Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் உணர்வுபூர்வமானதா அறிவுபூர்வமானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது முதல் பதிவாக என்ன போடலாம் என்று தலையைச் பிச்சுக்கொண்டிருந்த வேளை நான் ஏன் காதல் பற்றி எனது முதல் பதிவு இருக்ககூடாது என யோசித்து அதையே கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி எழுதுவம் என எண்ணி என் முதல் உளறலாக காதலை உளறுகிறேன் பார்த்தியலா காதல் என்றாலே உளறல்தான்.

ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இந்த காதல் என்ற மூன்று எழுத்து சமாச்சாரம் மனித சமூகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த ஹைடெக் காலத்தில் அது ஒரு பொழுது போக்கு அம்சமாகி மாறியதுதான் ரொம்பக் கொடுமை.

கண்டதும் காதல் இன்று நேற்று அல்ல இராமாயண காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதுதான் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான். தற்போது அண்ணனும் நோக்கியா அவளும் நோக்கியா என மாறிவிட்டது. 2000 வருடத்தில் நோக்கியா என்ற ஒரு மொபைல் போன் வரும் என அன்றே கம்பன் அறிந்துவிட்டான் போலும் (பல கவிஞர்கள் தீர்க்கதரிசிகள்).

காதலுக்கு விஞ்ஞானரீதியிலான விளக்கமாக இருவேறு பாலினர் ஏற்படும் ஒருவகையான ஹோமோன்களின் மாற்றமே காதல். வேறு சிலர் ஒரேமாதிரியான அலைவரிசை உடைய இருவரிடம் ஏற்படும் மாற்றம் காதல் என்கின்றனர். விஞ்ஞான ரீதியாக எடுத்துகொண்டால் காதல் உணர்வுபூர்வமானது அதாவது உணர்ச்சிவசப்படுவது அல்லது வசப்படுத்துவது.

அடுத்து இன்றைய நாளில் பல காதல்கள் வெறும் இனக்கவர்ச்சி என பலராலும் சிலாகிக்கப் படுகிறது. அதிலும் உண்மையில்லாமல் இல்லை வெறும் கவர்ச்சிக்காக அல்லது காதலிக்காமல் விட்டால் தமது ஸ்டேஸ்டட் ஏதோ குறைந்துவிடும் என எண்ணி தீர யோசிக்காமல் காதல் வலையில் ஆண்களும் பெண்களும் பலர் உள்ளனர். இத்தகைய சமயங்களில் காதல் அறிவுபூர்வமானது என்ற கருத்து அடிபட்டுப்போகிறது.

அறிவுபூர்மான காதல் என்றால் என்ன? நீங்கள் காதலிக்கும் பெண்ணோ ஆணோ உங்களுக்கு ஏற்றவரா? உங்கள் எதிர்காலம் இவரினால் மேம்படுமா? உங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றனவா? விட்டுகொடுப்புகளுக்கு இடமிருக்கா? என பல வேறுபட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்து அவை உங்களால் முடியும் என நினைத்தால் காதலிக்கலாம் இல்லாவிட்டால் காதலுக்கும் உங்களுக்கும் வெகு தூரம்.

சிலர் நினைக்கலாம் இப்படியெல்லாம் நினைத்தால் அது எப்படிக் காதலாகும் என்று. அது தவறு காதலைப் பொறுத்தவரை உடனடித் தீர்மானத்தின் பார்க்க நீண்ட அல்லது நன்று யோசித்த ஒரு முடிவு எப்பவும் நன்மையாகும்.

காதல் இன மொழி மத சாதி வேறுபாடுகளை உடைக்கின்றது என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ அதே அளவு இரு வேறுபட்ட இன மொழி மத சாதியினரிடம் பகையையும் வளர்க்கின்றது. சிலவேளைகளில் உறவினர்களிடையே ஏற்படும் காதல் அவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோரும் ஏதோவொரு கட்டத்தில் இந்த காதலைக் கடந்துவந்திருப்பீர்கள். சிலருக்கு வெற்றியளித்திருக்கலாம் சிலருக்கு வெறுப்பளித்திருக்கலாம். தோல்வியளித்திருக்கலாம் என நான் கூறவில்லை. ஏனெனில் காதல் ஒருபோதும் தோற்றதில்லை. காதலர்கள் தான் தோற்றுள்ளனர். லைலா மஜ்னுவிலிருந்து தோற்ற காதலர்கள்தான் பெரிதாக பேசப்படுகிறார்களே ஒழிய வெற்றியடைந்த காதலர்கள் பற்றி ஒருவரும் கதைப்பதில்லை.

காதலைப் பற்றிய எனது கருத்து திருமணமுடிக்கும் மனைவியையோ அல்லது கணவனையோ காதலிப்பது சிறந்ததாகும்.

நேயர்களே உங்கள் கருத்துக்கள் என்ன நீங்களும் காதலிக்கின்றீர்களா உங்கள் பதில்

Edited by puspaviji

காதலைப் பற்றிய எனது கருத்து திருமணமுடிக்கும் மனைவியையோ அல்லது கணவனையோ காதலிப்பது சிறந்ததாகும்.

அப்பிடி எண்டால் முதலில இப்ப நீங்கள் கலியாணம் கட்டீடீங்களா இல்லையா எண்டுற முதலில சொல்லுங்கோ. எத்தனையோ பேர் கலியாணத்தின் பின் காதல் வரும். அப்பிடி வாழலாம் இப்பிடி வாழலாம் கலியாணம் கட்டினாப்பிறகு எண்டு கனவு கண்டுபோட்டு கடைசியில டிவோர்சாகி போன எத்தினயோ கேசுகள பார்த்து இருக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடி எண்டால் முதலில இப்ப நீங்கள் கலியாணம் கட்டீடீங்களா இல்லையா எண்டுற முதலில சொல்லுங்கோ. எத்தனையோ பேர் கலியாணத்தின் பின் காதல் வரும். அப்பிடி வாழலாம் இப்பிடி வாழலாம் கலியாணம் கட்டினாப்பிறகு எண்டு கனவு கண்டுபோட்டு கடைசியில டிவோர்சாகி போன எத்தினயோ கேசுகள பார்த்து இருக்கிறன்.

என்ன முரளி நான் கட்ட பிரம்மச்சாரியாக்கும் நான் என்னும் கலியானம் முடிக்கேல தெரியுமொ என்னோட கருத்துதான் சொன்னனான் ஏனென்டா எனக்கும் கலியாண வயசாக்கும் கிகிகி....

அதுசரி எத்தனபேர் டைவேர்ஸ் எடுத்தவயல் நீருமோ வாழ்க்கைய ஒழுங்கா வாழ்ந்தா ஏன் இதெல்லாம்

காதல் உண்மையானவங்களுக்கு உணர்வுபூர்வமானது...(எதையும் நல..சுயநல நோக்கோட.. சிந்திக்கதெரியாதது)

காதல் அறிவுபூர்வமென்று சொல்லுறதெண்டா அவங்க திருமணத்திற்கு பிறகு காதலிக்கிறவங்க..(எங்க இருந்து எந்த பிரச்சினை வருமெண்டே யோசிக்க தேவையில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும்போது அறிவு ஒதுங்கிக் கொள்கின்றது அல்லது ஒதுக்கப் பட்டு விடுகின்றது. அதனால் காதல் உணர்வு பூர்வமானதாகத்தான் இருக்க வேண்டும். :lol::o

ம்ம்..வணக்கம் அண்ணா..(அட நான் தான் பாருங்கோ :lol: )...முதல் பதிவே காதல்..(உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் :lol: )..

இப்ப சொல்லுறன் கேளுங்கோ காதல் அறிவுபூர்வமானதுமில்ல உணர்வுபூர்வமானதுமில்ல காதல் இதய பூர்வமானது (மனபூர்வமானது)..இது எப்படின்னா இருக்கு :o ..பிகோஸ் காதலை அறிவு பூர்வமா பார்க்க போனாலும் பிரச்சினை உணர்வுபூர்வமா பார்க்க போனாலும் பிரச்சினை மனபூர்வமா பார்த்தா ஒரு பிரச்சினையுமில்ல பாருங்கோ..(பிறகு நேக்கு எக்ஸ்பீரியன்ஸா என்று கேட்கிறதில்ல)..நேக்கு பெரியவா சொன்னதை சொன்னான் பாருங்கோ.. :lol:

ம்ம்..மழை பெய்யும் போது சில மழைதுளிகள் மட்டும் தான் நம் மீது விழும் சில மழைதுளிகள் தான் இதயத்தின் மீது விழும் அத போல தான் காதலும்..(விழுந்த மழைதுளியை காப்பாற்றுறது உங்க கெட்டிதனம் பாருங்கோ :lol: )..விழுந்த மழைதுளியாள காய்ச்சலும் வரும் சந்தோசமும் வரும் இதை எல்லாம் ஏனப்ப அறிவுபூர்வமா பார்க்க வேண்டும் ஏன் உணர்வுபூர்வமா பார்க்க வேண்டும்..(லைவ்வில நெடுகலும் நடக்கிற இன்சிடன் மாதிரி பார்த்தா சரி பாருங்கோ )..இல்லாட்டி உங்களிற்கு தான் பிரச்சினை பாருங்கோ.. :D

காதலிக்கும் போது காதல் மட்டும் தான் கண்களுக்கு தெரியும் கண்ணை திறந்து பாருங்கோ..(முடியல என்னால :( )..ம்ம் திருமணம் ஆகி தான் காதலிக்க வேண்டும் என்று இல்ல அண்ணா உந்த லோகத்தை காதலியுங்கோ உங்க அம்மாவை காதலியுங்கோ ஏன் உங்களை சுற்றி இருக்கிற ஆட்களை காதலியுங்கோவன்..இது எப்படின்னா இருக்கு கொடுமையா இருக்கா வெறி சாறி..!! :wub:

சோ என்ட கொன்கூலூசன் என்னவென்டா..காதல் ஒரு பட்டாம் பூச்சி மாற்றி மாற்றி பூக்களிள அமரும் ஆனா ஒரு பூ வில மட்டும் தான் செட்டிலாக நினைக்கும் :wub: ..(அக்சுவலா அந்த பூவை மட்டும் தான் ஜம்மு பேபி தேடி கொண்டிருக்கு கண்டு பிடித்தவுடன சொல்லுறன் என்ன :lol: )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில உன்னை காதலி முதலில் அதை விட சிறந்த காதல் இல்ல"

அப்ப நான் வரட்டா!!

காதலில் தோல்வி ஏற்பட்டு வாழ்நாள் பூராவும் ஏங்கிக் கொண்டிருந்தால் அது உணர்வுபூர்வமானது.

காதல் தோல்வியடைந்து வேறொருவருடன் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்தால் அக் காதல் அறிவுபூர்வமானது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதல் விலங்குபூர்வமானது. அதலால்தான் அழியாமல் இன்னமும் வாழ்கின்றது.

மனிதர்கள் இல்லாத காலத்திலும் இது வாழும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கண்ணா வாழ்க்கையில உன்னை காதலி முதலில் அதை விட சிறந்த காதல் இல்ல"

ஜம்மு முடியவே இல்லை என்னால என்ன வார்த்தை சொல்லிப்போட்டீர் அட இதுவரைக்கும் நான் கன்ட கன்டவயள எல்ல காதலிச்சுப்போட்டன் தெரியுமோ முதல்முறையா என்னக்காதலிக்கம்போறன் தெரியுமோ ஜம்மு ஜம்மு எனக்கு உம்மோடும் சின்ன கிகிகி......

  • கருத்துக்கள உறவுகள்

காதலில காம்பஸ் காதல் எண்டு ஒண்டு இலங்கையில குறிப்பாக வடபகுதி தமிழர் மத்தியில உண்டு. படிக்கிற வளாகம் (பெக்கலடி) பார்த்து, சாதி பார்த்து, குடும்பத்துடைய பண நிலைமை பார்த்து ஆண் பெண் சகோதரங்களின் எண்ணிக்கை நிலைமையெல்லாம் பார்த்து எல்லாப் பொருத்தமும் சரியா இருந்தால் தெய்வீகக் காதல் தொடங்கும். கொஞ்சம் ஆராய்வில்லாமல் தொடங்கினால் அந்தப் புனிதக் காதல் இடை நடுவில் நண்பர்களின் காட்டிக் கொடுப்பினால் விட்டுப்போகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலைப் பற்றிய எனது கருத்து திருமணமுடிக்கும் மனைவியையோ அல்லது கணவனையோ காதலிப்பது சிறந்ததாகும்.

காதலிக்கும் போதும் (காதல் தொடங்கும் போதல்ல.. காதலிக்கும் போது) இருவருக்கும் திருமணம் நடக்கும் என்னும் நம்பிக்கையில் தானே காதலிக்கிறார்கள் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.