Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எப்படி செய்வது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Featured Replies

ஓரு வீட்டில் சாப்பிடச்சென்றிருந்தேன். பால் விடாமல் தனியே புளியில் கறி வைத்திருந்தார்கள். எப்படி செய்தார்கள் என்று கேட்க வெட்கத்தில் வந்துவிட்டேன்.

உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தது. நன்றாக வறண்ட கறியாக உறைப்பாக ருசியாக இருந்தது.

எப்படி செய்வது தெரிந்தவர்கள் உதவுங்கள்

உருளைக்கிழங்கு பிரட்டல் கறியா?

என்ன கறி பரணி , பெரும்பாலான கறிக்கு நான் பால் விடுறதில்லை, வெள்ளைக்கறிகளூக்கு மட்டும் தான் பசுப்பால் விடுறது. உருளைக் கிழங்கு கறிக்கு பால் விடுறதில்லை

ஓரு வீட்டில் சாப்பிடச்சென்றிருந்தேன். பால் விடாமல் தனியே புளியில் கறி வைத்திருந்தார்கள். எப்படி செய்தார்கள் என்று கேட்க வெட்கத்தில் வந்துவிட்டேன்.

உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தது. நன்றாக வறண்ட கறியாக உறைப்பாக ருசியாக இருந்தது.

எப்படி செய்வது தெரிந்தவர்கள் உதவுங்கள்

ஐயோ பரணி என்ன இப்பிடி வெக்கப்படுறீங்கள். இதுக்கு எல்லாம்போய் வெக்கப்படலாமா? அதுவும் நீங்கள்.. :wub:

எப்பிடி செய்து இருப்பீனம்? பால் விட்டு இருக்கமாட்டீனம். உருளைக்கிழங்கையும், வெங்காயத்தையும் நறுக் நறுக் எண்டு நறுக்கிவிட்டு பின்னர் அதுக்கு புளியக்கரைச்சு ஊத்தி இருப்பீனம்.

சாப்பிடும்போதும் நல்லா வெக்கப்பட்டு இருப்பீங்கள் என.. :wub:

  • தொடங்கியவர்

வெட்கப்படாமல் அப்படியே கேட்டால் நினைப்பார்கள் இவன் என்ன சாப்பாட்டு ராமான் போல இருக்கென்று

உருளைக்கிழங்கு பிரட்டல் கறிதான். வித்தியாசமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஒரு சாப்பாடு பிடித்திருந்தால் எந்த வீட்டில் சாப்பிட்டீர்களோ அதே வீட்டில் தான் செய்முறையை கேட்பது நல்லது.ஒரே கறியை ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாக சமைப்பார்கள். அவை நீங்கள் நினைப்பது போல் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு வீட்டில் சாப்பிடச்சென்றிருந்தேன். பால் விடாமல் தனியே புளியில் கறி வைத்திருந்தார்கள். எப்படி செய்தார்கள் என்று கேட்க வெட்கத்தில் வந்துவிட்டேன்.

உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தது. நன்றாக வறண்ட கறியாக உறைப்பாக ருசியாக இருந்தது.

எப்படி செய்வது தெரிந்தவர்கள் உதவுங்கள்

சாப்பாட்டு விசயத்தில் வெட்கம் கூடாது பரணி.

இதில் எல்லாம் வெட்கம் பார்த்தா.. ஏதோ பெடியனும் சமைச்சு பார்க்கிறான் என்று சந்தோசப்படுவினம்..

உருளைக்கிழங்கு கறி பிரட்டல் செய்வது கஸ்டமில்லை, ஆனால் கிழங்கு சரியாக அவியவேணும்..இல்லாட்டி நல்லாவராது..

இதில் எல்லாம் வெட்கம் பார்த்தா.. ஏதோ பெடியனும் சமைச்சு பார்க்கிறான் என்று சந்தோசப்படுவினம்..

உருளைக்கிழங்கு கறி பிரட்டல் செய்வது கஸ்டமில்லை, ஆனால் கிழங்கு சரியாக அவியவேணும்..இல்லாட்டி நல்லாவராது..

ஓ..அப்படியோ விசயம் "லீ" அண்ணா..உருளை கிழங்க அப்படியே ஆட்டு இறைச்சியுடன் பிரட்டி ஒரு குழம்பை வைத்து போட்டு சாப்பிட்டா..(சொல்லவே பசிக்குது).. <_<

மற்றது பரணி "மாஸ்டர்" நேக்கு சாப்பிட்டு தான் பழக்கம் சமைத்து பழக்கமில்ல..ஆனபடியா உங்க கேள்விக்கு விடை தெரியாது பாருங்கோ.. :)

சில வேளை பழபுளியை எடுத்து கரைத்து ஊத்தி இருப்பீனம் பாலிற்கு பதிலா..(நீங்களும் ஊத்தி போட்டு பாருங்கோ) <_< ..எப்படி கறி வருது எண்டு..ஏதாச்சும் எண்டா உங்கள நான் ஆசுபத்திரியில வந்து சந்திக்கிறன் என்ன .. <_<

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நானாகவே முயற்சி செய்து சமைத்து இன்று சாப்பிட்டும் விட்டேன். புட்டு செய்து அதனுடன் சாப்பிட்டேன். எனது கைவண்ணத்தில் இன்றைய மதிய உணவு. . ( என்ன செய்ய தனிய இருந்தால் இப்படித்தான்)

நானாகவே முயற்சி செய்து சமைத்து இன்று சாப்பிட்டும் விட்டேன். புட்டு செய்து அதனுடன் சாப்பிட்டேன். எனது கைவண்ணத்தில் இன்றைய மதிய உணவு. . ( என்ன செய்ய தனிய இருந்தால் இப்படித்தான்)

அப்படியா.. பாராட்டுக்கள்.. :D

அது சரி, புட்டோட பிரட்டல் கறி என்டால் புட்டு உள்ளே இறங்காதே.. புட்டுக்கு குழம்பா இருந்தா நல்லம் அல்லவா..?

எனக்கு பிரட்டல் கறி ரொட்டிக்கு தான் பிடிக்கும்.

இப்படியே சோதனை முயற்சிகள் செய்து சாதனைகள் படைக்க வாழ்த்துகள் :wub:

அடுத்த முறை அந்த வீட்டுக்கு போங்க பரணி அண்ணா. எப்படியும் தின்ன தருவார்கள். மெதுவா போன முறை சாப்பாடு பற்றி கதையை எடுத்துவிடுங்கள். அதை எப்படி செய்யிறது என்று கேளுங்கள். நிச்சயம் சொல்வார்கள். அதற்கும் வெட்கப்பட்டால் இங்கு எழுதியதை காட்டுங்கள். நிச்சயம் உங்கள் வீருப்பம் நிறைவேறும்.

  • தொடங்கியவர்

பிரச்சினை இல்லை அங்கை இனி போக ஏலாதே. நான் அங்கையிருந்து வந்ததிலிருந்து ஒரே சாப்பாடடு கதையாக கதைக்க மனைவி சொல்லிட்டார் இனி சாப்பாட்டைப்பற்றி வாய் திறந்தீங்க பிறகு வீட்டையும் சாப்பாடு இல்லையெண்டு . . .

பரணி! உருளைக்கிழங்கில் பலவகை உண்டு. அதிலும் சுவை மாற்றும் திறன் உண்டு.

எனக்கு விருப்பமான உருளைக் கிழங்கைப்பற்றி சொல்லட்டுமா? இங்கே 'நொய கட்டோபெல்' என்பாங்க.. அதாவது புது உருளைக்கிழங்கு.. சிறிய அளவில்.. உதாரணமா பெரிய வெங்காயம் அளவில், மிகவும் மெல்லிய தோலுடன் காணப்படும். இந்தக் காலப்பகுதியில்தான் ஐரோப்பாவில் கிடைக்கிறது.. எனவே வாங்குவதில் உங்களுக்கு பிரச்சசினை இராது.. கிலோவுக்கு ஒரு குரோன் அதிகமாக இருக்கலாம். :)

உருளைக் கிழங்கின் தோலை சீவத் தேவையில்லை. (விரும்பினால் சீவுங்க. ஆனாால் தோலுடன் சமைத்துவிட்டு தோலை உரித்து சாப்பிட்டால் அதன் சுவையே சுவை.. :wub: )

உருளைக்கிழங்கை நன்றாக மண் இல்லாமல் கழுவுங்க.. பிறகு உருளைக் கிழங்கு மட்டத்துக்கு நீரைவிட்டு.. உங்க நாவுக்கு தேவையான அளவு உப்பை போட்டு அவியுங்க. ஒரு மெல்லிய கத்தி முனையால் வேகும்போது குத்திப் பாருங்க.. கத்தி மென்மையாக எவ்வித தடையும் இல்லாமல் கிழங்கினுள் போயிட்டுதா? இப்ப கிழங்கு அவிங்சுடுத்து.. அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.. ஓரளவு வெப்பம் தணியும்வரை பொறுத்திருங்க.. அதற்காக சூட்டைத் தணிக்கவென்று அதனுள் தண்ணீரைவிட்டுட்டு.. பிறகு சுவையா இல்லைன்னு சொல்லக் கூடாது.. இப்பவே சொல்லிட்டேன்..!! :D

அந்த கிழங்குகளின் கொள்ளளவுக்கேற்ற மாதிரி இன்னொரு சட்டி எடுத்து, அடுப்பில வைத்து வெங்காயம்.. பச்சை மிளகாய்.. பெருங்சீரகம்.. கடுகு.. உடலுக்கு குளிர்மை வேணும்னா வெந்தயம்.. எல்லாம் போட்டு கொஞ்ச எண்ணையில வதக்குங்க.. (கொங்ச எண்ணைய் என்றால் வெங்காயம் போன்றவைகள் எண்ணெய் கொஞ்சுற மாதிரி இருக்கணும்.. அதுக்காக வெங்காயம் போன்றவை நீந்துறமாதிரி இருக்கக்கூடாது... :D )

வதக்கியாச்சா.. சிறிதளவு நீர்.. தேவையான அளவு மிளகாய் தூள்.. ஒரு தேக்கரண்டி மஞ்சள்.. உங்களுக்கு புளி தேவை என்றால் தேவையான அளவு புளி கரைத்து அதனுள் ஊத்துங்க.. ஒரு மூடியால மூடி கலவை கொதிக்கும் வரை காத்திருங்க.. கொதிக்கும் நேரத்தில்.. மறு சட்டியில் உள்ள உருளைக்கிழங்கை வடித்து நீரில்லாமல் வைத்திருங்க..

கரைசல் கொதித்ததும்.. அதனுள் கிழங்கை கொட்டி நன்றாக கரைசல் எல்லாக் கிழங்கிலும் படும்படி துளாவுங்க.. பிறகு உங்களுக்கு கறி இன்னும் கமகமன்னு இருக்கணும்னா.. நாலைந்து ஏலக்காய் போடலாம்.. வாய்வுக் கோளாறு இருந்தால் ஒரு சில பற்கள் உள்ளி போடலாம்.. போட்டு.. மூடியால் மூடி.. அடுப்பின் வெப்பமேற்றியை நன்றாக குறைத்து ஒன்று அல்லது 2 நிமிடங்கள் விடுங்க..

உருளைக் கிழங்கு கறி றெடி...

தண்ணீர் அதிகமாக விட்டுடாச்சா.. கவலைப் படாமல் உருளைக் கிழங்கு குழம்பு என்று சொல்லுங்க..

தண்ணீர் குறைந்து களித்தன்மையாக உள்ளதா? உருளைக்கிழங்கு பிரட்டல் என்று சொல்லுங்க..

செய்து பார்த்துட்டு சொல்லுங்க..

குட்டிக் குட்டி சட்டி பானை வைச்சிருக்கிற நெடுக்காலபோவானும் இரண்டு கிழங்கில செய்து சாப்பிடலாம்..! :D:lol:

ஓ..அப்படியா சோழியன் தாத்தா..சொல்லுறதை பார்த்தா வீட்ட நீங்க தான் சமையல் கட்டில கன நேரம் மிணகடுற மாதிரி தெரியுது :wub: ..அதெல்லா இருக்கட்டும் எனக்கு சமைக்க ஆசையா இருக்கு உத மாதிரி கஷ்டமா எல்லாம் என்னால செய்ய ஏலாது பாருங்கோ.. :lol:

ஆனபடியா..

என்னால செய்ய கூடிய மாதிரியும் ஆனா சாப்பிட கூடிய மாதிரி இருக்கிற ஏதாச்சும் செய்யிற மாதிரி இருந்தா சொல்லுங்கோவன் நானும் ஒருக்கா சமைத்து பார்க்க.. :D

பி.கு -

எனக்கு இதுவரை சமையல் கட்டு பக்கம் போன முன் அனுபவம் இல்லை ஆனபடியா பின் விளைவுகள் ஏதாச்சும் ஏற்பட்டால் நீங்கள் தான் பொறுப்பு.. :)

அப்ப நான் வரட்டா!!

கவலைய விடுங்க யம்மு!!

கரட்.. விரும்பினால் உருளைக் கிழங்கு.. லீக்ஸ்.. வேற போங்சி ஏதாவது விரும்பிய மரக்கறி வகை.. மொத்தமாக கால் கிலோ வாங்குங்க.. மாமிசம் விருப்பமென்றால் அரைச்ச இறைச்சி 100 கிராம் வாங்குங்க.. மற்றும் மரக்கறி சூப் பவுடர் அல்லது கோழி சூப் பவுடர்.. 100 கிராம் போத்தலிலோ அல்லது சரைகளிலோ கிடைக்கும்.. அதையும் வாங்குங்க.. மரக்கறிகளை ஓரளவு அளவாக.. வேணும்னா உங்க கடடை விரல் அளவவில வெட்டுங்க.. ஒரு லீட்டர் தண்ணிய ஒரு சட்டியில் விட்டு.. வெட்டிய மரக்கறியையும் இறைச்சியையும் அதனுள் போட்டு.. சூப் தூளில் உங்க நாவுக்கு சுவை வரும்மட்டும் போட்டு கொதிக்க விடுங்க.. சூப் தூள் போடுவதனால் உப்பு தேவையில்லை.. இப்போது மரக்கறி சூப்போ அல்லது இறைச்சி + மரக்கறி சூப்போ றெடி.. பாணுடன் சாப்பிடுங்க.. கொங்சம் காரமாக இருக்கணும்னா சாப்பிடும்போது.. சூப்பில் மிளகு தூளை தூவி சாப்பிடுறதுதானே.. :wub:

இது யம்மு பேபிக்கு ஏற்ற எளிமையான இலகுவான சமையல் முறை. :D

ஓ..உவ்வளவும் தானா சமையல்.. :lol: (அப்ப நான் நாளைக்கு இல்லாட்டி நாளன்டைக்கு)..இதை செய்து பார்க்கிறன் என்ன..ஒரு பின் விளைவும் வராது தானே சோழியன் தாத்தா..ஒம் எனக்கும் காரம் கட்டாயம் தேவை நீங்க சொன்ன மாதிரியே "சூப்பில" மிளகையும் சேர்க்க தான் வேண்டும்... :wub:

ரொம்ப நன்றி சோழியன் தாத்தா.. :) (உதில இருந்து நானும் சமைக்க தொடங்கிறன் என்ன)..அதுக்கு பிறகு பாருங்கோவன் என்ன எல்லாம் செய்யிறன் எண்டு.. :D

அப்ப நான் வரட்டா!!

//குட்டிக் குட்டி சட்டி பானை வைச்சிருக்கிற நெடுக்காலபோவானும் இரண்டு கிழங்கில செய்து சாப்பிடலாம்..! biggrin.gif//

இது என்ன கதை? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிளங்கு பிரட்டலுக்கு எலுமிச்சம் புளி தான்நல்லது.மற்றும் வெள்ளை மா இடியப்பம்,இந்த உ.பிரட்டல் கறி,முட்டடைப்பொரியல் இதை வாழை இலையை நெருப்பில் வாட்டி அதில் பார்சல் பண்ணி. பயணம் போகும் போது கொண்டு போய் சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். :)

உருளைக்கிளங்கு பிரட்டலுக்கு எலுமிச்சம் புளி தான்நல்லது.மற்றும் வெள்ளை மா இடியப்பம்,இந்த உ.பிரட்டல் கறி,முட்டடைப்பொரியல் இதை வாழை இலையை நெருப்பில் வாட்டி அதில் பார்சல் பண்ணி. பயணம் போகும் போது கொண்டு போய் சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். :wub:

எத்தனை மணி நேரம் இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை மணி நேரம் இருக்கும்?

ஒரு 12 மணி நேரம் இருக்கும்.ஆணால் காஸ் அடுப்பில் வாளை இலையை வாட்டக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.