Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையில் புலிகளும் அரசும் நடக்கின்றனராம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

***எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் நிம்மதியை புலிகள் எப்படி கெடுக்கிறார்கள் என்று விளங்கவில்லை. உலகின் நிம்மதியை இவர்கள்

தான் கெடுக்கிறார்கள்.

அண்ணன் நுணாவிலன்

இதைதானே ஈரான் சனாதிபதியும் சொன்னார்?

தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்துகின்றபோதும், விடுதலைப் புலிகளை நசுக்குவதற்காக துணை இராணுவக் குழுக்களை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்ற சந்தேகம் தோன்றியிருப்பதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள 2007ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 2002ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் பாரிய வன்முறைச் சம்பங்கள் அதிகரித்திருப்பதுடன், பெருமளவானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரண்டு தரப்பினரும் கடந்த வருடம் முழுவதும் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 28ஆம் திகதி சமூக சேவைகள் சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்குவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்களை இலக்குவைத்து பல பேரூந்துக் குண்டுத் தாக்குதல்களும், தொடரூந்துக் குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், கடந்த நவம்பர் 2ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விமானப்படையினரின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டமையையும் அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற கருணா குழுவினரும் படுகொலைகளில் ஈடுபடுவதுடன், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இந்தக் குழுவின் முன்னாள் தலைவர் கருணா அம்மான் லண்டனில் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பிள்ளையான் தலைவராகச் செயற்பட்டு வருவதுடன், கருணா தரப்பினரின் முழு கட்டுப்பாட்டையும் அவரே எடுத்துக்கொண்டுள்ளார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜுலை மாதம் கிழக்கு மாகாணத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த இலங்கை அரசாங்கம் தனக்குள் காணப்பட்ட அரசியல் குழறுபடிகள் காரணமாக தேர்தலை நடத்துவதற்கோ, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கோ முடியாதிருந்தது. எனினும், இலங்கையின் வடக்கின் சில பகுதிகளை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவற்றை மீட்கும் நடவடிக்கைகளை கடந்த நவம்பர், டிசம்பர் பகுதிகளில் இலங்கை அரசாங்கப் படைகள் ஆரம்பித்துள்ளன.

விடுதலைப் புலிகளும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுவரும் துணைஇராணுவக் குழுக்களும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை முன்னெடுத்துவருவதாக மனித உரிமை அமைப்புக்களும், கண்காணிப்பாளர்களும் கூறியிருப்பதாக அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கருணா தரப்பினர் சிறுவர்களைப் படையில் இணைத்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக 2007ஆம் ஆண்டின் பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://isoorya.blogspot.com/

புலிகளின் தாக்குதல், துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் ஆகியன குறித்து அமெரிக்கா அவதானிக்கிறது

Thursday, 01 May 2008

சிவில் மக்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் மற்றும் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்க அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரியவருகிறது.

2007ம் ஆண்டுக்கான உலகப் பயங்கரவாத அறிக்கை இன்றைய தினம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களதினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களைப் போஷிப்பது குறித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கில் இராணுவப்படையினர் அதிகாரத்தை நிலைநாட்டியுள்ள போதிலும், விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து கொண்டு நாடு முழுவதிலும் தாக்குதல்களை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கையொன்று அமுலில் இருந்த போதிலும் அதற்கு முன்னய காலத்துடன் ஒப்பிடும் போது வன்முறைச் சம்பங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2007ம் ஆண்டில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேக சந்தர்பங்களில் இராணுவப்படையினரின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களாகவே விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்குப் பகுதியை அரசாங்கப்படையினர் கைப்பற்றியுள்ள போதிலும் அந்தப் பிரதேசத்தில் அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு, தேர்தல்களை நடாத்தி பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள அரசாங்கம் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மனித உரமை மீறல் சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வேண்டுமென்றே அமெரிக்க அதிகாரி சென்ற ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகள் மன்னிப்பு கோரியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.

http://www.ajeevan.ch/content/view/2342/1/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்துகின்றபோதும், விடுதலைப் புலிகளை நசுக்குவதற்காக துணை இராணுவக் குழுக்களை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்ற சந்தேகம் தோன்றியிருப்பதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள 2007ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://isoorya.blogspot.com/

காற்றுள்ளபோது காற்று வளம்பிடித்துத் தூற்ற வேண்டியவர்கள் நாங்கள்தான். வல்ல மாலுமிகள் எதிர்க் காற்றில்கூட பாய்க் கப்பலை ஓட்டுவதை சின்னவயதில் பார்த்திருக்கிறேன். நல்ல மாலுமிகள் காலநிலையைத் திட்டித் தீர்க்காமல் செய்யவேண்டியது என்ன என்றே சிந்திப்பார்கள். வேகம் குறைந்துபோனாலும் பொறுமையாக அடைந்து அடைந்து தங்கள் இலக்கிற்க்குப் போய்விடுவார்கள். சாதகமான பெரும்காற்றில் தோணியைக் கவிழவிடாமல் பாதுகாத்தபடி விரைவார்கள். நல்ல மாலுமிகள் காற்றைத் திட்டி நான் கேட்டதில்லை. ஈழவிடுதலைப் போரில் 1980பதுகளில் இருந்தே மற்றவர்களைத் திட்டியே கேட்டிருக்கிறேன்.

ஒருபோதும் எங்களிடம் தொடற்ச்சியான அரசியல் பொருளாதார கொள்கை ஆய்வுகள் நிகழ்ந்ததில்லை. கொள்கை ஆய்வுகள்மூலம்தான் இத்தகைய நிலமைகளை புரிந்துகொண்டு மேற்செல்ல முடியும். மேலோட்டமான விவாதங்களில் யுத்தத்தைக் கோட்டைவிட்டாலும் விவாதத்தை வென்றோம் என்கிற திருப்திதான் முக்கியமாகிவிடும்.

உலக நாடுகளில் இடம்பெறும் மோதல்களில் தாக்குதலின்போது சிவிலியன் இலக்குகளளைத் தவிர்க்காத அமைப்பு தனகெதிராக தானே போராடுகிற அமைப்பாகும். அத்தகைய துர்ப்பாக்கியம் நமக்கு ஒருபோதும் நேர்ந்துவிடக்கூடாது.

இலங்கைத் தமிழர் முஸ்லிம்கள் கொள்கை விவகாரங்களில் policy research தொடர்பாக ஆர்வம் காட்டும் அமைப்புகள் பற்றிய தகவல் இருந்தால் எனக்கும் தந்துதவுங்கள்.

Edited by poet

காற்றுள்ளபோது காற்று வளம்பிடித்துத் தூற்ற வேண்டியவர்கள் நாங்கள்தான். வல்ல மாலுமிகள் எதிர்க் காற்றில்கூட பாய்க் கப்பலை ஓட்டுவதை சின்னவயதில் பார்த்திருக்கிறேன். நல்ல மாலுமிகள் காலநிலையைத் திட்டித் தீர்க்காமல் செய்யவேண்டியது என்ன என்றே சிந்திப்பார்கள். வேகம் குறைந்துபோனாலும் பொறுமையாக அடைந்து அடைந்து தங்கள் இலக்கிற்க்குப் போய்விடுவார்கள். சாதகமான பெரும்காற்றில் தோணியைக் கவிழவிடாமல் பாதுகாத்தபடி விரைவார்கள். நல்ல மாலுமிகள் காற்றைத் திட்டி நான் கேட்டதில்லை. ஈழவிடுதலைப் போரில் 1980பதுகளில் இருந்தே மற்றவர்களைத் திட்டியே கேட்டிருக்கிறேன்.

ஒருபோதும் எங்களிடம் தொடற்ச்சியான அரசியல் பொருளாதார கொள்கை ஆய்வுகள் நிகழ்ந்ததில்லை. கொள்கை ஆய்வுகள்மூலம்தான் இத்தகைய நிலமைகளை புரிந்துகொண்டு மேற்செல்ல முடியும். மேலோட்டமான விவாதங்களில் யுத்தத்தைக் கோட்டைவிட்டாலும் விவாதத்தை வென்றோம் என்கிற திருப்திதான் முக்கியமாகிவிடும்.

உலக நாடுகளில் இடம்பெறும் மோதல்களில் தாக்குதலின்போது சிவிலியன் இலக்குகளளைத் தவிர்க்காத அமைப்பு தனகெதிராக தானே போராடுகிற அமைப்பாகும். அத்தகைய துர்ப்பாக்கியம் நமக்கு ஒருபோதும் நேர்ந்துவிடக்கூடாது.

இலங்கைத் தமிழர் முஸ்லிம்கள் கொள்கை விவகாரங்களில் பொலிcய் ரெசெஅர்ச் தொடர்பாக ஆர்வம் காட்டும் அமைப்புகள் பற்றிய தகவல் இருந்தால் எனக்கும் தந்துதவுங்கள்.

http://fpolicy.america.gov/fpolicy/securit...CFRwcewodvm5pBw

http://www.southasiaanalysis.org/default.asp

[/ஃஉஒடெ]

இந்தியா கொஞ்சம் முரண்டு பிடிக்கிறமாதிரிபிடிக்க, தான் சிறிலங்காவிற்கு நல்ல பிள்ளையாக நடிக்கப்போகிறார் "அம்மேரிக்கா."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.