைத் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அபேட்சகரை முதலமைச்சராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பு மனுச் சபையின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இந்த விடயம் தொடர்பாக சில அரசியல் கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையானை தெரிவு செய்துள்ளனர்.

இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து நாட்டின் பிரதான கட்சிகள் சில இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரியவருகிறது.

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் பங்குபற்றுவது குறித்து தமது இறுதித் தீர்மானத்தை இன்று மாலை நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் தெரிவிக்க உள்ளது.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய அனைத்து முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து விரிவான கூட்டமைப்பொன்றாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் போட்டியிட உள்ளதாக நேற்றைய தினம் (மார்ச் 24) தெரியவந்தது.

எனினும், கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் தமது தீர்மானத்தை தெரிவிக்கவில்லை.

நன்றி : www.lankadissent.com/Tamil/news

வாழ்க சனநாயகம்.... :wub:

கிழக்கின் முதலமைச்சர் யார்? பதவி குறித்த முறுகல் ?

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் திகதி இலங்கை அரசாங்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நாளை மறுதினம் கட்சி அபேட்சகர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி ஆரம்பமாகி மாகாண சபைத் தேர்தல் வேட்மணு தாக்கலுக்கு முன்னதாகவே பிள்ளையான் மற்றும் அரச தரப்புக்கு இடையே முதலமைச்சர் பதவி குறித்த வெடிப்பு ஒன்று உருவாகியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் 9 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இடம் பெற்ற தேர்தலில் பிள்ளையான் தலைமையிலான தமவிபு கட்சி தனித்துப் போட்டியிட்ட 8 மன்றங்களின் ஆட்சியையும் கைப்பற்றிய பின்னர் கடந்த 18ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள முற்பட்ட வேளையிலேயே இவர்களுக்குள் முறிவு ஒன்றுக்கான வெடிப்பு தொடங்கியதாக தெரிகிறது.

கிடைக்கும் தகவல்களின்படி பதவிப்பிரமாணம் எடுப்பதற்காக வந்தவர்களுடன் பிள்ளையானும் கொழும்பு வந்து தாஜ் விடுதியில் தங்கி இருந்த போதும், பிள்ளையானை அழைத்து வருவதற்கும் உள்ளூராட்சி தேர்தலில் தேர்வாகி இருந்தவர்களை அழைத்துச் செல்ல சென்ற அதே பஸ் அனுப்பி வைக்கப்பட்டது என்றும், பஸ்ஸில் செல்ல முடியாது என தெரிவித்த பிள்ளையான், தான் வருவதற்கு கார் ஒன்றை அனுப்புமாறு கோரிதாகவும் , ஆனால் அரசு அது குறித்து பெரிதுபடுத்தவில்லை என்றும் அதனாலேயே பிள்ளையான் அந் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

ஆனாலும் அந் நிகழ்வுக்கு பின்னர் பிள்ளையான் ஜனாதிபதியை தனியாக சந்தித்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றால் தனக்கு முதலமைச்சர் பதவி தேவை என கோரியுள்ளார். ஜனாதிபதி, பிள்ளையானின் பேச்சுக்கு செவிமடுத்த போதும் அது குறித்து ஜனாதிபதி பதில் அளிக்காமல் இருந்துள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதி, பிள்ளையான் தொடர்பான மக்கள் கருத்துகளை பெற்றுக் கொள்ள முயன்றுள்ளார். ஜனாதிபதி பெற்றுக் கொண்ட கருத்துகள் பிள்ளையானுக்கு மக்கள் மத்தியில் அரசியல் செல்வாக்கு இல்லை என்பதாகவே கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்குள் கடந்த வாரத்தில் TMVP கட்சி கூடிய போது அரசுடன் இணைந்து பங்கு கொள்ளும் மாகாண சபை தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றால் தமது கட்சியின் பிரதிநிதி ஒருவரை முதலமைச்சாரக்க வேண்டும் எனும் கோரிக்கையை அரசுக்கு TMVP கட்சி சமர்ப்பித்துள்ளது.

இது இப்படி இருக்க , நேற்று இடம் பெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தேர்வு தொடர்பான கூட்டத்தில், கிழக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் யார் என்பது குறித்து தற்போது முடிவெடுப்பதில்லை என்று அமைச்சர் சிரிபால த சில்வா தெரிவித்துள்ளார்.

http://www.ajeevan.ch/content/view/1316/1/

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு இனி பிள்ளையானும் தேவையில்லை , ராசதந்திர கடவுச்சீட்டு ஒன்றில் எங்காவது அனுப்ப வேண்டியதுதான்.

முதலமைச்சர் பதவி வகித்தவர்கள் ஓய்வெடுக்க சிறந்த இடம் பூனா

முதலமைச்சர் பதவி வகித்தவர்கள் ஓய்வெடுக்க சிறந்த இடம் பூனா

ஈழவன் நீங்கள் ஒண்டும் அசிங்கமான சொல்லில் திட்டவில்லையே?

பிள்ளையானை வெளியே அனுப்ப மாட்டார்கள் ஆனால் போட்டு தள்ள முயற்சிப்பார்கள்

கருணா வை வழிநடத்திய விதம் வேற பிள்ளையான் அபப்டி இல்லை

கருணா தான் புலிகளின் முன்னால் கோ(கே)ணல் என்ர பெயருடனும் மாமதையுடனும் இருக்க சிங்களவன் அலுவலை கொண்டு போய்ட்டான் காசும் கருணா க்கு அரவாசி கோத்தபக்ஷாவுக்கு பாதி எண்டு கருணா நினைக்க அவன்கள் இவருக்கும் ஆப்பு வைத்து காரியத்தை கொண்டு போய்ட்டார்கள் அது போக இவர்

வேற நினைப்பில் வாழ அவன்கள் பார்த்தார்கள் ஆள் சரி வராது என்று பிரச்சனையை வழத்து காசு மட்டும் கொண்டு போ எண்டு ஆளை அனுப்பி விட்டார்கள்

இனி அவன் விடுதலை அடைந்து வந்து உண்டியலானோடு கோவில் என்றும் ஏதாவது புலி எதிர்ப்பு ரிவி ரேடியோவில் பேட்டி கொடுக்க வேண்டியது தான்

கிழக்கின் விடிவெள்ளியாக :lol::lol::D:D

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அரசாங்கத் தரப்புடன் உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கு பிள்ளையான்குழு விதித்துள்ள புதிய நிபந்தனை காரணமாக அரசாங்கத் தலைமை குழப்பம் அடைந்திருப்பதாகத் தெரிகின்றது. பிள்ளையானையே முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அறிவிக்காத நிலையில் அரசாங்கத்துடன் தேர்தல் உடன்படிக்கை ஒன்றுக்குத் தாம் வரப்போவதில்லை என பிள்ளையான் குழு அறிவித்திருக்கின்றது.

கடந்தவாரம் நடைபெற்ற பிள்ளையான் குழுவின் உயர்மட்டக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையானின் பெயர் பிரேரிக்கப்பட்டால் மட்டுமே அரசாங்கத்துடன் தேர்தல் உடன்படிக்கைக்குச் செல்வதென பிள்ளையான் குழு தீர்மானித்திருந்தது. அதேவேளையில் கூட்டணி அமைத்துக்கொள்வது தொடர்பாக பிள்ளையான் குழுவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய அரசு தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும் பிள்ளையானுக்கே முதலமைச்சர் பதவியை வழங்க அரசு தயாராகவிருப்பதாக உறுதியளித்திருந்தார்.

இருந்தபோதிலும், அரசாங்கத் தரப்பு இந்த நிலைப்பாட்டிலிருந்து தற்போது பின்வாங்கியிருப்பதாகத் தெரிகின்றது. அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளின் அழுத்தமே இதற்குக் காரணம் எனக்கூறப்படுகின்றது. முதலமைச்சர் பதவிக்குரிய வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்காமல் விடுவதெனவும், தேர்தலில் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெறுபவருக்கே முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கும் அரசுத் தலைமை முடிவெடுத்திருப்பதால், பிள்ளையான் குழு அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிகின்றது.

தம்முடைய இந்த நிலைப்பாட்டை அரசுத் தலைமைக்குத் தெரியப்படுத்தத் தீர்மானித்திருக்கும் பிள்ளையான் குழு இந்த நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானித்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் தாம் மக்கள் மத்தியில் பெற்றுள்ள செல்வாக்கை தெளிவாகக் காட்டியிருப்பதால் அதனை ஏற்றுக்கொண்டு தம்மை தனியான ஒரு அமைப்பாகக் கருதவேண்டும் எனவும் பிள்ளையான் குழு தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமது அணி கணிசமான இடங்களில் வெற்றிபெற்றிருப்பதன் மூலமாக ஒரு பலமான அணி என்பது உறுதியாகி இருப்பதாகத் தெரிவித்த பிள்ளையான் குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா, இந்த நிலையில் மற்றொரு கட்சியின் கீழ் தேர்தலைச் சந்திப்பதோ அல்லது முதலமைச்சர் பதவிக்கான அங்கீகாரத்தை வழங்காமலிருப்பதோ ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையிட்டு தமது அணி தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த மௌரானா, முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக தமது அணியைச் சேர்ந்த ஒருவரை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இத்தேர்தலை தமது அணி தனித்தே எதி;ர்கொள்ளும் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்தவுள்ள பிள்ளையான் குழு அரசாங்கத்திடமிருந்து அதற்கான பதிலை உடனடியாக எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்
:lol: சிங்கள அரசின் எச்சிலை நக்கிக் கொண்டு அதன் வாலில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருவன் அந்த அரசுக்கே சவால் விட்டு நிபந்தனை விதிப்பதென்பது வெறும் நாடகம் மட்டுமே ! இது பிள்ளையானுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாகக் காட்டுவதற்கு மகிந்த ஆடும் நாடகம்.

சபேசன் ஏன் கடந்த சில வாரங்களாக பிள்ளையான் போன்றவர்களை செய்தியாக்கி எம்மவர்களை பராக்காட்டுவதில் மும்மரமாக ஈடுபடுகிறார் என்று விளங்கவில்லை?

பிள்ளையானை கிழக்கில் ஒரு அரசியல் சக்த்தியாக காட்டத்தான் பல நாடகங்கள் ஒற்றுமையாக அரங்கேற்றப்படுகுது.

அதை ஒத்து ஊதுவதற்கு ஏன் வெப்பீழம் முன்னுக்கு நிக்குது? அதை கொண்டு யாழ்களத்திலையும் பிரச்சாரம் பண்ணிறார்?

உங்கடை இணையத்தளத்தை பிரபல்யம் ஆக்க வேறை செய்திகள் அம்பிடவில்லையோ இல்iலாட்டி வீரகேசரி மாதிரி வெளிக்கிட்டிருக்கிறியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

:lol: குறுக்கர்,

உது சரியான கதை !

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அவர்கள் ஊர்புதினத்தில் மும்முரமாக நிற்பதன் அர்த்தம் புரிகிறது. சோழியன் குடுப்பி சும்மா ஆடாது. வாழ்க உங்கள் பணி.

சிலர் பிள்ளையான் குழுவை "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்" என்று மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு எமது தேசிய ஊடகங்கள்என்று சொல்லப்படுகின்ற ஊடகங்களில் கூட இந்தப் பெயர் வரத் தொடங்கி விட்டது.

"விடுதலைப் புலிகள்" என்ற பதத்தை கொண்டிருப்பதற்கு கொஞ்சம் கூட தகுதி அற்ற கும்பல்அது.

ராசிக் குழு, வரதன் குழு போன்ற ஒரு குழுவே அவர்கள் என்பதை "பிள்ளையான் குழு" என்று செய்தி தருவதன் மூலம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அதை விட யாழ் களத்தில் பெரும்பாலான செய்திகள் இணைக்கப்பட்டு விடுகின்றன. நான் காலையில் எழுந்து செய்திகளை இணைக்க வருகின்ற போது, வன்னிச் செய்திகள் பெரும்பாலும் யாழ் களத்தில் இருக்கும்.

இங்கே இல்லாத செய்திகளை இணைக்கின்ற பொழுது, அது பிள்ளையான் குழு சார்ந்த செய்திகளாகவே இருக்கின்றன.

இவைகளை விட வேறு காரணம் இல்லை.

என்ரை குஞ்சு ராச சபேசன்

பிள்ளையான் குழு, ராசிக்குழு, வரதர் குழு, கருணா குழு, பிள்ளையான், கருணா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஈபிடிபி, ஆனந்தசங்கரி, டக்கிலஸ் இவை எல்லாரையும் பற்றி புலம்பெயர்ந்த 5லட்சம் மந்தைகளும் அவர்கள் நடத்தும் பன்னாடை ஊடகங்களும் ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் மணத்தியாலங்களை செலவழித்து செய்தி எழுதிறம், உங்களைமாதிரி செய்தியை சரியா திருத்தி எழுதிறம், அதை வாசிக்கிறம் நக்கலடிக்கிறம் கவிதை எழுதிறம் சுவார்சியமாக கருத்துப்பகிருகிறம் விமர்சனம் வைக்கிறம் எண்டு இரைமீட்டு விரைமடிக்குதுகள்?

ஒரு நாளைக்கு இத்தனை ஆயிரம் மணத்தியாலங்கள் உப்பிடி விரையமானால் ஒரு கிழமை, ஒரு மாதம், ஒரு வருடத்தில் எத்தனை ஆயிரம் மணத்தியாலங்கள் விரையமாகுது? உதாலை நாங்கள் இதுவரை கண்டது என்ன? எங்களாலை நிராகரிக்கப்பட்டவைக்காக இப்படி நேரத்தை விரையமடிக்கும் பன்னடைகள் எப்ப திருந்தப் போகுதுகள்? மந்தைகளாவது சாப்பிட்டதை எடுத்து செமிபாட்டிற்காக இரைமீட்குதுகள். ஆனால் புலம்பெயர்ந்த அதிபுத்திசாலி மந்தைகள் கழித்ததை எடுத்து வைச்சு இரை மீட்குதுகள்.

அதுக்கு நீங்கள் விண்ணாண விளக்கம் வேறை தாறியளே?

உந்தக் கூத்துகளை ஆடுறதுக்கு வேறை வேலையில்லாமல் மோகன் எண்டவர் யாழ்களம் நடத்திறார்.

என்ர அய்யோ,,,, குறுக்கண்ணா

எனக்கு புல்லரிக்குது...

உந்த பாவி பிள்ளையான் வந்து உங்களையும் பழுதாக்கி போட்டான் இண்டைக்கு அவனை விடக்கூடாது..

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு முதலமைச்சர் பதவி யாருக்கு ? பிள்ளையான் - மு.கா இழுபறி

தமிழர் அபிலாசைக்கு எதிராக பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவிபற்றியும் , மற்றும் மாகாண சபை தேர்தல் கூட்டு பற்றியும் முஸ்லிம் காங்கிரஸ் , பிள்ளையான் குழுவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

தமிழர் போட்டியிடாவிட்டால் முஸ்லிம்கள் அதிகாரம் செலுத்திவிடுவார்கள் எனக்கூறி வாக்கு கேட்ட பிள்ளையான் குழுவும் பிள்ளையான் குழு முஸ்லிம் மக்களை துன்புறுத்துகின்றனர் எனக்கூறிய மு.கா உம் கூட்டு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என கிழக்கு தமி் - முஸ்லிம் மக்கள் விசனப்பட்டனர்.

பிள்ளையான் ஆளும் கட்சியுடன் கூட்டமைத்தால் தாம் தனித்தோ அன்றி ஐ.தே.க உடன் கூட்டமைத்தோ போட்டியிடுவோம் எனவும் மு.கா தெரிவித்துள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.