Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரியதரம் செய்வது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரியதரம் செய்வது எப்படி?

நல்ல மென்மையாக இருக்கனும் .

தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லித்தரலாமே

Link to comment
Share on other sites

கறுப்பி அண்மையில் நான் செய்து பார்க்கவில்லை. கிட்டதட்ட் 9 வருடங்களுக்கு முன் அம்மவுடன் இருந்த போது அவருடன் இணைந்து செய்திருந்தேன். செய்முரை இதோ. ஊரில் சுண்டால் அளப்பார்கள்.

செய்முறை.

வெள்ளை பச்சை/ தீட்டிய சிவப்பு பச்சை அரிசி 1 சுண்டு/ 250 கிராம் எடுத்து நீரில் 7- 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் அரிசியை நீரை நன்கு வடித்து எடுத்து கொள்ளவும்.

ஊரில் உரலில் மா இடித்து எடுப்பார்கள். உங்களிடம் இந்திய கிரைண்டர்கள் இருந்தால் அவற்றில் உள்ள 2- 3 மாற்றி அரைக்கும் பாத்திரங்களில் ஒன்றில் ஈர அரிசி (உரலில் இடிப்பது போலவே - நீர் சேர்க்காமல்) அரைக்கும் வசதி இருக்கும். அதில் மாவை அரைத்து அரித்து எடுங்கள்.

சீனி சேர்த்து குழைப்பதற்கு 2 முறைகள் உண்டு.

ஒன்று

250 கிராம் சீனியை மாவுடன் நன்கு கலந்து கொள்ளுங்கள். சிறிது நீர் தெளித்து நன்கு அடித்து பிசையுங்கள். நீர் செர்க்கும் போது கவனம் தேவை. புட்டு மா போல் திரள குழைக்க கூடாது. உதிர் பதமாக இருக்க வேண்டும். எவ்வளவுக்கு அடித்து பிசைகிறீர்களோ அவ்வளவுக்கு அரியதரம் மெதுமையாக வரும். அடித்து பிசைந்த மாவை ஒரு பாத்திரத்தில் இட்டும் இறுக்கமாக தட்டி ஈர துணியால்/ மூடியால் மூடி 1- 1.5 மணி நேரம் வையுங்கள். பின்னர் மீண்டும் எடுத்து அடித்து பிசையுங்கள். இப்போது சீனி கரைந்து மா மினுமினுப்பாக, உருட்ட கூடிய பதமாக வந்திருக்கும்.

நடுத்தர சூட்டில் எண்ணேயை சுட்டாக்கி, எண்ணேய் சூடானதும் மாவை உருண்டைகளாக உருட்டி அதை தட்டையாக்கி பொரித்து எடுக்கவும்.

சிவப்பு அரிசி மா எனில் வெளிப்புறம் நல்ல சிவப்பாக வர வேணும். வெள்ளை அரிசி எனில் அரியதரத்தின் கரையோரம் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அதிக சூட்டில் எண்ணெயை கொதிக்க வைத்தால் வெளிப்புறம் வெகமாக வெந்து உட்புறம் சரியாக வேகாது.

சீனி சேர்க்கும் இன்னுமொரு முறை

250 கிராம் சீரியை எடுத்து சீனி பாணி காய்ச்ச வேண்டும். பாணி காய்ச்சி சரியான பதம் எது என்று அரிய ஒரு துளியை எடுத்து நீர்ல் இரும் போது உடனடியாக கரையாது அடியில் துளி படியுமாக இருந்தால் பதம் சரி என்று அர்த்தம்.

பதமான சீனி பாணியை மாவுடன் சேர்த்து அடித்து பிசைந்து 15 நிமிடத்தின் பின் சுட முடிய்ம். இந்த முறையில் அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை. ஆனால் சீனி பாணி பதம் பிழைத்தால் அரியதரம் கல்லாக வரும்.

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

:lol:

Link to comment
Share on other sites

மெதுவாக இருக்க வேணும் என்கிறீர்கள். அரியதரம் மெதுவாக வருவதென்பது சித்திரமும் கைப்பழக்கம் போல் தான் முதல் முறையிலேயே மெதுமையானதாக வந்தால் உங்கள் அதிஸ்டம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெதுவாக இருக்க வேணும் என்கிறீர்கள். அரியதரம் மெதுவாக வருவதென்பது சித்திரமும் கைப்பழக்கம் போல் தான் முதல் முறையிலேயே மெதுமையானதாக வந்தால் உங்கள் அதிஸ்டம் தான்.

நன்றி அக்கா+குளக்கோட்டன்,

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய பலகாரம் இது...மொறு மொறு என்று முறுக்கு மாதிரி வருதே தவிர மென்மையா வருதே இல்லை, கெளரிகாப்பு விரத முடிவில் இதுதான் விரதம் முடிக்கும் முக்கிய பலகாரம்,,கோயிலில் இருந்து வரும் பிரசாதம் மிக மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

\

என்னையா அக்கா என்று சொன்னீர்கள்? :wub::huh:

இல்லை அக்கா லண்டன் அக்கா + குளக்கோட்டன் என்று போட்டேனே :wub:))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டான் நல்ல விளக்கமா செய்முறை எழுதியிருக்கிறீங்கள். நன்றி

செய்து பார்த்து விட்டு சொல்லுறன்.

முதலில் சொன்ன செய்முறை தான் லேசா இருக்கும்.

பிறது சொன்னது சீனி காய்ச்சி செய்வது. அது எனக்கு சரி வராது.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி குளக்காட்டன் நீங்க சொன்னமாதிரித்தான் நாங்களும் செய்கிறனாங்கள் ஆனால் கூட நேரம் ஊற விடுறனாங்கள் :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி குளக்காட்டன் நீங்க சொன்னமாதிரித்தான் நாங்களும் செய்கிறனாங்கள் ஆனால் கூட நேரம் ஊற விடுறனாங்கள் :huh:

எவ்வளவு நேரம்?

Link to comment
Share on other sites

கறுப்பி ஊரில் என்றால் காலை 8 மணி போல அரிசி ஊற வைத்தால் மாலை 4 மணி போல இடிப்பார்கள். எனவே கிட்டதட்ட 8 மணி நேரம் வருகிறது. நேரத்தை கணிக்காது மேலே எழுதி விட்டேன். :huh:

Link to comment
Share on other sites

அரியதரம் எண்டால் என்ன எண்டு அம்மாவிடம் கேட்டன். அரியதரம் எண்டால் அரிசிமாவில இப்பிடி வட்டம் வட்டமா இருக்கும் எண்டு அம்மா ஏதோ சொன்னா.

கறுப்பி ஊரில் என்றால் காலை 8 மணி போல அரிசி ஊற வைத்தால் மாலை 4 மணி போல இடிப்பார்கள். எனவே கிட்டதட்ட 8 மணி நேரம் வருகிறது. நேரத்தை கணிக்காது மேலே எழுதி விட்டேன். :huh:

என்ன கு.கா சமையலிலதான் அப்ப கலாநிதி பட்டம் செய்யுறீங்களோ? நான் வேற ஏதோ ஸயன்ஸ் எண்டு அல்லோ நினைச்சன். அட பூட் சயன்ஸா? நல்லது, படிப்பு முடிய கனடாவில் துணிந்து நீங்களும் ஒரு கொத்துரொட்டி இல்லாட்டி இடியப்ப கடையா பார்த்து துவங்கலாம். வேணுமெண்டால் நான் பார்ட்னரா வாறன். குசினியுக்க உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிது. வாழ்த்துகள்!

யாழ் உறவோசையில ஏதோ பிரச்சனைகள் போறதை பார்த்துவிட்டு - அரியதரம் செய்வது எப்படி? என்பது அதிகாரம் செய்வது எப்படி எண்டு எனது கண்ணுக்கு தவறுதலாக தெரிந்ததால் இதுக்கவந்து கருத்து எழுதவேண்டி வந்துவிட்டது. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

எவ்வளவு நேரம்?

அரிசி 4 மணி நேரம் வரும் ஆனால் மாவும் சீனியும்கலந்து நல்ல அடித்து இறுகிற பதமா இருக்கனும் அதை அம்மா காலையில் குழைத்து வைத்து இரவு தான் சுடுறவா நல்லா வாறது கறுப்பி. நீங்கள் ஞாபகப்படுத்திட்டிங்கள் நாளைக்கு செய்து பார்த்திட்டு சொல்லுறன் கறுப்பி. :huh::wub:

Link to comment
Share on other sites

அரியதரம்..? :huh: ஊரில கிராமப்பக்கங்களில இருக்கிறதா கேள்விப்பட்டிருக்கிறன். நாங்கள் எங்கட ஊரில டிரைவ் துறூல மஃபின் வாங்கி சாப்பிடக்கிள்ள இதப்பற்றிக் கதைச்சு சிரிக்கிறனாங்கள். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியதரம்..? :rolleyes: ஊரில கிராமப்பக்கங்களில இருக்கிறதா கேள்விப்பட்டிருக்கிறன். நாங்கள் எங்கட ஊரில டிரைவ் துறூல மஃபின் வாங்கி சாப்பிடக்கிள்ள இதப்பற்றிக் கதைச்சு சிரிக்கிறனாங்கள். :D

அப்படி என்னங்க சிரிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டான் நீங்கள் சொன்னது போல் செய்தேன். நன்றாக வந்தது.

செய்முறை தந்ததுக்கு நன்றி.

உங்களுக்கு அனுப்பத்தான் முடியவில்லை.

Link to comment
Share on other sites

குளக்காட்டான் நீங்கள் சொன்னது போல் செய்தேன். நன்றாக வந்தது.

செய்முறை தந்ததுக்கு நன்றி.

உங்களுக்கு அனுப்பத்தான் முடியவில்லை.

நல்லா வந்திச்சு எண்டுறீங்க. சந்தோசம் :D . கூரியரிலை அனுப்பிவிடலாமே. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காடனுக்கு பணியாரம் செய்யிறதிலை நல்ல சேவீஸ் போலை கிடக்கு :rolleyes: அட நான் சொன்னது அரியாரம் பலகாரத்தை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியதரம் என்பது தமிழ்நாட்டில் அதிரசம் என்று வழங்கப்படும் ஒரு பலகாரத்தின்(அல்லது பணியாரம்) பெயரிலிருந்துதூன் வந்திருக்க வேண்டுமென எண்ணுகிறேன். இது சரியா? முடிந்தால் யாராவது பதில் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியதரத்தை சீனி அரியதரம் என்றுதான் பெரும்பாலும் சொல்லுவார்கள்.

அதிரசம் என்றும் ஒரு பலகாரம் உண்டு. ஆனால் அதுவும் இதுவும் ஒன்றல்ல!!! :rolleyes::D

Link to comment
Share on other sites

குளம்ஸ் செய்முறை போட்டு அசத்தீட்டிங்க..:unsure:

கறுப்பி, செய்முறை கிடைத்தது தானே? நானும் எழுதனுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளம்ஸ் செய்முறை போட்டு அசத்தீட்டிங்க..:unsure:

கறுப்பி, செய்முறை கிடைத்தது தானே? நானும் எழுதனுமா

தூயா நீங்களும் இந்தமுறையில் தானே செய்வீங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
    • வழக்கமாக அல்லாகு அக்பர்    இறுதி வெற்றி அல்லாவுக்கே என்றில்லாமல் இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே! என்கின்றார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. ரிஷாட் பதியுதீன்  நல்ல மாற்றம்.
    • பல் என்று சொல்கிறீர்கள் போலுள்ளது ....... அதை நான் ஆமோதிக்கிறேன்......!  😁
    • ஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️ நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில்  வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.