Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியான்மார் புயலில் நாற்பதாயிரம் தமிழர்கள் சாவு!

Featured Replies

மியான்மார் நாட்டைத் தாக்கிய "நர்கீஸ்" புயலுக்கு இரண்டு இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். அதில் சுமார் நாற்பதாயிரம் பேர் தமிழர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அது தவிர சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இது பற்றி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

"நர்கீஸ்" தாக்கியதைத் தொடர்ந்து மியான்மாரில் உள்ள இராணுவ அரசாங்கம் வெளிநாடுகளின் உதவிகளை வேண்டாமென்று மறுத்து வந்தது. ஐநா சபையின் வலியுறுத்தலுக்குப் பிறகே தற்போது உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த உதவிகளும் கூட பர்மியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அங்கு வாழும் சிறுபான்மைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

மியான்மாரில் ஐராவதி டெல்டா பகுதியும், பகோ மகாணமும், யங்கூனைச் சுற்றியுள்ள பகுதிகளும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகள் யாவும் தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதிகளாகும். தமிழர்களின் கிராமங்களான தங்கி, திங்காஜுன், டவுன்டகோன் முதலியவை முற்றாக அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

பகோ மாகாணத்தில் ஐம்பது சதவீதத்திக்கும் அதிகமாகத் தமிழர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். யங்கூனில் சுமார் இருபது சதவீதம் தமிழர்கள் உள்ளனர். இது தவிர பிலிக்கான், டகோன், டாகிடா, எரியா, டகோமியா முதலான தமிழர் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மியான்மாரில் தற்போது சுமார் 15 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் நாற்பதாயிரம் பேர் "நர்கீஸ்" புயலுக்கு பலியாகி இருப்பது மிகப் பெரும் துயரத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

மியான்மாரில் இராணுவம் சரிவர மீட்புப் பணிகளை செய்யாததால், அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. உப்பு ஒரு கிலோ மியான்மார் பணத்தில் 1500 ருபாய் விற்கிறது. ஒரு லீட்டர் குடி தண்ணீர் மியான்மார் பணத்தில் 1200 ருபாய். பால் பவுடரின் விலையோ ஒரு கிலோ பத்தாயிரத்திற்கும் அதிகம்.

மியான்மாரில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் மணிப்பூர் மாநில தமிழ்ச் சங்கத் தலைவர் திரு, சேகர், செயலாளர் ரவிச்சந்திரன், அதன் நிறுவனர்களுள் ஒருவரான திரு யூசுப், மணிப்பூர் மாநிலம் மோரே மாவட்டத்தில் சப் கலெக்டராகப் பணிபுரியும் திருமதி ஜெசிந்தா லசாரஸ் ஐ.ஏ.எஸ். ஆகியோர் இத் தகவல்களை உறுதிப்படுத்துகின்றனர்.

மியான்மாரில் வசிக்கும் தமிழர்கள் உரிய உதவிகள் கிடைக்காவிட்டால் மேலும் உயிர் இழப்புக்களை சந்திக்கும் அவல நிலையில் உள்ளனர்.

இத் தகவல்களை தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயற்கைச் சீற்றங்களும் தமிழர்களுக்கு அழிவைக் கொடுத்துக் கொண்டிருப்பது சோகமான விடயம். மியான்மாரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உலகத் தமிழர்கள் தம்மாலான உதவிகளை செய்ய முன் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திக்காரர் பாதிக்கப்பட்டால் காந்தி தேசம் ஓடி உதவி செய்யும். ஆனால் தமிழர் என்றால் ???

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திக்காரர் பாதிக்கப்பட்டால் காந்தி தேசம் ஓடி உதவி செய்யும். ஆனால் தமிழர் என்றால் ???

கந்தப்பு காந்தி தேசதோட என்ன கோபம் முழிச்சு முழிச்சு இருவது இருவது பார்க்கிறதா கேள்வி ஆச்சியிட்டையும் ஏச்சு வாங்கிறாதாகவும் கேள்வி இதற்கு எல்லாம் காந்தி தேசம் தானே காரணம் :rolleyes:

மிகவும் அதிர்ச்சியான தகவலாக இருக்கிதே. மியன்மாரில தமிழர் இருக்கிறீனமோ? நாற்பதாயிரம் பேர் செத்து இருக்கிறீனம். இதுபற்றி இப்ப சபேசன் சொல்லித்தான் நானும் அறிஞ்சுகொள்ளிறன். ஊர்ப்புதினம் பகுதியில மகிந்த குசுவிட்டாலே செய்திகள ஆ எண்டு ஓடிவந்து ஒட்டிற எங்கட ஆக்கள் இந்தச்செய்திய கண்டுகொள்ள இல்லையோ இவ்வளவுநாளும்?

ஆழ்ந்த அனுதாபங்கள்!

தகவலுக்கு நன்றி சபேசன்.

தெருவில போறவன் வாறவனுக்கு எல்லாம் குரல் கொடுக்கிற யாழ் கள உறவுகள்.. இயற்கை அழிவில இறந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மியன்மார் தமிழர்களுக்கு குரல் கொடுக்க மாட்டீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை அன்னை கூட தமிழர்களை பார்த்து பார்த்து அழிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தச் செய்தி மிகவும் ஆச்சரியமாவே இருக்கின்றது. மியான்மாரிலை இயற்கை அழிவாம் என்ற செய்தியாகவே இதை விட்டிட்டோம்.

அது எங்கே இருக்கின்றது என்பதையே, அறிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை...

ஆனால் எம்மினம் இவ்வளவு தொகையாக அதாவது 1.5 மில்லியன் அங்கிருப்பதை அறியும்போது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கின்றது.

யாழிலை அரட்டை அடிக்கும் கும்பல். இதைப்போன்ற விடயங்களைப்பற்றி???????????????

_________

இயற்கையின் சீற்றத்தினால் பாதிப்புற்ற உடன் பிறப்புகளிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

ரங்கூன் பக்கம் சில இந்தியர்கள் இருப்பதாக சில மியன்மார் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன்..! ஆனால் 1.5 மில்லியன் சனத்தொகை எனபது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது..! உயிரிழந்த உடன்பிறப்புகளுக்கு என் அஞ்சலிகள்..!

இந்த விடயம் ஏன் எந்த ஊடகங்களிலும் வரவே இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா சிகரம் தொலைக்காட்சியில் ( தற்பொழுது சிகரம் இயங்குவதில்லை. தரிசனம் இயங்குகிறது) முன்பு சிங்கப்பூர் தொலைக்காட்சியில் வரும் சில நிகழ்ச்சிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதுண்டு. அதில் ஒரு நிகழ்ச்சியில் ஒவ்வொரு இடங்களுக்கு சுற்றுலா சென்று அவ்விடத்தில் உள்ளவர்களோ உரையாடல், சுற்றுலாத்தளங்கள், அங்குள்ள உணவு வகைகள் காண்பிக்கப்பட்டது. ஒரு முறை மியான்மாரில் சுற்றுலாவினைக் காண்பித்தார்கள். அங்குள்ள சில தமிழர்களைப் பேட்டி கண்டார்கள். அந்நிகழ்ச்சியில் வந்த தமிழர்களும் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இனப்பிரச்சினை காரணமாக தமிழர்கள் ஜரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என புலம் பெயர்ந்தாலும், தொழில் வாய்ப்புக்காக அபிரிக்கா, அமெரிக்கா, பசுபிக் தீவுகளிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள். பிரித்தானியா ஆட்சி செய்த காலத்தில் தென்னிந்தியத் தமிழர்கள் பலர் பிஜி, மொரிசியஸ், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியாத்திவூகள், கென்யா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். சிங்கப்பூர், மலேசியாவிலும் யாழ்ப்பாணத்தமிழர்கள் 40 களில் வேலை வாய்ப்புக்காகப் புலம் பெயர்ந்தார்கள். தென்னிந்தியாத்தமிழர்கள் பிரித்தானியர்களினால் சிறிலங்கா, மலேசியா வேலை செய்வதற்காக அனுப்பப் பட்டார்கள். இராச இராச சோழன் காலத்தில் தென்னாசியாவில் பல படையெடுப்புக்கள் நடைபெற்றன. அக்காலத்திலும் இந்தோனேசியா, கம்போடியா விலும் தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். கம்போடியாவில் இராச இராச சோழன் கட்டிய மிகப்பெரிய கோவில் இருக்கிறது.

பிஜி, மொரிசியஸ் தீவுகளில் இந்திய அரசாங்கம் கிந்தி படிப்பிக்க வசதிகள் செய்வதினால், பல தமிழர்கள் தமிழ் படிக்காது கிந்தி படிக்கிறார்கள். அங்கே தமிழ் படிப்பிக்கிற வசதிகள் இல்லாததினால் கிந்தி படிக்கிறார்கள். பலரின் பெயர்களில் தான் தமிழ் இருக்கிறது.ஆனால் கதைக்கத் தெரியாது. மேற்கிந்தியாத்தீவுகளின் மட்டைப்பந்தாட்ட வீரர் சர்வனும் ஒரு தமிழர் தான். சரவணன் என்ற பெயரை சர்வனாக சுருக்கி இருக்கிறார். தமிழர்கள் உலகெல்லாம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. ஆனால் தமிழீழத்தில் தான் ஒரு நடைமுறை அரசாங்கம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, கலக்கிட்டீங்களே கந்தப்பு.

யூதர்களுக்கு ஒரு உலகலாவிய அமைப்பு இருந்து அவர்கள் கலாச்சாரம் மொழி என்பவற்றை பாதுகாத்தது போல் நம் தமிழர்களும் மொழியால் ஒன்றிணைய வேண்டும்..! ஒன்றிணைவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

வைப்பார்களா? என்பதை விட வைப்போமா? என்பது தான் பொருத்தமானதாகும்.

15 இலச்சம் தமிழர் மியன்மாரிலா?

கேள்விப்பட்டதுகளைவிட பல மடங்கு அதிகம்.. ஆச்சரியம்

இங்கிருந்தாலும் தமிழனுக்கு ஏனிந்த அழிவுகள்?

  • தொடங்கியவர்

"இந்தியர்கள்" என்ற அடைமொழிக்குள் உலகம் முழுவதும் பல இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். மலேசியாவில் ஏறக்குறைய 20 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற செய்தியே அங்கே பிரச்சனை வந்ததன் பின்புதான் பலருக்கு தெரிந்தது. அதுவரை அவர்களை "இந்தியர்கள்" என்றே நாம் அறிந்திருந்தோம்.

இப்படி "இந்தியர்கள்" என்ற அடைமொழியோடு மியன்மாரில் பல இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். 15இலட்சம் பேர் என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. ஏறக்குறைய 5 இலட்சம் பேர் என்பது என்னுடைய அறிதல்.

புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகள். தமிழர்கள்வாழ்கின்ற பல கிராமங்கள் முற்றாக அழிந்து போய் விட்டன. மியன்மாரில் இராணுவ ஆட்சி நடப்பதால் பர்மிய இனத்தவரின் அழிவையே உலகம் சரியாக அறிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. இதில் இறந்த தமிழர்களின் எண்ணிக்கையை அறிவது மிகக் கடினம்.

மியன்மாரில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் இறந்த தமிழர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரம் அளவிற்கு வரும் என்று சொல்கின்றன.

இந்தச் செய்தி தமிழர்கள் வாழும் நாடுகளில் எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது மிகுந்த வேதனையான ஒரு விடயம்.

தமிழ்நாட்டின் ஊடகங்கள் இது பற்றி "பெட்டிச்" செய்திதான் போட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் இன்று வெளிவந்த ஜுனியர் விகடனில் மியன்மாரில் தமிழர்களுக்கு நடந்த பேரழிவு பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ்முரசு இரண்டு நாட்களுக்கு முன்பு இது பற்றி தலைப்புச் செய்தி போட்டது.

தற்பொழுதுதான் இந்தச் செய்தி மெதுமெதுவாக மக்களை சென்றடைந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ முடியும் என்றால், அதை செய்ய நாம் தயங்காது முன்வர வேண்டும்.

பர்மாவை தாக்கிய சுழற்புயலில், நாற்பதுனாயிரம் தமிழ் உறவுகளின்

ஞாயிறு 01 ஜுன் 2008 நிருபர் அ.மயூரன்

கடந்த 3ஆம் நாளன்று பர்மாவை சுழற்புயல் தாக்கியதில், இரண்டு

இலட்சம் பொதுமக்கள் பலியானதோடு, மேலும் இலட்சக்கணக்கான

மக்கள் தமது இருப்பிடங்களை இழந்து ஏதிலிகளாக்கப்பட்டனர்.

இவ்வாறு சுழற்புயலில் பலியான பொதுமக்களில், நாற்பதுனாயிரம்

பேர் தமிழ் உறவுகள் என்றும், மேலும் ஒரு இலட்சம் தமிழ்

உறவுகள் தமது இருப்பிடங்களை இழந்து, வீதிகளில் ஏதிலிகளாக

அலைந்து திரிவதாகவும், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சுழற்புயலில், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளான ஐராவதி

நதிப்புறம்இ பகோ மாகாணம், ரங்கூனின் புறநகர் ஆகிய இடங்கள்

பேரழிவுக்கு உள்ளாகியிருப்பதோடு, முற்றுமுழுதாக தமிழர்கள்

வசித்து வந்த, திங்காயூன், தங்கி, டவுன்டகோன் ஆகிய கிராமங்கள்,

சுழற்புயலில் அடையாளம் இன்றி முற்றாக அழிவடைந்துள்ளன.

தற்பொழுது பர்மாவில் பதினைந்து இலட்சம் தமிழ் மக்கள் வசித்து

வரும் நிலையில், சுழற்புயலில் தமது உறவுகளையும்,

இருப்பிடங்களையும் இழந்த தமிழ் மக்களை, பர்மிய

படையாட்சியாளர்கள் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்து பர்மாவிற்கு அனுப்பி வைக்கப்படும் சகல

விதமான நிவாரண உதவிகளும், பர்மிய மக்களுக்கு மட்டும்

வழங்கப்படுவதோடு, எவ்விதமான வெளி உதவிகளும் இன்றி, மிக

மோசமான அவலத்திற்குள் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல்

கருணாநிதி அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி

வைத்திருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற

உறுப்பினர் ரவிக்குமார், இயற்கை அனர்த்தத்தால் பர்மாவில்

பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நிவாரண உதவிகளை

வழங்குவதற்கு, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

கடந்த இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலும், அதன் பின்னரும்,

இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளை, பாரத தேசத்திற்கு பர்மிய

ஆட்சியாளர்கள் அடித்து விரட்டியிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.

நன்றி : பதிவு

அவர்களுக்கு தமிழ் தெரியாமல் இருப்பது நல்லது தான் இல்லாது போனால் தந்தை பெரியார் கடவுள் அது இது என்று அடிபட்டு தாங்களாகவே அழிந்து போவார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.