Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விழியும் மலரும்..!!

Featured Replies

விழியும் மலரும்..!!

77355499sk2.png

மலர்ந்த அந்த பொழுதினில்

வீசிய இதமான தென்றலில்

மலர்களின் மெல்லிசை

கேட்டு மலர்ந்தது என்

விழி...

மலர்ந்த விழி

மொட்டுடைந்த

அந்த மலரின்

மெல்லிசை வந்த

திசையினை

தேடின..!!

தேடிய அந்த விழியில்

விழுந்ததோ பல மலர்கள்

வாடின விழிகள்..

பூத்திருந்த மலர்களை

பார்த்தும்..

மலர்கள் ஒவ்வொன்றினதும்

இதமான சிரிப்பு

விழிகளிள்

விழுந்த

போதும்..!!

விழிகள் அதனை

ரசிக்கவில்லை..

வீசிய தென்றலில்

மலர்கள் தலையசைத்து

விழியிடம்..

பேசின பல

கதைகள்..

ஆனால்

விழியோ

மெளனம்..!!

விழியின் ஏக்கம்

அறியுமா

மலர்கள்..

மலரின் குணம்

அறியுமா

விழிகள்..

மலரில் தேன் அருந்த

தேனிக்கள் மெதுவாக

குத்த..!!

மலருக்கு வலித்ததோ

தெரியவில்லை

ஆனால்

விழியில் இருந்து

வடிந்தது கண்ணீர்..

அந்த கண்ணீர் துளி

விழுந்தது ஒரு மலரின்

மேல்..

அந்த துளிபட்டு

மலர் சிரிந்தது

விழி வியந்தது..!!

விழி மலர்ந்தது

தான் தேடிய

மலரை விழியால்

நுகர்ந்ததில்..

விழி மலருக்கே

பரிசளித்தது ஒரு

மலரை..

பல கதைகள் பேசியது

விழி..

மலரோ மெளனம்..!!

மலர் மெளனித்த வேளை

விழி தன் விழியால்

விளித்தது

தன்

காதல்..

விழியின் காதல் சொற்

கேட்டு.

மலர் தலை குனிந்தது தான்

ஏனோ..

விழி மூட முடியாமல்

விழி தவிர்க்க..

மனம் பேசியது

உன் மலரை போல

தான்..

என் மனதில்

இருக்கும்

மலரவளும்

என..

இதை கேட்ட

விழி.

மெதுவாக

தன் இமைகளை

மூடி

கொண்டது..!! :)

அப்ப நான் வரட்டா!!

  • Replies 53
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விழியின் ஏக்கம்

அறியுமா

மலர்கள்..

அழகான கற்பனை.

கவிதை அழகு

மலரில் தேன் அருந்த

தேனிக்கள் மெதுவாக

குத்த..!!

மலருக்கு வலித்ததோ

தெரியவில்லை

ஆனால்

விழியில் இருந்து

வடிந்தது கண்ணீர்..

:(:( தம்பி கவிதை மிக அருமை. அதிலும் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவைகளே.

வாழ்த்துக்கள் ஜம்மு.

:( மலரே மெளனமேன்.....பேசு ஒரு வார்த்தை திறந்திருக்கும் விழியோடு :)

  • தொடங்கியவர்

அழகான கற்பனை.

கவிதை அழகு

ம்ம்..கறுப்பி அக்கா மிக்க நன்றி :lol: ..தங்களின் கவி மலரினை முகர்ந்து பல நாட்களாகிவிட்டனவே..எப்போது தங்களின் கவி மலர் பூக்கும்.. :)

அப்ப நான் வரட்டா!!

:D:) தம்பி கவிதை மிக அருமை. அதிலும் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவைகளே.

வாழ்த்துக்கள் ஜம்மு.

:( மலரே மெளனமேன்.....பேசு ஒரு வார்த்தை திறந்திருக்கும் விழியோடு :(

என் மலர்தனையும் ரசித்து :) ..அதில் சில இதழ்தனையும் முகர்ந்து என் விழிதனை பாராட்டிய நிலா அக்காவிற்கு நன்றிகள்... :(

"மலர்கள் பேசுமா

பேசினால்" :(

அப்ப நான் வரட்டா!!

"மலர்கள் பேசுமா

பேசினால்" :lol:

அப்ப நான் வரட்டா!!

:lol:

பேசினால் ஓயுமா :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் மெல்ல பேசும் வரிகள் அழகு......

  • தொடங்கியவர்

:lol:

பேசினால் ஓயுமா :)

அதை வெண்ணிலவிட்ட தான் கேட்க வேண்டும் ஏன் எண்டா.. :lol: (வானில் வெண்ணிலவு தோனும் போது தானே)..மொட்டவிழ்ந்து மலராகும் ,அப்ப ஒரு வேளை வெண்ணிலவுடன் ஒயாம பேசுகிறதோ யாருக்கு தெரியும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ம்ம்ம் மெல்ல பேசும் வரிகள் அழகு......

அட..எங்கன்ட சங்கிலியன் மாமா..(நலமா மாமா??) :D ..மலரின் அழகை ரசித்த சங்கிலியன் மாமாவிற்கு நன்றிகள்..நன்றிகள்.. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

விழியும் மலரும் படுறபாடு.. சொல்லி மாளாது. நல்ல கற்பனையோட்டம். பாராட்டலாம்.

ஆனால் கவிதை நீண்டதால ஒரு தொடர்ச்சி வைச்சு ரசிக்க முடியல்ல. முன்ன வாசிக்கிறது பின்ன வாசிக்கப்புற மறந்திடுது... முடியல்ல.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஜமுனா! உள்ளதை சொல்லு ராசா :) உந்தக்கவிதை எங்கேயும் களவெடுத்ததோ இல்லாட்டி சொந்தத்தயாரிப்போ :lol: ஏனெண்டால் நல்ல கவிதையாய் இருக்கு :lol: அதுதான் கேட்டனான் கோவிக்காதையடா செல்லம் :lol:

  • தொடங்கியவர்

விழியும் மலரும் படுறபாடு.. சொல்லி மாளாது. நல்ல கற்பனையோட்டம். பாராட்டலாம்.

ஆனால் கவிதை நீண்டதால ஒரு தொடர்ச்சி வைச்சு ரசிக்க முடியல்ல. முன்ன வாசிக்கிறது பின்ன வாசிக்கப்புற மறந்திடுது... முடியல்ல.. :)

அட..மலர் எண்டவுடன தாத்தா ஓடி வந்திட்டார்.. :D (மலரண்ணியை நினைத்து கொண்டு போல) :lol: ...ரொம்ப நன்றி விழியும் மலரும் படும் பாட்டை நீங்கள் உங்கள் விழியால் ரசித்தமைக்கு.. :lol:

ம்ம்..தாத்தா சரியா சொன்னியள் நானும் தற்போது தான் நீங்கள் கூறிய தவறினை கண்டு கொண்டேன் :) ..எனி மலரும் மலர்களிள் இந்த தவறினை நிவர்த்தி செய்யிறன்..நன்றி தாத்தா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

தம்பி ஜமுனா! உள்ளதை சொல்லு ராசா :) உந்தக்கவிதை எங்கேயும் களவெடுத்ததோ இல்லாட்டி சொந்தத்தயாரிப்போ :lol: ஏனெண்டால் நல்ல கவிதையாய் இருக்கு :) அதுதான் கேட்டனான் கோவிக்காதையடா செல்லம்

அட..எண்ட கு.சா தாத்தா வாங்கோ தாத்தா வாங்கோ.. :D (என்ன இப்படி கேட்டு போட்டியள் தாத்தா)..ஆனா உப்படி கேட்டதில நேக்கு சரியான சந்தோசம் ஏன் எண்டா சுட்டு போடுற அளவிற்கு கவிதை இருக்குது எண்டு தான்.. :D

இப்ப ஒன்னு சொல்லட்டோ..(சாமிக்கு சாத்துற மலரினை களவெடுக்கலாமா) :lol: ..அத போல எண்ட மலரும் இது எப்படி இருக்கு தாத்தா.. :lol:

சா..சா தாத்தாவோட கோவிப்பனா என்ன..கள்ளுகொட்டில இருந்து மிணகட்டு வந்து எண்ட மலரினையும் ரசித்த தாத்தாவிற்கு மிக்க நன்றிகள்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அட..மலர் எண்டவுடன தாத்தா ஓடி வந்திட்டார்.. :) (மலரண்ணியை நினைத்து கொண்டு போல) :lol: ...ரொம்ப நன்றி விழியும் மலரும் படும் பாட்டை நீங்கள் உங்கள் விழியால் ரசித்தமைக்கு.. :lol:

ம்ம்..தாத்தா சரியா சொன்னியள் நானும் தற்போது தான் நீங்கள் கூறிய தவறினை கண்டு கொண்டேன் :) ..எனி மலரும் மலர்களிள் இந்த தவறினை நிவர்த்தி செய்யிறன்..நன்றி தாத்தா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

உண்மைதான். எனக்கு இயற்கையில் உள்ள மலர்களை ரெம்பப் பிடிக்கும். :D

அதை வெண்ணிலவிட்ட தான் கேட்க வேண்டும் ஏன் எண்டா.. :lol: (வானில் வெண்ணிலவு தோனும் போது தானே)..மொட்டவிழ்ந்து மலராகும் ,அப்ப ஒரு வேளை வெண்ணிலவுடன் ஒயாம பேசுகிறதோ யாருக்கு தெரியும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

அப்ப நான் வரட்டா!!

:lol: ஹீஹீ உது என்னமோ வெண்ணிலாவும் மலரும் ஓயாமல் வழவழ என பேசுறதுகள் என சொல்லாமல் சொல்லுறியள் போல. ஜம்மு யாரப்பா அந்த மலர்

கு சா தாத்தா தம்பியின் கவிதை பார்த்து உபப்டி கேட்டது நேக்கு க்ஒஞ்சம் கூட பிடிக்கலை ஆமா :)

அச்சோ விழியோடு மலர் என்ன பேசுது என்று பார்க்கவே நெடுக் தாத்தா ஓடி அவ்ந்துட்டார். அபப்டி என்றால் இயற்கை மலர் மீது நெடுக் தாத்தாக்கு சந்தேகமோ :)

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

அச்சோ விழியோடு மலர் என்ன பேசுது என்று பார்க்கவே நெடுக் தாத்தா ஓடி அவ்ந்துட்டார். அபப்டி என்றால் இயற்கை மலர் மீது நெடுக் தாத்தாக்கு சந்தேகமோ

அடப்பாவிகளே.. நான் சிந்திக்காத ஒரு கோணத்தில சிந்திச்சிட்டு.. சந்தேகமோ என்று என்மீதே பழிபோடுறேளே. இந்தப் பொம்பிளப் பிள்ளையளே இப்படித்தான் போல...!

இதால தான் பாவம் ஆண்கள்.. திக்குமுக்காடிப் போயிடுறாங்க போல..!

பிறகு இதற்கும் ஒண்டு சொல்லுவாங்கப்பா.. கையும் களவுமா பிடிபட்ட பின்னர் இப்படித்தான் சொல்லிச் சமாளிக்கிறது என்று. எப்படித்தான் இந்தப் பொம்பிளப் பிள்ளையளோட காலந்தள்ளினமோ.. பாவப்பட்ட ஜென்மங்கள் ஆண்கள்...! :lol::)

Edited by nedukkalapoovan

யம்மு பேபியா? இப்படியா? எழுதினதா?? கேட்கத்தான் நினைச்சேன்.. கு.சா. முந்திட்டாரு.. அவருக்கு பதிலும் கிடைச்சிருக்கு.. இனி வாயைப் பொத்திக்கொண்டு 'பாராட்டுக்கள்' என்றுதானே எழுதணும்.. :) அதுசரி யம்மு.. வழியும் மலரும்னா எங்க ஆளுக்கு பேர் மலர்விழியா..?!! :lol: நெடுக்ஸை எல்லாம் நம்பாதீங்க.. குரைக்குற நாய் கடியாது.. அதைப்போல பெண்களை ஏளனமாகப் பேசுற நெடுக்ஸ்.. ??? :):lol:

மலரும் விழியில் படரும் - அப்போது

களிப்பும் விழியில் மலரும்!! :lol:

Edited by sOliyAn

அடப்பாவிகளே.. நான் சிந்திக்காத ஒரு கோணத்தில சிந்திச்சிட்டு.. சந்தேகமோ என்று என்மீதே பழிபோடுறேளே. இந்தப் பொம்பிளப் பிள்ளையளே இப்படித்தான் போல...!

இதால தான் பாவம் ஆண்கள்.. திக்குமுக்காடிப் போயிடுறாங்க போல..!

பிறகு இதற்கும் ஒண்டு சொல்லுவாங்கப்பா.. கையும் களவுமா பிடிபட்ட பின்னர் இப்படித்தான் சொல்லிச் சமாளிக்கிறது என்று. எப்படித்தான் இந்தப் பொம்பிளப் பிள்ளையளோட காலந்தள்ளினமோ.. பாவப்பட்ட ஜென்மங்கள் ஆண்கள்...! :):)

:lol::lol: சப்பா பொம்பிளைப் பிள்ளைகள் இபப்டித்தான் என சொல்லி சமாளிக்கிறியள் கொஞ்சம் கூட நன்னா இல்லை

தாத்தா நீங்கள் தானே கதை கவிதை எல்லாம் எழுதுவியள்.... மலரும் குருவியும் காதல் செய்தால் .......... எபப்டி இருக்கும் என ஒரு கவிதை சொல்லுங்கோ :lol:

  • தொடங்கியவர்

உண்மைதான். எனக்கு இயற்கையில் உள்ள மலர்களை ரெம்பப் பிடிக்கும். :D

ஒகோ..அப்படியா தாத்தா :D ..இயற்கையில் எல்லா மலர்களையும் பிடிக்கும் என்பது சரி..உங்கள் மனதினை பறி கொடுத்த மலர் தான் எதுவோ.. :)

அப்ப நான் வரட்டா!!

ஹீஹீ உது என்னமோ வெண்ணிலாவும் மலரும் ஓயாமல் வழவழ என பேசுறதுகள் என சொல்லாமல் சொல்லுறியள் போல. ஜம்மு யாரப்பா அந்த மலர்

கு சா தாத்தா தம்பியின் கவிதை பார்த்து உபப்டி கேட்டது நேக்கு க்ஒஞ்சம் கூட பிடிக்கலை ஆமா

அச்சோ விழியோடு மலர் என்ன பேசுது என்று பார்க்கவே நெடுக் தாத்தா ஓடி அவ்ந்துட்டார். அபப்டி என்றால் இயற்கை மலர் மீது நெடுக் தாத்தாக்கு சந்தேகமோ

அட...நான் சொன்னது வானத்து வெண்ணிலவும்..மலரும் பேசி கொள்வது பற்றி அல்லோ அக்கா.. :D (அவை பேசும் மொழி நமக்கு புரியவா போது)..புரிந்தால் அந்த மொழியையும் ரசிக்கலாம் என்ன அக்கா.. :icon_idea:

அது சரி தாங்கள் மலருடன் பேசியதுண்டா..?? :D

அட..அட எங்கன்ட கு.சா தாத்தா என் மலரினை கண்டு வியபடைந்து அவ்வாறு கேட்ட போது என் விழி மகிழ்ச்சியில் மலர்ந்தது அல்லோ அக்கா.. :unsure:

கேட்டீங்களே ஒரு கேள்வி கடசியா..நெடுக்ஸ் தாத்தாவின் விழி பற்றி நானறியேன்.. :D (ஆனால் தாத்தாவின் விழி இயற்கை மலரினை ரசிக்கும் ஆனால் அந்த மலரின் அழகை கண்டு வெறுபுற்று மலரினை கொய்யும் மலரவளின் கைவளை கண்டால் அவர் விழி கசக்கும்)..விளங்கிச்சோ இப்ப.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

யம்மு பேபியா? இப்படியா? எழுதினதா?? கேட்கத்தான் நினைச்சேன்.. கு.சா. முந்திட்டாரு.. அவருக்கு பதிலும் கிடைச்சிருக்கு.. இனி வாயைப் பொத்திக்கொண்டு 'பாராட்டுக்கள்' என்றுதானே எழுதணும்.. அதுசரி யம்மு.. வழியும் மலரும்னா எங்க ஆளுக்கு பேர் மலர்விழியா..?!! :D நெடுக்ஸை எல்லாம் நம்பாதீங்க.. குரைக்குற நாய் கடியாது.. அதைப்போல பெண்களை ஏளனமாகப் பேசுற நெடுக்ஸ்.. ???

மலரும் விழியில் படரும் - அப்போது

களிப்பும் விழியில் மலரும்!!

அட..வாங்கோ சோழியன் தாத்தா..(நலமோ??) :D ..நீங்களும் என் "மலரினை" நான் வரைந்த மலரோ என்று கேட்டதில் எனக்கி இரட்டிப்பு மலர்ச்சி சோழியன் தாத்தா..மிக்க நன்றி :icon_idea: ..அதாவது "டிரெயினில்" என் விழிகுள் விழுந்த ஒரு மலரால் ..மலர்ந்த மலர் தான் இது தாத்தா.. :)

அந்த மலரின் பேரை கேட்பதிற்கு முன்னம் அந்த மலர் "ஸ்டேசனில" இறங்கிட்டு தாத்தா :D ..அந்த மலரின் பேர் மலர்விழியா என்பது நானறியே ஆனால் அந்த மலரை பார்த்தால் மலராத விழியும் ஒரு நிமிசம் மலர தான் செய்யும் தாத்தா.. :D

ஒன்னு தெரியுமோ இப்ப குரைக்கிற நாயும் கடிக்குதாம்..(என்ன தான் நெடுக்ஸ் தாத்தா பெண்களை ஏளனமா பேசினாலும் அவரும் நல்லா ரசிக்கிறார் பெண்களை அதனால் தான் அவரால் அப்படி எல்லாம் பேச முடியுது) :D ..ஒன்னை ரசிகாட்டி அத பத்தி பேச முடியாது தானே தாத்தா.. :unsure:

சோழியன் தாத்தா..(உங்க மலர் இதழ்கள் அழகு)..உந்த பாட்டு தெரியுமா தாத்தாவிற்கு.. :D

"விழியே கதை எழுது

கண்ணீரில் எழுதாதே" :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea::unsure: சப்பா பொம்பிளைப் பிள்ளைகள் இபப்டித்தான் என சொல்லி சமாளிக்கிறியள் கொஞ்சம் கூட நன்னா இல்லை

தாத்தா நீங்கள் தானே கதை கவிதை எல்லாம் எழுதுவியள்.... மலரும் குருவியும் காதல் செய்தால் .......... எபப்டி இருக்கும் என ஒரு கவிதை சொல்லுங்கோ :)

நீங்க யாரை மனசில வைச்சிட்டு இப்படிக் கேட்கிறீங்க என்னு புரியுது. உங்க அண்ணனைத் தானே.

அவரு தானு எழுதின கவிதைகளையே காணேல்ல என்று தேடிட்டு இருக்கிறாரே.. இதுக்குள்ள மலரை எங்க தொலைச்சாரோ...??!

இதோ அவரு எழுதின கவிதையில ஒண்ணு..

மலரே

வசந்தத்தோடு வந்த

வாசமே

பூங்குருவி நானும்

மனதோடு பூத்த

இல்லாப் பொல்லாக் காதல் கொண்டு

சுற்றிச்சுற்றி வந்தேனே.!

பாவி...

பாத்திருக்க பருதவிக்க

காதல் கனவெல்லாம் பறித்தெடுத்து

பாதி வழியில் விட்டு

நீ மட்டும்

வாடி வீழ்வதேனோ

உன்னோடு

என் கூடும் வரும்

வாடா

என் காதல் மலரே..!

அப்படி என்று பிதட்ட

இது பேதைக் குருவியல்ல

அதுதான் காதலின்

பொது விதி போலும்.?!

-குருவிகள்.

http://kuruvikal.wordpress.com/ (நன்றி கூகிள்.)

இப்படி எல்லாம் எழுதினா.. மலரு வாடாம.. பூக்குமாக்கும். சொல்லி வையுங்க உங்க அண்ணன் கிட்ட. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸை எல்லாம் நம்பாதீங்க.. குரைக்குற நாய் கடியாது.. அதைப்போல பெண்களை ஏளனமாகப் பேசுற நெடுக்ஸ்.. ??? :unsure::icon_idea:

சோழி அண்ணன்.. குரைக்குது குரைக்குது... கடிக்காது கடிக்காது என்றிட்டு கிட்ட போனீங்க.. நம்ம ஜமுனன் சொல்லுறாப் போல குரல்வளையைப் பிடிச்சிடும். :)

ஒன்னு தெரியுமோ இப்ப குரைக்கிற நாயும் கடிக்குதாம்..(என்ன தான் நெடுக்ஸ் தாத்தா பெண்களை ஏளனமா பேசினாலும் அவரும் நல்லா ரசிக்கிறார் பெண்களை அதனால் தான் அவரால் அப்படி எல்லாம் பேச முடியுது) ..ஒன்னை ரசிகாட்டி அத பத்தி பேச முடியாது தானே தாத்தா..

பேராண்டி... நான் உண்மையை ஒத்துக் கொள்ளுவன். இயற்கையை நான் நல்லாவே எட்ட இருந்து ரசிக்கிறவன் தான்.

ஆனா ஒன்றை இரண்டு வகையில விளங்கிக் கொள்ளலாம்.. ஒன்று ரசிக்கிறது செய்யுறது போன்ற சொந்த அனுபவத்தில இன்னொன்று.. அடுத்தவங்க எழுதி வைச்ச பாடங்களைப் படிக்கிறதில..! நான் இரண்டையும் கலந்து பெற வேண்டியதை பெற்றுக்குவேன். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா!! ஜம்முவிற்கு குழந்தை மனது என்று தெரியும் ஆனால்....கவிமனதும் எனது என்று அழகான வரிகளாலே புரிய வைத்துவிட்டார்...பூக்களின் ஒரே மொழி புன்னகைதான்!

மிக எளிமையான வரிகள் அழகான(பூ) இதழ்கள் ஜம்மு....

அது சரி தாங்கள் மலருடன் பேசியதுண்டா..?? :)

அப்ப நான் வரட்டா!!

:icon_idea: ம்ம் நிறைய பேசினேனே. முந்தி யாழில் ஒரு மலாரண்னி இருந்தா அவா நனன பேசுவா எல்லோ தங்கைச்சி தங்கைச்சி என்று நன்னா பேசுவா, :D அனா இப்ப மலரண்ணி இல்லை :unsure:

நீங்க யாரை மனசில வைச்சிட்டு இப்படிக் கேட்கிறீங்க என்னு புரியுது. உங்க அண்ணனைத் தானே.

அவரு தானு எழுதின கவிதைகளையே காணேல்ல என்று தேடிட்டு இருக்கிறாரே.. இதுக்குள்ள மலரை எங்க தொலைச்சாரோ...??!

இப்படி எல்லாம் எழுதினா.. மலரு வாடாம.. பூக்குமாக்கும். சொல்லி வையுங்க உங்க அண்ணன் கிட்ட. :D

ஹீஹீ கேட்ட உடனே ஓடிப்போய் அண்ணாவின் கவிதையை மாந்தோப்பில் பறிச்சு வந்தது முதல் குற்றமாக்கும். அதைவிட மலரண்ணி வாடிடுவா என சொன்னது இரண்டாவது குற்றமாக்கும் :D

ஏன் அண்ணாவின் கவிதைகள் எல்லாம் தொலைச்சிட்டு தேடுறாரோ என்னிடம் நிறைய இருக்குதே அதுதான் அண்ணாவின் கவிதைகள்.. :D

மலரண்ணியையும் தொலைச்சிட்டாரோ

இதை நீங்க சொல்ல நாம நம்பணுமாக்கும்... பொறுங்கோ நாளைக்கு நான் அண்ணாகூட கதைப்பேன் அப்ப கேட்கிறேனே.

அண்ணாவின் கவிதையை தந்தமைக்கு நன்றிகள் நெடுக் தாத்தா. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஹீஹீ கேட்ட உடனே ஓடிப்போய் அண்ணாவின் கவிதையை மாந்தோப்பில் பறிச்சு வந்தது முதல் குற்றமாக்கும். அதைவிட மலரண்ணி வாடிடுவா என சொன்னது இரண்டாவது குற்றமாக்கும் :D

ஏன் அண்ணாவின் கவிதைகள் எல்லாம் தொலைச்சிட்டு தேடுறாரோ என்னிடம் நிறைய இருக்குதே அதுதான் அண்ணாவின் கவிதைகள்.. :unsure: மலரண்ணியையும் தொலைச்சிட்டாரோ இதை நீங்க சொல்ல நாம நம்பணுமாக்கும்... பொறுங்கோ நாளைக்கு நான் அண்ணாகூட கதைப்பேன் அப்ப கேட்கிறேனே.

அண்ணாவின் கவிதையை தந்தமைக்கு நன்றிகள் நெடுக் தாத்தா. :icon_idea:

நான் மலர் பற்றிப் பகிடிக்குச் சொன்னேன். குருவிகள் தப்பாக எண்ணமாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் அப்படி பகிடியாக எழுதியது யாரையும் புண்படுத்தி இருந்தால் நீங்களும் நான் அப்படிச் சொன்னதற்காக என்னை மன்னிக்கவும். :)

உண்மையில் அவர் தனது கவிதைகளைத் தேடுவதாக இட்டிருந்த பதிவு ஒன்றை வாசித்தேன். அதனால் தான் சொன்னேன்.

உங்களிடமிருந்தால் அதற்கான இணைப்பை வழங்கி உதவலாமே..! :)

தொலைந்த கவிதைகள் சில கிடைத்தன.

2004 டிசம்பர் திங்களில் தாக்கிய சுனாமி தொடர்பாக எழுதிய கவிதை http://kuruvikal.yarl.net சிதைவடைந்ததோடு தொலைந்து போனது. அத்தோடு சேர்த்து பல கவிதைகளும் தொலைந்து போயின.

இப்போ சுனாமி பற்றி கவிதை ஒன்றும் இன்னும் சில கவிதைகளும் பிறதளங்களில் இருந்து மீடக்கப்பட்டுள்ளன. அத்தளங்கள் பெருந்தன்மையோடு எழுதியவரின் பெயர் குறிப்பிட்டு ஆக்கங்களை பிரசுரித்திருந்தால் இவற்றை மீட்க முடிந்துள்ளது.

http://thedatsaram.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் "மலர்" எண்ட சொல்லு வாற மாதிரி கவிதை இல்லாட்டி கதையள் ஒண்டும் எழுதாதேங்கோப்பா :icon_idea: இஞ்சை ஒராளுக்கு "மலர்" எண்ட சொல்லைக்கேட்டாலே கொண்டெழுப்புதப்பா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் "மலர்" எண்ட சொல்லு வாற மாதிரி கவிதை இல்லாட்டி கதையள் ஒண்டும் எழுதாதேங்கோப்பா :icon_idea: இஞ்சை ஒராளுக்கு "மலர்" எண்ட சொல்லைக்கேட்டாலே கொண்டெழுப்புதப்பா :unsure:

என்னைச் சொல்லுற மாதிரி இருக்குது. நான் இயற்கையின் மலர்களின் ரசிகன் கு.சா. எனக்கு அவை கவிதையில வாறது என்ன கடையில விக்கிறதும் பிடிக்கும்..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.