Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படையின் தாக்குதல்களை இந்திய கடற்படை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை வரும்-இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை வரும்-சிபிஐ

நாகை: இலங்கை கடற்படையின் தாக்குதல்களை இந்திய கடற்படை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் பழையாறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீனவர்கள் வாழ்வுரிமை விழிப்புணர்வு பிரசார இயக்க தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கடந்த 40 ஆண்டுகளாக துன்புறுத்தியும் சுட்டுக் கொன்றும் வருகிறது. மீனவர்களின் சொத்துக்களை பறிக்கும் செயல் நடக்கிறது.

மீனவர்களின் உயிரையும் உரிமையையும் காப்பாற்ற வேண்டியது இந்திய கப்பல் படையின் பொறுப்பு. ஆனால் நமது கப்பல் படை யாரையும் காப்பாற்றுவதில்லை. காப்பாற்றுவதற்கான வழியையும் சொல்வதில்லை. இதே நிலை நீடித்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மீனவர்களும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படும்.

சுனாமி தாக்குதலுக்கு பிறகு மீனவர்களுக்கு கட்டித் தரப்பட வேண்டிய வீடுகள், பள்ளிகள் ஆகியவை பெருமளவில் கட்டி தரப்படாமல் உள்ளன.

மீன்பிடி தொழில் குறித்த நவீன தொழில் நுட்பத்தை கற்றுத்தர கல்லூரிகள் அமைத்து அதில் மீனவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

அணுசக்தி உடன்பாட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்த உடன்பாடு என்பது அரசு சம்பந்தப்பட்ட கொள்கை விவகாரம்.

இது கீழ்மட்ட மக்களுக்கு தொடர்பு இல்லாதது என்றாலும் இதில் இந்தியா கையெழுத்திட்டால் நாம் போராடி பெற்ற சுதந்திரம் வீணாகி விடும். எனவேதான் அதனை கடுமையாக எதிர்க்கிறோம் என்றார் பாண்டியன்.

- தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லிக்கொண்டே இராமல் செய்யுங்க. மீனவர்களின் உரிமைகளை காப்பாற்ற முயலுங்க. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இணையுங்கோ! இணையுங்கோ!! ஈழப் போராளிகளோட இணைஞ்சு போராடுங்கோ அப்பதான் இந்திய மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டலாம்.

இணையுங்கோ! இணையுங்கோ!! ஈழப் போராளிகளோட இணைஞ்சு போராடுங்கோ அப்பதான் இந்திய மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டலாம்.

நல்லாத்தான் பகிடி விடுறியல்.. :lol::lol::)

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி,

உண்மைதான். தமிழக உறவுகளும் தமது உரிமைக்காக நம்முடன் சேர்ந்து போராடும் போதுதான் எமது போராட்டம் முழுமையடையும். இதன் மூலம் தமிழக மீனவர்களின் உரிமையையும் பாதுகாப்பையும் நாம் உறுதிப்படுத்தலாம்.

நடக்கிற காரியமா ரகுநாதன்?

தமிழக தொப்பிள் கொடி உறவை நான் கேள்விக்கு உட்படுத்தவில்லை... ஒரு அரசியல் வாதியின் அறிக்கையைத்தான் கேள்விக்கு உள்ளாக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல் தான் எங்கள் அரசியல் வாதிகள் பேச்சுக்களும்...

ஆனாலும் தா. பாண்டியன் போன்றோர் ஓரளவு உணர்வுள்ளவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கிற காரியமா ரகுநாதன்?

தமிழக தொப்பிள் கொடி உறவை நான் கேள்விக்கு உட்படுத்தவில்லை... ஒரு அரசியல் வாதியின் அறிக்கையைத்தான் கேள்விக்கு உள்ளாக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அப்படிச் சொல்லுங்கள் சூராவளி,

எங்கட தமிழ் அரசியல் வாதிகளையே நம்ப ஏலாமக் கிடக்கு. இந்த லட்சணத்தில இந்திய அரசியல்வாதிகளின் பேச்சை....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் சரியான முடிவு ஆனால் இது நடக்குமா தெரியவில்லை, நடந்தால் தான் இந்தியா எமது உரிமையையும் போராட்டத்தையும் மதிக்கும். ஆனால் தமிழகம் நிச்சயமாக ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் ஏற்படும் .

மிகவும் சரியான முடிவு ஆனால் இது நடக்குமா தெரியவில்லை, நடந்தால் தான் இந்தியா எமது உரிமையையும் போராட்டத்தையும் மதிக்கும். ஆனால் தமிழகம் நிச்சயமாக ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் ஏற்படும் .

தமிழகமும் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை கட்டாயம் வரும்.ஆனால் அவர்கள் நிச்சயமாக ஏந்த மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகமும் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை கட்டாயம் வரும்.ஆனால் அவர்கள் நிச்சயமாக ஏந்த மாட்டார்கள்.

ஏன் அப்படி சொல்கிறீர்கள் முருகா?

தமிழகமும் ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை கட்டாயம் வரும்.ஆனால் அவர்கள் நிச்சயமாக ஏந்த மாட்டார்கள்.

ஏனெண்டா அவர்கள் ஏந்தவேண்டிய காலம் ஏலவே கடந்துவிட்டது...

இப்போது உரிமக்கும் வயித்துக்கும் ஒரு போராட்டமும்..

உணர்வுக்கும் அறிவுக்குமான தேடலிலும் தமிழகம் மூழ்கிக்கிடக்குது...

இஞ்ச வந்து ஆயுதமாவது புடலங்காயாவது... கர்நாடக்காரன் தூக்கினாலும் தூக்குவான்... ஆனாலும் இஞ்ச அதுநடவாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.