Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்க் உச்சி மாநாட்டின் பாதுகாப்புக்கென 3000 இந்தியச் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் இலங்கையில் களமிறங்கவுள்ளனர்

Featured Replies

இப்படி கூட இருக்கலாம் புலிகள் பெரும் படையெடுப்புக்கு தயாரகுவதௌ இந்தியா அறிந்து அதனை தடுக்கும் முகமாக மறைமுக அழுத்தமாகவும் இதனை பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் நேரடியாக புலிகளுக்கெதிரான யுத்தத்தில் பங்கு கொள்ளாது விட்டாலும், இலங்கையிலுள்ள இந்திய நலன்களின் பாதுகாப்புக்கான பணிகளில் பங்கேற்கக் கூடும். இது இலங்கை ராணுவத்தின் வேலைப் பழுவைக் குறைப்பதோடு, அவர்கள் வடக்கு நோக்கிய யுத்தத்தில் தமது கவனத்தை ஒன்று குவிக்கும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள திருமலை, மூதூர், மாவிலாறு போன்ற பகுதிகளிலும், கொழும்பிலுள்ள இந்திய நலன்களிலும் இவர்கள் பணிக்கு அமர்த்தப்படும் போது, கிழக்கு மாகாணத்தில் இடம்பெறப்போகும் மண்மீட்புப் போரொன்றில் புலிகள் இந்தியப்படையை பொருதும் சந்தர்ப்பமும் இதனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இங்கு ஒருவர் குறிப்பிட்டது போல மகிந்த தனது கவுரவத்திற்கு இழுக்கு என்று கருதி இந்தியப்படையை கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அமர்த்த மாட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்தப் பேயுடன் சேர்ந்தாவது தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிடும் எண்ணம் அவருக்கு மட்டுமல்ல பெரும்பாலான சிங்கள மக்களிடமும் இன்று காணப்படுகிறது. இதை அவர்கள் தமது தரப்பில் இழப்புகளைக் குறைத்து இன்னொரு நாட்டின் கூலிப்படையின் உதவியுடன் செய்யவே விரும்புவார்கள். கவுரவம் பார்த்து போர் செய்த காலம் போய் கூலிப்படைகளைக் கொண்டு போரிடும் காலம்தான் இன்று நடக்கிறது.

தமிழ்க் கூலிப்படைகளைக் கொண்டு தமிழர் தாயகத்தில் கொலைகளையும், கடத்தல்களையும் அரங்கேற்றி வரும் சிங்களம், வேற்றுநாட்டுக் கூலிப்படையொன்றைப் போரில் பயன்படுத்தும் எல்லாச் சந்தர்ப்பங்களும் இன்று இருக்கிறது. இது முன்னொருமுறை ஜே.ஆர் பாவித்தது எம் எல்லோருக்கும் நினைவிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இந்தியாவை ஜேஆர் அப்படி இழுத்து வேடிக்கை பார்த்தாரோ அப்படி மகிந்த பார்ப்பார் இன்னொரு கசப்புணர்வை உருவாக்குவார் அது மகிந்தவுக்கு இலாபமே

அதுக்கு இந்தியர்கள் அடி முட்டாள்களாக இருக்க வேண்டும். சரியான திட்டம் இல்லாது பட்டது போதாது எண்டு மீண்டும் படுவதுக்கு வருகிறார்கள் என்பது ஏற்பானது அல்ல. சிண்டு முடிந்து சினம் ஏற்றிவிட வெறும் 2000 சாறம் கட்டின பள்ளிக்கு போகும் பெடியள் எனும் அபிப்பிராயம் புலிகள் பற்றி இந்தியாவுக்கும் இல்லை.

இப்போ இந்திய இராணுவம் வருவது தமிழர் பிரதேசங்களுக்கும் அல்ல. வேணும் எண்றால் இலங்கை இராணுவத்துக்கும் இந்திய இராணுவத்துக்கும் மகிந்த சண்டையை மூட்டி விடாலாம். சாத்தியம் உண்டு.

. இணையவனின் கருத்தினை நிதர்சனமாக காணக்கூடியதாக இருக்கும். கைநழுவிப்போகும் நிலையில் எல்லாமே இருக்கின்ற நிலையில் மகிந்த அரசு இந்திய இராணுவத்தை தன்னுடனேயே வைத்திருக்கும் எண்ணம் நிறையவே இருக்கும். அதற்காக எதையும் செய்யக்கூடிய நிலை உருவாகும். அதைவிட இநதிய இராணுவ வருகையானது எமது தமிழீழத்திற்கான வழியே ஆகும். விரைவில் அதை உணருவீர்கள்.

எல்லாமே கை நழுவி போகும் நிலை எண்றால் என்ன.? மகிந்தவுக்கு பணம் தான் பிரச்சினையே ஒளிய ஆட்பலம் அல்ல. இந்திய இராணுவத்தை உதவிக்களைத்து புலிகளிடம் தங்கள் படை தோற்றதாக மகிந்த சொல்வார் எண்று நீங்கள் நினைத்தால் உங்களின் உலக அறிவு தான் கேள்விக்குள் இருக்கும்.

பல நாடுகள் இணைந்து ஒரு நாட்டுக்குள் படை எடுப்பது எண்று ஒண்று உண்டு. தனது நாட்டுக்குள் போராடி வெல்ல முடியாமல் அயல்நாட்டு படைகளை உதவிக்களைப்பது நேர் எதிரானது. இந்திய படைகளை இலங்கையில் தங்க வைத்து இருந்து. சீனாவையும், பாக்கிஸ்தானையும் மகிந்த பகைத்து கொள்வார் என்பது கொஞ்சம் விசேட சிந்தனைதான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு இந்தியர்கள் அடி முட்டாள்களாக இருக்க வேண்டும். சரியான திட்டம் இல்லாது பட்டது போதாது எண்டு மீண்டும் படுவதுக்கு வருகிறார்கள் என்பது ஏற்பானது அல்ல. சிண்டு முடிந்து சினம் ஏற்றிவிட வெறும் 2000 சாறம் கட்டின பள்ளிக்கு போகும் பெடியள் எனும் அபிப்பிராயம் புலிகள் பற்றி இந்தியாவுக்கும் இல்லை.

ஏதோ இலங்கையின் கபடத்தனத்தில் மயங்கித்தான் இந்தியா மீண்டும் இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்கிறது என்று நாம் நினைத்தால் எங்கோ தவறு விடுகிறோம் என்று பொருள். இதில் இலங்கையின் நலன்களை விட இந்திய நலனே முன்னுக்கு நிற்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைக்குத் தேவையில்லாவிட்டாலும் கூட இலங்கைப் பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கிறது என்பதே சரி.

புலிகளுடன் நேரடி யுத்தம் ஒன்றைத் தவிர்க்கும் எண்ணம் இந்தியாவுக்கு இருக்கலாம். இது புலிகள் சரம் கட்டின் வெறும் பொடியள் என்ற நிலை மாறி ஒரு மரபு வழி ராணுவம் என்ற நிலைக்கு வளர்ந்து விட்ட பயத்தினால் தான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் மரபு வழி யுத்தமென்று வரும் போது இந்தியா இலங்கையைக் காட்டிலும் மிகவும் பலம் பொருந்திய ராணுவக் கட்டமைப்பை வைத்திருக்கிறது. இப்படி கூறுவதால் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்படுவார்கள் என்று அர்த்தப்படுத்தக் கூடாது. 1987 இல் நடந்தது போல புலிகளும் தமது போரிடும் தந்திரங்களை மாற்ற வேண்டி வரும் என்று சொல்ல வருகிறேன். நீண்ட கால அடிப்படையில் இந்திய ராணுவத்தை மரபு வழிப் படை நடத்தல் ஒன்றினால் புலிகள் கட்டிப்போட முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

ஆகவே இப்படியான ஒரு நிலையை புலிகளோ அல்லது இந்தியாவோ விரும்பப்போவதில்லை என்பதுதான் எனது எண்ணம். ஆனால் ஒரு நேரடி யுத்தத்தைத் தவிர தன்னால் இயலுமான எல்லா ராணுவ அழுத்தங்களையும் இந்தியா தமிழருக்கெதிராக பிரயோகிக்கும் என்பதுதான் எனது தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே கை நழுவி போகும் நிலை எண்றால் என்ன.? மகிந்தவுக்கு பணம் தான் பிரச்சினையே ஒளிய ஆட்பலம் அல்ல. இந்திய இராணுவத்தை உதவிக்களைத்து புலிகளிடம் தங்கள் படை தோற்றதாக மகிந்த சொல்வார் எண்று நீங்கள் நினைத்தால் உங்களின் உலக அறிவு தான் கேள்விக்குள் இருக்கும்.

பொய்கை,

1987 இல் இருந்த ஜே. ஆர் உக்கும் இன்றுள்ள மகிந்தவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? 87 இல் இந்தியப்படை புலிகளுடன் மோதிக்கொண்டிருந்த போது ஜே. ஆர் என்ன சொன்னார் என்று உங்களுக்கு நினைவிருக்கலாம்." நாங்கள் செய்ய வேண்டியதை இப்போது இந்தியா செய்துகொண்டிருக்கிறது, எங்கள் படை வீரர்கள் இப்போது ஒய்வாக பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்" என்பதுதான் அது. பின்னர் 1989 இல் பிரேமதாச ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியப்படையை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது எவ்வளவு முட்டாள்த்தனமானது என்று எத்தனையோ சிங்களவர்கள் சொன்னதை கேட்டிருக்கிறோம். தமது தரப்பில் இழப்பில்லாமல் எதிரி இன்னொருவனால் அழிக்கப்படுவதென்பது எந்தச் சிங்களவராலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயம்தான் என்பதை நாம் மறக்கக் கூடாது.இதில் கவுரவத்திற்கு இடமில்லை

ஆக நேரடி யுத்தமொன்றில் இறங்க வேண்டுமா இல்லையா என்பது இந்தியா செய்ய விரும்பும் தலையீட்டின் அளவைப் பொறுத்து இருக்கிறது.

முன்னொருமுறை சிங்களம் செய்ததை( இந்தியாவை புலிகளுடன் போராட அழைத்ததை) மீண்டுமொருமுறை செய்யாது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை.

உண்மை என்னவென்றால் இந்தியா எம்முடன் இன்னொருமுறை மோதக்கூடாது என்பதுதான் எம் எல்லோரினதும் விருப்பமும், தேவையும். ஆனால் நடப்பவையெல்லாம் எமது விருப்புக்கு எதிராகவே நடப்பது போலத் தோன்றுகிறது எனக்கு !

  • தொடங்கியவர்

'சார்க்' உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அடுத்த மாத இறுதியில் கொழும்புக்கு மன்மோகன் சிங் வருகை தரும் போது அவருக்கான பாதுகாப்பையும், அவர் பங்குபற்றும் நிசழ்வுகளுக்கான பாதுகாப்பையும் நேரடியாக இந்திய படைகளே கொழும்பில் பிரசன்னமாகி வழங்கும் என தெரிய வருகின்றது.

இது தொடர்பாக இலங்கை இந்திய உயர்மட்டங்களிடையே ஏற்கனவே இணக்க உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக தெரிகின்றது.

'சார்க்' மாநாட்டை ஒட்டி கொழும்பில் இந்தியப் பிரதமருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக முன்னெற்பாடுகளைக் கவனிப்பதற்கு இந்திய உயர்மட்ட பாதுகாப்புக் குழு ஒன்று இன்னும் ஏழு,எட்டு நாட்களில் கொழும்பு வர இருக்கின்றது.

அக்குழு கொழும்பு வந்து இடங்களையும், மற்ற விவரங்களையும் ஆராய்ந்த பின்னர், மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகக் கொழும்புக்கு அழைக்கப்பட வேண்டிய இந்தியப் படையினரின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குத் தேiவாயன ஆயுதத் தளபாட விவரங்கள் ஆகியன குறித்துத் தீர்மானிக்கும் என்று தெரிகிறது.

இந்தப் பணிக்காக மூவாயிரம் இந்தியப்படையினர் கொழும்பு வரவுள்ளனர் என இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தியை இந்தியத் தூதரக வட்டாரங்கள் மிகைப்படுத்தப்பட்ட தகவல் எனக் குறிப்பிடடு நிராகரித்துள்ளன.

ஒரு நாட்டுக்கு இன்னோரு நாட்டுத் தலைவர் விஜயம் செய்யும்போது இத்தகைய உதவியாளர்களும், மெய்காவலர்களும் சேர்ந்து வருவது வழமையே. கொழும்பு நிலைமையைக் கவனத்தில் கொண்டு மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்க்கு வழமைக்கு மாறாக சற்று கூடுதலான படையினர் வருவர். ஆனால இத்துணை எண்ணிக்கையில் அல்ல.' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய உயரதிகாரிகள் குழு, கொழும்பில் அதிகாரிகளோடு நடத்திய பேச்சுகளின் போது இவ்விடயமும் பேசி முடிவு காணப்பட்டது என்பதை அந்த வட்டாரங்கள் ஒப்புக்கொண்டன.

இந்தியப் பிரதமர் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் கொழும்புக்கு அருகே உஷார் நிலையில் இந்தியக் கடற்படை அணி ஒன்று தயாராக இருக்கும் என்றும், இதுவும் நாடுகளுக்கிடையிலான தலைவர்களின் விஜயங்களின் போது செய்யப்படும் சாதாரண முன்னேற்பாடுகளின் ஒன்றுதான் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி சுடர்ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இது இன்னொரு விதத்தில் இலங்கை ராணுவத்தின் கையாலாகாத் தன்மையை விளக்குவதோடு, இந்தியா விரும்பும் பட்சத்தில் இலங்கைக்குள் எந்த நேரத்திலும் தனது படைகளை நிறுத்தும் வல்லமை பெற்றிருக்கிறதென்பதையும் காட்டுவதோடு, இதற்கு இலங்கை எந்தவித ஆட்சேபணையையும் தெரிவிக்கப்போவதில்லை என்பதையும் சுட்டி நிற்கிறது.

எண்ணிக்கை...................? எப்போது இவர்கள் எண்ணிக்கை பற்றிச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள் ?!!!!!

இல்லை இப்போது தமிழக மக்களிடையே ஈழத்தமிழர்கள் மேல் ஒரு அனுதாபம் தோன்றியுள்ளது....அதை போக்கவே மாதம் ஒரு முறையாவது புலிகளுக்கு கடத்த இருந்த ஆயுதங்கள் பிடிபட்டன என்பது போல் அதிகம் செய்தி வெளியிடுகின்றனர்....

இந்தியா நேரடியாக தலையிட்டால் தமிழகத்தில் கண்டிப்பாக பலத்த எதிர்ப்பு கிளம்பும் எனவே சிலர் சொல்வது போல் முக்கிய இடங்களின் பாதுகாப்பை ஏற்கலாம் ஆனால் அவ்வாறு செய்வது கேவலம் சுண்டைக்காய் இலங்கைக்கு தெற்க்காசிய வல்லரசு அடியாள் வேலை செய்கிறது என்று இந்தியாவின் மதிப்பை க்கெடுத்து விடும் .

எனவே அதற்கும் வாய்ப்பில்லை

அது உண்மையாக இருந்தாலும்

80 களில் இருந்த தமிழகமும் இப்போ இல்லை???

1987 இல் இருந்த ஜே. ஆர் உக்கும் இன்றுள்ள மகிந்தவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? 87 இல் இந்தியப்படை புலிகளுடன் மோதிக்கொண்டிருந்த போது ஜே. ஆர் என்ன சொன்னார் என்று உங்களுக்கு நினைவிருக்கலாம்." நாங்கள் செய்ய வேண்டியதை இப்போது இந்தியா செய்துகொண்டிருக்கிறது, எங்கள் படை வீரர்கள் இப்போது ஒய்வாக பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்" என்பதுதான் அது. பின்னர் 1989 இல் பிரேமதாச ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியப்படையை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது எவ்வளவு முட்டாள்த்தனமானது என்று எத்தனையோ சிங்களவர்கள் சொன்னதை கேட்டிருக்கிறோம். தமது தரப்பில் இழப்பில்லாமல் எதிரி இன்னொருவனால் அழிக்கப்படுவதென்பது எந்தச் சிங்களவராலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயம்தான் என்பதை நாம் மறக்கக் கூடாது.இதில் கவுரவத்திற்கு இடமில்லை

ஜே ஆருக்கும் மகிந்தவுக்கும் அரசியல் பட்டறிவில் ஏணிவைத்தும் ஏற முடியாத உயர இடைவெளி உள்ளது. ஜே ஆர் எல்லாவையிலும் சர்வதேசத்தை திருப்தி படுத்தினார், ஆனால் மகிந்த எல்லாவையிலும் மாட்டுப்பட்டு முளிக்கிறார். ஜே ஆர் எதை செய்தாலும் சர்வதேசம் ஆதரித்தது. மகிந்தவின் நிலை அது அல்ல.

இந்தியா இலங்கைக்கு 1986 வந்தது தனது பிராந்திய கனவில், ஆனால் இப்போ நிலைமை வேறு.

பாக்கிஸ்தானிடம் இலங்கை ஆயுதம் வாங்குவதை தடுக்கவே ஆயுதம் கொடுக்கிறோம் பயிற்ச்சி கொடுக்கிறோம் எண்று இந்தியா வெளிப்படையாக சொல்கிறது எண்றால் இலங்கையுடனான அதன் நெருக்கம் தெளிவு. அதாவது இலங்கை அரசை இந்தியா நம்பவில்லை என்பது அதன் உள்பொருள்.

இந்தியா இலங்கை வருவது ஈழத்துக்கு பிரச்சினை என்பது மட்டும் அல்ல அது இலங்கை அரசுக்கும் பெரும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை முழுதாக மாறிவிட்டது. அமெரிக்க அடிவருடியாக மாறி ரஷ்யாவை பகைத்துக் கொள்கிறது.

அயல்நாட்டில் பாதுகாப்பிற்கு ராணுவத்தை அனுப்பி பிரதமர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பிரதமர் இந்தியாவிலேயே இருந்து கொள்ளலாம்.

பல விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் பொய்கை. மகிந்தவிற்கு பணம் பற்றாக்குறையில் இல்லை. அள்ளிக்கொடுப்பதற்குத்தான் அயலவர்கள் ஏராளம். அதல் பஞ்சமில்லை. மகிந்தவின் எண்ணமெல்லாம் வடக்கை முழுமையாக கைப்பற்றவேண்டும் அதேவேளை கொழும்பின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும். இரண்டையும் செய்வது வலு கடினம் வடக்கில் பாரிய யுத்தம் தொடங்குமானால் கொழும்பின் நிலை கேள்விக்கிடமாகிவிடும். அதற்கு பாரிய உதவி வேண்டும். பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளிடம் இராணுவ உதவி கேட்க முடியாது. கேட்டால் இந்தியாவை முழுமையாக பகைக்கவேண்டும். அமெரிக்க வல்லரசின் கைக்குள்தான் ஒருவகையில் இலங்கையும் இருக்கின்றுது. ஆகவே இந்தியாவை ஆதரித்து அவர்கள் சொற்படி கேட்டாகவேண்டிய நிலை.

இதில் இன்னொருவிடயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 3 ஆயிரம் படைகளும் கொழும்பில்தான் தங்கியிருப்பார்கள் என்பது நிட்சயம் இல்லை. காரணம் இந்தியா இலங்கை அரசிற்கு ஆயுதவ உதவி செய்கின்றுது. முழுமையாக அதனை செய்யவிரும்பவுமில்லை. இந்தியாவிடமிருக்கும் சில ஆயுதங்களை இலங்கை அரசிடம் அது முழுமையாகவும் கையளிக்கப்போவதில்லை. அதனை பாவிப்பதற்கு இந்தியா இராணுவம் மட்டுமே உரிமையுடையதாக இருக்கும். (அமெரிக்காவின் பின்புலத்துடன்) இதனால் வரப்போகும் 3 ஆயிரத்தில் சில ஆயிரங்கள் இலஙகை இராணுவத்துடன் இணைந்து களமுனைகளிற்க நகர்ததப்படக்கூடிய வாய்ப்பு அதிமாக இருக்கின்றது.

எதுவாகினும் எமக்காக எல்லைக்கோடுகள் பலமாக்கப்பட்டு எம்மை நசுக்கவே இந்pயாவும் சர்வதேசமும் முனைப்புடன் இருக்கின்றது. இநத வேளையில் நாமே பலவற்றை சிந்திக்கும்போது தலைவர் எத்தனை ஆயிரம் சிந்தனைகளை வகுத்திருப்பார். எமக்கான வெற்றியென்பது கண்முன்னே தெரிகின்றது என்பது மட:டும் நிட்சயம். விரைவில் அசைந்தாடும் தமிழீழக்கொடி தாய்மண்ணில்.

ஜே ஆர் செய்த பெரிய உதவி என்னவெனில் எம்மவர்களை வெளிநாடு அனுப்பியதுதான். அன்று அவரின செயல் ஒருவகையில் விடுதலைப்புலிகளின் ஆள்பற்றாக்குறையை தீர்க்க உதவியிருந்தாலும் இன்று அதுதான் கிட்டப்போகும் தமிழீழத்திற்கு அஸ்திவாரமாக அமையவும போகின்றது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பல முயற்சிகள்தான் இன்றும் களத்தில் போராடும் வீரர்களின் மனவுறுதியை வளர்க்கின்றது.

இங்கு நாம் இடப்போகும் ஒவ்வொரு எழுச்சியும் நாளைய விடியலிற்கான தீப்பந்தங்களே. .

இந்தியா முட்டாள் தனமாகவும் செயல்படவுமில்லை இலங்கைக்கோ மகிந்தாவிற்க்கோ லாபம் இல்லாமலும் இல்லை. எந்த ஒரு பல் இனக்குழுக்களை உள்ளடக்கிய நாடும் தமக்கு அருகில் தம் நாட்டிலுள்ள இன குழுக்களை ஒத்த அல்லது பண்பாட்டு மொழி தொடர்புடைய மக்களால் உருவாக்கப் படும் அரசை ஏற்றுக்கொள்ளாது என்பது நிதர்சனமான உண்மை. கருணாநிதிகளால் கைகழுவப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் ஏற்கனவே தனி நாடு கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மக்கள் குழுமத்தின் ஒரு பகுதியினர் வெற்றிகரமாக தமக்கென்று ஒரு நாட்டை நிறுவி விட்டால் எதிர் காலத்தில், நீண்ட கால நோக்கில் அது இந்தியாவிலும் பிரிவினைக்கான உந்து சக்தியாக அமைந்துவிடும் என்பதனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், அவர்கள் சும்மா இருப்பார்கள் என்று யாரேனும் நினைத்தால் அது அரசியல் அசட்டு தனமே அன்றி வேறு இல்லை. இன்று நேற்றல்ல முன்னெப்போதுமே இந்தியா தமிழ் ஈழம் அடைவதற்க்கு தார்மீக அதரவை அளித்துமிருக்காது இனி எதிர் வரும் காலங்களிலும் அதை செய்யாது. 80களில் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததாக நம்பப்பட்டாலும் அல்லது செயல் பட்டிருந்தாலும், அது அத்தகைய தோற்றப்பாட்டை வெளியில் காட்டியிருந்தாலும் அதன் உண்மையான செயல் திட்டம் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதும் அவர்களின் சிறு சிறு குழுக்களாக நீட்டித்து வைத்திருப்பதாகவே அமைந்திருக்கும் என்றால் அது மிகையாகாது. எனவே அப்பொழுது, இப்பொழுது என்றெல்லாம் இல்லை எப்பொழுதுமே ஈழத்தமிழர்களின் கரங்கள் வலுப்படுவதை விரும்பாது. அதற்க்கு எந்த வகையிலேனும் இடையூறு செய்யவே முயலும். தன் மூக்கை நுழைப்பதற்க்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்பமாகவே இந்த வாய்ப்பை பயண்படுத்த முயலும். எனவே சூடுபட்ட பூணை என்பதெல்லாம் இதில் எடுபடாது. வளைகுடப் போரில் ஏற்கனவே சூடுபட்ட அமெரிக்க பூணை இப்போது ஈராக்கை ஆக்கிரமித்து எண்ணை அல்ல அல்ல பால் குடிக்க வில்லையா????

மகிந்தவிற்க்கு என்ன லாபம்?

தன்னால் முடியாததை வேறு ஒருவன் செய்து தந்தால் மகிந்தாற்க்கு லாபம் தானே?

பாகிஸ்தானிற்க்கும் சீனாவையும் மகிந்த பகைத்துக் கொள்வாரா?

இதில் பகைத்துக் கொள்வதற்க்கு ஒன்றுமே இல்லை சீனாவிற்க்கோ அல்லது பாகிஸ்தானிற்கோ இந்தியாவின் தென்பகுதியில் இந்தியாவிற்க்கு ஒரு எதிரியை ஒருவாக்கி வைத்திருப்பது லாபம் தானே? அது ஈழமாக இருந்தால் என்ன? தென் இலங்கையாக இருந்தால் என்ன?

ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை ஈழத்தில் தலையிடும் அனைத்து நாடுகளும் தன் நலன் சார்ந்தே தலையிடும். தமிழர்களின் அறிவும் வலிமையும் ஒற்றுமையும் மட்டுமே அவர்களை காப்பாற்றும் வெளியிலிருந்து யாரும் காப்பாற்ற மாட்டார்கள்.

Edited by PSIVARAJAKSM

பரணி. எல்லாத்துக்கும் முதலில் தெக்கி நிக்கும் யதார்த்ததை ஒரு முறை நோக்குங்கள். இலங்கையில் நோர்வே காலடி எடுத்த வைத்த போது சிங்களவர் மகிழ்ச்சியில் திழைத்தனர். அதே நேரம் தமிழர்களின் தமிழீழ கனவுக்கு ஆப்படிக்க வந்த நோர்வேயாகத்தான் தமிழர்களால் நோர்வே நோக்கப்பட்டது. ஆனால் காலவோட்டத்தில் நோர்வே சிங்களவரின் பரம எதிரியானது. வரும் போது இல்லாத அளவு போகும் போது நோர்வே நாடு தமிழர்கள் பற்றிய புரிந்ந்துணர்வை கொண்டு இருந்தது. தமிழர்களின் அபிமானத்தையும் கொண்டு இருந்தது. ஆனால் சிங்களவர் பற்றிய கசப்பான பக்கங்களை நோர்வே மறக்க நீண்ட காலம் செல்லலாம்.

அதேபோலத்தான் 1986 ல் வந்த இந்தியாவும் சிங்கள சார்பற்ற பல தமிழ்குழுக்களை கைகளில் வைத்து இருந்தமையால் சிங்களவரின் சந்தேக கண்ணுக்குள் இருந்தது அதனால் வெளீயேற்றப்பட்டது.

இப்போ நீங்கள் இந்தியாவை எதிர்பமையால் சிங்களவனின் சந்தோசத்துக்கு உறுதி அளிக்கிறீர்கள். அதனால் இந்தியா தொடர்ந்து இலங்கையுடன் நல்லுறவை பேணும் வசதியும் உண்டு. ஊடகங்கள் இந்த தவறை செய்யாமல் இருப்பது மிகவும் வேண்ட தக்கது. இந்த சூள்நிலையை சிறப்பாக தமிழர் தலைமை கையாளும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Edited by பொய்கை

சிவராஜா சொல்வது போல் இந்தியா ஒரு காலமும் தனிநாடு அமைவதை ஆதரிக்கப்போவதில்லை. இது அனைவரும் அறிந்த உண்மை. எல்லோருமே ஒருவிதத்தில் சுயநலவாதிகள்தான் பொய்கை.

உங்கள் யதார்த்த தன்மை புரிகின்றது. ஆனால் நாம் அடுத்தவனையே நம்பியிருந்தால் இன்னும் எத்தனை ஆண்டுகளிற்க எத்தனை ஆயிரம்பேரை இழப்பது. இறுதியில் எஞ்சுவது சாம்பலாகக்கூட இருக்காது. சிவகுமார் தொடங்கி இன்றுவரை இழந்ததுதான் அதிகம்.

நோர்வே வெளியேறியது ஒருவகையில் நன்மைதான். காரணம் போகப்போக புரியும். இந்தியாவை எதிர்க்கவில்லை. உபத்திரம் இல்லாமல் இருந்தலே போதும். ஆயிரம் தமிழக முதலமைச்சர்கள் வந்தாலும் எம் அடிமைத்தளையை உடைக்க முடியாது. இன்னும் இறுகவே செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் அரசமரியாதை றஜீவ்காந்தியின் பயணத்தின் போது அவருக்கு துப்பாக்கிபிடியால் ஆலிங்கனம் செய்தும், சிங்களதேசத்தில் வைத்த பாசத்தை இந்திய அரசால் தொலைக்க முடியவில்லையாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமர் இலங்கை வரும்போது அவரின் பாதுகாப்புக் கடமைகளை இந்தியப் படையினரே மேற்கொள்வர்

[ வியாழக்கிழமை, 26 யூன் 2008, 04:03.17 AM GMT +05:30 ]

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இலங்கைக்கு வரும்போது அவரின் பாதுகாப்புகளை ஒழுங்குகளை இந்தியாவே மேற்கொள்ளும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாகவே இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கவும் அது தொடர்பில் ஆராயவுமே இந்தியாவின் அதிகாரம் மிக்க குழு அண்மையில் இலங்கைக்கு வந்து சென்றுள்ளது. இந்தக்குழுவின் இந்த ஏற்பாடுகள் தொடர்பாக இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

இதன்படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டுமானால் அவரின் முழுப்பாதுகாப்பையும் தமது பொறுப்பில் தரவேண்டும் என இந்தியா கேட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலை விடப் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலே தமக்கு இருப்பதாக இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது. இதன்படி இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வரும்போது அவர் பயணம் செய்யும் மற்றும் தங்கியிருக்கும் இடங்களில் இந்திய “பிளக்கெட்ஸ்” உட்பட்ட படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர்.

இந்தியப் பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் ஒருநாளில் அவரின் பயணங்களுக்காக இந்திய வாகனங்களும் இந்தியக் ஹெலிகொப்டர்களுமே பயன்படுத்தப்படும்.

காலிமுகத்திடல் கட்ற்பிராந்தியத்தில் இந்தியப் போர்க் கப்பல்கள் தமது கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும். கொழும்பில் இந்திய விமானப்படையின் விமானங்கள் கண்காணிப்பை மேற்கொள்ளும் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கவே இந்தியக்குழு இங்கு வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் இலங்கையில் ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றால் இந்தியப் பிரதமரின் விஜயம் இடம்பெறாறது என்பதையும் இந்தியக் குழு வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் தயாராகவேண்டும் என்றும் அதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும் என்றும் இந்தியக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வருடத்திற்குள் இந்திய நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளமையால் தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது தமது பொறுப்பு என இந்தியக் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் தமிழ்நாட்டின் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி விஜயகாந்தின் கட்சி மற்றும் டி ராஜேந்தர் போன்றவர்களும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துப் பாரதீய ஜனதா கட்சியை மத்திய ஆட்சிக்கு கொண்டு வரக்கூடிய ஏதுநிலை உள்ளது.

அவ்வாறு பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால் அது இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சாதகமான நிலையையும் தோற்றுவிக்க உதவும் என்ற கருத்தும் இந்தியத் தரப்பினரால் கூறப்பட்டுள்ளது.எனவே இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இந்தியத் தரப்பினர் இலங்கையைக் கோரியுள்ளனர்.

இதேவேளை இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா இந்தளவு தீவீரமாக உள்ளமைக்கு ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இராணுவ அணிவகுப்பின் போது தாக்கப்பட்டமையை ஒரு சிறந்த உதாரணமாக இந்தியா சுட்டிக் காட்டியுள்ளதாக ராஜதந்திரத் தரப்புகள் கூறுகின்றன.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு இறக்குமதிசெய்யப்படும் இந்திய ஜவான்களின் முக்கிய கடமை இந்திய தலைமையின் "தலை"யைக் காப்பாற்றுவதே. காலஞ்சென்ற முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்திருந்தபோது சிங்கள சிப்பாய் ஒருவன் தனது துப்பாக்கியின் கைபிடியால் அவரின் தலையில் அடிக்கும் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் யதார்த்த தன்மை புரிகின்றது. ஆனால் நாம் அடுத்தவனையே நம்பியிருந்தால் இன்னும் எத்தனை ஆண்டுகளிற்க எத்தனை ஆயிரம்பேரை இழப்பது. இறுதியில் எஞ்சுவது சாம்பலாகக்கூட இருக்காது. சிவகுமார் தொடங்கி இன்றுவரை இழந்ததுதான் அதிகம்.

நோர்வே வெளியேறியது ஒருவகையில் நன்மைதான். காரணம் போகப்போக புரியும். இந்தியாவை எதிர்க்கவில்லை. உபத்திரம் இல்லாமல் இருந்தலே போதும். ஆயிரம் தமிழக முதலமைச்சர்கள் வந்தாலும் எம் அடிமைத்தளையை உடைக்க முடியாது. இன்னும் இறுகவே செய்யும்.

நான் சொல்ல வருவது இந்தியாவால் ஈழத்தவனுக்கு நன்மை என்பதல்ல. நிச்சயமாக சிங்களவனுக்கு நன்மையாக அமையாது என்பதுதான்.

நோர்வே வெளியேறியது நல்ல விடயம். அதில் மிக முக்கியமானது அது சிங்களவர்களால் வெளியேற்றப்பட்டது. தமிழர்களுக்கு எதிரிகள் ஆகாமல் வெளியேறியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் ஏற்கனவே தனி நாடு கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மக்கள் குழுமத்தின் ஒரு பகுதியினர் வெற்றிகரமாக தமக்கென்று ஒரு நாட்டை நிறுவி விட்டால் எதிர் காலத்தில், நீண்ட கால நோக்கில் அது இந்தியாவிலும் பிரிவினைக்கான உந்து சக்தியாக அமைந்துவிடும்

இந்தியா தமிழ் ஈழம் அடைவதற்க்கு தார்மீக அதரவை அளித்துமிருக்காது இனி எதிர் வரும் காலங்களிலும் அதை செய்யாது. 80களில் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததாக நம்பப்பட்டாலும் அல்லது செயல் பட்டிருந்தாலும், அது அத்தகைய தோற்றப்பாட்டை வெளியில் காட்டியிருந்தாலும் அதன் உண்மையான செயல் திட்டம் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதும் அவர்களின் சிறு சிறு குழுக்களாக நீட்டித்து வைத்திருப்பதாகவே அமைந்திருக்கும் என்றால் அது மிகையாகாது.

சூடுபட்ட பூணை என்பதெல்லாம் இதில் எடுபடாது. வளைகுடப் போரில் ஏற்கனவே சூடுபட்ட அமெரிக்க பூணை இப்போது ஈராக்கை ஆக்கிரமித்து எண்ணை அல்ல அல்ல பால் குடிக்க வில்லையா????

இது நூற்றுக்கு நூறு உண்மை. இன்னும் நாம் இந்தியாவை நட்பு நாடாகவும், பெரியண்ணனாகவும் பார்த்துக்கொண்டிருப்பது நம்மை நாமே ஏமாற்றுவது அன்றி வேறொன்றுமல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இந்தியாவை பெரியண்ணாவாகவோ அல்லது நட்பு நாடாகவோ பார்க்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கில்லை இப்போது. இருப்பதெல்லாம் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கலப்பில்லாத தமிழ் உணர்வுள்ள எமது உறவுகள்தான். இவர்களைத்தவிர இந்தியாவில் எமக்கென்று எதுவுமில்லை.

புலிகளைப் பழிவாங்குவதாகக் காட்டிக்கொண்டு உண்மையிலேயே தமிழர் விடுதலைப் போராட்டத்தை சிங்களப் பேரினவாதத்துடன் சேர்ந்து அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. சிங்களம் தொய்ந்து போகும் தருணத்திலெல்லாம் அதற்கு ஊக்கம் கொடுத்து தேற்றி மீண்டும் தமிழின அழிப்பை புதிய உத்வேகத்துடன் நடத்தத் திட்டங்களையும் உதவிகளையும் அது இன்று வரை செய்து வருகிறது. 2000 இல் யாழ்க்குடாவைப் புலிகள் சுற்றி வளைத்திருந்த தருணத்தில் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி சிங்கள ராணுவத்துக்கு மூச்சு விடுவதற்கு கால அவகாசம் கொடுத்து பின்னர் புலிகள் கைப்பற்றிய இடங்களையெல்லாம் விட்டு விட்டு முகமாலை வரை பின்னகர வேண்டி வந்ததும் இந்தியாவால்தான்.

இந்தியாவை எதிரியாகப் பார்ப்பதை விட வேறு வழியில்லை இப்போது. நாம் சிங்களவரை எப்படி பார்க்கிறோமோ அல்லது எவ்வாறு அவர்களுடன் நடத்துகிறோமோ அப்படியே இந்தியாவையும் பார்ப்பதுதான் சரி. நாம் இந்த விடயத்தில் தெளிவாகும் வரை இந்தியாவை நம்பி ஏமாந்து கொண்டிருப்பது நடந்து கொண்டுதான் இருக்கப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தடைகளின் பின்புலங்களும் இந்தியாவிற்கான பொறியும்

moorthylrh3.gif

விடுதலைப் புலிகளை அழிப்பேனென யுத்தப் பிரகடனம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வியக்கத்தினை தமது நாட்டில் இன்னமும் தடை செய்யாமல் இருப்பதற்குரிய காரணங்கள் என்ன? பலரால் எழுப்பப்படும் தினக் கேள்வியாகி விட்டது இவ்விடயம். புலிகளைப் பலவீனமாக்கிய பின்னர், அவர்களுடன் பேசுவதற்கு தடை ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாதென்பதற்காக இதனைச் செய்யாமல் ஜனாதிபதி ஒத்தி போடுகிறாரென ஒரு சாரார் கருதுகின்றனர்.

அதாவது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் ஆளணி வளத்துடன், முப்படைப் பரிமாணமும் கொண்ட தமிழர் தலைமையோடு, கூட்டாட்சி என்கிற உயர்ந்தபட்ச அரசியல் தீர்வே சாத்தியமாகுமென்பதால் அவர்களை இல்லாதொழிப்பதனூடாகவே ஒற்றையாட்சிக்குட்பட்ட மாவட்ட சபை தீர்வொன்றை திணிக்கலாமென்பது சிங்களத்தேசத்தின் விருப்பம். அரசியல் தீர்வொன்றை முன் வைக்குமாறு விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத்தை, முற்று முழுதாக நிராகரிக்க மஹிந்த சகோதரர்கள் விரும்பவில்லையென்கிற கருத்து நிலையொன்றும் உண்டு. ஏனெனில் விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதானது, சர்வதேச இராஜதந்திர தொடர்பாடல்களை அறுத்து விடலாம். அவர்களின் பிராந்திய நலன் சார்ந்த பங்களிப்பினை, தமிழர் தரப்பின் மீது விதிக்கப்படும் தடை, தடுத்து விடும் வாய்ப்புக்களையே அதிகரிக்கும். பயங்கரவாதமென்கிற திரைபோட்டு, விடுதலைப் புலிகளைத் தடை செய்த பல நாடுகள், அத்தகைய தடை நகர்வினை, புலிகளின் படைவலுச் சமநிலையைப் பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகக் கருதலாம். விடுதலைப் புலிகளைத் தடை செய்வதன் மூலமும், அரசின் படை பலத்தை அதிகரிப்பதனூடாகவும் இருவழி நகர்வு உத்தியைக் கையாண்டு, பேசியே தீர்க்க வேண்டுமென்கிற அழுத்தத்தைப் புலிகள் மீது திணிக்கவே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. அதேவேளை தாம் பிரயோகிக்கும் தடை அழுத்தங்களை, இலங்கை அரசு மேற்கொள்ளக் கூடாதென்கிற நிலைப்பாடும் சர்வதேசத்திற்கு உண்டு. பாரிய மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு, வன்னி மீது வான்வெளித் தாக்குதல்களும் படை நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டாலும் அவை யாவற்றையும் உன்னிப்பாக அவதானிக்கும் சர்வதேச நாடுகள், புலிகள் மீதான தடை என்கிற இறுதி ஆயுதத்தை ஜனாதிபதி மஹிந்த பிரயோகிக்கக் கூடாதென்பதில் உறுதியாகவுள்ளன. சர்வதேச நாடுகளின் நகர்வுகளை அவதானித்தால், மேற்கூறப்பட்ட விடயங்களின் உண்மைத்தன்மை புரியப்படலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்துள்ளன. நிதி சேகரிப்பு மற்றும் புலிகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் செயற்பாடுகள் யாவற்றையும் ஸ்தம்பிதமடையச் செய்வதற்கு, பயங்கரவாதமென்கிற கோட்பாட்டினூடாக இத்தகைய "தடை உத்தியினை சர்வதேசம் மேற்கொண்டது. அதேவேளை, விடுதலைப் புலிகளுடன் தமது தொடர்பாடல்களைப் பேண, அனுசரணை வகித்த நோர்வே நாட்டை முன்னிலைப்படுத்தி, சில நகர்வுகளை பிரயோகித்தார்கள். அண்மையில் கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த இணைத் தலைமை நாட்டு பிரதிநிதிகளை, அங்கு செல்லவிடாது தடுத்தது அரசு. இன அழிப்பு நிகழ்ச்சி நிரலிற்கு இடையூறு விளைவிக்கும் போக்கினை சர்வதேசம் மேற்கொள்ளும் போது, அதனை வன்மையாக அரசாங்கம் எதிர்த்தாலும், சர்வதேச மனித உரிமைச் சங்கங்களை உசுப்பேற்றி, தாம் தப்பித்துக் கொள்ளும் உத்தியினை மட்டுமே சர்வதேச நாடுகள் கைக்கொள்கின்றன. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக அரசாங்கம் வெளியேறிய போது, சில கண்டனச் சிதறல்களோடு சர்வதேசத்தின் ஆரவாரம் ஓய்வு நிலையை அடைந்தது. காத்திரமான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினால், புலித் தடையைப் பிரயோகித்து, தம்மை அரசியல் களத்திலிருந்து அகற்றி விடுவார்களென்கிற அச்சம் காரணமாகவே அடக்கி வாசித்தார்கள். அதேவேளை அதிக அழுத்தம் விளைவிக்கும் வெடிப்பு நிலை, சீனப் பாதையில் அரசை இழுத்துச் சென்றுவிடுமென்கிற பதட்டமும் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கை அரசு புலிகளைத் தடை செய்தாலும் அது குறித்து கலவரமடையாமல் தமது முழுமையான அரச ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுகிறது. இந்திய அமைச்சர்கள், அதிகாரிகள் யாவரும் அண்மையில் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக விடுத்த செய்திகள் இதனை உறுதிப்படுத்துகிறது. சர்வதேச மட்டத்தில், கண்ணி வெடிக்கும் எதிரான போர்க் கொடியை பல மனிதாபிமான அமைப்புக்கள் உயர்த்தி வரும் வேளையில், பாக்கு நீரிணையில் அரசால் விதைக்கப்பட்ட கடல் கண்ணிவெடி பொறிகளை, நியாயப்படுத்தும் வகையில் காந்தி தேசம் விடுத்த அறிக்கை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது பிராந்திய நலன்பேண, இலங்கை அரசாங்கத்தின் சகல மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்து ஊத வேண்டிய பரிதாப நிலைக்கு இந்தியா இறங்கி வந்திருப்பதையிட்டு தாயக மக்கள் கவலை கொள்வதில் அர்த்தமில்லை. தற்போது இந்தியாவின் கவலையெல்லாம், தமிழர் தாயகத்தில் இராணுவமும், விடுதலைப் புலிகளும் எத்தனை சதுர கிலோமீற்றர் பரப்பளவு பிரதேசங்களை தம்வசம் வைத்துள்ளார்கள் என்பது பற்றியே இருக்கிறது. புதிதாக உருவாக்கப்படும் இராணுவத்தின் விசேட படையணிகள், மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளும் தாக்குதல்களால், விடுவிக்கப்படும் பிரதேசங்கள் பற்றியும், கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை குறித்துமே தமது செய்தி சேகரிப்பின் முக்கிய பணியாக இந்தியா கொண்டுள்ளது. தினமும் நூற்றிற்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஊடகத்துறை வெளியிடும் பொய்ப் பரப்புரைகளை, எண்ணிக்கை பிசகாமல், அப்படியே தமிழக பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. தமிழக காங்கிரஸாரும், டில்லித் தலைமையின் அறிவுறுத்தலிற்கேற்ப, விடுதலைப் புலிகள் மீது வசை பாடுவதை, முக்கிய கொள்கைப் பிரகடனமாக வெளியிட்ட வண்ணமுள்ளனர். அதாவது விடுதலைப் புலிகளின் தமிழக ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கு புதுடில்லி கொள்கை வகுப்பாளர்களும், உளவுத் துறையினரும் பின்னணியில் நின்றவாறு செயற்படுவதனை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சிதைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படும் பொழுது, பூனேயில் இலங்கை உளவுப் படையினருக்கு, விசேட பயிற்சிகளை இந்தியா வழங்குவதாக செய்திகள் கசிகின்றன. 80களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழ விடுதலை இயக்கங்களின் படித்த சில இளைஞர்களுக்கு, வெடிகுண்டுகளைக் கையாள்வதில் சிறப்புப் பயிற்சிகளை இந்தியா "றோ வழங்கியதை தற்போது நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனாலும் நலனடிப்படையில் எழும் தேவைக்கேற்றவாறு, இலங்கை இனப்பிரச்சினையை, இந்திய வெளியுறவு புலனாய்வு பிரிவினர் கையாளும் முறைமை ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல. இவ்வேளையில், தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது இந்தியா. தற்போது, 200 கோடி டொலர் நிதியுதவி அளிக்க, இந்தியா இணங்கியுள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன் முறியை, போர்ச் செலவுகள் விழுங்க, ஆட்சி நடத்துவதற்குரிய நிதித் தேவையைச் சமாளிக்க இந்தியா முன் வருகிறது. தற்போது, ஒப்பந்த முறிவினால் உருவான வெற்றிடத்தை நிரப்ப, வேறெவரும் புகாதவாறு, அகலக் கால் பதிக்கிறது இந்தியா. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முன் வைக்கப்பட்ட மாகாண சபையின் அனைத்து அதிகாரங்களையும், ஒரே தவணையில் வழங்க வேண்டுமென, இலங்கை அரசைக் கோரும் தீர்மானமொன்றினை இந்தியா எடுத்திருப்பதாகவும் ஊகங்கள் வெளிவருகின்றன. தீர்வுத் திட்ட விவகாரத்தையும், ஆயுத, நிதி உதவி விவகாரத்தையும், சமாந்தரமாகக் கையாளும் இரட்டைப் போக்கு உத்தியே, இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடாகும். ஆயினும் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் விரிவாக்கமே, இந்தியாவின் இரட்டை போக்கினை, ஒற்றைப் போக்காக மாற்றும் திறன் கொண்டதாக்கியுள்ள தென்பதை பழைய வரலாற்று நிகழ்வுகள் புரிய வைக்கின்றன. யுத்தம் மூலம் தீர்க்கப்பட முடியாதெனக் கூறுவதும், யுத்தத்திற்கான ஆயுதங்களை வழங்குவதும், ஒன்றுக்கொன்று முரண் நிலை கொண்ட விடயமென்பதை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிதல் வேண்டும். இத்தகைய இந்திய தந்திர நகர்வுகளை சிங்களம் புரிந்து கொண்டாலும், அவை தமக்குச் சாதகமாக அமைவதால், அதன் ஆதரவினை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. அதேவேளை பாதிப்புறும் தமிழினத்தின் உளவியல் பரிமாணமானது, தமிழக ஆதரவுத் தளம், இந்திய மத்திய அரசினை மாற்றும் வல்லமை கொண்டது போன்ற கற்பிதங்களில் நீண்டு செல்கிறது. இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயமொன்று உண்டு. அதாவது தமிழக அரசியல் சக்திகளைப் பொறுத்தவரை, மத்திய ஆட்சியினை மாற்றக் கூடிய நாடாளுமன்ற ஆசனப் பலத்தினை கொண்டிருக்கும் யதார்த்தம் சரியாக இருந்தாலும், இந்தியாவின் மத்திய கொள்கைத் திட்டத்தினை மாற்றக் கூடிய வல்லமை அவர்களுக்கு உண்டாவென்பதிலேயே சந்தேகம் எழுகிறது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில், தலையிடுவதில்லையென்கிற பிரகடனத்தை, கலைஞர் முன்பொரு தடவை வெளிப்படுத்தியதை நினைவில் கொள்ளல் வேண்டும். தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோருவதையே கலைஞரால் மத்திய அரசை நோக்கி முன் வைக்க முடியும். அத்தோடு, இலங்கை அரசிற்கு இராணுவ தளபாடங்களை வழங்க வேண்டாமென வேண்டுகோளையும் விடுக்கலாம். ஆயினும் ஈழத் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாஷையான "சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்கும்படி கலைஞரால் கூற முடியாது. ஏனெனில் தமிழக ஆதரவுத் தளத்தின் எல்லைக் கோட்டினுள் இனப் படுகொலை, ஆயுத விநியோகம் போன்ற விவகாரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்குமப்பால் சென்று, தேசிய இனத்தின் சுயநிர்ணயக் கோட்பாட்டை முதன்மைப்படுத்த வேண்டுமாயின் இந்திய தேசிய நலனிற்கு அவை குந்தகம் விளைவிக்கலாமென்கிற மத்திய கொள்கை வகுப்பாளர்களின் கூக்குரலிற்கு முகம் கொடுத்தாக வேண்டும். ஏனெனில் மாநிலக் கட்சி, மத்திய அதிகாரத்தில் பங்கேற்கும் போது இவ்வகையான அரசியல் சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. ஈழப் பிரச்சினை குறித்த தமிழக, மத்திய அரசுகளின் முரண்பாடுகளையும், அதன் அரசியல் பரிமாண வீச்செல்லைகளையும் சரியாகப் புரிந்து கொண்டால் விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடையின் சூத்திரத்தையும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது புலிகள் மீதான தடையை நீடித்து, இறுக்கமான நிலையொன்றினைப் பேணுவதனூடாகவோ இலங்கை அரசினை தமக்கு சார்பான வியூகத்துள் வைத்திருக்க முடியுமென இந்தியா கருதுகின்றது. தடையை அகற்றினால், சிங்களப் பேரினவாதமானது தமது பிராந்திய நிரந்தர நண்பர்களுடன் அணி சேரலாமென்கிற அச்சம் இந்தியாவிற்கு உண்டென்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இத்தகைய இராஜதந்திர வியூகத்திற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பும் பொழுதே, பொடா, தடா சட்டங்கள் ஏவி தமிழின ஆதரவு உணர்வலைகளை அடக்க முற்படுகிறது இந்திய அரசு. இதேவேளை "தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை என்று அறிவித்து விட்டு தேர்தலை சந்தியுங்களென இந்திய மத்திய அரசை நோக்கி சவால் விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். மத்தியில் ஆட்சி அமைக்க, தமிழகக் கட்சிகளின் ஆதரவு தேவை. அதேவேளை மத்தியில் எடுக்கப்படும் அண்டை நாடு பற்றிய, அதுவும் அதே இனத்தின் பிரச்சினை குறித்த முடிவினை மத்திய கொள்கை வகுப்பாளர் மட்டுமே எடுப்பார்களென்பதே இந்திய ஜனநாயகமாகும். தமிழீழம் உருவாவதல்ல இந்தியாவின் பிரச்சினை. அப்படிப் பிரிவதால், தென்னிலங்கை ஆட்சி, தனது பிராந்திய எதிரிகளின் கைவசம் சென்று விடுமென்பதே இந்திய அச்சத்திற்கான முதன்மை காரணியாகும். தமிழீழம் உருவானால் தமிழ்நாடு பிரியுமென்கிற சோடித்த கதைகளெல்லாம் வெறும் சுயநலன் அடிப்படையில் எழும் பரப்புரைகள் என்று கருத வேண்டும். தமிழினம் அழிந்தாலும் தனது நலன் காக்கப்பட வேண்டுமெனக் கற்பிதம் கொள்ளும் இந்தியாவின் போக்கினை, எவராலும் மாற்ற முடியாது. ஆயினும் அதை மாற்றும் சக்தி, விடுதலையை வென்றெடுக்க, அணி திரளும் மக்களிடம் உள்ளதென்பதை சர்வதேசம் விரைவில் உணரும்.

http://ravusura.blogspot.com/2008/02/blog-post_19.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.