Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரையுலகினரின் உண்ணாவிரத போராட்டம்: ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்

சென்னை, ஏப். 2: கர்நாடகத் தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து தமிழ்த் திரையுல கம் சார்பாக சென்னை சேப் பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவி ரதப் போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கி றார்.

ஏற்கெனவே திட்டமிடப் பட்ட வெளிநாட்டுப் பயணம் காரணமாக நடிகர் கமல்ஹா சன் மதியம் 12 மணிக்கு பங் கேற்கிறார்.

தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர், நடிகையர் உள்பட அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் திரைப்பட சங்கங்கள் சார் பாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிலும் குறிப்பாக, பிறப்பாலும் மொழியாலும் கன்னடர்களாக இருக் கும் தமிழ்த் திரையுலகினர் கண்டிப்பா கக் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலை யில் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வார் என அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல கமல்ஹாசன் தான் அடுத்து நடிக்கும் "மர்மயோகி' படத் தின் முக்கியப் பணிகளுக்காக புதன்கி ழமை இரவு வெளிநாடு செல்கிறார்.

இந்தப் பயணம் ஏற்கெனவே திட்டமி டப்பட்ட ஒன்று.

ஆனால் ஏப்.4-ம் தேதி உண்ணாவிர தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள் ளதால் தன்னுடைய இரண்டு வார வெளிநாட்டுப் பயணத் திட்டத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங் கேற்பார் என அவர் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், அர்ஜுன், முரளி உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார் கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்து கொள்வதால் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகே பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

தினமணி

  • Replies 64
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது முடிய அடுத்தது எங்கயென்டு தெரியுமோ சங்கர் ஏனன்டா இதுவழமைதான் போங்க. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களில அக்கறை இருந்திருந்தா சரத்குமாரும் சத்தியராஜும் அழைக்க முதல் தனது சொந்த மாநிலத்தவர் செய்கின்ற தவறை சுட்டிக்காட்ட இவர் தானே முன் வந்து இப்படி ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கனும். :unsure:

இப்ப பங்கு பெற்றுரார் என்பது தவறு. பங்குபெற்ற வைக்கப்பட்டுள்ளார்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதத்தில் ரஜினி-கமல் பங்கேற்பு

வியாழக்கிழமை, ஏப்ரல் 3, 2008

சென்னை: கர்நாடகத்தில் நடந்து வரும் தாக்குதல்களை கண்டித்து சென்னையில் நாளை திரைப்படத் துறையினர் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி பங்கேற்கிறார்.

அதே போல வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் நாடு திரும்பிக் கொண்டுள்ளார். அவர் 12 மணியளவில் இருந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்.

நாளை (4ம் தேதி) 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

'ஷார்ப்பா வந்துர்றேன்'...:

இதில் தானும் கலந்து கொள்ளவுள்ளதாக நடிகர் சங்க செயலாளர் ராதாரவியை தொடர்பு கொண்டு ரஜினி தெரிவித்துள்ளார். இது குறித்து ராதாரவி கூறுகையில், என்னுடன் ரஜினி பேசினார். உண்ணாவிரதப் போராட்டம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். நான் எத்தனை மணிக்கு வரணும்னு சொல்லுப்பா... ஷார்ப்பா வந்துர்றேன் என தெரிவித்தார் என்றார்.

அமெரிக்காவில் கமல்:

கமல்ஹாசன் தனது மர்மயோகி படம் சம்பந்தமான வேலைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். உண்ணாவிரத்தில் பங்கேற்க தனது வேலைகளை விட்டுவிட்டு சென்னை விரையும் அவர் நாளை பகல் 12 மணிக்குத் தான் வந்து சேருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து நேராக அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

10,000 பேர் பங்கேற்பு:

இந்தப் போராட்டத்தில் திரையுலகத்தின் அனைத்து சங்கங்களையும் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதால் சுமார் 10,000 பேர் திரளவுள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகி்ன்றன.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இந்தப் போராட்டம் நடக்கிறது.

Thatstamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனிகாந்துக்கு திடிரென ஏற்பட்ட சுகவினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார் என்று அறிவிக்க வேண்டியது தானே :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மக்களில அக்கறை இருந்திருந்தா சரத்குமாரும் சத்தியராஜும் அழைக்க முதல் தனது சொந்த மாநிலத்தவர் செய்கின்ற தவறை சுட்டிக்காட்ட இவர் தானே முன் வந்து இப்படி ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கனும். :icon_mrgreen:

இப்ப பங்கு பெற்றுரார் என்பது தவறு. பங்குபெற்ற வைக்கப்பட்டுள்ளார்..! :lol:

அடுத்த படத்தில சுரண்டிற தமிழர் பணத்தை கர்நாடகாவில் முதலிட வேண்டும்

அடுத்த படத்தில சுரண்டிற தமிழர் பணத்தை கர்நாடகாவில் முதலிட வேண்டும்

ஒரே நாள் சத்தியராஜ் படமும் ரஜனிகாந்த் படமும் வருகுது நீங்கள் எதுக்கு போவீங்கள்?

அல்லதுதரவிறக்கம் செய்துபாப்பீங்கள்?

ஒரே நாள் சத்தியராஜ் படமும் ரஜனிகாந்த் படமும் வருகுது நீங்கள் எதுக்கு போவீங்கள்?

அல்லதுதரவிறக்கம் செய்துபாப்பீங்கள்?

பேஷ் பேஷ் நன்னா வைச்சீங்க ஆப்பு!!!!! :icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே நாள் சத்தியராஜ் படமும் ரஜனிகாந்த் படமும் வருகுது நீங்கள் எதுக்கு போவீங்கள்?

அல்லதுதரவிறக்கம் செய்துபாப்பீங்கள்?

தமிழ் படமே பார்ப்பது இல்லை :lol: . ஆனால் எல்லோருக்கும் இலவசமா தரைவிறக்கம் செய்ய வழி செய்வோம் :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனிகாந்துக்கு திடிரென ஏற்பட்ட சுகவினம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார் என்று அறிவிக்க வேண்டியது தானே :icon_mrgreen:

அப்படி அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்கு இன்னும் போதியளவு நேரம் இருக்கிறது.. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போணதடவை எஸ்கேப் இந்தவாட்டி நோ சொய்ஸ் கண்டிப்பா வந்துதான் ஆகணும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen: ஓட்டுக்காக பாரதீய ஜனதாக் கட்சி செய்த தூண்டல் இப்போது எப்படியாக விரிவடைந்துள்ளது. இதற்கு சோவும் சுப்பிரசுவாமியும் டீன் இதுவரை கருத்துக்கூறவில்லை?

- கன்னட இந்துக்கள் தமிழக இந்துக்களை பாரதிய ஜனதாக் கட்சி என்ற இந்துத்துவக் கட்சியின் தூண்டுதலால் தாக்குகிறார்கள்

எல்வோரும் சேர்ந்து போடுங்க அரோகரா!! மறக்காம எண்டியலிலும் போட்டுட்டுப் போங்க!

தமிழ் படமே பார்ப்பது இல்லை :o . ஆனால் எல்லோருக்கும் இலவசமா தரைவிறக்கம் செய்ய வழி செய்வோம் :icon_mrgreen:

படம்பாப்பதுஅவர்அவர் விருப்பம்.

ஆனால் எல்லோருக்கும் இலவசமா தரைவிறக்கம் செய்ய வழி செய்வோம் :lol:

இதில் எனக்கு உடன்பாடு இல்லை (கொஞ்சம்இருங்கள் படம்தரைவிறக்கம் பன்னீட்டா என்று பாத்துட்டுவாறேன்) :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: ஓட்டுக்காக பாரதீய ஜனதாக் கட்சி செய்த தூண்டல் இப்போது எப்படியாக விரிவடைந்துள்ளது. இதற்கு சோவும் சுப்பிரசுவாமியும் டீன் இதுவரை கருத்துக்கூறவில்லை?

- கன்னட இந்துக்கள் தமிழக இந்துக்களை பாரதிய ஜனதாக் கட்சி என்ற இந்துத்துவக் கட்சியின் தூண்டுதலால் தாக்குகிறார்கள்

எல்வோரும் சேர்ந்து போடுங்க அரோகரா!! மறக்காம எண்டியலிலும் போட்டுட்டுப் போங்க!

புதுசா இருக்கு.....

சொல்லவே இல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

என்னாய்ய்யா இது? ஏப்ரல் 1 மாதிரி ஏப்ரல் 4 ஆ??? :rolleyes:

டைகர் பமிலியை ரொம்பத்தான் சோதிக்கிறாங்க. :wub:

மு.கு டூ றோயல் பமிலி:lol:சின்னா/சாத்து மேல இருக்கிறதை படிச்சுட்டு ஏமாந்து எங்கட றோயல் பமிலி பரம்பரை மானத்தை கப்பலேத்துறதில்லை சொல்லீட்டன்) :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருப்புத் தொப்பியுடன் ரஜினி: கமலும் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 4, 2008

சென்னை: கர்நாடகத்தை கண்டித்து சென்னையில் நடந்த திரையுலக உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினியும் பங்கேற்றார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய கமல்ஹாசனும் விமான நிலையத்திலிருந்து 2.30 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.

காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கிய நிலையில் அவர் 11.15 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.

கருப்புத் தொப்பி அணிந்து வித்தியாசமாக வந்த ரஜினி மேடையில் ஏறியவுடன் அங்கு கூடியிருந்தவர்களை தலைக்கு மேல் கையை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டார்.

பின்னர் தொப்பியைக் கழற்றிவிட்டு கூட்டத்தை நோக்கி கையை அசைத்தார். அவரை சரத்குமார், ராம.நாராயணன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றனர்.

சரத்குமாருக்கும், மனோரமாவுக்கும் இடையில் அமர்ந்தபடி உண்ணாவிரதத்தில் பங்கேற்றார் ரஜினிகாந்த்.

சரத்குமார் அருகே அமர்ந்துள்ள சத்யராஜும் ரஜினிக்கு கைகொடுத்து வரவேற்றார். ரஜினி கட்டாயம் உண்ணாவிரதத்துக்கு வர வேண்டும் என்று காட்டமாகக் குரல் கொடுத்தது சத்யராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலும் வந்தார்:

பகல் 2.30 மணிக்கு நடிகர் கமல்ஹாசனும் உண்ணாவிரத மேடைக்கு வருகை தந்தார். அவரை ரஜினி, சரத்குமார், ராமநாராயணன் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மர்மயோகி படப் பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்த கமல், உண்ணாவிரதத்தில் பங்கேற்பற்காக அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்:

இந் நிலையில் சேலத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

அதே போல சேலம் மாவட்ட பாமக சார்பிலும் கர்நாடகத்தை கண்டித்து போராட்டம் நடந்தது. அதில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரின் படங்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது.

சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களும் கர்நாடக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒகேனக்கல் அல்ல; குடைக்கல்-ராஜேஷ்

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 4, 2008

சென்னை: ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிராக கர்நாடகத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நடந்த தமிழ்த் திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய இயக்குனர் சீமான்,

காவிரி முதல் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கன்னடர்கள் முதலில் செய்வது தமிழர்களை அடிப்பதுதான். தமிழ் திரைப்படங்களைத் தடுப்பதுதான். இதை எத்தனை காலம் பொறுப்பது என்றார்.

ரஜினி அரசியலுக்கு வருவார்-விஜயகுமார்:

நடிகர் விஜயகுமார் பேசுகையி்ல், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ரஜினி கர்நாடகாவில் பிறந்தாலும் கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில்தான் வசித்து வருகிறார். அவரை கன்னடர் என்று சொல்லக்கூடாது. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்றார்.

கவுண்டமணி கோபம்:

உண்ணாவிரத்தில் பங்கேற்பதற்காக வந்த நடிகர் கவுண்டமணி படு கோபமாக காணப்பட்டார். அவரிடம் போராட்டம் குறித்து கேட்டபோது, வருஷா வருஷம் தீபாவளி வருவது போல இந்தக் கலவரமும் வந்து போய்க் கொண்டுதான் உள்ளது.

சுமூகமாகப் போக வேண்டியதை விட்டு விட்டு சிலர் தங்களது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை அடிப்பது மிகப் பெரிய தவறு.

தியேட்டர்களை அடிப்பது, தமிழ்ப் படங்களை தடுப்பது என்று செய்வது ஏன் என்று புரியவில்லை. சினிமாக்காரர்கள் என்ன தப்பு செய்தோம் என்று எங்களைத் தாக்குகிறீர்கள்.

சினிமாவுக்கு ஏது லாங்குவேஜ். இங்கும்தான் மலையாளப் படம் வருகிறது, இந்திப் படம் வருகிறது, ஆங்கிலப் படம் வருகிறது. நாம் என்ன போராட்டமா நடத்துகிறோம். அங்கு மட்டும் ஏன் போராட்டம்.

மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு நிவாரணம் தேடித் தர வேண்டும். அதை விட்டு விட்டு தமிழர்களை அடிப்பது என்பது அநாகரீகமானது என்றார்.

திருப்பி அடிப்போம் - செந்தில்:

இந்தியாவில்தானே கர்நாடகம் இருக்கிறது. பாகிஸ்தானிலா இருக்கிறது. பாகிஸ்தானுடன் சண்டை வந்தால் திருப்பி அடிக்கிறோமா இல்லையா. அதுபோல அவர்கள் அடித்தால் நாமும் திருப்பி அடிப்போம்.

மீண்டும் நடக்கக் கூடாது - விஜய்:

இது சினிமாக் குடும்பத்தில் நடக்கும் கருத்து வேறுபாடு. இந்தப் போராட்டம், உண்ணாவிரதம் மறுபடியும் தமிழகத்தில் நடக்ககக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

சீண்டுவது தவறு - தனுஷ்:

தன்னடக்கமும், தன்மானமும்தான் தமிழனின் அடையாளம். அதை தப்பான இடத்தில் சீண்டிப் பார்ப்பது தவறு. நிறையப் பேச நினைக்கிறேன். ஆனால் அங்கு வாழும் தமிழர்களின் பாதுகாப்பை நினைக்க வேண்டியுள்ளது. இங்குள்ளவர்ளுக்கு பாதுகாப்பு செய்து கொண்டிருக்கிறோம். அதை அங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கலையுலகில் ஏன் அரசியல்-எஸ்.ஏ. சந்திரசேகர்:

தாகத்திற்கு தண்ணீர் கேட்டதற்காக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அது மாத்திரம் அல்ல, தமிழ் படங்களைத் திரையிட்ட தியேட்டர்களும் தாக்கப்பட்டுள்ளன. அது ஏன் என்று புரியவில்லை.

முன்பு ஒரு எதிரி-தலைவாசல் விஜய்:

50 ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு ஒரு எதிரி. வெள்ளையர்களை எதிர்த்து துப்பாக்கி தூக்கினோம். இப்போது நமக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வேதனையாக இருக்கிறது.

தமிழகம், கர்நாடகம் தொடர்பாக எந்தப் பிரச்சினை வந்தாலும் முதல் இலக்காக தமிழ்த் திரையுலகம் உள்ளது. இதற்குக் காரணம் தண்ணீர்.

நதிகளை தேசியமயமாக்குவதே இதற்கு ஒரே தீர்வு. மத்திய அரசு இதில் தலையிட வேண்டும். இல்லாவிட்டால் இந்த சண்டை நீடித்துக் கொண்டேதான் இருக்கும். இது யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை. நல்ல மனிதர்களாக இருப்போம். ஒற்றுமையாக இருப்போம்.

வந்து அடிக்கவும் தெரியும் - ஷக்தி சிதம்பரம்

எங்களுக்கு சண்டை என்ற பெயரில் படம் எடுக்கவும் தெரியும். வந்து சண்டை போடவும் தெரியும். அதேபோல வந்தாரை வாழ வைக்கவும் தெரியும். அங்கு வந்து உண்டு இல்லை என்று பார்க்கவும் தெரியும்.

நிருபரை நெளிய வைத்த ரமேஷ்கண்ணா:

உண்ணாவிரதம் நடந்த இடத்திலிருந்தபடி நடிகர், நடிகையரை பேட்டி கண்ட ஒரு செய்தியாளர், நடிகர் ரமேஷ் கண்ணாவிடம், உண்ணாவிரதம் வன்முறையைத் தூண்டாதா என்று கேட்டு அவரிடம் மாட்டிக் கொண்டார்.

இந்தக் கேள்விக்கு ரமேஷ் கண்ணா பதிலளிக்கையில், உண்ணாவிரதம் வன்முறையைத் தூண்டும் என்று யார் சொன்னது. மகாத்மா காந்தி பயன்படுத்தி அகிம்சை ஆயுதம்தான் உண்ணாவிரதம். அது எப்படி வன்முறையைத் தூண்டும் என்று எதிர் கேள்வி கேட்டு அந்த நிருபரை நெளிய வைத்தார்.

ஒகேனக்கல் அல்ல; குடைக்கல்-ராஜேஷ்:

நடிகர் ராஜேஷ் பேசுகையில், ஓகேனக்கல் என்ற வார்த்தை கன்னட வார்த்தை. தமிழகத்துக்கு சொந்தமான குடைக்கல்லைத்தான் ஓகேனக்கல் என்று கன்னடர்கள் மாற்றி விட்டனர். இங்கு பேசிய அனைவரும் ஒகேனக்கல் என்றுதான் சொல்கிறார்கள். குடைக்கல் என்று சொல்வதே சரி என்றார்.

மன்சூர் அலிகான்:

நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், களி சாப்பிட்டுக் கொண்டிருந்த கன்னடர்களுக்கு விவசாயம் செய்ய கற்றுக் கொடுத்தவர்களே தமிழர்கள்தான் என்றார்.

என் சோறு தமிழகத்தில்தான்-அர்ஜூன்

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 4, 2008

மேலும் புதிய படங்கள்சென்னை: நான் தமிழகத்தில் நடிக்க ஆரம்பித்து 25 வருடங்கள் ஆகிறது. இங்குதான் எனது வீடும், சோறும் உள்ளது. அந்த உணர்வில் சொல்கிறேன், வன்முறை என்பது யார் எங்கே செய்தாலும் அது தவறுதான் என நடிகர் அர்ஜூன் கூறினார்.

கர்நாடகத்தில் நடக்கும் தாக்குதல்களை கண்டித்து சென்னையில் நடந்த திரைப்படத்துறை உண்ணாவிரதத்தில் பேசிய அர்ஜூன்,

நான் தமிழகத்தில் நடிக்க ஆரம்பித்து 25 வருடங்கள் ஆகிறது. இங்குதான் எனது வீடும், சோறும் உள்ளது. அந்த உணர்வில் சொல்கிறேன், வன்முறை என்பது யார் எங்கே செய்தாலும் அது தவறுதான்.

அப்பாவிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவது கண்டிக்க வேண்டிய செயல். சில வருடங்களாவே இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றன.

மராட்டிய மாநிலத்தில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டனர். அதேபோல இங்கும் காவிரிப் பிரச்சினை. அது நிரந்தரமாக தீர்க்கப்படாத காரணத்தால், இந்தப் புதிய பிரச்சினை பூதாகரமாக கிளம்பியுள்ளது.

ஆனால் இதற்கு வன்முறை தீர்வு கிடையாது. பஸ்சை உடைத்தால், இங்கு பஸ்சை உடைப்பார்கள். வன்முறைக்கு முடிவே கிடையாது. அதற்கு உண்மையான தீர்வு, சேரன் சொன்னது போல, மக்கள் கையில் இல்லை. அரசியல் தலைவர்கள்தான் நல்ல முடிவை காண வேண்டும்.

மத்திய அரசு தலையிட்டு இதற்கு ஒரு நல்ல தீர்வைக் கண்டால் பல அப்பாவி மக்களைக் காப்பாற்றலாம். ஒருமைப்பாடு என்று சொல்கிறோமே அதைக் காப்பாற்றலாம். மாநிலங்களுக்கு இடையே சகோதர மனப்பான்மையை வளர்க்கலாம்.

இங்கு ஆயிரக்கணக்கான கன்னடர்கள் பல வருடங்களாக நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கும் தமிழற்கள் உள்ளனர். இந்த சந்தோஷம், நிம்மதி நீடிக்க மத்திய அரசு தயவு செய்து தலையிட வேண்டும் என்றார்.

எனது தாய் மொழி தமிழ்-முரளி

இன்று உண்ணாவிரதத்திற்கு முதல் நபராக வந்தவர்களில் நடிகர் முரளியும் ஒருவர். அவர் பேசுகையில் பிரச்சினை என்று வந்தால், தமிழர்களை கன்னடர்கள், அவர்களை கன்னட வெறியர்கள் என்றுதான் நான் சொல்வேன், தாக்குகிறார்கள்

உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் பிறந்தது சென்னை. எனது தாய் மொழி தமிழ். தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். கவுரவம் அடைகிறேன்.

நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். 5ம் வகுப்பு வரை சென்னையில்தான் படித்தேன். 10ம் வகுப்பு வரை கர்நாடகத்தில் படித்தேன்.

அங்கு நான் படித்தபோது எல்லோரும் சேர்ந்தே இருப்பார்கள். சந்தோஷமாகத்தான் இருப்பார்கள். ஆனால் தேர்தல் வரும்போது சில அரசியல்வாதிகள் இந்த ஒற்றுமையை சீர்குலைப்பது போல நடப்பது வழக்கமாகி விட்டது. அதிலும் ஏப்ரல் மாதம் வந்து விட்டால் காவிரிப் பிரச்சினையை கொண்டு வந்து விடுவார்கள்.

கர்நாடக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழர்களாகிய நாங்கள் உங்களுக்கு என்ன தவறு செய்தோம். நீங்கள் வாழ்கிற வீட்டைக் கட்டித் தருவது சேலத்தைச் சேர்ந்த, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தமிழர்கள். அங்கிருந்து வரும் கொத்தனார்கள்.

நீங்கள் விவசாயம் செய்யவும், உழுவதற்கும், பராமரிப்பதற்கும் தமிழர்கள் அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள்.

சாலைகள் போடுவது, தார் போடுவது என அனைத்து உழைப்புகளையும் உங்களுக்காக தமிழர்கள் செய்து தருகிறார்கள். இப்படி தமிழர்களின் உழைப்புகளையெல்லாம் வாங்கிக் கொண்டு தண்ணீருக்காக அவர்களை ஒதுக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்.

நீங்கள் செய்யும் வன்முறைகளையும், கொடுமைகளையும் மறக்கவும், மன்னிக்கவும் தமிழர்களாகிய எங்களுக்கு பக்குவம் உள்ளது. திருந்தி விடுங்கள். திருந்திக் கொள்ளுங்கள்.

ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும். காவிரி என்றால் எங்களுக்கு சொந்தம் என்கிறீர்கள். ஓகேனக்கல் என்றால் அதுவும் எங்களுக்கு சொந்தம் என்கிறீர்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றார் ஆவேசமாக.

நான் உங்களுடன் இருக்கிறேன்-பிரகாஷ் ராஜ்:

எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஏன் சினிமாக்காரர்களை தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. அது தவறு. வன்முறையில் கன்னடக்காரர்கள் ஈடுபட்டாலும், தமிழர்கள் ஈடுபட்டாலும், தெலுங்கர்கள் ஈடுபட்டாலும் அது தவறு. இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வர வேண்டும். உங்களுடன் நான் இருக்கிறேன் என்றார்.

Thatstamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: கர்நாடகத்தை கண்டித்து சென்னையில் நடந்த திரையுலக உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினியும் பங்கேற்றார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய கமல்ஹாசனும் விமான நிலையத்திலிருந்து 2.30 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.

காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கிய நிலையில் அவர் 11.15 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.

கருப்புத் தொப்பி அணிந்து வித்தியாசமாக வந்த ரஜினி மேடையில் ஏறியவுடன் அங்கு கூடியிருந்தவர்களை தலைக்கு மேல் கையை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டார்.

பின்னர் தொப்பியைக் கழற்றிவிட்டு கூட்டத்தை நோக்கி கையை அசைத்தார். அவரை சரத்குமார், ராம.நாராயணன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றனர்.

சரத்குமாருக்கும், மனோரமாவுக்கும் இடையில் அமர்ந்தபடி உண்ணாவிரதத்தில் பங்கேற்றார் ரஜினிகாந்த்.

சரத்குமார் அருகே அமர்ந்துள்ள சத்யராஜும் ரஜினிக்கு கைகொடுத்து வரவேற்றார். ரஜினி கட்டாயம் உண்ணாவிரதத்துக்கு வர வேண்டும் என்று காட்டமாகக் குரல் கொடுத்தது சத்யராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலும் வந்தார்:

பகல் 2.30 மணிக்கு நடிகர் கமல்ஹாசனும் உண்ணாவிரத மேடைக்கு வருகை தந்தார். அவரை ரஜினி, சரத்குமார், ராமநாராயணன் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மர்மயோகி படப் பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்த கமல், உண்ணாவிரதத்தில் பங்கேற்பற்காக அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்:

இந் நிலையில் சேலத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

அதே போல சேலம் மாவட்ட பாமக சார்பிலும் கர்நாடகத்தை கண்டித்து போராட்டம் நடந்தது. அதில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரின் படங்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது.

சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களும் கர்நாடக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிடுங்கப்படும் தமிழன் கண்கள் - சத்யராஜ் கோபம்

சென்னை: கடந்த 40 வருடங்களாக மராட்டியத்திலும், மலேசியாவிலும், ஈழத்திலும், இப்போது கர்நாடகத்திலும் தமிழனின் கண்களைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை இனியும் தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசுகையில், இங்கு யாருடைய பெயரைச் சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

இதுவரை என்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இன்று முதல் என்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியானால் தமிழன் மனிதன் இல்லையா என்ற சந்தேகம் வரும். தமிழன் மனிதன் இல்லை, வெறும் மரம் என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரமாக இருந்தால் என்ன நடக்கும்? நாய் வந்து ஒண்ணுக்கு அடிக்கும். பிறகு எவனாவது வந்து மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போய் கட்டில் செய்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருப்பான். டேபிள் செய்து அதில் உட்காருவான். மொத்தத்தில் அந்த மரத்திற்கு மரியாதையே இல்லாமல் போய் விடும். எனவே தமிழா, நீ மரமாக இருக்காதே, மனிதனாகவும் இருக்காதே, தமிழனாக இரு என்று சொல்கிறேன்.

காந்தி சொன்னார் கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் உலகில் உள்ள 600 கோடி பேரும் குருடனாகத்தான் இருப்பார்கள். கடைசியில் உலகில் அத்தனை பேரும் குருடனாகி விடுவார்கள் என்றார். ஆனால் தமிழனுடைய கண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்பே பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

முதலில் மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரே என்ற ஆள் பிடுங்கினார். பின்னர் மலேசியாவில் பிடுங்கினார்கள். ஈழத்தில் பிடுங்கினார்கள். இன்று கர்நாடகத்திலும் பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே காந்தி சொல்வதை இன்று கடைப்பிடிப்பதாக இருந்தால் உலகில் உள்ள 10 கோடித் தமிழர்களும் குருடனாக இருப்பார்கள். மற்ற 690 கோடி பேரும் பார்வையுடன் திரிவார்கள். ஏற்கனவே தமிழன் சிந்தனைக் குருடனாக, கருத்துக் குருடனாக இருக்கிறான். கண்ணும் போய் விட்டால் தலைமுடி மாதிரிதான் இருக்கும் அவனது வாழ்க்கை.

40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர், தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகத்தில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஒருமுறை குண்டுராவ் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போயிருந்தார். மட்டன், சிக்கன் என அனைத்தும் செய்து போட்டார்கள். எம்.ஜிஆரும் சாப்பிட்டார்.

ஆனால் அவர்கள் வைத்த தண்ணீரை மட்டும் குடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். எனது மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனக்கு மட்டும் எதற்கு உங்கள் தண்ணீர் என்று கூறி விட்டார்.

சாய்குமார் என்று ஒரு நடிகர். உனக்குப் பிடித்த நடிகர் யார் என்று அவரிடம் கர்நாடகத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறி விட்டார். அவ்வளவுதான் அவரை உதை உதை என்று உதைத்து ராஜ்குமார் என்று சொல் என்று கூறியுள்ளனர். இதற்குப் பெயர்தான் கன்னட வெறி.

நான் வீரப்பன் செய்த செயல்களை எல்லாம் கேள்விப்பட்டு முன்பு அவன் மீது கோபப்பட்டிருக்கிறேன், ஆவேசப்பட்டிருக்கிறேன். ஆனால் பல வீரப்பன்களை உருவாக்கும் நிலையை இப்போது உருவாக்கி விடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் தமிழகத்திற்கு லாபம் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்திற்கு ஒரு நஷ்டமும் கிடையாது.

சூப்பர் காமெடியன் வாட்டாள்:

அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.

நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். அப்படியே பேசிக் கொண்டிருந்தால் நீ கேன.... ஆகி விடுவாய். வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். அவன்தான் தமிழன். குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறிக் கொண்டுதான் இருப்பார்கள். குனியாதே, நிமிர்ந்து நில்.

தமிழனுக்கு எங்கிருந்தும் தண்ணீர் வரக் கூடாது என்கிறார்கள். பாலாறில் தண்ணீர் இல்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் இல்லை, சேது சமுத்திரத் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

கடவுளுக்காக இனிமேல் வெளியில் போகாதீர்கள். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான். அவனைக் கும்பிடுங்கள். மதுரை வீரனைக் கும்பிடுங்கள். நமக்கு ராமனும் வேண்டாம், ராகவேந்திராவும் வேண்டாம், அய்யப்பனும் வேண்டாம்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். அவ்வளவுதான் என்றார் சத்யராஜ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரும்பாமலே விழுந்த சிங்கம்...[/size]

- உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள ரஜினி சம்மதம்

ஏறிய பி.பி யை இறக்கிக் கொள்ளலாம்... ஏப்ரல் 4-ந் தேதி நடக்கவிருக்கும் உண்ணாவிரதத்தில் ரஜினி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்களாம். குசேலன் படப்பிடிப்பில் இருந்து சென்னைக்கு திரும்பிவிட்டார் ரஜினி. நேற்றிலிருந்தே தனது அரசியல் நண்பர்களுடன் இந்த உண்ணாவிரதம் குறித்த ஆலோசனையில் அவர் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் கலந்து கொள்வது குறித்து அவர் சம்மதம் தெரிவித்துவிட்டாலும், எவ்வளவு நேரம் உண்ணாவிரத பந்தலில் இருப்பது? மீடியாக்களிடம் எது குறித்து பேசுவது? என்பது குறித்தெல்லாம் கடுமையான ஆலோசனைகள் நடந்து வருகிறதாம்.

அரசியலை பொறுத்தவரை காட்சிகள் மாறும் என்பது ரஜினி விஷயத்தில் நூறு சதவீதம் உறுதியாக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் நெய்வேலி அனல் மின் நிலையம் நோக்கி நடிகர், நடிகைகள் ஊர்வலமாக சென்றபோது, அதில் கலந்து கொள்ளவில்லை ரஜினி. இந்த போராட்டத்தால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் சொல்ல, வெகுண்டு எழுந்த அவரது ரசிகர்களே ஆங்காங்கே மன்றங்களை கலைக்க ஆரம்பித்தார்கள். உடனடியாக அவர் மேல் எழுந்துள்ள கசப்பை களைய வேண்டும் என்று முடிவெடுத்த தி.மு.க தரப்பு, மறுநாளே உண்ணாவிரதம் இருக்க ரஜினிக்கு ஐடியா கொடுத்தது. “அங்கே போனா தமிழ்நாட்டுக்காரன் என்கிறார்கள். இங்கே வந்தால் கன்னடத்துக்காரன் என்கிறார்கள். நான் எங்கே போவேன்?” என்று பரிதாபமாக ரஜினியை பேச வைத்ததும் அப்போதுதான்.

இதோ, காட்சி மாறிவிட்டது. ஒகேனக்கல் விஷயத்தில் முதல்வர் கலைஞர் கூறிய கருத்தை அடுத்துதான் இப்படி ஒரு கலவரம் வெடித்திருக்கிறது. கர்நாடகாவில். தொடர்ந்து தமிழர்களுக்கு ஏற்படும் அநீதியை இம்முறை பொறுத்துக் கொள்ள கலைஞரும் தயாராக இல்லை. முன்பு போல் நிலைமை இருந்தால், கலைஞரை நேரில் சந்தித்து இந்த உண்ணாவிரதத்தை தவிர்த்திருப்பார் ரஜினி. நிலைமை இப்போது அப்படி இல்லை என்பதுதான் ரஜினிக்கு நேர்ந்த துரதிருஷ்டம். ஆக, விரும்பாமலே வலையில் விழுந்துவிட்டது சிங்கம்.

மற்ற நடிகர்கள் எப்படி? வெளிநாட்டில் இருக்கிறார் கமல். இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதற்காகவே சென்னை திரும்புகிறார். விமான நிலையத்திலிருந்து உண்ணாவிரத பந்தலுக்கு நேரடியாக வந்துவிடுவாராம். ஆனால், பிற்பகலில்தான் அவர் சென்னைக்கு வரக்கூடிய சூழல் இருப்பதால் மதியம்தான் கலந்து கொள்கிறார். குருவி படத்தின் பாடல் காட்சிக்காக நேற்றே நியூசிலாந்து புறப்பட்டு செல்ல வேண்டிய விஜய், தன் பயணத்தை இந்த உண்ணாவிரதத்திற்காக தள்ளி வைத்திருக்கிறார். பொள்ளாச்சியில் கந்தசாமி படப்பிடிப்பில் இருக்கும் விக்ரம் யூனிட்டை மட்டும் அங்கு விட்டு விட்டு சென்னை வருகிறார். இவர்களே இங்கு வந்துவிட்ட பிறகு ஜோடிகளுக்கு என்ன வேலை? த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோரையும் உண்ணாவிரத பந்தலில் பார்க்கலாம்.

-ஆர்.எஸ்.

tamilcinema.com

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும், மற்றுமொரு நாள், மற்றொரு தடவை கன்னடர்களிடம் தமிழர்கள் அடிவாங்கும் போது வந்து மேடை போடுவோம் எனக் கூறி அனைவர் சார்பாகவும் விடை பெறுகின்றோம்.

நன்றி.

அந்த மேடைக்கு அருகில் ஒரு ரீக்கடை.. அது யாருடையது....

சார் சாயா... :rolleyes::unsure::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்-கர்நாடகத்துக்கு ரஜினி சூடு

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 4, 2008

சென்னை: நான் பெரிதாக மதிக்கிற கர்நாடக அரசியல்வாதிகள் இன்று அரசியல் ஆதாயத்துக்காக ஆட்டம் போடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன்... அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்; அதன் விளைவு மோசமாக இருக்கும். மக்கள் உங்களைச் சும்மா விடமாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதியில் பேசிய ரஜினி,

இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ்பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ்பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன். இதற்காக வேதனைப்படுகிறேன்.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. கவர்ன்மென்ட் இருக்கா, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் சொன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.

இப்ப நம்மளோட நிலம் இருக்கு... அதை வேறொருத்தர் சொந்தம்னு சொன்னா, பட்டா இருக்கா எடுய்யான்னு கேட்டு, அது இருந்தா ரிஜிஸ்திட்ராரே ஒதைச்சு அனுப்பிச்சுடுவார்...

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டது. நமக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நாம தண்ணி எடுத்துக்க திட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுன்னு தடுத்தா ஒதைக்க வேண்டாமா...

இதை எப்பவுமே அவங்க பண்ணிக்கிட்டிருக்காங்க... விடுங்க. சரி, எனக்கு இதுல என்ன வருத்தம்னு சொன்னா... ஒரு தேசியக் கட்சி... மிகப்பெரிய தேசியக் கட்சி (பாஜக), அந்த மாநிலத்தின் அந்த கட்சியோட மிகப்பெரிய தலைவராக இருந்தவர், இருப்பவர் (எதியூரப்பா).. இப்ப வந்து இந்த விஷயத்தைத் தூண்டிவிடறார். என்ன கேவலம் பாருங்க.

என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடா அவுங்க இவுங்க எல்லாத்தையும் விட்டுடுங்க...

பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். அப்படிப்பட்ட ஒரு பெரிய தலைவர் வந்து இதைத் தூண்டிவிடுறார். எதுக்கு? எலக்ஷன்... தேர்தல் வருது. அந்த தேசியக் கட்சியைச் சேர்ந்தவங்க, இங்க நம்ம மாநிலத்தில் இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காங்க.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் (காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா) அவர். மும்பையிலிருந்து இப்ப வந்துட்டு (மகாராஷ்டிர கவர்னராக இருந்தவர்), இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதாவது இந்த வைரஸ் உருவாகக் காரணமே, கலைஞர்தான்னு சொல்றார்.

என்ன கேவலங்க இது. மக்கள் என்ன முட்டாள்களா... அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா.... மக்கள் எங்கிருந்தாலும் அது கர்நாடகமோ தமிழகமோ... அவங்க முட்டாள்கள் அல்ல...

அரசியல்வாதிகளே உண்மையைப் பேசுங்க. சத்தியம் பேசுங்க. சுயநினைவோட பேசுங்க. (நெஞ்சில் கை வைத்து) இங்க இருந்து பேசணும்... அவன் பாத்துக்கிட்டே இருக்கான். தெய்வம் அவன்.

இங்க இருக்கிற நீங்கள்ளாம் (மக்கள்) தெய்வத்துக்குச் சமம்... எனக்குத் தெரியாதா... உண்மை, சத்தியம், நியாயம் அதுதான் என்னிக்குமே சோறுபோடும். என்னிக்குமே காப்பாத்தும்.

சும்மா எல்லாரும் எலெக்ஷனுக்காக ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காங்க...

இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கே விரைவில் வரப்போகிற தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள்.

நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, தரம்சிங், கார்கே, அனந்தமூர்த்தி போன்றவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அதன் விளைவு மோசமாக இருக்கும். உங்களையே அழிச்சிடும்.

இதை மீண்டும் மீண்டும் வளர விடாதீர்கள், காவிரி பிரச்சினை மாதிரி. பத்து வருஷம் ஆச்சி, இந்திய அரசு இந்த விஷயத்தில் (ஓகேனக்கல் விவகாரத்தில்) என்ஓசி போட்டு.

அறிவோட செயல்படுங்க தயவு செஞ்சு. இங்கே, கலைஞர் மற்றும் எல்லாருக்கும் எனது வேண்டுகோள்... இது நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். அதற்கு இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது. இப்போது அதைச் செய்யத் தவறிவிட்டால் பின்னர் கோடாலி கொண்டு வெட்டினாலும் பிரச்சினை தீராது.

இப்பவே, இந்த நிமிஷமே ஏந்த வேலையைச் செய்யணும். இதைவிட வேறு பெரிய பிரச்சினை இப்போது கிடையாது.

உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்காதீர்கள், தயவுசெய்து இந்த விஷயத்துக்கு இப்பவே முடிவு கட்டுங்க... என்றார் ஆவேசமாக.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி ஆவேச பேச்சு

.

Friday, 04 April, 2008 04:30 PM

.

சென்னை,ஏப்.4: நகத்தால் வெட்ட வேண்டிய பிரச்சனை இது. இதை இப்பொழுது சரி செய்யாவிட்டால் நாளை கோடாரியால் கூட வெட்ட முடியாத சூழ்நிலைக்கு சென்றுவிடும் என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

.

தமிழ்த்திரையுலகம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: கர்நாடகத்தில் நடைபெற்ற வன்முறைச்சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். (அப்பொழுது மேடையில் அமர்ந்திருந்தவர்களும், கூடியிருந்தவர்களும் பெரும் கரகோஷம் எழுப்பினர்)

சாதாரணமாக ஒருவருடைய மனையில் போய் மற்றொருவர் அமர்ந்தாலே சம்பந்தப்பட்டவர் அதற்குரிய பட்டாவை பதிவாளரிடம் காட்டினால் அது அவருக்கு சொந்தமானது என்று நிரூபனமானால் அந்த பதிவாளரே அத்துமீறியவரை அடித்து உதைப்பார். அப்படியிருக்கும் 10 வருடங்களுக்கு முன்பு என்ஓசி கொடுத்தபிறகு இன்று வந்து சண்டை செய்தால் நாம் அவர்களை அடித்து உதைக்க வேண்டாமா? (இந்த வார்த்தையை

ரஜினி கூறியவுடன் மேடையில் இருந்த கலைஞர்கள் பலத்த கரகோஷம் செய்தனர்).

பல வருடங்களுக்கு முன்பே காவிரி நதியில் குறிப்பிட்ட பகுதி கர்நாடகத்திற்கு என்றும், குறிப்பிட்ட தமிழகத்துக்கு என்றும் முடிவு செய்யப்பட்டது.

தமிழக எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து ஒரு திட்டம் போட்டால் அதற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதா? ஒரு மிகப்பெரிய தேசியகட்சி அதன் மாநிலத் தலைவரான ஒருவரே இதனை தூண்டிவிடுகிறார்என்றால், எவ்வளவு அவமானமான செயல் இது. தேர்தலை கருத்தில் கொண்டு இப்படி செய்யாதீர்கள். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியராஜ் பேசியது.

http://www.youtube.com/watch?v=wfqaKa0XFXs

http://www.youtube.com/watch?v=me0bmxLxXh4

நன்றி: சின்னக்குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

சூறாவளி:

அந்த மேடைக்கு அருகில் ஒரு ரீக்கடை.. அது யாருடையது....

சார் சாயா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.