Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரும்பாலான தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தத் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இது தொடர்பாக கருத்தை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற ரீதியில் இந்தப் பேச்சுவார்த்தையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த ஜனவரியில் முறிந்துபோன போர்நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கருத்தை அவர் நிராகரித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசத்தயார் என குறிப்பிட்டிருந்தமையையும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதங்களைக் கீழே வைத்தால் மாத்திரமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தப்படும் என ஜனாதிபதி கூறியிருந்தமை தொடர்பில் அவரிடம் கேட்டபோது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது நிபந்தனைகள் செயற்படுத்தப்படவேண்டும் எனப் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். எனினும் பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அப்படிச் சொல்ல இவர் இப்படிச் சொல்லுறார். அரசாங்கத்துக்குள்ளையே ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லைப் போல எல்லோ இருக்குது. அல்லது அரசுக்குள்ளேயே இரண்டு அணிகள் செயற்படுகின்றனவா..??! அல்லது சர்வதேசத்துக்கு ஒரு பேச்சாளர் சிங்கள மக்களுக்கு அரசின் உண்மை சொரூபத்தைச் சொல்ல இன்னொரு பேச்சாளரா..??!

-----------------------------

ஆயுதங்களை கைவிடும்வரை புலிகளுடன் பேச்சு கிடையாது - சிறீலங்கா பிரதமர்

சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் மாத்திரமே அவர்களுடன் பேச்சு வார்த்தைகயோ அல்லது கலந்துரைடால் மேற்கொள்ள முடியும் எனத்தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவிற்கான நியூசிலாந்து தூதுவரை சந்தித்தபோதே விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னரே அரசியல் தீர்வினை வழங்கமுடியும் எனவும் தெரிவித்தள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கம் வடக்கை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீடடபின்பே சிவில் நிர்வாகத்தினை நிறுவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அப்படிச் சொல்ல இவர் இப்படிச் சொல்லுறார். அரசாங்கத்துக்குள்ளையே ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லைப் போல எல்லோ இருக்குது. அல்லது அரசுக்குள்ளேயே இரண்டு அணிகள் செயற்படுகின்றனவா..??! அல்லது சர்வதேசத்துக்கு ஒரு பேச்சாளர் சிங்கள மக்களுக்கு அரசின் உண்மை சொரூபத்தைச் சொல்ல இன்னொரு பேச்சாளரா..??!

-----------------------------

ஆயுதங்களை கைவிடும்வரை புலிகளுடன் பேச்சு கிடையாது - சிறீலங்கா பிரதமர்

சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் மாத்திரமே அவர்களுடன் பேச்சு வார்த்தைகயோ அல்லது கலந்துரைடால் மேற்கொள்ள முடியும் எனத்தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவிற்கான நியூசிலாந்து தூதுவரை சந்தித்தபோதே விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னரே அரசியல் தீர்வினை வழங்கமுடியும் எனவும் தெரிவித்தள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கம் வடக்கை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீடடபின்பே சிவில் நிர்வாகத்தினை நிறுவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தத் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது

சம அந்தஸ்து வழங்கிப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது – ஜனாதிபதி

அரசாங்கம் யாழ்ப்பாணத்தைத் திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றியுள்ளளது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கொழும்பில் ஆகஸ்டில் "சார்க்' மாநாடு - பாதுகாப்பு நிலைமையின் அடிப்படையிலேயே இந்தியப் பிரதமரின் வருகை குறித்துத் தீர்மானம்

தொழில்நுட்ப வளர்ச்சியடைந்திருந்தாலும் அடிப்படை மனிதப்பாங்கு மாற வேண்டும்: க.வே.பாலகுமாரன்

தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும்: இளந்திரையன்

கூட்டிக்கழித்துப்பார்த்தால

இப்படியான கருத்துக்கள் மூலம் சிங்கள அரசாங்கம் தம்மைச் சமாதான விரும்பிகளாகவும் புலிகளை அமைதியான தீர்வுக்கு எதிரானவர்களாகவும் ஒரு மாயை உருவாக்குகிறது. சர்வதேச நாடுகளும் தனது பங்கிற்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று அறிக்கை விடுகின்றன.

ஆனால் பேச்சுவார்த்தையில் என்ன பேசுவது, எதைப் பற்றிப் பேசுவது என்று யாருக்குமே தெரியாது.

இந்த செய்தியை வாசித்து விட்டு பசில்லுக்கு 2 அண்ணன் மாரும் தலையில குட்ட போகிறார்கள் போதாதுக்கு இந்துமா மன்றத்தின் ஏவுகணைத்தலைவர் பிள்ளையானுக்கு கோவம் வர போகிறது....

பெரும்பாலான சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தாத இந்த அரசுடன் எப்படிப் பேசுவது?

பேச்சுக்குமுன் ஆயுதங்களைக் கைவிட வேண்டுமென்ற அரசின் நிபந்தனையை விடுதலைப் புலிகள் நிராகரிப்பு

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் ஆயுதங்களை கைவிட வேண்டுமென இலங்கை அரசாங்கம் விதித்திருந்த நிபந்தனையை விடுதலைப் புலிகள் நிராகரித்திருப்பதுடன் அரச படையினருக்கு எதிரான யுத்தத்தில் தற்போதும் தாங்கள் வெற்றி பெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.

ஆயுதங்களை கைவிட புலிகள் இணங்கினால் மட்டுமே சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படும் என்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தெளிவான கால அட்டவணை தேவையெனவும் கடந்த வாரம் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆனால் ஆயுதங்களை கைவிடுவது எந்தவொரு பேச்சுவார்த்தையின் போதும் தமது பேரம் பேசும் ஆற்றலை குறைத்துவிடுமென விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் கூறியுள்ளார்.

அதிகார சமநிலையையும் சம அந்தஸ்த்தையும் (அரசு புலிகளுக்கு இடையில்) குழப்பும் விதத்திலான எந்தவொரு அணுகு முறையும் சமாதான நடவடிக்கைகளில் பதில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ராய்ட்டருக்கு வழங்கிய ஈமெயில் பேட்டியில் நடேசன் கூறியுள்ளார்.

"அதிகார சமநிலை, அந்தஸ்த்து சமநிலை என்பன எந்தவொரு அர்த்த புஷ்டியான பேச்சுவார்த்தைகளுக்கும் முக்கியத்துவமான விடயமெனவும் நடேசன் கூறியுள்ளார்.

ஸ்தம்பிதமடைந்திருக்கும் சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக நோர்வேயின் சமாதான அனுசரணையாளர்களை சந்திக்க விரும்புவதாக புலிகள் கடந்த வாரம் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்தே ஆயுதங்களைக் கையளிக்க வேண்டுமென அரசு தெரிவித்திருந்தது.

விடுதலைப் புலிகள் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களின் உதவியுடன் இந்த யுத்தத்தில் நாம் வெற்றிபெறுவோமென முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது' என்றும் நடேசன் கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/

மகிந்த சால்வை கழட்டினால் நான் மகிந்தவுடன் பேசத்தயார்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.